சனி, 30 ஜனவரி, 2016

மீள்பார்வை - பதாகையில்..

த்து எம்.எம் அகலப் பரப்பில்
படமாக்கிய காட்சியை
விரியச் செய்கிறேன்
பதினேழு அங்குலக் கணினித் திரையில்.

புதன், 20 ஜனவரி, 2016

‘குங்குமம்’ இந்த வார இதழில்.. - படமும் கவிதையும்

# படமும் கவிதையும்..
'ங்க இங்க அசையப்படாது'
ஆற்றுப் பாறையில் மூட்டைத் துணியை
துவைக்க ஆரம்பித்த
பொன்னம்மை ஆச்சியின்
அதட்டலுக்கு அடங்கிப் போய்
அவளின் முதுகோடு முதுகாக
முகஞ்சுருங்கிப் போய்
அமர்ந்திருந்தாள் பொன்னி.
சாயங்கால வெயிலில்
தகதகத்துக் கொண்டிருந்தது
தாமிரபரணி.

திங்கள், 18 ஜனவரி, 2016

இரங்கல் - இந்த வாரக் கல்கியில்..

பறந்து கொண்டிருந்தன பறவைகள்
எட்டுத் திக்குலுமாக
ஆனால் பாடவில்லை.
வீசிக் கொண்டிருந்தது காற்று
தென் கிழக்காக

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

அட்டைப் படம் - கிழக்கு வாசல் உதயம்

சென்ற மாத ‘கிழக்கு வாசல் உதயம்’ இதழின் அட்டைப் படமாக நான் எடுத்த ஒளிப்படம்.
நன்றி ‘கிழக்கு வாசல் உதயம்’!
படத்தைப் பலரும் பாராட்டியதாகத் தெரிவித்த ஆசிரியர் திரு. உத்தமச் சோழன், ஒரு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

புதன், 13 ஜனவரி, 2016

செல்ஃபி சூழ் உலகு - குறும்படம்


ன்னை முன் நிறுத்த வழி தேடிக் கொண்டேயிருக்கிறது மனது. அப்படிச் செய்யாது போனால் காணாது போய்விடுவோமோ எனப் பதறுகிறது. நாளின் நகர்வை, பெருமை பேசும் மணித்துளிகளை, பரவச நொடிகளை சோஷியல் மீடியாக்களில் பகிர்வது ஒருவகை உற்சாகத்தை அளிப்பதாக நம்புகிறது. சுய விளம்பரங்களில் தவறில்லை என்கிறது. நல்லது செய்வதை நான்கு பேர் அறியச் செய்வது மேலும் பலரைச் சிந்திக்க வைக்குமல்லவா என்று சமாதானம் சொல்கிறது. அது உண்மையாவும் இருக்கலாம். ஆனால் இவற்றைத் தாண்டி ஒரு அழகான உலகம் இருக்கிறது என்பதை அருமையாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் உழவன் (நவநீத்) இந்தக் குறும்படத்தில்.
#

வெள்ளி, 8 ஜனவரி, 2016

அதிசய ஆலயம் - நந்தி தீர்த்த க்ஷேத்ரம் - பெங்களூர் மல்லேஸ்வரம்

#1

#2
ழமை வாய்ந்த பல கோவில்களுக்குப் பெயர் போன ஊர், பெங்களூரின் மல்லேஸ்வரம். தொன்னூறுகளின் தொடக்கத்தில் அங்கே வசித்த இருவருடங்களில் அநேகமாக எல்லாக் கோவில்களுக்குமே சென்றிருக்கிறோம்.  குறிப்பாக சம்பிகே ரோடுக்கு பேரலல் ஆக, பதிமூன்றாம் பதினைந்தாம் குறுக்குத் தெருக்களுக்கு நடுவே அமைந்த தெருவை “கோவில் தெரு” என்றே அழைக்கிறார்கள். மல்லேஸ்வரத்தை விட்டு வேறு பகுதிக்கு வந்து விட்ட பின்னரும், இங்கே இருக்கும் காடு மல்லேஸ்வரர் மற்றும் நரசிம்ம மூர்த்தி கோவில்களுக்கு அடிக்கடி செல்வது தொடர்ந்தது. இங்கிருக்கும் காடு மல்லேஸ்வரர் மற்றும் நரசிம்ம மூர்த்தி கோவில்களுக்கு நேர் எதிரே வெற்று நிலமாக காட்சியளித்த இடத்தில் பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது 1999ஆம் ஆண்டு, ஒரு நந்தீஸ்வரர் கோவில். 
#3

அடுக்குமாடி கட்டுவதற்காகத் தோண்டப்பட்டக் காலி நிலம் உள்ளே சதுசதுப்பாக இருக்க.. ஆச்சரியத்துடன் மேலும் தோண்டத் தோண்ட.. பரபரப்பு, பிரமிப்பு, விடுவிக்க முடியாத புதிர்களோடு வெளி வந்தது,தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி க்ஷேத்ரம்என்றழைக்கப்படும் இந்த ஆலயம்.

#4
சாலையிலிருந்து பல அடிகள் இறக்கத்தில் அமைந்த கோவிலுக்குத் தற்போது வெளிப்புற, உட்புற நுழைவாயில்களும் சுற்றுச் சுவர்களும் கட்டப்பட்டுள்ளன.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

பாரீஸைப் பின்பற்றி..

டைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்று,  பெங்களூர் குமர க்ருபா சாலையின் சித்திரச் சந்தையின் 13_ஆம் பதிப்பு. வருடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய புனிதப் பயணம் போலக் கூடி விடுகிறார்கள் கலைஞர்களும், மக்களும்.

சித்ரகலா பரீக்ஷத் கல்லூரி நிர்வாகம் மற்றும் சித்திரச் சந்தை குழுவின் பொதுச் செயலாளரான DK செளடா, “பாரீசுக்கு சென்றிருந்த போது அங்கே பூங்காக்களிலும், சந்தைகளிலும் கலைஞர்கள் சாவதானமாக அமர்ந்தபடி ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருப்பார்கள். சிலர் மக்களை அமர வைத்து வரைந்து கொண்டிருப்பார்கள். அது வரை உலகத்தினர் பார்வைக்கு வந்திராத பல கலைஞர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டே வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள். அதைப் பார்த்த பின்னரே நாமும் ஏன் பெங்களூரில் இது போல நடத்தக் கூடாது என்கிற எண்ணம் உதித்தது.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

ஆல்பம் 2015 - புத்தாண்டு வாழ்த்துகள்!

திவுலகில் ஏழாம் ஆண்டையும் எழுநூறு++ பதிவுகளையும் கடந்த இவ்வருடத்தில் என்ன செய்தேன் என எப்போதும் போல ஒரு பார்வை. பல மாதங்களில் பதிவுகளின் எண்ணிக்கை மிகக் குறைவே. சொந்த வேலைகள் மற்றும் பல காரணங்களால் எழுத்திலும் தேக்கம் என்றாலும் ஓரளவுக்கு முடிந்ததைச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது, வேகமாகப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்ததில்..!

விதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் பத்திரிகைகளிலும், சொல்வனம், நவீன விருட்சம், வளரி உள்ளிட்ட இதழ்களிலும், முத்துச்சரத்திலுமாகத் தொடருகின்றன.  கட்டுரைகள், நூல் விமர்சனங்களும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin