இருமாத இடைவெளிக்குப் பின் புதிய பொலிவுடன் மீண்டும் வெளிவந்து விட்டுள்ளது அதீதம்.
அதே பாதையில் மூன்று வருடங்களாகப் பல சுவாரஸ்யமான கட்டுரைகள், வித்தியாசமான தொடர்கள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், கதை, கவிதை, நூல் மற்றும் திரை விமர்சனங்கள், ஃபோட்டோ கார்னர், இ_புத்தகங்கள், வலைப்பூ-எழுத்தாளர் அறிமுகங்கள் என செப்டம்பர் 2014 வரை எடுத்துச் சென்றோம். Domain தளத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் தவிர்க்க முடியாமல் ஏற்பட்ட இரு மாத இடைவெளியோடு, பழைய படைப்புகளை உடனடியாக புதிய தளத்துக்குக் கொண்டு வர முடியாத சூழல். இருப்பினும் இதழின் இயக்கம் நின்று போக வேண்டாமென்கிற முடிவுடன் சுவைபடச் சொல்லும் பணியைத் துவங்கி விட்டுள்ளது அதீதம். முந்தைய வெளியீடுகள் விரைவில் வேறுதளத்திலோ அல்லது அதீதத்திலேயே “2011-2014 படைப்புகள்” எனும் பகுப்பின் (லேபிள்) கீழோ கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றிடும் எண்ணம் உள்ளது.
இனி
அதீதம் ஒவ்வொரு மாதமும் ‘முதலாம், இரண்டாம்’ இதழ்களாக வெளிவரும்.
தொடர்கள் தருகிறவர்கள் வசதிக்காகவும், வகைப்படுத்தும் வசதிக்காகவும்
மாதமிருமுறை என்பது பின்பற்றப் பட்டாலும், வருகிற படைப்புகள் உடனுக்குடன்
அப்போதைய இதழுடன் இணைக்கப்பட்டு வெளியாகும்.
படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை articlesatheetham@gmail.com எனும் வழக்கமான மின்னஞ்சல் முகவரிக்கே தொடர்ந்து அனுப்பிடலாம்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இணைந்து நடத்திய 26_வது இலக்கியப் போட்டியில் எனது “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்குக் கிடைத்த விருதினைப் பற்றி இங்கே பகிர்ந்திருந்தேன். 12 அக்டோபர் 2014 அன்று திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற விழாவில் எனக்காக வழங்கப்பட்ட விருதினை அனுப்பி வைத்திருந்தார் மன்றத்தின் மாநிலச் செயலாளர், முனைவர். திரு. நா. இராமச்சந்திரன். அவருக்கு என் நன்றி.
# போட்டியில் பரிசு பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
விழா அமைப்பாளர்களுக்கு நன்றி! |