Sunday, September 25, 2011

சித்திரப் பூக்கள் - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சி (பாகம்-2)

பாகம் 1 இங்கே.

#1 பிறந்த குழந்தையின் பிஞ்சுப்பாத வண்ணம்

#2 வெள்ளை ரோஜா இளஞ்சிகப்புடன் கூட்டணி அமைத்து..

#3 நித்திய கல்யாணி (Catharanthus_roseus_white)
பனித்துளி ஏந்திப் பால் வெள்ளையில்..

#4 போகன்விலா


#5. த்ரீ ரோசஸ்

அன்று மலர்ந்ததாய் ஒன்று
முன் தினம் முகிழ்ந்து விரிந்த ஒன்று

முதிர்ச்சியில் உலர்ந்து கவிழ்ந்து ஒன்று
வாழ்வின் தத்துவம் இதுவென்று..


#6 முதல்வனே.. வனே..சென்ற பதிவில் சொன்னது போல ஒவ்வொரு கண்காட்சியிலும் பெரிய அளவாலும், வியக்க வைக்கும் விதவிதமான நிறங்களினாலும் (shade) முதல் பரிசை விடாமல் தக்க வைத்துக் கொள்ளும் கோழிக் கொண்டை (Cock's Comb). முன்னர் இளஞ்சிகப்பு, ஆழ்சிகப்பில் இவற்றைப் படமாக்கியிருக்கிறேன். இந்த வண்ணத்தில் இம்முறைதான் பார்த்தேன். மெகா தங்க மலர்:)!

#7 உருக்கி ஊற்றி அச்சில் வார்த்த தங்க மலர்கள் மத்தியில் மாணிக்கப் பதக்கமாக சிகப்பு அந்தூரியம் (விற்கிற விலையில் சாத்தியமா என்றெல்லாம் கேட்காதீர்கள். கர்நாடகத்தில் சாத்தியமே, நாட்டுநடப்பை உன்னிப்பாகக் கவனிப்பவராயின் புரிந்திருக்குமே இந்நேரம்!)


#8 டாலியா (Dahlia)

#9 பாதைகளின் நடுவே பல இடங்களில்.. பல வண்ணங்களில்.. வகைகளில்..

#10 ஆயிரம் மலர்களில் சாப்பிடக் கூடிய ஒரே வவையாக..:)!

#11 சென்ற கண்காட்சியில் இதே இடத்தில் தன் மகனோடு பலூன் விற்க வந்திருந்த இதே மனிதரைப் படம் பிடித்திருந்தேன். இந்த முறை இரண்டு மகள்களுமாகக் குடும்பத்துடன்..

#12 ‘மூச்சை’க் கொடுத்து உழைக்கிறார் மூன்று குழந்தைகளையும் ஆளாக்க..அந்தக் கண்களிலிருக்கும் கனவுகள் யாவும் நனவாக வாழ்த்துவோம்!

#13 மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக மக்கள் வந்தபடியேதான் இருந்தார்கள் என்றாலும் எப்போதும் போன்ற பெரும் கூட்டம் இல்லையென்றே சொல்லவேண்டும். இன்னும் சிறப்பாக செய்திருந்திருக்கலாமே எனும் கருத்து பரவலாக இருந்தது.

கண்ணாடிமாளிகைக்கு தவிர்த்து வெளிப்புறம் வழக்கமாக சிறுசிறு பிரிவாக பலவித மலர்கள் காட்சிக்கும் விற்பனைக்குமாக இருக்கும். அவை இந்த முறை அவை இல்லாதது புகைப்பட ஆர்வலருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தது, அதிக அக்கறை எடுக்கப்படவில்லையென. தனிமலராக படம் எடுக்கத் திறந்த தோட்டமே வசதி. போகன்விலா தவிர்த்து ஏனைய யாவுமே கூட்டம் மிகுந்த க்ளாஸ் ஹவுஸ் உள்ளிருந்தவையே.

இருந்தாலும் மக்கள் இயற்கை தீட்டிய சித்திரப்பூக்களிடம் மனதைப் பறிகொடுத்து போலிஸ் கெடுபிடியைச் சட்டை செய்யாமல் ஆங்காங்கே நின்று நின்று ரசிப்பதும், மலர்களை மட்டுமின்றி அவற்றின் அருகே நின்று படம் எடுப்பதுக் கொள்வதுமாக மகிழ்ச்சியுடனேயே வலம் வந்தார்கள்.

#14 புன்னகைப்பூ(க்கள்)


ஒவ்வொரு கண்காட்சித் தொகுப்பையும் கண்ணாடி மாளிகை ஷாட்டுடன் முடிப்பது வழக்கமாகி விட்டது:)!

#15 நீங்காத நினைவுகளை நெஞ்சோடு நிறுத்த..


முந்தைய மலர் கண்காட்சிப் பதிவுகள்:
1. பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010
2. மலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்..
3. 2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள்
4. தலைநகரின் தாமரைக் கோயில்-பெங்களூரு மலர் கண்காட்சியில்..-சுதந்திரதின சேதி சொல்லி..
5. ஆயிரம் மலர்களே.. - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சிப் புகைப்படங்கள் (பாகம்-1)

41 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அழகு அழகோ அழகு கொள்ளை அழகு, நன்றிகள் நன்றிகள்....!!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்கள் பதிவின் அழகுக்கு மேலும் அழகூட்டும் மலர்கள்.பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நட்புடன் vgk

தமிழ் உதயம் said...

அழகான படங்கள். காண வாய்ப்பளித்ததற்கு நன்றி.

வியபதி said...

‘மூச்சை’க் கொடுத்து உழைக்கிறார் மூன்று குழந்தைகளையும் ஆளாக்க..''

பலூன் ஊதுபவர் மூச்சைக் கொடுத்து உழைக்கிறார் என பொருத்தமான கமெண்ட்டை மிகவும் ரசித்தேன்.
எல்லாப் பூக்களையும் விட புன்னகைப்பூக்கள் அருமையிலும் அருமை

சசிகுமார் said...

அருமை

ஸ்ரீராம். said...

எல்லாப் படங்களும் அருமை. நித்திய கல்யாணியா அது? பன்னீர்ப் பூ மாதிரி இல்லை?

இராஜராஜேஸ்வரி said...

படங்கள் இனிமையாய் பேசின. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

அழகழகாய் மலர்கள்! போகன் வில்லா கூட உங்கள் காமிராவின் திறமையில் மிக அழகாக இருக்கின்றது!

அமைதி அப்பா said...

எல்லாப் படங்களும் அருமை!

எனக்கு சொல்வதற்கு வேறு வார்த்தைக் கிடைக்கவில்லை. ஒரே வார்த்தையைப் போட்டு, அது 'டெம்ப்ளேட் கமென்ட்' மாதிரி போய்விடுமோ என்று தயங்கிய பிறகே எழுத வேண்டி உள்ளது.

*******************

//சென்ற கண்காட்சியில் இதே இடத்தில் தன் மகனோடு விற்பனைக்கு வந்திருந்த இதே மனிதரை படம் பிடித்திருந்தேன். இந்த முறை இரண்டு மகள்களுமாக குடும்பத்துடன்.//

கடந்த வருடம் எடுத்த அவரின் போட்டோவையும் இங்கே போட்டிருக்கலாமே!

raji said...

வாவ்! பேசும் புகைப்படங்கள்.
ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு வித அழகுதான்.பகிர்விற்கு நன்றி

அமைதிச்சாரல் said...

பூமி தொடாத பிள்ளையின் பாதம் போன்ற பூப்படத்துக்கு அந்த போகன்வில்லா பூங்கொத்தை கொடுக்கிறேன் :-))

goma said...

ditto.......ditto

இனிமேல் இதுதான் முத்துச்சரத்துக்கு உச்சக்கட்ட பாராட்டு

ஸாதிகா said...

ராமலக்‌ஷ்மி நீங்கள் எடுத்த புகைப்படங்கள் கண்களியும் கருத்தையும் கவர்ந்துவிட்டன.

goma said...

என் பின்னூட்ட பெட்டியில் எத்தனை டிட்டோ விழப்போகுதோ.....தயாராக இருக்கிறேன்
முற்பகல் டிட்டோ செய்தால் பிற்பகல் டிட்டோதான் விழையும்

சே.குமார் said...

படங்கள் அழகு.
வாழ்த்துக்கள் அக்கா.

சுசி said...

மெகா தங்க மலர் இதான் முதல் தடவை பார்க்கறேன்.

மாதேவி said...

முதல்வனே புதிய வர்ணம்மாகத்தான் இருக்கிறது.

புன்னகைப் பூக்கள் கொள்ளை அழகு.

கவிநயா said...

உள்ளம் கொள்ளை போகுதே! அருமை ராமலக்ஷ்மி!

Kanchana Radhakrishnan said...

அழகான படங்கள்.

ராமலக்ஷ்மி said...

MANO நாஞ்சில் மனோ said...
//அழகு அழகோ அழகு கொள்ளை அழகு, நன்றிகள் நன்றிகள்....!!!!//

நன்றி மனோ.

ராமலக்ஷ்மி said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
//தங்கள் பதிவின் அழகுக்கு மேலும் அழகூட்டும் மலர்கள்.பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி சார்.

ராமலக்ஷ்மி said...

தமிழ் உதயம் said...
//அழகான படங்கள். காண வாய்ப்பளித்ததற்கு நன்றி.//

நன்றி ரமேஷ்.

ராமலக்ஷ்மி said...

வியபதி said...
//‘மூச்சை’க் கொடுத்து உழைக்கிறார் மூன்று குழந்தைகளையும் ஆளாக்க..''

பலூன் ஊதுபவர் மூச்சைக் கொடுத்து உழைக்கிறார் என பொருத்தமான கமெண்ட்டை மிகவும் ரசித்தேன்.
எல்லாப் பூக்களையும் விட புன்னகைப்பூக்கள் அருமையிலும் அருமை//

கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

சசிகுமார் said...
//அருமை//

நன்றி சசிகுமார்.

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...
//எல்லாப் படங்களும் அருமை. நித்திய கல்யாணியா அது? பன்னீர்ப் பூ மாதிரி இல்லை?//

நன்றி. நந்தியாவட்டையோ என நினைத்தேன் நான். நித்தியகல்யாணி என ஃப்ளிக்கரில் நண்பர் சொன்னதும் இணையத்தில் தேடி நானும் உறுதிப்படுத்திக் கொண்டேன். விவரம்:
http://ta.wikipedia.org/wiki/நித்திய கல்யாணி

அதில்..

http://ta.wikipedia.org/wiki/படிமம்:Catharanthus_roseus_white.jpg!

ராமலக்ஷ்மி said...

இராஜராஜேஸ்வரி said...
//படங்கள் இனிமையாய் பேசின. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

மனோ சாமிநாதன் said...
//அழகழகாய் மலர்கள்! போகன் வில்லா கூட உங்கள் காமிராவின் திறமையில் மிக அழகாக இருக்கின்றது!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

அமைதி அப்பா said...
//எல்லாப் படங்களும் அருமை!

எனக்கு சொல்வதற்கு வேறு வார்த்தைக் கிடைக்கவில்லை. ஒரே வார்த்தையைப் போட்டு, அது 'டெம்ப்ளேட் கமென்ட்' மாதிரி போய்விடுமோ என்று தயங்கிய பிறகே எழுத வேண்டி உள்ளது. //

நன்றி:)!

*******************

//கடந்த வருடம் எடுத்த அவரின் போட்டோவையும் இங்கே போட்டிருக்கலாமே!//

இந்தப் பதிவில் எட்டாவது படம்:)!

ராமலக்ஷ்மி said...

raji said...
//வாவ்! பேசும் புகைப்படங்கள்.
ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு வித அழகுதான்.பகிர்விற்கு நன்றி//

மிக்க நன்றி ராஜி.

ராமலக்ஷ்மி said...

அமைதிச்சாரல் said...
//பூமி தொடாத பிள்ளையின் பாதம் போன்ற பூப்படத்துக்கு அந்த போகன்வில்லா பூங்கொத்தை கொடுக்கிறேன் :-))//

நன்றி சாந்தி:)!

ராமலக்ஷ்மி said...

goma said...
//ditto.......ditto

இனிமேல் இதுதான் முத்துச்சரத்துக்கு உச்சக்கட்ட பாராட்டு//

நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

ஸாதிகா said...
//ராமலக்‌ஷ்மி நீங்கள் எடுத்த புகைப்படங்கள் கண்களியும் கருத்தையும் கவர்ந்துவிட்டன.//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

சே.குமார் said...
//படங்கள் அழகு.
வாழ்த்துக்கள் அக்கா.//

நன்றி குமார்.

ராமலக்ஷ்மி said...

சுசி said...
//மெகா தங்க மலர் இதான் முதல் தடவை பார்க்கறேன்.//

நன்றி சுசி:)!

ராமலக்ஷ்மி said...

மாதேவி said...
//முதல்வனே புதிய வர்ணம்மாகத்தான் இருக்கிறது.

புன்னகைப் பூக்கள் கொள்ளை அழகு.//

அதிலும் சின்னப்பூ கொள்ளை அழகு:)! நன்றி மாதேவி.

ராமலக்ஷ்மி said...

கவிநயா said...
//உள்ளம் கொள்ளை போகுதே! அருமை ராமலக்ஷ்மி!//

நன்றி கவிநயா:)!

ராமலக்ஷ்மி said...

Kanchana Radhakrishnan said...
//அழகான படங்கள்.//

நன்றி மேடம்.

ராமலக்ஷ்மி said...

திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

அமைதி அப்பா said...

{//கடந்த வருடம் எடுத்த அவரின் போட்டோவையும் இங்கே போட்டிருக்கலாமே!//

இந்தப் பதிவில் எட்டாவது படம்:)!}

எனது வேண்டுகோளை ஏற்று அந்தப்படத்தை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அந்த மனிதர் ஒரு வருடத்தில் எப்படி மாறியிருக்கிறார் என்று பார்க்க ஆர்வம். அவர் வாழ்வில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிவதுபோல் உள்ளது.

நான் சொல்வது சரியா?

ராமலக்ஷ்மி said...

@ அமைதி அப்பா,

உண்மைதான். அந்தக் கண்களிலே உறுதியும் முகத்திலே நம்பிக்கையும்:)! மீள் வருகைக்கு நன்றி.

நம்பிக்கைபாண்டியன் said...

அருமையான புகைப்படங்கள்.சிறந்த கலை நுனுக்கம் இருக்கிறது உங்கள் கேம்ரா பார்வையில்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin