திங்கள், 31 டிசம்பர், 2012

புத்தாண்டு வாழ்த்துகள்



பிறக்கும் புத்தாண்டில்
நடப்பன நல்லவையாய் இருக்கட்டும்.
இயற்கையின் கருணையில்
நாடும் நானிலமும் செழிக்கட்டும்.
மனிதம் தழைத்து
அன்பும் அமைதியும் நிலவட்டும்.

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

பெண்மை வாழ்கவென..


நாற்பது வருடங்களாகக் கோமாவில் இருக்கிறார் அருணா ஷான்பாக். தற்போது 64 வயதாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் பத்திரிகையாளரும் அவரது தோழியுமான பிங்கி விரானியால் இவருக்காகக் கோரப்பட்ட கருணைக் கொலைக்கான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து தள்ளுபடி செய்யப்பட்ட போதுதான் இவருக்கு நேர்ந்த கொடுமை பலகாலம் கழித்து மீண்டும் உலகின் கவனத்திற்கு வந்தது. சோஹன்லால் பர்தா வால்மிகி எங்கோ உத்திரபிரதேசத்தில் கல்யாணம் காட்சி பார்த்து புள்ளையும் குட்டியுமாக நன்றாக இருக்கிறான் எனக் கேள்வி. தன் பிறப்பின் அர்த்தம் என்னவென்றே தெரியாமல் அருணா சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்றில் இந்த சமூகத்தின் அலட்சியமும், இன்றைய நொடி வரைத் தன்னை மாற்றிக் கொள்ளாத ஆணவமும் கலந்திருக்கிறது.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

கொட்டு மேளங்கள் - மைசூர் தசரா (Mysore Dasara) படங்கள் : நிறைவுப் பாகம்


பாகம்: 1 [படங்கள் 23 ]
பாகம்: 2 [படங்கள் 18 ]

நூற்றுக்கும் மேலான கலைக்குழுவினர் உற்சாகமாக ஆடிப்பாடிச் சென்ற ஊர்வலத்தில் கொட்டு மேளங்கள் மட்டுமே எத்தனை வகை?

நடுநடுவே இடம் பெற்றிருந்தன புராணங்களை, கலாச்சாரத்தைச் சித்தரிக்கும் சிலைகளுடனான வாகனங்கள்.

இவற்றோடு ஊர்வலத்தில் கலந்து கொண்ட யானைகள் ஆறும், இரு தினங்கள் கழித்து மைசூரிலிருந்து லாரிகளில் கிளம்பியக் காட்சியுடன் தசரா தொடரை நிறைவு செய்கிறேன், 27 படங்களுடன்.

#1

வியாழன், 27 டிசம்பர், 2012

மைசூர் தசரா (Mysore Dasara) 2012 - ஊர்வலத்தில் கலைஞர்கள் : பாகம் 2


யானைகள் வழிநடத்திய, “ 402_வது மைசூர் தசரா ஊர்வலக் காட்சிகள் - (பாகம் 1)இங்கே.

 “பலமுறை மைசூர் சென்றிருந்தாலும் இந்த விஜயதசமி நாளில் சென்றதும் 402_வது தசராவின் ஊர்வலத்தைக் காண வாய்த்ததும் யானைகளையும் கலைஞர்களையும் படமாக்கியதும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்து போனது.” -'போவோமா ஊர்கோலம்!' குங்குமம் தோழி, என் ஜன்னலில்.. இங்கே.
 
இனி.. பாகம் 2!
படங்கள் பதினெட்டுடன் ஒரு பகிர்வு:

# 1.
சரா ஊர்வலம் அரண்மனையில் தொடங்கி ஏன் பன்னி(Banni)  மண்டபம் சென்று முடிவடைகிறது என்பதற்கும் ஒரு வரலாற்றைச் சொல்லுகிறார்கள் இதிகாசத்திலிருந்து.

புதன், 26 டிசம்பர், 2012

பெங்களூர் சாகித்யோத்சவா - 'ஆகஸ்ட் 15' ஒரு அறிமுகம்


14 முதல் 23 டிசம்பர் வரையிலுமாக நடந்து முடிந்தது பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் 2012-ன் புத்தகக் கண்காட்சி.

வழக்கத்துக்கு மாறாக இந்த முறை முதல் மூன்று நாட்களும் “சாகித்யோத்சவ்” எனும் இலக்கிய விழாவாகக் கொண்டாடப்பட்டது.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தினகரன் வசந்தத்தில்.. 'புகைப்படப் பிரியன்' மெர்வின் ஆன்டோ பேட்டி

மொபைல் போன் இருந்தால் ஹீரோ ஆகலாம்! :
அட்டைப்படக் கட்டுரையாக..

நன்றி தினகரன் வசந்தம்:)! 
 ***

மூன்றாவது கண்ணாகவேக் கேமராவைப் பாவித்து, தான் ரசித்த விஷயங்களை உலகோடு பகிரும் புகைப்படப் பிரியன் - மெர்வின் ஆன்டோ. நாகர்கோவில் தொழில் நுட்பக் கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு முன் எலெக்ட்ரானிக்ஸ் படித்த கையோடு மனதுக்குப் பிடித்தப் புகைப்படத் தொழிலில் இறங்கியவர்.

உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்று கேட்பதை போல் என்னிடம் சிலர் கேட்பதுண்டு... ‘நிக்கான் கேமரா சிறந்ததா? கானன் காமெரா சிறந்ததா?’ என்று. நம் பார்வையில் இரண்டும் ஒன்றே. ஆனால், நாம் பழகும் விதத்தில்தான் இருக்கிறது வித்தை. நமக்குள்ளே புதைந்து கிடக்கும் க்ரியேடிவிட்டிக்கு எந்தக் கேமரா என்பது முக்கியமே இல்லை.

_ மேலும் வாசியுங்கள்,  மெர்வின் எனக்கு அளித்த பேட்டியை..

அவர் எடுத்த அற்புதமான படங்களை ரசித்தபடி:)!

வெள்ளி, 21 டிசம்பர், 2012

ஈரமாய் இருக்கட்டும் தூரிகை - பண்புடன் புகைப்படப் போட்டியில் முதல் பரிசு

நன்றி பண்புடன்!

கட்டற்ற சுதந்திரத்துடன் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவென 2005_ஆம் ஆண்டு ஆசிஃப் மீரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கூகுள் மின்னஞ்சல் குழுமம்‘பண்புடன்’. இணைய இதழாகவும் இயங்கி வந்ததை அறிந்திருப்பீர்கள்.

தண்ணீர்’ என்ற தலைப்பில், குழுமம் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் அனுப்பிய படத்திற்கு முதல் பரிசு அறிவிப்பாகியுள்ளது:)!

திங்கள், 17 டிசம்பர், 2012

தூறல்:10 - பொதிகையில் ‘பொன்னான முதுமை’; இளம் கலைஞர்; நவீன விருட்சம்; குங்குமம்


தினகரன் வசந்தத்தில் திரு. நடராஜன் கல்பட்டு அவர்களுடனான என் நேர்காணலை வாசித்து விட்டு அவரைப் பொதிகை தொலைக்காட்சியின் ‘பொன்னான முதுமை’ நிகழ்ச்சிக்காகப் பேட்டி காணமுடிவு செய்த தூர்தர்ஷன் இயக்குநர் திரு ஸ்ரீனிவாசன், பத்திரிகையின் மூலமாக என்னைத் தொடர்பு கொண்டு திரு. நடராஜன் அவர்களின் அலைபேசி எண்களை வாங்கிக் கொண்டிருந்தார் சில மாதங்கள் முன்னர்.

சென்ற வாரம் சென்னையிலிருக்கும் திரு நடராஜன் அவர்களின் இல்லத்தில் படப்பிடிப்பு முடிந்தது.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

பூவாகிக் காயாகி.. - தோட்டத்தில் மாதுளை

காத்திருந்து.. காத்திருந்து.. எடுக்கவில்லை:)! ஒரே மரத்தில் பல்வேறு பருவங்களில் பூத்துக் காய்த்துக் கிடந்தவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறேன்:

மாதுளை / Pomegranate (Punica granatum)

#1

#2

வியாழன், 13 டிசம்பர், 2012

குழந்தைத்தனம்தான், ஆயினும் மிக இயல்பானதே - சாமுவேல் டெய்லர் கொலரிட்ஜ் (1)


இரு சிறிய சிறகுகள் எனக்கிருந்தால்
ஒரு புசுபுசுப் பறவையாக நானிருந்தால்
பறந்து உன்னிடம் வந்திடுவேன், என் அன்பே!
தெரிகிறது, இது போன்ற வீணான சிந்தனைகளால்
எந்தப் பிரயோசனமும் இல்லை
நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன்.

புதன், 12 டிசம்பர், 2012

RED FRAMES; SBI நூற்றாண்டு; டிசம்பர் PiT.. போட்டிகள் - சென்னை வீக் என்ட் க்ளிக்கர்ஸ் கண்காட்சி


 RED FRAMES வழங்கும் " FRAMES OF MY CITY 2 " :
சென்ற வருடம் போலவே இந்த வருடமும் ஏராளமான பரிசுகளுடன் காத்திருக்கிறது உங்கள் படங்களுக்காக ரெட் ஃப்ரேம்ஸ்.

பொதுவான விதிகள்:

நீங்கள் நேசிக்கும் ஒரு ஊரின் இடங்களையும், மக்களையும், அதன் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கும் காட்சிகளையும் படமாக்க வேண்டும். அது பிறந்த ஊரோ, வசிக்கும் ஊரோ அல்லது குறிப்பிட்ட சிறப்புகளினால் மனதைப் பறிகொடுத்த ஊரோ எதுவாயினும் இருக்கலாம்.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

மல்லிகை மகளில்..- வனத்தில் திரிந்த வாழ்த்துக் குரல்!

டிசம்பர் 2012, மல்லிகை மகளில்..
நன்றி மல்லிகை மகள்!
***

கானகத்தைச் சுற்றி சுற்றி வருகிறது
எவருக்கும் உரித்தானதற்ற குரல்..
நதியினில் குளித்துப்
பாறைச்சூட்டில் உலர்ந்து
மரக்கிளைகளில் ஊஞ்சலாடி
மலர்களில் உறங்கி
மழையினில் நனைந்து
எல்லோருக்கும் பொதுவான
வாழ்த்தினைச் சுமந்து.

வனங்களை நோக்கி
நகரங்கள் நகர நகர

வியாழன், 6 டிசம்பர், 2012

வாழும் வரை போராடு


“இயற்கையை அவதானியுங்கள், இயற்கையை நேசியுங்கள்; இயற்கையோடு நெருங்கியிருங்கள்; அது உங்களைக் கைவிடாது” - ஃப்ராக் லாயிட் ரைட்

#1. மொட்டும் மலரும் - Red Granadilla 
Common name: Red Passion Flower, Scarlet Passion Flower, Red Granadilla 
Botanical name: Passiflora coccinea Family: Passifloraceae (Passion flower family)


தொகுப்பில் இருக்கும் மலர்களின் பெயர்களை அறிய உதவிய நண்பர்களுக்கு நன்றி! நன்றி!

#2. அரும்புகள்

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

அடைக்கோழி - தினமணி கதிர் சிறுகதை


த்தமில்லாமல் அறைக்குள் நுழைந்த கருப்பி மூலையில் போய் அமர்ந்து கொண்டு சன்னமாகக் குரல் எழுப்பினாள்.

தெரிந்து விட்டது சரசுக்கு. தலைமுடியை உதறிக் கொண்டையாக முடிந்தபடியே எழுந்தவள் வீதிக்கு வந்தாள். “சீனு ராசா ஓடியாப்பா” உரத்தக் குரலில் அழைத்தாள். “கருப்பி வந்துட்டாளா பாட்டி? டேய் வாங்கடா” சீனு நண்பர்களையும் அழைக்க, கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த அத்தனை பேரும் “ஹோ” எனப் பெருங்கூச்சலுடன் மட்டையும் கையுமாக ஓடி வந்தார்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin