வெள்ளி, 22 டிசம்பர், 2017

தோட்டத்துக்குப் போயேன் செல்லம்...

ன்றையக் குட்டிச் செல்லங்கள் பலருக்கும் பிடித்தமான, அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் பாட்டு கண்மணி ரைம்ஸின் (சோம்பேறிப் பையன்) ‘தோட்டத்துக்குப் போயேன் ராமா’. அதைத் தழுவி சுறுசுறுப்புச் செல்லத்தின் படங்கள் எட்டு...:)


**

#1
'தோட்டத்துக்குப் போயேன் செல்லம்..'

ஆஹா, அணில்கள் பார்க்கலாமே அம்மா!

#2
'மாடு மேச்சு வா செல்லம்..'

'ஓ, கன்னுக்குட்டிகளோடு விளையாடக்
கெளம்பிட்டேன் அம்மா!'

#3
'அடுப்பு மூட்டு செல்லம்!'

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

தெளிவான பார்வை.. முழுமையான மனது..

#1
“அத்தனைப் பூக்களும் வெளிச்சத்தை வைத்திருக்கின்றன, 
வேரின் அடி ஆழத்தில்..”
_Theodore Roethke


#2
“தோல்விகளை விடவும் 
சந்தேகங்களே நமது பெரும்பாலான கனவுகளைக் கொன்று போடுகின்றன.”
__Suzy Kassem

#3
“சாதாரணமாகக் கவனிப்பதன் மூலமே 
ஏராளமானவற்றைக் கிரகிக்க முடியும்.”
_Yogi Berra

வெள்ளி, 8 டிசம்பர், 2017

செந்தார்ப் பைங்கிளி (அ) சிகப்பு ஆரக்கிளி - பறவை பார்ப்போம் (பாகம் 21)

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 25)
ச்சை நிறத்துடன், வளைந்து சிவந்த அலகும், நீண்டு கூர்மையாக முடியும் வாலும் கொண்டவை செந்தார்ப் பைங்கிளிகள்.

#1
ஆங்கிலப் பெயர்: Rose-ringed parakeet

வால் அதன் சிறகுகளையும் சேர்த்து 40 செ.மீ நீளம் கொண்டவை. விரிகிற ஒரு பக்க இறக்கையின் நீளம் மட்டும் சராசரியாக 15-17 செ.மீ வரை இருக்கும்.

#2
உயிரியல் பெயர்: Psittacula krameri
ஆண் கிளிகளுக்கு கருப்பு அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தில் கழுத்தில் வளையம் போன்ற ஆரம் இருக்கும். அதனாலேயே ஆரக்கிளி எனும் பெயர் வந்தது. பெண் கிளிகளுக்கும் இளம் கிளிகளுக்கும் ஆர வளையம் இருக்காது. ஒரு சிலவற்றிற்கு

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மீட்க முடியாத மூன்று

#1
“எவ்வளவோ இருக்கிறது வாழ்க்கையில்,
அதன் வேகத்தை அதிகரித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும்..”
_ காந்திஜி

#2
“வானில் இல்லை, நம் மனதில் இருக்கிறது வழி!”
_புத்தர்

#3
"ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு."
_Protagoras

ஞாயிறு, 26 நவம்பர், 2017

என் வழி.. தனி வழி..!

#1
“ஏற்கனவே தம்மிடம்  இருப்பவற்றைப் போற்றிடத் தெரியாதவருக்கு என்றைக்குமே கிடைக்காது மகிழ்ச்சி.”
-புத்தர்

#2
“எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள். ஆனால்,
ஒருபோதும் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள்” 

#3
"ஓரிடத்தில் நிற்பதும் 
சில நேரங்களில் முன்னேறிச் செல்வதற்கு ஒப்பாகும்"

#4
"பொறுமை காத்திடுங்கள். 
சரியான நேரத்தில் எல்லாம் வந்து சேரும்."
_புத்தர்

வியாழன், 16 நவம்பர், 2017

அவளும் நோக்கினாள் - சிறுகதை

வலை உலகில் தங்கள் பாணி புதிய பாணி என ஒரு பல்சுவை இதழாகச் செயல்பட்டு வருகிறது “எங்கள் ப்ளாக்”.  அதன் ஆசிரியர்களில் ஒருவரான திரு ஸ்ரீராம், மறைந்த அவரது தந்தை எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசைப்படி, ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என நிறைவடையுமாறு கதை எழுத நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார். தன் தந்தை உறவினர் வட்டத்தில் முயன்றிடச் சொன்னதை அனைவருக்குமான அன்பு வேண்டுகோளாக முன் வைக்க... அந்த வரிசையில் 27_வது கதையாக எனது பார்வையில் சீதை ராமனை மன்னிக்கும் கதை..


அவளும் நோக்கினாள்
சிலுசிலு என்று வீசிய வேப்பமரக் காற்று உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆறுதலாய் இருக்க, வாசற்படியில் சாய்ந்து அமர்ந்திருந்த மைதிலி அப்படியே அதில் லயித்துக் கண் அசந்து விட்டாள்.

‘பாம்.. பாம்’

‘ஆஆ.. அவர் கார்..  ஆ.. வந்துட்டார்..’

‘பேரன் பேத்தி எடுத்த பிறகும் இப்படி வாசப்படியில ஒக்காந்து... வேடிக்கைப் பார்க்கிறேங்கற பேர்ல... வெட்கமாயில்ல...’ ஈட்டிப் பார்வையில் ஒலிக்காமல் ஒலித்த வார்த்தைகள் உள்ளத்தைத் துளைக்க விதிர்விதிர்த்து எழுந்து நின்றாள் மைதிலி.

புதன், 8 நவம்பர், 2017

கடவுளின் தாய்மொழி

#1
“அனுமானங்களில் நனைந்து நிற்பதை நாம் அறியாத வரையில் நம்மை நாம் அறிந்து கொள்ளவே முடியாது.” _Adrienne Rich

#2
"எந்தவொரு பிரச்சனையிலும் நீண்ட காலம் நின்று விட வேண்டாம், வாழ்க்கைப் படகு எப்போதுமே மிதமாகப் பயணிப்பதில்லை ஆதலால் மூழ்கிட நேரலாம்."

#3
“நம்மைப் பிரிப்பது நமக்கிடையேயான வித்தியாசங்கள் அல்ல. அவற்றை அங்கீகரிக்கவோ, ஒப்புக் கொள்ளவோ, கொண்டாடவோ முடியாத நம் இயலாமையே.”
_Audre Lorde

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin