உரத்த சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உரத்த சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 மார்ச், 2018

கடவுளின் ஆகச் சிறந்த படைப்பு - மக்களும் மழலைகளும்..(1)

#1


‘பெண்.. 
சக்தியின் அடையாளம்,
கடவுளின் ஆகச் சிறந்த படைப்பு,
அவளன்றி எப்படைப்பும் சாத்தியமில்லை!’


#2
ரோஜா என்றும் சூரியகாந்தியாக முடியாது, சூரியகாந்தி ரோஜாவாக முடியாது. எல்லாப் பூக்களும் பெண்களைப் போல அதனதன் வழியில் அழகானவையே. பெண்கள் தத்தமது தனித்தன்மையோடு திகழ, அவர்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன்
_Miranda Kerr



#6
"தம் கனவுகளின் அழகில் நம்பிக்கை வைப்பவர்களுக்கே 
சொந்தமாகிறது எதிர்காலம் " 
- Eleanor Roosevelt.

#4
"அடக்கம் என்பது  தற்பெருமையை விடுத்து, 
அதே நேரம் கெளரவத்தைத் தக்க வைத்துக் கொள்வது."
_ Vanna Bonta

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

ஒரேயொரு பரிசு

#1
‘ஒரு சிலரே உணருகின்றனர், 
அதிர்ஷ்டம் என்பது உருவாக்கப்படுவது என்பதை.’
 - Robert Kiyosaki

#2
“சில நேரங்களில் விலகிச் செல்வதென்பது பலகீனத்தைக் குறிப்பதாகாது, 
எல்லா வகையிலும் பலத்தைப் பறைசாற்றி நிற்கும்."


#3
 ‘உங்கள் கவனம், உங்களுக்கு எரிச்சலைத் தருபவர்கள் மேல் அன்றி,

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

வாழும் கலை

சென்ற வாரம் என் ஃப்ளிக்கர் பக்கத்தில் பகிர்ந்த படங்களின் தொகுப்பு:

#1
“சூரியன் கூடத் தனியேதான் இருக்கிறது. 
ஆனாலும் பிரகாசமாகவே இருக்கிறது.”

#2
“நீண்ட தொலைவுக்கு உங்கள் பார்வை செல்ல வேண்டாம்,  ஏனெனில் உங்களால் எதையுமே பார்க்க முடியாது போகும்.”

#3
“ஐந்தே நிமிடக் கருத்துப் பரிமாற்றம் ஓர் ஆண்டுக்கு மேலாக இழுத்தடிக்க வல்ல மனஸ்தாபத்தையும் குழப்பத்தையும் தவிர்க்க உதவும்.”
_Joyce Meyer 

புதன், 19 ஜூலை, 2017

என்னால் முடியும்! - மஹாத்ரிய ர பொன்மொழிகள் 11

#1
“நீங்கள் விரும்புவது கிடைப்பதில்லை. 
எதற்கு நீங்கள் தகுதியானவரோ அதுவே கிடைக்கிறது.”


#2
“நம் முன்னோர்கள் கற்றுத் தந்ததை விட்டொழித்தால், 
நம்முடையன எதுவுமே மிஞ்சாது"

#3
“எந்த ஒரு ஈர்ப்புக்கும் ஒரு கவனச் சிதறலும் தேவையாக இருக்கிறது. 
சிறு இடைவேளைகள் இல்லாது போயின் நாம் உடைந்து போவோம்.”

#4
“ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கும் ஒரு விளக்கம் வைத்திருப்பதோடு, தங்கள் சொல்லே இறுதியானதாக இருக்க விரும்புகிறார்கள்.” 

சனி, 15 ஜூலை, 2017

எந்த மனிதனாலும் அடைக்க முடியாத கதவுகள்

#1
வாழ்க்கை கடினமானது.
ஏன், அதை எதிர்கொள்ளும் நீங்களும் கூடதான்!

#2
"புன்னகை புரியுங்கள், ஏனெனில் அது எளிதானது.. இனிதானது.."


#3
“இடர்கள் கொண்டதே வாழ்க்கை - அதனால் என்ன?”
_Malcolm Bradbury

வெள்ளி, 23 ஜூன், 2017

மரணம் இல்லாத வாழ்க்கை

#1
‘வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்!’

#2
"மற்றவர்களை அறிந்து கொள்வது மெய்யறிவு,  
உன்னை நீ அறிந்து கொள்வது ஞானம்" 
- Lao Tzu 


#3
“ஒரு வாசகன் மரணிக்கும் முன் ஆயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்து விடுகிறான். எதுவுமே வாசிக்காதவன் ஒரே ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறான்.”_George R.R. Martin

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

வண்ணக் கனவுகள்

#1
‘திரும்பும் வழிகள் அடைபட்டுப் போகையில், உங்கள் உள்ளுணர்வு உங்களை முன்னடத்திச் செல்லும்.’
#2
பெருமைகளைக் கடந்து நிற்பது நல்ல விஷயம், ஆனால் அப்படி கடப்பதற்குப் பெருமைப்படக் கூடிய விஷயம் இருந்தாக வேண்டும்.
- Georges Bernanos

#3
‘உங்கள் வாழ்க்கையைக் கருப்பு வெள்ளையில் காண்பது போல உணருகிறீர்களா?

ஞாயிறு, 12 மார்ச், 2017

உள்ளது உள்ளபடி..

#1
‘சென்று திரும்ப இனிமையானது, கடந்த காலம். ஆனால் நிரந்தரமாகத் தங்க உகந்ததன்று.’


#2 ‘மந்தையோடு செல்வது எளிது. தனித்து நிற்கத் தைரியம் வேண்டும்.’

#3
உறக்கம் ஒரு சிறந்த தியானம்
_ தலாய் லாமா

வெள்ளி, 18 நவம்பர், 2016

நங்கூரம்

#1
மகிழ்ச்சியாய் இருங்கள். நீங்கள் நீங்களாய் இருங்கள். மற்றவர்களுக்கு அது பிடிக்காவிட்டால் போகட்டும். மகிழ்ச்சி ஒரு விருப்பத் தேர்வு. ஒவ்வொருவரையும் திருப்திப் படுத்திக் கொண்டிருப்பதற்காக அல்ல நமது வாழ்வு.

#2
உங்கள் அனுமதியின்றி யாராலும் உங்களைத் தாழ்வாக உணர வைக்க முடியாது. _ Eleanor Roosevelt 

#3

‘மகிழ்ச்சி கொள்வோம். எல்லாமே நன்றாக நடப்பதற்காக அல்ல,
எல்லாவற்றிலும் நல்ல பக்கத்தை நம்மால் பார்க்க முடிவதற்காக.’

வெள்ளி, 1 ஜூலை, 2016

நீங்கள் நீங்களாக..

# 1
எப்போதும் நினைவில் இருக்கட்டும், மற்ற எல்லோரையும் போன்று நீங்களும் தனித்துவமானவரே. 
Margaret Mead 

#2
“சில நேரங்களில் சின்னச் சின்ன ஆசைகளே வாழ்வில் அதிமுக்கியமானதாகின்றன.”

# 3
எதிர்காலத்தை உங்கள் வருத்தங்கள் அன்றி, உங்கள் நம்பிக்கைகள் வடிவமைக்கட்டும். 
_ Robert H. Schuller

ஞாயிறு, 6 மார்ச், 2016

அன்பெனப்படுவது

#1
'பருவங்களின் உதவியை நாடியிராது வளருகின்ற மலருகின்ற ஒரே பூ, அன்பு.’ _ Kahlil Gibran

#2
முயன்றிட வேண்டும் என்கிற முடிவில் ஆரம்பமாகிறது ஒவ்வொரு சாதனையும். _ Gail Devers


#3
எவ்வளவு மெதுவாகச் செல்கிறாய் என்பது ஒரு பொருட்டேயில்லை நின்று விடாத வரையில். - Confucius


#4

புதன், 10 பிப்ரவரி, 2016

உள்ளம் உடைமை

#1
‘வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை அல்ல. உணர்ந்தறிய வேண்டிய உண்மை’ - Søren Kierkegaard. 

#2
மன உறுதி.. பெரும் சக்தி!


#3
'கனவுகளுக்குக் கிடையாது காலாவதித் தேதி. மூச்சை இழுத்து விட்டு முயன்றிடுங்கள் மீண்டும்.’ _ Kathy Witten.

புதன், 23 செப்டம்பர், 2015

உனக்கான நாள்

#1
ஆசையின் தீவிரம், கனவின் அளவு, போகிற போக்கில் ஏமாற்றங்களைச் சமாளிக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது, வெற்றியின் அளவு._ Robert Kiyosaki
#2
இதயத்தில் சற்றே இடம் வைத்திருங்கள், நினைத்தும் பார்த்திராத ஆச்சரியங்களுக்கு. _Mary Oliver
#3 

செவ்வாய், 9 ஜூன், 2015

தன்வலி அறிதல்

#1
வெற்றி பெறுவதே ஒன்றே வாழ்க்கையில் எல்லாம் என்றில்லை. வெற்றி பெற வேண்டுமென்கிற எண்ணம் போதும் நம்மைச் சரியான பாதையில் செலுத்த.


#2
சாதனையாளர்களில் பலர் வெற்றியைப் பற்றிக் கனவு கண்டதில்லை. அதற்காக உழைத்திருக்கிறார்கள்..

#3
“நீங்கள் நேசிக்கும் விஷயத்தின் அழகு நீங்கள் செய்யும் விஷயத்திலும் இருக்கட்டும்.”_ரூமி


#4
 'உங்கள் பலத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். பலவீனங்களை மிகைப்படுத்திப் பார்க்காதீர்கள்.'

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

வெற்றிப் பாதை

#1   த்தனை தூரம் வந்து விட்டோம். இந்த நேரத்தில் விலக வேண்டுமா?

#2 எந்தத் திட்டமிடல்களும் இல்லாத இலக்கு, வெறும் விருப்பமாகவே நின்று போகிறது.

#3 “அச்சங்களோடு போராடினால் வாழ்க்கை முழுவதும் போர்க்களத்திலேயே கழியும். எதிர் கொண்டு நின்றால் அவற்றிலிருந்து விடுதலை நிச்சயம்.”
_ Lucas Jonkman

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

உள்ளுவதெல்லாம்..


1. "இலக்கை அடைகிறீர்கள், ஏற்கனவே அடைந்து விட்டதாக உணருவதன் மூலமாக."
- Eckhart Tolle.

2. "சரியான இலக்கில் ஆரம்பிக்கிறது வலுவான செயல்திட்டம்."
 _ Michael Porter

சனி, 10 ஜனவரி, 2015

கனவும் இலக்கும்

#1
“குரலை உயர்த்தாமல், வார்த்தைகளை உயர்த்துங்கள்.
இடியல்ல, மழையே பூக்கச் செய்கிறது மலர்களை.” -ரூமி


#2
“புதிதாய் ஒன்றைத் தொடங்க அதில் முழுதாய்த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால் தேர்ச்சியுற, ‘தொடங்குதல்’ அவசியம்.”
- Joe Sabha

#3
“கடந்த காலம் எத்தனைக் கடினமானதாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். மீண்டும் தொடங்கலாம் எப்போதும்.”
_ புத்தர்

புதன், 12 நவம்பர், 2014

நாம் நாமாக..

1. கண்கள் இருளைப் பார்க்கும் போது நம்பிக்கை நிறைந்த இதயம் ஒளியைப் பார்க்கிறது. 



2. வாழ்க்கை எளிதாவதில்லை. எதிர்கொள்ளும் திறனே வலுப்பெறுகிறது.

Bokeh Photography - இதுவும் கீழ் வருகிற மூன்று மற்றும் படம் 10...

3. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதுதான் சகலமும்.
சொல்கிறாள் Dolly

4. குறைகளில்லாத மனிதர்கள் இல்லை. சந்திக்க விரும்பும் ஆதர்ச மனிதராக நாம் இருக்கிறோமா முதலில்?

வெள்ளி, 24 அக்டோபர், 2014

சிறந்த ஆசிரியர்கள்

 1. தீவிரமான நம்பிக்கை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது.

2. இணைந்து செயலாற்றினால் அதிகம் சாதிக்கலாம்.

3. ஒரு விஷயத்தை நாம் பார்க்கிற விதத்தை மாற்றிக் கொண்டால், பார்க்கின்ற விஷயங்களும் மாறத் தொடங்கும்.


4. ஒருவரைப் பற்றி ஒருவர் புறம் கூறித் திரியாமல்,

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

திடம் கொண்டு போராடு

1. பிரச்சனை என்னவென்றால், நேரம் இன்னும் இருக்கிறது என நாம் நினைப்பது.

2. முடியும் என நம்புவதிலேயே பாதி தூரத்தைக் கடந்து விடுகிறோம்.

3. மகிழ்ச்சி என்பது நம்மிடம் என்ன இருக்கிறது, நாம் யார் என்பவற்றைச் சார்ந்தது அல்ல. நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் பொறுத்ததே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin