வியாழன், 13 டிசம்பர், 2012

குழந்தைத்தனம்தான், ஆயினும் மிக இயல்பானதே - சாமுவேல் டெய்லர் கொலரிட்ஜ் (1)


இரு சிறிய சிறகுகள் எனக்கிருந்தால்
ஒரு புசுபுசுப் பறவையாக நானிருந்தால்
பறந்து உன்னிடம் வந்திடுவேன், என் அன்பே!
தெரிகிறது, இது போன்ற வீணான சிந்தனைகளால்
எந்தப் பிரயோசனமும் இல்லை
நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன்.

ஆனால் என் தூக்கத்தில்
உன்னிடம்தான் பறந்து வருகின்றேன்
உன்னுடனேயேதான் எந்நேரமும் இருக்கின்றேன்
அந்தக் கனவு உலகம் நமக்கே நமக்கானது,
என்றாலும்
மீண்டும் விழிக்கும்போது எங்கே இருக்கின்றேன்?
தனியே.. தன்னந்தனியே.

பேரரசேக் கட்டளையிட்டாலும் தூக்கம் தொடராது:
ஆகவே பொழுது புலரும் முன் எழுந்திட விருப்பம்:
என் தூக்கம் கலைந்து விட்டாலும் கூட,
இருள் சூழும் நேரத்தில், இமைகள் மூடும் தருணத்தில்,
என் கனவுகள் தொடர்கின்றன.
***

மூலம் ஆங்கிலத்தில்:
Something childish, but very natural (1799).
By
Samuel Taylor Coleridge

படம் நன்றி: இணையம்

1 டிசம்பர் 2012,  அதீதம் இதழுக்காக மொழியாக்கம் செய்த கவிதை.

24 கருத்துகள்:

  1. மொழிப் பெயர்த்து பகிர்ந்தது அருமை!

    பதிலளிநீக்கு
  2. This is another Coleridge's poem . Will u mind translating this one.



    //Do you ask what the birds say? The Sparrow, the Dove,
    The Linnet and Thrush say, "I love and I love!"
    In the winter they're silent -- the wind is so strong;
    What it says, I don't know, but it sings a loud song.
    But green leaves, and blossoms, and sunny warm weather,
    And singing, and loving -- all come back together.
    But the Lark is so brimful of gladness and love,
    The green fields below him, the blue sky above,
    That he sings, and he sings; and for ever sings he --
    "I love my Love, and my Love loves me!" //

    subbu rathinam.


    பதிலளிநீக்கு
  3. கனவின் கற்பனை மிக அழகு,நன்றிக்கா!!

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு.

    சுப்பு தாத்தாவின் வேண்டுகோள் - என் சார்பிலும்.....

    பதிலளிநீக்கு
  5. கவிதைய்ம் அதன் மொழிபெயர்ப்பும் பிரமாதம்.தேர்ந்துடுத்து போட்டு இருக்கும் படம் அழகோ அழகு

    பதிலளிநீக்கு
  6. கனவில் இனிமை காணும் போது கனவு தொடரட்டும்.

    கவிதை மொழிபெயர்ப்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. மொழிபெயர்புக் கவிதைக்குப் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. பேரரசேக் கட்டளையிட்டாலும் தூக்கம் தொடராது:

    அருமையான கவிதை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  9. அருமை அருமை. ஒவ்வொருவரும் தேடும் கனவு.நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  10. @sury Siva,

    செய்கிறேன்:)! அதீதத்திலும் இங்கும் பகிர்ந்திடுகிறேன் விரைவில்.

    பதிலளிநீக்கு
  11. அருமையாக மொழி பெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி.கவியின் உணர்வுகளை சரியாக வடித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin