ஞாயிறு, 30 ஜூலை, 2017

தூறல்: 31 - ஒரு பாராட்டு; யாஷிகா டி; ஆல்பம்

ணைய உலகில் நாம் பகிரும் எதற்கும் பாராட்டோ, விமர்சனமோ எதுவாயினும் உடனுக்குடன் கருத்து கிடைத்து விடுகிறது. சமூக வலைத் தளங்களில் குறைந்தபட்ச அங்கீகாரமாக ஒரு விருப்பக் குறியேனும். ஆனால் அன்றைய நாட்களில் அப்படி அல்ல. நம் படைப்பை வாசித்து அக்கறையுடன் அது குறித்து ஆசிரியருக்கு ஒருவர் கடிதம் எழுத, அது பிரசுரமாகும் போதுதான் நமக்குத் தெரியவரும். அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதிதான். அப்படி இருக்கையில் ஒரு சிறந்த எழுத்தாளரிடமிருந்து கிடைத்த பாராட்டை ஒரு பொக்கிஷமாக இங்கே சேமித்துக் கொள்கிறேன். இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்....
1990_ஆம் ஆண்டு நண்பர் வட்டம் இலக்கிய இதழில் நான் எழுதியிருந்த கதை குறித்து அதற்கு அடுத்த இதழில் 'எழுத்தாளர் வல்லிக்கண்ணன் - goo.gl/o41MBh',  தனது கடிதத்தில்:

இந்தக் கதை எனது “அடை மழை” தொகுப்பில் “பாசம்” எனும் தலைப்புடன் இடம் பெற்றுள்ளது.

டந்த ஒரு வாரமாக சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சி நாளை, 31 ஜூலை 2017 அன்று நிறைவுறுகிறது. எனது ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பும், ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பும் மற்றும் அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் அனைத்தும்  கீழ்க்கண்ட அரங்குகளில் கிடைக்கின்றன:
புதினம் புக்ஸ், கதிரேசன் - அரங்கு எண்.107
ஜீவா படைப்பகம் - அரங்கு எண்.145
புலம் - அரங்கு எண்.247
மெரினா புக்ஸ் - 98

கோயம்புத்தூர் ‘கொடிசியா’ அரங்கில் இன்றுடன் முடிவடைகிற  புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண். 233_ல் அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் கிடைக்கின்றன.
***

யாஷிகா-D

எனது சித்தப்பாவும், “வெடிவால்” http://vedivaal.blogspot.in/" வலைப்பதிவில் எழுதி வருகிறவருமான திரு. வடிவேல் முருகன் அவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெங்களூர் வந்திருந்தபோது என் இல்லத்துக்கும் வந்திருந்தார்கள். அது குறித்த அவர்களது FB பகிர்வு இங்கே:

மகிழ்ச்சியும் நன்றியும்:)

இதோ அந்தப் படங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

Yashica-D, the Twin Lens Reflex Camera
The three different ways of using the view finder:
TLR waist level hood finder, Fresnel screen with grid lines, 
Flip up magnifying loop and flip down center for the sports finder!
யாஷிகா டி கேமராவில்தான் முதன் முதலாகப் படம் எடுக்க ஆரம்பித்தேன். பள்ளி வயதில் அண்ணனும் நானும் அதை explore செய்து தெரிந்த அளவில் எடுக்கத் தொடங்கினோம். பள்ளியில் செல்ஃப் டைமர் உபயோகித்து எடுத்த க்ருப் படங்கள் பல உண்டு. நான் அவ்வப்போது பகிரும் எனது சிறுவயதுப் படங்கள் எல்லாம் அப்பா தனது யாஷிகா டி கேமராவில் எடுத்தவையே. சித்தப்பாவிடம் அப்பாவின் கேமராவைக் காட்டிய வேளையில், அவர்கள் அதன் வியூ ஃபைன்டரின் மூன்று விதமான பயன்பாட்டை விளக்கிய போது நான் க்ளிக்கிய படங்கள் இவை! 
***

ஆல்பம்:


ஈரோடு கதிர், வா. மணிகண்டன் மற்றும் ஓம்ஸ்ரீயுடன்

கசியும் மெளனம் - https://erodekathir.com/  ’ ஈரோடு கதிர் 2014 ஆம் ஆண்டு பெங்களூர் வந்திருந்த போது கப்பன் பார்க்கில் நடைபெற்ற சந்திப்பு. அது குறித்த அவரது பகிர்வு இங்கே:
அன்பு மிகும் பொழுதுகள்- http://maaruthal.blogspot.in/2013/01/blog-post_27.html

அதிலிருந்து இரண்டு பத்திகள்:

“...நாலு மணிக்கு அடைய வேண்டிய கப்பன் பூங்காவை 4.45க்கு அடைந்தோம். எப்படியும் தாமதாமகத்தான் சந்திப்போம் என கொஞ்சம் தாமதாமாக வந்திருந்த பதிவர் ராமலஷ்மி, ஓம் ஸ்ரீ ஆகியோருக்கு அதைவிடத் தாமதமாகச் சென்று நாங்கள் யாரெனப் புரியவைத்தோம்.

             கவிதை, சிறுகதை, கட்டுரை, நிழற்படம் என எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து சோர்வின்றி செயல்பட்டு வரும் ராமலஷ்மி என்னைப் பல சூழல்களில் எழுத்து ரீதியாக ஆற்றுப்படுத்திய ஒரு குருவுக்கு நிகரானவரும்கூட.. தொடர்ந்து எல்லாத் தளங்களிலும் அவரின் செயல்பாடு எனக்கு எப்போதுமே ஆச்சரியம் நிறைந்தது. ஒரு காலத்தில் மாதத்திற்கு 4 இடுகைகள் மட்டும் எழுதியவரை 4லிலிருந்து 10-15 வரை எழுத நான் ஊக்குவித்தேன், இப்போது 4-5களில் சோம்பிக்கிடக்கும் என்னை அவர் ஊக்குவிக்கும் நிலையில் இருக்கும் நிலை குறித்துப் பேசினோம். ...”

இப்போது மீண்டும் மாதத்திற்கு சராசரியாக 4 இடுகைகள் என்ற அளவுக்கு நான் வந்து விட்டுள்ளது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அவர் தொடர்ந்து பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் எழுதியதோடு அவற்றை அவ்வப்போது தனது பக்கத்திலும் பதிந்தபடி இருப்பதில் மகிழ்ச்சி.

இவரது முதல் நூலுக்கு நான் எழுதி கல்கியில் வெளியான விமர்சனம் இங்கே:


(கதிரின் FB பகிர்வு)

மேலும் ‘பெயரிடப்படாத புத்தகம்’, ‘உறவெனும் திரைக்கதை’ஆகிய இரு நூல்களை வெளியிட்டுள்ளார். தற்போது பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களில் அழைப்பின் பேரில் சென்று சிறப்புப் பயிலரங்கங்கள் நடத்தி வருகிறார். தனது பணி, பயிலரங்கள், அதற்கான உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றுக்கு நடுவே எழுத்தையும் விட்டு விடாது தொடருகிறார். வாழ்த்துகள் கதிர்!
***

படத்துளி:


கற்றடைய வேண்டிய ஞானம், சமரசம்! 
 ஒரு அன்பான உறவை ஒரேடியாக முறித்துக் கொள்வதைக் காட்டிலும் 
 சற்றே வளைந்து கொடுக்கலாம்.
***


19 கருத்துகள்:

  1. vaazhthukkaL. Thiramai migundhirundhaal vaLarchikku kuraivE illai. melum merugu serka vazhthukkaL.
    asai podum iniya payaNangaLin ninaivugaL inimaiyaanavai.

    பதிலளிநீக்கு
  2. வல்லிக்கண்ணன் பற்றி இப்போது தான் தெரிந்துகொண்டேன்.. சாதனையாளர்.
    உங்களுக்கென்ன.. உடைஞ்சு போன காமெரால கூட அழகா படம் எடுத்துர்வீங்க.. வாழ்த்துக்கள்.
    புத்தக விழாவில் உங்கள் புத்தகங்கள் வரவேற்பு பெறட்டும்.

    'தாமதமாகத்தான் சந்திப்போம்' - இந்த நிச்சயப் பொறுப்பின்மை இந்தியாவில் இருக்கும் பொழுது மட்டும் தொற்றிக் கொள்கிறது. ஏனோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு ஐந்து நிமிடங்கள்தான் தாமதம்:)! பெங்களூரின் போக்குவரத்து நெரிசலில் நேரத்தைக் கணித்துச் செல்வது சிரமம். இப்போது gps ஓரளவுக்கு உதவுகிறது.

      நீக்கு
    2. ஹிஹி.. நானும் இதையே தான் சொல்றது..

      நீக்கு
  3. சொல்ல மறந்து விட்டேனே.. எனக்கும் இந்த யாஷிகா காமெரா பிடிக்கும்.. சுத்தமாக வேலை செய்யாத ஒன்றை பர்மா பஜாரில் வாங்கி ஏமாந்த அனுபவம் உண்டு. திரும்ப வாங்க மறுத்த கடைக்காரனை ஒரு வழி செய்தது வேறு விஷயம். பேட்டையில் இருந்தால் அது ஒரு வசதி. அது ஒரு காலம்..ஹ்ம்ம்.

    சும்மா நினைவுகளுக்காக சமீபத்தில் 80களின் தொன்மை காமரா வாங்கலாம் என்று முயன்றால் பதினைந்து டாலருக்கு சைனாவில் வாங்கி அறுபது டாலரிலிருந்து முன்னூறு டாலர் வரை - ஏமாந்தவரைப் பொறுத்து - அழுக்கடித்து விற்கிறார்கள். யாஷிகா காமேராக்காரனே கூட இப்படி அச்சு அசலாக தயார் செய்ய முடியுமா சந்தேகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் அதில் படமெடுக்க நானும் பர்மா பஜாரில் 120mm film தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. நீங்கள் இறுதியில் சொல்லியிருப்பது முற்றிலும் சரியே.

      நன்றி.

      நீக்கு
  4. சந்தோஷம் கொடுக்கும், சந்தோஷம் பகிரும் பகிர்வு. அப்பாதுரை சொல்வது போல உங்கள் கையில் உடைந்த கேமிராவும் உயிர் பெறும்!

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பகிர்ந்து கொண்ட அத்தனை விஷ்யங்களும் அருமை.
    கடைசியில் சொன்ன சமரசம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  6. என்னிடம் ஒரு மினோல்டா காமிரா இருக்கிறது எனக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை.ஃபில்ம் சுருள் போட்டு படம் எடுக்க வேண்டும் என்று மட்டும் தெரிகிறது அது பழுது பட்டதா என்று கூடத் தெரியவில்லை புகைப்பட வித்தகி ஏதேனும் கருத்து சொல்லலாம் என்று இதை எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்திலிருப்பது போன்ற மினோல்டா என்றால் அதற்கு 120 எம்.எம் ஃபிலிம் வேண்டும். அது கிடைப்பது அரிதாக இருக்கிறது. டிஜிட்டல் கேமராக்கள் வந்த பிறகும் கிடைத்துக் கொண்டிருந்த 35எம்.எம் ஃபிலிம்களும் சமீப வருடங்களாக ஸ்டுடீயோக்களில் ஸ்டாக் இருப்பதில்லை.

      உங்கள் கேமரா எந்த மாடல் என நேரம் கிடைத்தால் பார்த்துச் சொல்லுங்கள்.

      நன்றி sir.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin