Wednesday, September 21, 2011

யுத்தம் - உயிரோசையில்..


இரு பக்கத்தினின்றும்
தாராளமாக
இறையப்படுகின்றன வார்த்தைகள்
பறவைகளுக்கான
தானியத்தைப் போல

வேடிக்கைக்குக் காத்திருந்தவர்கள்
கொத்திக் கொத்தி ருசித்தனர்
புறாக்களைப் போல

ஒவ்வொரு
மணிக்குள்ளிருந்தும்
மனிதப் பண்புகள்
சிரிப்பாய்ச் சிரிக்க

உண்டு களித்துப்
புறாக்கள் கொழுக்க

நல்லுறவும்
நேசக்கரம் இனி நீளுவதும்
கேள்விக் குறிகளாக

இடைவிடாது இறைத்ததில்
கைகள் சோர்ந்து,
தானியக் கூடைகளும் காலியாக

யுத்தம் முடிவுக்கு வருகிறது
புறாக்கள் பறந்து விட்டிருந்தன

போர்க்களமெங்கும்
அவை விட்டுச் சென்றிருந்த
எச்சங்கள்

காலத்தாலும்
கழுவ இயலா
கசப்பான மிச்சங்களாக.
***

படம்: இணையத்திலிருந்து..

29 ஆகஸ்ட் 2011 உயிரோசை இதழில்.., நன்றி உயிரோசை!

49 comments:

Lakshmi said...

காலததாலும் கழுவ முடியாதமிச்சங்களாக. உண்மைதான்

Ramani said...

அருமை அருமை
நம் வீட்டுக் கூடத்தில் யார் யாரோ வந்து
சண்டையிட்டு வார்த்தை நரகல்களை அள்ளிவீசி
போரிட்டு யாரோ வென்று யாரோ தோற்று
நம் வீட்டை எக்சங்களால் நிரப்பி நாறடித்துப்
போவார்கள் தேர்தலுக்குப் பின் நாம்
கூட்டி அள்ளினாலும் நாற்றம் போக
நாலைந்து மாதம் ஆகும்
மனம் தொட்ட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த,ம2

goma said...

தமிழ் தாகத்துடன் தமிழ் பசியுடன் வருவோருக்கு நல்ல இரை

KABEER ANBAN said...

wonderful !!!

kothai said...

வித்யாசமான கோணம் கனமான பரிமாணம் , சமாதான புறாக்களின் செய்கைகளை யுத்தகளத்திற்கு ஒப்பிட்டது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை அருமை ..
கசப்பான மிச்சங்கள் காலத்தால் அழியாமல் ஒரு அனுபவப்பாடமாக ..இனி நிகழாமலாவது தடுக்கட்டும்.

தமிழ் உதயம் said...

எவ்வளவு அழகாக உண்மையாக எழுதி இருக்கிறிர்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஆயிரத்தில் ஒரு வார்த்தை, அருமையா சொல்லிட்டீங்க...!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//
போர்க்களமெங்கும்
அவை விட்டுச் சென்றிருந்த
எச்சங்கள்

காலத்தாலும்
கழுவ இயலா
கசப்பான மிச்சங்களாக.//

வெகு அருமையான வரிகள்.

கூட்டம் கூட்டமான புறாக்களை, வேடிக்கைக்குக் காத்திருந்தவர்களுடன் ஒப்பிட்டது மிகச்சிறப்பாக உள்ளது.

பொருத்தமான படம் மகிழ்ச்சியளிக்கிறது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள். vgk

ரிஷபன் said...

உண்மைக் கவிதை..

போர்க்களமெங்கும்
அவை விட்டுச் சென்றிருந்த
எச்சங்கள்

காலத்தாலும்
கழுவ இயலா
கசப்பான மிச்சங்களாக.

ரசித்த வரிகள்.

ஸ்ரீராம். said...

எச்சங்களின் மிச்சங்கள் பற்றிய கவிதை அருமை. நா காக்க என்கிற கோட்பாடு எவ்வளவு சிறந்தது என்பதை விளக்குகிறது.ஆறாத நா வடுவையும்!

Rathnavel said...

அருமையான படம்.
அருமையான கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super kavithai

கவிநயா said...

அற்புதம்!

அமைதிச்சாரல் said...

கவிதை அசத்தல்..

சே.குமார் said...

kavithai arumai.

kathir said...

//போர்க்களமெங்கும்
அவை விட்டுச் சென்றிருந்த
எச்சங்கள்//
வீச்சம் மிகு எச்சங்கள்!

வெகு யதார்த்தமாய் கவிதை!

அமுதா said...

/*போர்க்களமெங்கும்
அவை விட்டுச் சென்றிருந்த
எச்சங்கள்

காலத்தாலும்
கழுவ இயலா
கசப்பான மிச்சங்களாக.
*/
உண்மைதான்... கசப்பானவை...அருமை

raji said...

என்ன ஒரு பொருள் பொதிந்த கவிதை!

சிந்தித்துப் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டிய யுத்தம்.

வரிக்கு வரி மிகவும் ரசித்து வியந்தேன்.

நேரில் பார்த்திருந்தால் கை கொடுத்திருப்பேன்.

ரெவெரி said...

யதார்த்த கவிதை...

ஸாதிகா said...

//
போர்க்களமெங்கும்
அவை விட்டுச் சென்றிருந்த
எச்சங்கள்

காலத்தாலும்
கழுவ இயலா
கசப்பான மிச்சங்களாக.
***// ஆஹா..என்ன அருமையாக செதுக்கப்பட்ட கவிதை ...!

தினேஷ்குமார் said...

உணர்த்தும் உண்மை உணர்ந்தும் உணரா எண்ணங்கள் நிறைந்த உலகு இது

புலவர் சா இராமாநுசம் said...

உவமையும் ஒப்பீடும் சிறப்பாக
உள்ளன
வாழ்த்துக்கள்! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

குமரி எஸ். நீலகண்டன் said...

எதார்த்தமான உண்மை... ஆழமாய் கவிதையில்

ராமலக்ஷ்மி said...

Lakshmi said...
//காலததாலும் கழுவ முடியாதமிச்சங்களாக. உண்மைதான்//

கருத்துக்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

Ramani said...//மனம் தொட்ட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

goma said...
//தமிழ் தாகத்துடன் தமிழ் பசியுடன் வருவோருக்கு நல்ல இரை//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

KABEER ANBAN said...
//wonderful !!!//

அபூர்வமாகவே வருவீர்கள். பாராட்டுக்கு மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி said...

kothai said...
//வித்யாசமான கோணம் கனமான பரிமாணம் , சமாதான புறாக்களின் செய்கைகளை யுத்தகளத்திற்கு ஒப்பிட்டது.//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
//அருமை அருமை ..
கசப்பான மிச்சங்கள் காலத்தால் அழியாமல் ஒரு அனுபவப்பாடமாக ..இனி நிகழாமலாவது தடுக்கட்டும்.//

அப்படியே நம்புவோம். நன்றி முத்துலெட்சுமி.

ராமலக்ஷ்மி said...

தமிழ் உதயம் said...
//எவ்வளவு அழகாக உண்மையாக எழுதி இருக்கிறிர்கள்.//

நன்றி ரமேஷ்.

ராமலக்ஷ்மி said...

MANO நாஞ்சில் மனோ said...
//ஆயிரத்தில் ஒரு வார்த்தை, அருமையா சொல்லிட்டீங்க...!!!//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
//வெகு அருமையான வரிகள்.

கூட்டம் கூட்டமான புறாக்களை, வேடிக்கைக்குக் காத்திருந்தவர்களுடன் ஒப்பிட்டது மிகச்சிறப்பாக உள்ளது.

பொருத்தமான படம் மகிழ்ச்சியளிக்கிறது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.//

மிக்க நன்றி vgk.

ராமலக்ஷ்மி said...

ரிஷபன் said...
//உண்மைக் கவிதை..

...

ரசித்த வரிகள்.//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...
//எச்சங்களின் மிச்சங்கள் பற்றிய கவிதை அருமை. நா காக்க என்கிற கோட்பாடு எவ்வளவு சிறந்தது என்பதை விளக்குகிறது.ஆறாத நா வடுவையும்!//

சரியாக சொன்னீர்கள். நன்றி ஸ்ரீராம்.

ராமலக்ஷ்மி said...

Rathnavel said...
//அருமையான படம்.
அருமையான கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி சார்.

ராமலக்ஷ்மி said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//Super kavithai//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

கவிநயா said...
//அற்புதம்!//

நன்றி கவிநயா.

ராமலக்ஷ்மி said...

அமைதிச்சாரல் said...
//கவிதை அசத்தல்..//

நன்றி சாந்தி.

ராமலக்ஷ்மி said...

சே.குமார் said...
//kavithai arumai.//

நன்றி குமார்.

ராமலக்ஷ்மி said...

kathir said...
***//போர்க்களமெங்கும்
அவை விட்டுச் சென்றிருந்த
எச்சங்கள்//
வீச்சம் மிகு எச்சங்கள்!

வெகு யதார்த்தமாய் கவிதை!//***

நன்றி கதிர்!

ராமலக்ஷ்மி said...

அமுதா said...
//உண்மைதான்... கசப்பானவை...அருமை//

நன்றி அமுதா.

ராமலக்ஷ்மி said...

raji said...
//என்ன ஒரு பொருள் பொதிந்த கவிதை!

சிந்தித்துப் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டிய யுத்தம்.

வரிக்கு வரி மிகவும் ரசித்து வியந்தேன்.

நேரில் பார்த்திருந்தால் கை கொடுத்திருப்பேன்.//

மகிழ்ச்சி. நன்றி ராஜி.

ராமலக்ஷ்மி said...

ரெவெரி said...
//யதார்த்த கவிதை...//

நன்றி ரெவெரி.

ராமலக்ஷ்மி said...

ஸாதிகா said...
//ஆஹா..என்ன அருமையாக செதுக்கப்பட்ட கவிதை ...!//

நன்றி ஸாதிகா.

ராமலக்ஷ்மி said...

தினேஷ்குமார் said...
//உணர்த்தும் உண்மை உணர்ந்தும் உணரா எண்ணங்கள் நிறைந்த உலகு இது//

கருத்துக்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

புலவர் சா இராமாநுசம் said...
//உவமையும் ஒப்பீடும் சிறப்பாக
உள்ளன
வாழ்த்துக்கள்! நன்றி!

புலவர் சா இராமாநுசம்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

குமரி எஸ். நீலகண்டன் said...
//எதார்த்தமான உண்மை... ஆழமாய் கவிதையில்//

மிக்க நன்றி நீலகண்டன்.

ராமலக்ஷ்மி said...

திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin