வெள்ளி, 25 நவம்பர், 2011

மிலே சுர் - சர்வேசனின் குறும்படம் - கிரியின் விமர்சனம்

பாகம் 1
பாகம் 2


யாதும் ஊரே யாவரும் கேளீர் என வாழும் இந்நாளில் அனைவரின் சுரமும் ஒன்றாகி அகிலமெங்கும் அன்பு பெருக சர்வேசன் எடுத்துக் கொண்டிருக்கும் நன்முயற்சியே இக்குறும்படம்:

http://youtu.be/_cRtySd65u8



பிழைப்புக்காக உழைப்புக்காக மட்டுமின்றி, பிறந்த மண்ணில் இருக்க இயலா கட்டாயத்தாலும் புலம் பெயர்ந்து வாழுபவர் உலகில் பல கோடி. சக மனிதர் எவர் மீதும் நேசம் பாராட்டும் உணர்வு ஒன்றாலேயே உலகில் அமைதி சாத்தியப்படும். அந்த வகையில் நம் நாட்டின் ஒற்றுமைக்கான இப்பாடலைப் பிறநாட்டு முகங்களும் பாடுகையில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. தொழில் நுட்ப வகையில் தரமான ஆக்கம். பல மாத உழைப்புக்குச் சிறப்பான பலன்.

இவர் சமூக நோக்குடனான பதிவுகள் பல குறித்து ஆசிரியராக வலைச்சரம் தொகுத்த போது நான் பகிர்ந்தவை இங்கே. ‘மிலே சுர்’ரின் அடுத்த கட்ட முயற்சியாக நல்ல சமூகக் கருத்துடைய ஒரு கருவை எடுத்து இயக்க விரும்பிக் கதை தேடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை ஷக்தி பிரபா உதவக் கூடும். இன்னொரு நல்ல சமுதாய நோக்குடனான குறும்படம் பிறக்கக் கூடும். அதற்கு இப்பதிவு ஒரு விதையாய் அமையுமாயின் மகிழ்ச்சியே.

‘மிலேசுர்’ படம் குறித்த விமர்சனத்தை நான் தருவதை விடப் பதிவுலகில் சிறந்த திரைப்பட விமர்சகராக அறியப்படும் கிரி தந்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. கோரிக்கையை ஏற்றுக் குறுகிய அவகாசத்தில் செய்து தந்த அவருக்கு என் நன்றி.

கிரியின் பார்வையில் ‘மிலே சுர்’:

ம்மில் பலருக்கும் ஏதாவது வித்யாசமாக செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதாவது வழக்கமான நமது பணியில் இருந்து விலகி. ஒரு சிலர் பைலட் ஆக நினைத்து இருக்கலாம், சிலர் ஆசிரியர் ஆக நினைத்து இருக்கலாம் இன்னும் சிலர் கலெக்டர் ஆக விரும்பி இருக்கலாம் சிலர் ஒரு இசையமைப்பாளரோ அல்லது இயக்குனர் ஆக நினைத்து இருக்கலாம் ஆனால் குடும்ப சூழ்நிலை மற்றும் அப்போது கிடைத்த வாய்ப்பை பொறுத்து நாம் ஒரு பணியில் அமர்ந்து இருக்கலாம். இருப்பினும் நாம் ஏதாவது வித்யாசமாக செய்து அல்லது நமது மனதுக்கு பிடித்த மாதிரி உள்ள பணியை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

இது போல நிலையில் என்ன தான் நாம் நம் பணியில் சிறப்பாக இருந்தாலும் நம் மனதிற்கு முழு திருப்தி அளிக்கக்கூடிய பணியை செய்யவில்லையே என்ற ஒரு வருத்தம் அல்லது ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இது போல ஒரு நிலையில்தான் சுனில் ஜெயராம் (சர்வேசன்) ஒரு வகுப்பில் இணைந்தார். இதில் நம் ஆர்வம் என்ன? என்ன செய்யலாம் என்பதற்கு ஆலோசனை கூறுவார்கள் அதன் படி நாம் முயற்சிக்கலாம். என்னதான் இதை எல்லாம் நாமே செய்யலாம் என்றாலும் நமக்கு இதை செய்யலாம் என்று அனுபவமுள்ள ஒருவர் ஆலோசனை கூறும் போது நமக்கும் சரி இதை முயற்சித்துப் பார்த்தால்தான் என்ன? என்று தோன்றும்.

இது போல ஒரு வகுப்பில் இவரிடம் உள்ள புகைப்பட கலையில் உள்ள ஆர்வத்தை தெரிந்து கொண்ட அவர் நீங்கள் குறும்படம் எடுக்கலாம் என்று ஆலோசனை கூறி இருக்கிறார். இவருக்கு அப்போது முடியும் என்று தோன்றவில்லை என்றாலும் அது மனதில் இருந்து கொண்டே இருந்ததால் சரி முயற்சித்துத்தான் பார்ப்போமே என்று இந்த குறும்படத்தை எடுத்து இருக்கிறார். ஒரு சிலருக்கு என்னதான் நல்ல சம்பளம் வசதி இருந்தாலும் ஏதாவது வித்யாசமாக செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றும் அந்தத் தேடலில் வந்ததுதான் இந்தக் குறும்படம்.

எனக்குக் கூட நிருபராக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் அது முடியாமல் போய் விட்டது. அதனால் அந்த ஆசையை அல்லது தற்போதைய சூழ்நிலையில் முடியாத ஒன்றை நிறைவேற்ற ப்ளாகில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இது போல் ஒருவரின் முழுமையான முயற்சிதான் இந்தக் குறும்படம்.

இதை தன்னுடைய அலுவலகத்தில் 3000 பேர் உள்ள இடத்தில் மின்னஞ்சல் அனுப்பி இதைப் போல செய்யப்போவதாக கூறியுள்ளார் இதற்கு பதில் அளித்த பலரும் தாங்களும் இதில் பங்கு கொள்வதாகக் கூறி அதை சிறப்பாகச் செய்தும் இருக்கிறார்கள். இது நிச்சயம் ஒரு கூட்டு முயற்சிதான். ஒரு நிறுவனத்தின் பல்வேறு கிளைகளிலும் உள்ளவர்களை (வெள்ளையர்கள் சைனீஸ் உட்பட) ஒருங்கிணைத்து செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை என்பது உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.

இனி குறும்பட விமர்சனம்:

முன்னரே கூறியபடி 80-களில் வந்த தூர்தர்ஷன் பாடலை அப்படியே தற்கால சூழ்நிலைக்கேற்ப ரொம்ப மாற்றாமல் அழகாகக் கொடுத்து இருக்கிறார்கள். நிச்சயம் மிகச் சிறப்பான இயக்கம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

Mile Sur பாடல் இந்திய ஒருமைப்பாட்டை அழகாக விளக்கிய குறும்படம். இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி நபர்களையும் ஒரே பாடலில் கொண்டு வந்து நமது கலாச்சாரத்தை அனைவருக்கும் உணர்த்தி இருப்பார்கள். இன்று வரை இதை அடித்துக்கொள்ள ஒரு தேசிய ஒருமைப்பாட்டு குறும்படம் வரவில்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து.

Mile Sur Mera Tumhara [இதன் பிறகு வரும் ஹிந்தி புரியவில்லை ஹமாரா தவிர :-)] என்பதன் அர்த்தம் "நீயும் நானும் பாடும் பொழுது அந்தப்பாடல் நம் பாடலாகிறது". சரிதானே! இது இந்தியா மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் பொதுவான ஒன்றுதானே! நாமும் வேறு ஒரு நாட்டு நபரும் இணைந்து ஒரு பாடலை உருவாக்கினால் அது இதைத்தானே குறிக்கிறது. இதை விட பொருத்தமான ஒரு பாடல் இவர்கள் நிறுவன ஊழியர்களை வைத்து இயக்கும் போது கிடைக்குமா என்ன! அருமையான தேர்வு.

எனக்கு உள்ள மிகப் பெரிய ஆச்சர்யம் எப்படி இவ்வளவு பேரை ஒருங்கிணைத்து செய்தார்கள் என்பதே! ஒரு பன்னாட்டு (MNC) நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு இதில் உள்ள சிரமம் நிச்சயம் புரியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. அதுவும் வெள்ளைக்காரர்கள் சீனர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு படம் எடுப்பது என்பது மிகச் சிரமமான ஒன்றே.

ஒவ்வொரு காட்சிக்கும் சரியான நபர்களை காட்சிப்படுத்தி இருப்பதே என்னைப் பெரிதும் கவர்ந்து இருந்தது. ஒரு சில படங்களில் நீங்கள் கவனித்து இருக்கலாம். பாடல் நல்ல ஹைபிச்சில் இருக்கும். ஆனால் அதில் நடித்துள்ள கதாநாயகன் கதாநாயகி வாயசைப்பது அதற்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும். மெலடி பாடலைப் பாடுவது போல ஒரு ஹைபிச் பாடலுக்கு முகத்தில் உணர்ச்சிக் காட்டுவார். இதில் என்னை கவர்ந்தவர் என்றால் அஜித். பாடலுக்குத் தகுந்த உணர்ச்சி அவரது முகத்தில் இருக்கும். எடுத்துக்காட்டு "சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்" படம் தீனா.

இதில் அந்தத் தவறு செய்யாமல் சரியான நபரை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். மிகக் கனமான குரலாக இருக்கும், ஆனால் பாடுபவர் அதற்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பார். இதில் அது போல இல்லாமல் குரலுக்கேற்ற நபராக இருக்கிறது. இது தெரியாமல் நடந்ததா இல்லை இதை எல்லாம் யோசித்து செய்தார்களா என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் நன்றே.

குறிப்பாக லதா மங்கேஷ்கர் குரலுக்கு 5.40 நிமிடத்தில் வருபவரும் (அட்டகாசம்), 3.20 நிமிடத்தில் வருபவரும், 4:51 நிமிடத்தில் வருபவரும் மிகச் சரியான தேர்வு. அவர்களே பாடுவது போல உள்ளது. பாடியவர்கள் (வாயசைத்தவர்கள்) பெரும்பாலானோர் சிறப்பாக செய்து இருக்கிறார்கள் என்றாலும் இவர்கள் என்னை ரொம்பக் கவர்ந்தார்கள்.

# தேர்வுகள் அருமை..






ஒரிஜினல் குறும்படம் வெளிவந்த போது தமிழ்நாட்டில் இருந்து கமல் பிரதாப் போத்தன் ரேவதி KR விஜயா பாலமுரளி கிருஷ்ணா என்று பலர் வருவார்கள் அடடா! இதில் நம்ம தலைவர் இல்லையே என்று நினைத்ததுண்டு. இதில் அந்தக் குறை நீக்கப்பட்டு இருக்கிறது :-) தமிழ்ப் பகுதி வரும் போது அதில் வருபவர் ரஜினி ஸ்டைலில் நடித்து இருக்கிறார். [இதோடு துவக்கத்தில் அண்ணாமலை பாட்ஷா படத்தில் வருவது போல அமைத்து இருப்பது சூப்பர் :-)] ரஜினி ஸ்டைலிலான ‘தமிழ்’ பகுதி மற்றும் 5:06 நிமிடத்தில் வரும் ஒளிப்பதிவு இவை சரியாக வரவில்லை. அனைத்து இடங்களிலும் ஒரு திரைப்படத்துக்கான தரத்தில் ஒளிப்பதிவு இருக்கும் போது இந்த இடங்களையும் கவனித்துச் சரியாக எடுத்து இருக்கலாம். பாடல் துவங்கும் போது (1.30 நிமிடத்தில்) கேமரா வளைந்து அறைக்குள் செல்லும் போதும் இசைக்கு ஏற்ப ஒரு இடத்தில் ஒரிஜினல் ரயிலை போலப் பயன்படுத்தி இருப்பதும் சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்.

# பாட்ஷா

பன்னாட்டு நிறுவனம் என்பதால் வெள்ளைக்காரர்களையும் சீனர்களையும் அவர்களது மொழியில், பாரம்பரிய உடையில் நடிக்க வைத்து இருப்பது நல்ல உத்தி. அவர்களுக்கும் முழுக்க இந்தியப்படம் என்றில்லாமல் இது அனைத்து நாட்டு மக்களையும் உள்ளடக்கியப் படம் என்ற திருப்தி இருக்கும். இந்தப்பாடலும் அதையே வலியுறுத்துகிறது.

இந்தப் பாடலின் அர்த்தம் என்ன என்று தெரியாமலே (ஹிந்தி நகி மாலும்) பாடலை ரசித்து வந்தேன். இதில் முதலில் வந்த சப் டைட்டில் மூலமே இதன் அர்த்தம் புரிந்தது. அதனால் என்ன! இசைக்கு மொழி உண்டா என்ன? இசையை ரசிக்க என்றும் எனக்கு மொழி அவசியமாக இருந்தது இல்லை இது அனைவருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

இதில் நடித்துள்ளவர்கள் எந்த ஒரு வழக்கமான நடிகருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப்போல எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் நடித்து இருக்கிறார்கள். படம் எடுத்ததும் திரைப்படம் போல ட்ராலி எல்லாம் வைத்து (Camera--> Rolling --> Action) ஒரு ப்ரொஃபசனலாக எடுத்து இருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாரும் ஓவர் ஏக்டிங் செய்யாமல் குறும்படத்தை காப்பாற்றி இருப்பது :-). பொதுவாக மலையாளத்துக்காரர்கள் என்றாலே ஆண்கள் என்றால் அடர்த்தியான மீசையும் பெண்கள் என்றால் படர விட்ட ஈரக் கூந்தலும்தான் சிறப்பு. இதில் கேரளப்பகுதியில் வருபவருக்கு மீசை இல்லை. இதில் கொஞ்சம் கவனம் எடுத்து யோசித்துச் செய்து இருக்கலாம்.

துவக்கத்தில் பெயர் போடும் போது இன்னும் கொஞ்சம் ப்ரொஃபசனலாக ஸ்டைலிஷாக போட்டு இருக்கலாம். இவர்கள் எடுத்த படத்திற்கும் துவக்கத்தில் வரும் எழுத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல இருக்கிறது. அதாவது குறும்படம் டாப்பாக உள்ளது. எழுத்து ரொம்பச் சாதாரணமாக உள்ளது.

# இன்னும் ஸ்டைலிஷா...மணிரத்னம் போன்ற சில இயக்குனர்கள் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம். எழுத்துப் போடும் போது கூட அதிலும் ஒரு அழகு இருக்கும். துவக்கத்தில் வரும் எழுத்தின் அழகில் கூட ஒரு இயக்குனரின் ரசனை அடங்கி இருக்கிறது என்பது என் கருத்து. படம் ஆரம்பிக்கும் போதே பார்ப்பவர்களை அசரடிக்க வேண்டும்.

குறும்படம் முடியும் போது ஜாக்கி சான் படத்தில் வருவது போல, காட்சிகளை எடுக்கும் போது நடந்த நிகழ்வுகளைச் சேர்த்து இருக்கிறார்கள். நன்றாக இருந்தது சரியான யோசனை கூட.

சர்வேசன் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "கலக்கிட்டீங்க" :-) என் மனமார்ந்த வாழ்த்துகள்.
***

19 கருத்துகள்:

  1. உண்மையிலேயே படம் கலக்கல்!

    மொத்தத்தில் இடுகையை வெகுவாக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ரசித்து, ரசித்ததை ரசனையுடன் பகிர்ந்துள்ளீர்கள். ரசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  3. ராமலக்‌ஷ்மி, big big நன்றீஸ், ரசித்ததர்க்கும், ரசித்ததை வாசக வட்டத்துக்கு தெரிவித்ததர்க்கும்.
    சக பதிவர்களின் பாராட்டுக்கு இணை எதுவுமில்லை :)

    கிரி, பாராட்டுக்கும் விமர்சனத்துக்கும் நன்றி. சுட்டிக்காட்டிய விஷயங்களுக்கும் நன்றீஸ். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் எல்லாமே.

    பதிலளிநீக்கு
  4. சர்வேசன் எனிற சுனில் ,
    அற்புதம் !!!!
    எவ்வளவு பெரிய முயற்சி. அதிலும் மந்துக்கு மிக நெருங்கிய பாடலை இத்தனை அழகாகப் படம் செய்துவிட்டீர்களே.
    அன்பு ராமலக்ஷ்மி இந்தக் குறும்படம் போல இனிமையான படத்தை இதுவரை பார்த்ததில்லை. மிகமிக நன்றி. மனம் நிறைந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நெகிழ்ச்சியான குறும்படம். சர்வேசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். mile sur mera tumhara இந்திய மண்ணைத் தாண்டி மனிதனின் சுரமாக ஒலிப்பதே அழகு. படத்தின் வெற்றியும் மனிதனின் வெற்றியும். தொலைநோக்குப் பார்வைக்கு kudos!

    பதிலளிநீக்கு
  6. தமிழ் ராகத்துக்கு ரஜினி ஸ்டைல் மகுடம் :D நன்றி ராமலக்ஷ்மி பகிர்வுக்கு. என் முகநூலிலும் பகிர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஈரோடு கதிர் said...
    //உண்மையிலேயே படம் கலக்கல்!

    மொத்தத்தில் இடுகையை வெகுவாக ரசித்தேன்.//

    நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம். said...
    //ரசித்து, ரசித்ததை ரசனையுடன் பகிர்ந்துள்ளீர்கள். ரசிக்க முடிந்தது.//

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  9. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //அருமையான பதிவு.
    பாராட்டுக்கள்.//

    நன்றி vgk சார்.

    பதிலளிநீக்கு
  10. SurveySan said...
    //ராமலக்‌ஷ்மி, big big நன்றீஸ், ரசித்ததர்க்கும், ரசித்ததை வாசக வட்டத்துக்கு தெரிவித்ததர்க்கும்.
    சக பதிவர்களின் பாராட்டுக்கு இணை எதுவுமில்லை :)//

    நன்றி:).

    பதிலளிநீக்கு
  11. சசிகுமார் said...
    //பகிர்வுக்கு நன்றி...//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  12. வல்லிசிம்ஹன் said...
    //அன்பு ராமலக்ஷ்மி இந்தக் குறும்படம் போல இனிமையான படத்தை இதுவரை பார்த்ததில்லை. மிகமிக நன்றி. மனம் நிறைந்திருக்கிறது.//

    மகிழ்ச்சியும் நன்றியும் வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  13. Shakthiprabha said...
    //நெகிழ்ச்சியான குறும்படம். ...

    நன்றி ராமலக்ஷ்மி பகிர்வுக்கு. என் முகநூலிலும் பகிர்ந்திருக்கிறேன்.//

    நன்றி ஷக்தி.

    பதிலளிநீக்கு
  14. கலக்கிட்டீங்க ராமலஷ்மி.. விரைவிலேயே வெள்ளித்திரையிலும் உங்களை எதிர் பார்க்கிறோம் ..

    பதிலளிநீக்கு
  15. @ சாந்தி,

    வெள்ளித்திரை எண்ணமெல்லாம் இல்லை. குறும்படக் கனவு நிறைவேறுகிறதா பார்க்கலாம்:)! நன்றி சாந்தி!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin