வியாழன், 29 நவம்பர், 2012

இலையுதிர்காலப் பாடல் – கவிக்குயில் சரோஜினி நாயுடு


மேகங்களைப் பற்றித் தொங்கிக் கொண்டிருந்தது அஸ்தமனம்
கவலையுற்ற இதயத்தில் ஏற்பட்டக் களிப்பைப் போல.

புதன், 28 நவம்பர், 2012

தூங்கும் செம்பருத்தி.. சிரிக்கிற செவ்வந்தி..


#1 செண்டுப் பூ



மாட்டுச் செவ்வந்தி என்றும் அழைக்கப்படுகிற இந்தச் செண்டுப்பூவை அறிவோம்.

தூங்கும் செம்பருத்தியை?

அறிவோமே.. என்பவர்கள் ரசித்திட சில படங்கள்.

தெரியாதே.. என்பவர்களுக்காக கூடவே சில தகவல்கள்.

மெக்ஸிகோவின் வெப்ப மண்டலப் பகுதியில் அதிகம் காணப்படுகிற இப்பூக்கள்  “ Sleeping Hibiscus ” எனப் பரவலாக அறியப்படுகின்றன. மலராத செம்பருத்தியைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கிறது.

#2 தூங்குது செம்பருத்தி.. தொந்திரவு செய்யாதீர்..

ஞாயிறு, 25 நவம்பர், 2012

செல்லம் செல்லம் செல்லமே..

நாய் வளர்ப்பவர்களுக்கு பெங்களூர் குடியிருப்புகளில் வாடகைக்கு வீடு கிடையாது. அது குறித்துக் கடைசியில்..

பூனை, நாய்ப் பிரியர்களா நீங்கள்? உங்களுக்காக முதலில் சில படங்கள்!

#1 பொம்மையைப் போல்..

வியாழன், 22 நவம்பர், 2012

இலைகள் பழுக்காத உலகம் - மலைகள் இதழில்..


கைபிடித்துக் கதைபேசி நடந்த நாட்களும்
பாசத்தால் நனைந்த நிகழ்வுகளும்
நெஞ்சோடு இருந்தாலும்
நிழற்படங்களாலேயே
நினைவில் பொருத்திப் பார்த்தத்
தந்தையின் முகத்தைக்
கண்டேன் கனவில் நேற்று.

செவ்வாய், 20 நவம்பர், 2012

காரஞ்சிக்கரை மரங்கள் - வேம்பநாட்டுத் தென்னைகள் - நவம்பர் PiT

நவம்பர் மாதப் போட்டித் தலைப்பு: மரங்கள்

அறிவிப்பு இங்கே.   

கலந்து கொள்ள எண்ணி மறந்து போனவர்கள் இன்றைக்குள் படங்களை அனுப்புமாறு நினைவூட்டிடவே கடைசி நேரத்தில் அவசரமாய் இந்தப் பகிர்வு:)!

[முதல் ஆறு மற்றும் படங்கள் 8,10,13 முத்துச்சரத்தில் முன்னர் பகிராதவை.]

 மைசூர் காரஞ்சி ஏரிக் கரை:

#1 ஆலமரம்

#2 மூங்கில் வனம்

#3 ஏரி நடுவே..

ஞாயிறு, 18 நவம்பர், 2012

இருளில் ஒளி



1. தடையாய் நிற்கும் பெரிய மலையை அகற்றுவது சிறிய கற்களைச் சுமப்பதிலேயே தொடங்குகிறது.

2. கோபங்களையும் வருத்தங்களைப் பற்றித் தொங்கிக் கொண்டே இருப்பதால் வீணாவது நம் சக்தியே.

3. கோபத்தால் ஏற்படும் சங்கடங்கள், கோபத்தை ஏற்படுத்தியக் காரணங்களை விடத் தாங்க முடியாததாகி விடுகின்றன.

புதன், 14 நவம்பர், 2012

குழந்தைகள் தின அதீதம் ஃபோட்டோ கார்னர்


# அழகிய தமிழ் மகன் 


நான் எடுத்த இப்படத்துடன் ஒளிப்படக் கலைஞர்கள் சுரேஷ்பாபு (கருவாயன்), சத்தியா, ஐயப்பன் கிருஷ்ணன் (ஜீவ்ஸ்), MQ நவ்ஃபல் ஆகியோர் எடுத்த மழலைப் படங்களும்.. அதீதம் ஃபோட்டோ கார்னரில்..

வியாழன், 8 நவம்பர், 2012

402_வது மைசூர் தசரா (Mysore Dasara) ஊர்வலக் காட்சிகள் : பாகம் 1


#1 

உலகப் புகழ் வாய்ந்த மைசூர் தசரா கர்நாடக மாநிலத்தின் அரசு விழாவும் கூட. இந்த விஜயதசமி நாளில் மைசூர் சென்றதும்,  402_வது தசராவின் ஊர்வலத்தைக் காண வாய்த்ததும் முன்னதாகத் திட்டமிடாமலே நிகழ்ந்தன.

# 2
தீயசக்திகளை உண்மை வெல்லும் தினமாக நவராத்திரிப் பண்டிகை முடிந்த பத்தாவது நாளான விஜயதசமி கொண்டாடப்படுவதற்குக் காரணம், அந்த நாளில்தான் அன்னை சாமூண்டீஸ்வரி மகிஷாசுரனை வதம் செய்தாள் எனப் புராணங்கள் சொல்கின்றன. மகிஷாசுரனின் பெயரிலிருந்தே ‘மைசூர்’ நகரின் பெயரும் உதித்ததாக அறியப்படுகிறது.

#3

பாரம்பரியம் மிக்க தசராவின் முக்கிய அம்சம் அரண்மனையில் ஆரம்பித்து மைசூர் நகரின் சாலைகளைச் சுற்றி வருகிற யானைகள் ஊர்வலம். யானைகள் வழிநடத்தக் கலைஞர்கள் ஆடிப்பாடிப் பின் தொடர, பொழுது சாயும் நேரத்தில் தீப்பந்த ஊர்வலத்துடன் நிறைவு பெறுவது வழக்கம். அன்னை சாமுண்டீஸ்வரியின் விக்கிரகத்தை தங்க அம்பாரியில் சுமந்து முன்னே செல்லுகிற பட்டத்து யானையைப் பார்த்துப் பரவசம் அடைவார்கள் மக்கள்.  கடந்த பத்து ஆண்டுகளாகப் பட்டத்து யானையாக இப்பணியை சிறப்புற ஆற்றி வந்த பலராம் வயதின் காரணமாக இந்த முறை அப்பணியை அர்ஜூனாவிடம் ஒப்படைத்து விட்டாலும் விழாவில் அர்ஜூனாவுக்கு அருகே சகல மரியாதையும் அளிக்கப்பட்டு கலந்து கொண்டது பலராமும்.

#4  விழாப்பந்தலுடன்.. 
அரண்மனை வளாகத்தில் மதியம் ஒன்றரை மணி அளவில் நந்தி பூஜை செய்து, ஊர்வலத்தைத் தலைமை தாங்கி நின்ற அர்ஜூனாவுக்கு மலர் தூவி, சாமுண்டீஸ்வரி அம்மனையும் மக்கள் நல்வாழ்வுக்காக வழிபட்டு ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தவர் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

டெங்கு.. கவனம்! - அதீதமாய்.. கொஞ்சம்!


கடந்த சில மாதங்களாக டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. விழிப்புணர்வுக்காகப் பரவலாகப் பரிந்துரைப்பட்டு வரும் சில குறிப்புகளை அனைவரும் அறிந்து வைத்திருப்பது நல்லது.

அறிகுறிகள்:

கொசுக்கடியால் தொற்றிக் கொள்கிற இந்த எலும்பு முறிவுக் காய்ச்சலின் அறிகுறி உடம்பில் தெரிய ஆரம்பிக்க ஐந்து முதல் ஏழுநாட்களாகின்றன.

104 F வரையிலான காய்ச்சல், கண்கள் சிவத்தல், வேகமான நாடித் துடிப்பு, தோல் பிசுபிசுப்பு, நிலை கொள்ளாதத் தவிப்பு ஆகியன அறிகுறிகள். இந்தத் தொற்றினால் குடல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கும் வாய்ப்புடன், இரப்பைக் குடலழற்சி (gastroenteritis) ஏற்படவும் கூடும்.

சிகிச்சை:
உடனடியாகக் குடும்ப மருத்துவரை அணுகவும். செல்லத் தாமதமாகும் பட்சத்தில் காய்ச்சலை மட்டுப்படுத்த முதலில் பாராசிடமால் எடுக்க வேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin