ஞாயிறு, 30 டிசம்பர், 2018

முகிழும் மொட்டும் மலரும் ஆண்டும்

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 45

#1
"வாழ்க்கை என்பது
வரையறையற்ற வாய்ப்புகளைக் 
கொண்டதொரு களம்."
- Deepak Chopra.


#2
"ஒன்றும் நிச்சயமற்ற நிலையில் 
எதுவும் சாத்தியம்."
_Margaret Drabble.


#3
"நம்முள் நன்றியுணர்வையும் 
பாராட்டும் பண்பையும்  
வளர்க்கும் பரிசு, 
இயற்கையின் அழகு."
_Louie Schwartzberg

திங்கள், 17 டிசம்பர், 2018

வெண் கன்னக் குக்குறுவான் - பறவை பார்ப்போம் (பாகம்:35)

#1
வெண் கன்னக் குக்குறுவான்
வேறு பெயர்கள்: 
சின்னக் குக்குறுவான், கழுத்தறுத்தான் குருவி

வெண் கன்னக் குக்குறுவான் பறவைகளின் பூர்வீகம் ஆசியா. இவை பரவலாக ஆசிய கண்டத்தின் வெப்பமண்டல நாடுகளில் காணப்படுகின்றன. இது கிளைகளைப் பற்றி அமரும் 'பாசரைன்' (Passerine) வகைப் பறவைகளுள் ஒன்றே. குக்குறுவான் என்கிற பெயர் அதன் தடித்த பெரிய அலகினாலும், அலகைச் சுற்றிச் சிலிர்த்து நிற்கும் முடிகளின் தோற்றத்தாலும் ஏற்பட்டது. இது பழங்களை உண்டு மரங்களில் வாழும் பறவை.

வெளுத்த இளஞ்சிவப்பில் தடிமனான அலகினைக் கொண்டவை.  இக்குக்குறுவானின் தலை, கழுத்து, மார்பு ஆகிய இடங்கள் பழுப்பு நிறத்தில் வெண்ணிறக் கீற்றல்களுடன் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சைப் பசேலென்ற புல்லின் நிறத்தைக் கொண்டிருக்கும். மரங்களில் அமர்ந்திருக்கையில் இலைகளோடு ஒத்த பச்சை நிறம் இவற்றின் இருப்பைக் காட்டிக் கொடுக்காது. அப்படியும் என் கேமராக் கண்கள் இதன் இருப்பைக் கண்டு பிடித்து விட்டன.

#2

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

எண்ணித் துணிக

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 43 
பறவை பார்ப்போம் - பாகம்: 34 
#1
“ரொம்பவும் சிந்திக்காதீர்கள்.
உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவற்றைத்
தயங்காமல் செய்திடுங்கள்."
புள்ளிச் சில்லை

#2
"சில நேரங்களில் உடனுக்குடன் எடுக்கும் முடிவுகள்
பின்னாளில் எடுக்கும் பல முடிவுகளை விடவும்
சிறப்பானதாகவே இருக்கும்."
மணிப் புறா

#3
"பார்த்துக் கொண்டே இருங்கள்..
என்னால் முடியும்.
முடித்துக் காட்டுவேன்."

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

மகிழ்ச்சியைத் தேடாதே

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 42

#1
“நீங்கள் தனியாகக் காணும் கனவு கனவாகவே இருந்து விடக் கூடும். 
மற்றவரோடு சேர்ந்து காணும் கனவு நிச்சயம் நனவாகும்” 
_  ஜான் லெனான்

#2
"உண்மையை அமைதியில்தான் அறிந்து கொள்ள முடியும். 
அசைவற்றுக் கவனித்து அறிந்திடுங்கள்."
_ லியோனார்ட் ஜேக்கப்சன்

#3
“வாழ்வில் நல்ல திருப்பங்களைக் கொண்டு வர

ஞாயிறு, 25 நவம்பர், 2018

திருக்கார்த்திகை தீபங்களும்.. பண்டிகை நினைவுகளும்..

#1
ஓம் அருணாச்சலேஸ்வராய நமக!

வ்வொரு பண்டிகைக்குப் பின்னும் புராணக் கதைகளும், காரணங்களும்  கால காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கலாச்சார வழக்கங்களும், மரபுகளும் உள்ளன. முந்தைய தலைமுறையினரை போல அவற்றை மிகச் சரியாக இன்று நாம் பின்பற்ற முடிவதில்லைதான். ஆனாலும் ஒவ்வொருவரும் அவரவர் வாழும் இடங்களில் முடிந்தவரை சிலவற்றையாவது பின் பற்றி வருவது ஆறுதலான ஒன்றே.

#a
ஒரு திருகார்த்திகை அன்று.. 
வீட்டு ‘மணவட’ முன்பு..
ல்லாப் பண்டிகைகளும் சிறுவயது நினைவுகள் இல்லாமல் கடந்து போவதில்லை. திருக்கார்த்திகைக்கு ஓரிரு நாட்கள் இருக்கும் போதே

ஞாயிறு, 11 நவம்பர், 2018

பெரிதினும் பெரிது கேள்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 41
பறவை பார்ப்போம் - பாகம்: 32

#1
"நேசிக்கப்பட வேண்டிய தேவையுடன்  பிறக்கிற குழந்தை, 
அதனிலிருந்து மட்டும் வளர்ந்து வெளிவர முடிவதேயில்லை!"
_ஃப்ராங்க் A. க்ளார்க்


#2
"எல்லாவற்றுக்கும் மேலாக 
உங்களுக்கு நீங்கள் உண்மையாய் இருங்கள், 
அப்படி உங்களை உங்கள் இதயத்திற்குக் கொடுக்க முடியாவிட்டால் உங்களை அதனிடமிருந்து வெளியே எடுத்து விடுங்கள்."

திங்கள், 5 நவம்பர், 2018

கல்கி தீபாவளி மலரில்.. - கரையும் அலையும்



248 பக்கங்களில் சிறுகதைகள், கவிதைகள், பேட்டிகள், ஓவியங்களுடன்
  பயண, ஆன்மீக மற்றும் பொதுக் கட்டுரைகளுமாக மலர்ந்திருக்கும் 
2018 கல்கி தீபாவளி மலரில் 
9 ஒளிப்படக் கலைஞர்களின் பங்களிப்பும்.. 

அதில்..
பக்கம் 70_ல்..
எனது ஒளிப்படம்..

ஞாயிறு, 4 நவம்பர், 2018

வெற்றிக் கனி

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 41
#1
“நீங்கள் செய்வதெல்லாம் தனித்துவமானதென நடித்திடுங்கள். 
அவை தனித்துவம் பெற்றிடும்." 
_ William James

#2
“இந்த வாழ்வின் பெரும்பாலான நிழல்களுக்குக் காரணம் 
ஒருவர் தனது சொந்தக் கதிரொளியில் நின்றிருப்பதே..!”
_Ralph Waldo Emerson

#3
“யாரோ ஒருவர் மலர்களைக் கொண்டு தரக் காத்திராமல்

வியாழன், 1 நவம்பர், 2018

சர்வதேச பிரமிட் வேலி, பெங்களூரு

#1
ர்வதேச பிரமிட் பள்ளத்தாக்கு (International Pyramid Valley) பெங்களூரிலிருந்து 30 கிமீ, நான் வசிக்குமிடத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது. பெங்களூரின் தெற்கே கனகபுரா தாலுக்காவைச் சேர்ந்த ராம்நகரில் பல ஏக்கர் அளவில் பசுமையும் எழிலும் வாய்ந்த இடத்தினுள் எழுப்பப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப் பெரிய தியான பிரமிட் என்கிறார்கள்.

தன்னை உணரும் அனுபவத்துக்கான தேடலில் ஒரு கருவியாக இது மக்களுக்கும் அமைப்புகளுக்கும் உதவ 2003_ஆம் ஆண்டு பிரம்ம ரிஷி பத்ரிஜி இது உருவாக்கப்பட்டுள்ளது.  முதலில் மைத்ரேய புத்த விஸ்வாலயம் என்று அழைக்கப்பட்ட இந்த ஆன்மீக தியான ஸ்தலம்  இந்தியாவில் உள்ள ‘பிரமிட் ஸ்பிரிச்சுவல் ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் வந்தபிறகு பிரமிடு வேலி (பள்ளத்தாக்கு) என்று பெயரில் அழைக்கப் படலாயிற்று.

#2

இந்த ஆன்மீக மையத்தின் பிரதான நோக்கம் தியானம் என்ற அம்சத்தில் உள்ள அறிவியல் ரீதியான உண்மைகளை பரப்ப வேண்டும் என்பதாக இருக்கிறது.  தியானத்திற்கான பிரத்யேக இடமாக, பிரமிடு தியான இயக்கத்தின் கேந்திரமாக உள்ளது.

ளாகத்தின் பிரதான ஈர்ப்பாக பிரமிட் இருந்தாலும் நுழைவிடத்திலிருந்து அங்கு செல்லும் வழியெங்கும் இருக்கும் பாறைகள், மூங்கில் மரங்கள், அழகிய நீர் நிலைகள், அழகாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஜென் தோட்டங்கள் ஆகியன மனதுக்கு இரம்மியமான சூழலை அளிக்கின்றன:

 #3

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ஏற்ற இறக்கம்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 40
 பறவை பார்ப்போம் - பாகம் 31
#1
“தன் செயல்களில் பிரச்சனை இருப்பதை உணராத ஒருவரை 
உங்களால் ஒருபோதும் மாற்ற முடியாது.”


#2
“என்னை கீழே இழுக்கும் வல்லமை எனக்கு மட்டுமே உண்டு, 
ஆனால் மேலும் என்னைக் கீழே இழுக்க
என்னையே நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.”
 _C. JoyBell C.

#3
“ஏற்ற இறக்கங்களைக் கொண்டது வாழ்க்கை. 
உயரத்தில் இருக்கையில் வசந்தத்தை அனுபவித்திடு. 
இறக்கத்தில் இருக்கையில்..

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அகமும் புறமும்

#1
“அச்சம் முடிவுறும் இடத்தில் 
வாழ்வு தொடங்குகிறது.”
_Osho

#2
“இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே!”
_Oliver Wendell Holmes, Sr.


#3
“நாம் நாமாக நம்மை ஒப்புக் கொள்ளுதல் என்பது

வெள்ளி, 19 அக்டோபர், 2018

காளிகாட் காளி கோயில் - கொல்கத்தா (6)

விஜயதசமி வாழ்த்துகளுடன், இந்த நாளுக்குப் பொருத்தமாக, கொல்கத்தா தொடரின் இறுதிப் பதிவாக, காளிகாட் கோயில் குறித்த பதிவு 10 படங்களுடன்:

#1
கோவில் கோபுரம்

51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காளிகாட் காளி கோயில் கொல்கத்தாவின் டாலிகஞ்ச் எனும் பகுதியில் பாகீரதி (ஹூக்ளி) நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா என்ற பெயர் காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள்.

#2
தோரணவாயில்
காட் என்பது தீர்த்தக் கட்டம் எனப்படும் நதியின் படித்துறையாகும்.

செவ்வாய், 16 அக்டோபர், 2018

நவராத்திரி வாழ்த்துகள் !


மேலிருக்கும் இணைப்பில் சென்ற வருடம் பகிர்ந்த
நவராத்திரி கொலுப் பதிவின் தொடர்ச்சியாக, 
தங்கை வீட்டின் இந்த வருடக் கொலுப் படங்கள்..

#1
கேரளத்து..


#2
கதக்களி..!

#3
பொய்க்கால் குதிரையில்.. 
தேசிங்கு ராஜா..
தேசிங்கு ராணி..

#4
கலைவாணியின் கடாட்சமும்..

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

உன் வாழ்க்கையை உனக்காக வாழ்!

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 39
#1
“பெரும்பாலான மக்கள் தங்களிடம் இல்லாத தகுதியை இருப்பதாக, 
உயர்வாக மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். 
இருக்கும் திறமையையோ தாழ்வாக எடை போடுகிறார்கள்.”
_ Malcolm S. Forbes

#2
“நீங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை உணர்வீர்களானால்,  
நிச்சயம் மிகுந்த சக்தி வாய்ந்தவர்களாக இருப்பீர்கள்!”
 _ Yogi Bhajan


#3
"வெற்றி எனது வரையறை அல்ல, ஆனால் உண்மை எனது வரையறை.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

யாரோடும் பேசாதவள் - இந்த வார கல்கி இதழில்..


21 அக்டோபர் 2018 இதழில்..


யாரோடும் பேசாதவள்

வள் பேசவே மாட்டாள் 
என்றார்கள்
ஒரு காலத்தில் 
பேசிக் கொண்டிருந்தவள்தாம் 
என்றார்கள்
யாருமற்ற தனிமையில்  
தனக்குத்தானே 
பேசிக் கொள்வாளாய் இருக்கும்
என்றார்கள்

வியாழன், 11 அக்டோபர், 2018

பிர்லா மந்திர் - கொல்கத்தா (5)

#1

தொழிலதிபர் பிர்லாவின் குடும்பத்தினரால் நாட்டின் பல இடங்களில் கட்டப்பட்ட இந்துக் கோவில்களில் ஒன்று கொல்கத்தாவிலும் உள்ளது. பளிங்கினால் கட்டப்பட்ட இக்கோவில் அசுதோஷ் செளத்ரி அவென்யூவில் இருக்கிறது.

#2

இக்கோவிலைக் கட்டி முடிக்க 26 வருடங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 9 அக்டோபர், 2018

ஹூக்ளி கரையோரம்.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 2) - கொல்கத்தா (4)

#1

தாஜ்மஹாலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ‘மக்ரனா’ எனும் உயர் வகை சலவைக் கற்களைக் கொண்டே விக்டோரியா நினைவிடமும் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மேல் மாடங்களும், இன்னும் பிற கட்டமைப்புகளுக் கூட தாஜ் மஹாலைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

#2

தற்போது அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தளமாகவும் அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிற   விக்டோரியா நினைவிடத்தில் மகாராணியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பிரிட்டிஷ் கால ஓவியங்கள் மற்றும் காட்சிப் பொருட்களாக ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், நிலவரைபடங்கள், காசுகள், அஞ்சல் தலைகள், கைவினைபொருட்கள், உடைகள் போன்றவை உள்ளன.

விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர் ஆகியோரின் நேர்த்தியான சில உருவப்பட ஓவியங்கள் பலவும் உள்ளன. அதில் மிகவும் குறிப்படத்தக்க ஓவியமாக போற்றப் படுகிறது,

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

குற்றத்தை வெறுத்திடு.. குற்றவாளியை நேசித்திடு.. - மகாத்மா காந்தி பொன்மொழிகள்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 38
#1
“பிழை செய்திடும் சுதந்திரம் இல்லாவிடில் 
அந்த சுதந்திரத்திற்கு எந்த மதிப்புமில்லை.”

#2
“உனது நம்பிக்கைகள் உனது சிந்தனைகளாகின்றன,
உனது சிந்தனைகள் உனது வார்த்தைகளாகின்றன,
உனது வார்த்தைகள் உனது செயல்களாகின்றன,
உனது செயல்கள் உனது பழக்கங்களாகின்றன,
உனது பழக்கங்கள் உனது பண்புகளாகின்றன,
உனது பண்புகள் உனது தலைவிதியாகின்றது!”

சனி, 6 அக்டோபர், 2018

அழகிய கட்டிடக் கலை.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 1) - கொல்கத்தா (3)

#1

றுபத்து நான்கு ஏக்கர்கள் பரப்பளவில், பரந்து விரிந்த மலர்த் தோட்டங்களுடன் கூடிய விக்டோரியா நினைவிடம் (Victoria Memorial),
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஜவஹர்லால் நேரு சாலை அருகே, ஹூக்ளி நதிக்கரையோரத்தில் உள்ளது.

#2

1819–1901 வரை வாழ்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட பிரமாண்டமான இந்த பளிங்கு மாளிகை, 1906-1921 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 'வேல்ஸ் இளவரசர்' ஐந்தாம் ஜார்ஜினால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்நினைவிடம் பிரிட்டிஷ் அரசின் வெற்றிக்கான அடையாளமாகக் கருதப்பட்டது. விக்டோரியா மகராணி இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

#3

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

மகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)

#1
 “முடிவில் நான் கற்றுக் கொண்டதெல்லாம் 
தனிமையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டுமென்பதையே”

#2
“நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. 
பெரிய மனிதர்களையே வளர்க்கிறோம்.”

#3
குழந்தை சொல்லாததையும் புரிந்து கொள்பவள் தாய்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

திருப்தியான வாழ்க்கைக்கான திறவுகோல்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 37

#1
“வாழ்க்கையின் குறிக்கோள், 
குறிக்கோளுடனான வாழ்க்கையே!" 
_ Robert Byrne

#2
“சீரான திருப்தியான வாழ்க்கைக்கான திறவுகோல், 
வாழ்வில் சாதிக்க நாம்  யாரென்பதே நமக்குப் போதுமானதென 
மனப்பூர்வமாக நம்புவது”
_Ellen Sue Stern

#3
“நம்முடைய உலகத்தில் மாற்றம் கொண்டு வர 
எந்த மாயஜாலமும் தேவையில்லை. 
அதற்குத் தேவையான அத்தனை சக்தியும் 
நம்முள் ஏற்கனவே இருக்கிறது.” 
_J. K. Rowling

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பண்பாட்டுத் தலைநகரம் - கொல்கத்தா (2)

நெடுங்காலமாக கொல்கத்தா அதன் இலக்கியம், கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. கொல்கத்தாவில் "சாத்ரா" எனும் ஒருவகையான பாணியில் அமைந்த நாடகப் பாரம்பரியம் வழக்கில் உள்ளது. இந்தித் திரைப்படங்களோடு வங்காள மொழித் திரைப்படங்களையும், மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். டாலிகஞ்ச் எனும் இடமே வங்காளத் திரைப்படத் தயாரிப்பின் மையமாகத் திகழ்கிறது. இதனால் வங்காளத் திரைப்படத்துறை "டாலிவூட்" எனவும் அழைக்கப்படுகிறது. டாலீவூட் சத்யஜித் ரே, மிருணாள் சென், தப்பன் சின்ஹா, ரித்விக் காட்டக் மற்றும் அபர்ணா சென் போன்ற பல புகழ் பெற்ற இயக்குனர்களைத் திரைப்பட உலகுக்கு அளித்துள்ளது.  இப்படிப் பல வித காரணங்களுக்காக இந்தியாவின் ‘பண்பாட்டுத் தலைநகரம்’ எனவும் கொல்கத்தா கொண்டாடப் படுகிறது.

ஆயினும் முந்தைய பதிவில் சொன்னது போல மக்கள் மற்றும் நகரம் சார்ந்த பல பிரச்சனைகள் தீர்வு காணப்படாது மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் பின் தங்கிய நிலையில் உள்ளது, கொல்கத்தா. அவற்றில் ஒன்று கை ரிக்ஷா..

#1
மனிதரை மனிதர் இழுக்கும் அவலம்

மிழகத்தில் கலைஞரின் முயற்சியாலும், இந்தியாவின் மற்ற பெரும்பாலான இடங்களிலும் வழக்கொழிந்து விட்ட கை ரிக்ஷா இங்கே பயன்பாட்டில் இருப்பதும், துருப்பிடித்தத் தகர டப்பாவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்த தோற்றத்தில் ஓடும் மிகப் பழைய மஞ்சள் அம்பாஸிடர் டாக்ஸிகளும் 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா எனும் சந்தேகத்தை வரவழைக்கின்றன. சாலைகளின் நடுவே ஓடுகின்ற ட்ராம், மற்றும் சைக்கிள் ரிக்ஷா, ஜட்கா ஆகிய வாகனங்கள் கொல்கத்தாவை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

#2
“அந்தக் காலம்... அது அது அது...”

புதன், 19 செப்டம்பர், 2018

ரவீந்திர சேது - கொல்கத்தா (1)

#1
ரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கொல்கத்தா. மக்கள் தொகையில் நான்காவது இடம். மேற்கு வங்கத்தின் தலைநகரம்.   உலக அளவிலும் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகத் திகழ்கின்றது.

கொல்கத்தா என்ற பெயரும், ஆங்கிலேயர் இட்ட கல்கத்தா என்ற பெயரும், எப்படி வந்தது என்பதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், காளிகத்தா (காளி மாதாவின் இடம்) எனும் பொருளில் ஏற்பட்டதென்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.  வங்க மொழியினர் எப்பொழுதும் கொல்கத்தா என்றே அழைத்து வந்த போதும், ஆங்கிலேயர் இதனை கல்கத்தா என்று அழைத்ததால் அதுவே அதிகாரபூர்வப் பெயராக இருந்து வந்தது. பிறகு 2001 ஆம் ஆண்டில் கொல்கத்தா என்னும் உள்ளூர்ப் பெயரையே அதிகாரப்பூர்வப் பெயராக அறிவிப்பானது.

#2

இலங்கைப் பயணம் போல இதுவும் ஒரு குறுகிய காலப் பயணமே.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

மாயஜாலம்

#1
"புன்னகையை அணிந்திடு. 
நண்பர்களைப் பெற்றிடு" 
_ George Eliot

#2
"குழந்தைப் பருவம் என்பது 
களங்கமற்றதும் 
விளையாட்டுத்தனம் நிறைந்ததும் ஆகும். 
சுதந்திரமும் மகிழ்ச்சியும் கொண்டதாகும்"


#3
“குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுவோம்!”

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

கண்ணுக்குப் புலப்படாதவை

#1
“பணிவில் உயர்ந்து நிற்கையில் 
உயர்ந்த மனிதராகும் தகுதியை நாம் நெருங்கி விடுகிறோம்.” 
_Rabindranath Tagore

#2
சில நேரங்களில் 
ஒரு அறை வேண்டுவதெல்லாம் 
சாடி நிறைய அன்றலர்ந்த மலர்களையே.

#3
“அதிகாலை நடை பயிற்சி முழுநாளுக்குமான வரம்” 
- Henry David

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

உலகம் ஒரு நாடக மேடை - வில்லியம் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 36

#1
 “நாம் யாரென்பது நமக்குத் தெரியும், 
ஆனால் யாராகக் கூடுமென்பது நமக்குத் தெரிவதில்லை”


#2
 “இயற்கையினுடான ஒரு தொடுதல் 
மொத்த உலகையும் நமக்கு நெருக்கமானதாக ஆக்குகிறது.”

#3
 “உங்கள் ஆன்மாவுக்கேனும் 
நீங்கள் உண்மையாய் இருங்கள்” 

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

ஆட்காட்டிக் குருவி - Did you do it - பறவை பார்ப்போம் - (பாகம் 30)

ளவில் பெரிய கரைப் பறவைகள், ஆட்காட்டிக் குருவிகள் .  சுமார் 10 முதல் 16 அங்குல நீளத்தில் இருக்கும்.
ஆங்கிலப் பெயர்Lapwing 
இவை மனிதர்களையோ அல்லது எதிரிகளையோ கண்டால் ஒலிஎழுப்பி மற்ற பறவைகளுக்கும்  ஆபத்தில் இருக்கும் பிற உயிரனங்களுக்கும் தெரியப்படுத்தும். உதாரணத்திற்கு பதுங்கி வரும் புலிகளின் வருகையை பக்கத்திலிருக்கும் மான்களுக்கு முதலிலேயே தெரிவித்து விடும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin