வெள்ளி, 11 மார்ச், 2011

‘எழுதப் பிடிக்குமென்றால்..’-இன்றைய வலைச்சரத்தில்..

  • இன்றைய ஆனந்த விகடனில், சொல்வனத்தின் நட்சத்திரம். வாழ்த்துக்கள் இவருக்கல்ல, இவரது வயல் வெளியில் அறுவடைக்குக் காத்திருக்கின்ற செழிப்பான கவிக் கதிர்களை தொகுப்பாக்க எந்த பதிப்பகம் முந்திக் கொள்ளப் போகிறதோ, அவர்களுக்கு!
  • எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டேயிருங்கள்’ என எழுதிக் கொண்டே இருப்பவரின் எழுத்திலிருந்து... “உலகத்திலே உயிர்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எல்லா உயிர்களையும் எல்லாரும் நேசிக்கணும்... ஏதோ ஒரு சக்தி நம்மள நம்ம நடைமுறைகளைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கு. அதை நம்பறவங்க நம்பலாம். அதைக் கடவுளா எடுத்துக்கலாம். அதை வெவ்வேறு பெயரிலே அவங்கவங்க விருப்பத்துக்குப் பிடிச்சமாதிரி வேண்டிக்கலாம். அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கறதுதான் உண்மையான தன்னம்பிக்கை.
  • வாங்க முன்னேறி பார்க்கலாம்’ கூப்பிடுகிறார் சட்ட வல்லுநர்.
  • ஐந்தறிவு ஜீவனுக்கும் உண்டு, மனசென்ற ஒன்று. காண்பிக்கிறார் நமக்கு.
  • தேசம் விட்டு தேசம் சென்றாலும் 'மனசு' மொத்தத்தையும் பிறந்த வளர்ந்த கிராமத்திலேயே விட்டு வைத்திருப்பவர்.
  • கருப்பையின் உள்ளிருக்கும் பெண்சிசுவின் கதறலை உலகுக்குக் கேட்கச் செய்தவர்.

யார் யார் இவர்கள்?
அறிய வாருங்கள்!
பேசும் எழுத்துக்கள் - வலைச்சரம் வெள்ளி
***




பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



உழவனின் “நெற்குவியல்”
உழவுக் குடும்பத்தில் பிறந்து, வயல்வெளியில் சுற்றித் திரிந்து, மாடுகன்றுகளோடும் தலையசைக்கும் நாற்றுகளோடும் பழகிச் சிலிர்த்து, கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் நேசமெனும் உரத்தில் மரமாகி, காலத்தின் கட்டாயத்தில் பட்டணத்தில் நடப்பட்டவர். 'உழந்தும் உழவே தலை’ என வாழ முடியாத ஏக்கத்தை ஓரளவேனும் ஈடு செய்ய, குற்ற உணர்வை சற்றேனும் போக்கிக் கொள்ள ‘உழவன்’ என்ற பெயரில் எழுதி வந்தாலும் ‘உழத் தவறியவன்’ என நேர்மையாகத் தனை விளித்துக் கொள்கிறார் வலைப்பூவின் முகப்பினிலே. கிராமத்து நினைவுகளாய் எங்க ஊரு பொங்கலு.

வளர்ந்து வரும் இளங்கவிஞர். இணைய இதழ்களிலும், ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகளிலும் இவர் கவிதைகள் வெளியாகி வருகின்றன. எளிமையான வார்த்தைகளில் அழுத்தமான கவிதைகள் என்பது இவரது சிறப்பு. மனதில் நின்ற பல கவிதைகளில் ஒன்றிலிருந்து..
“..பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்
யாரோ கொண்டுவந்த உணவை
யாரோ சாப்பிடுகிறார்களா இல்லை
இவ்வளவு பேரும் ஒரே குடும்பத்தார்களா
புரியவில்லை வியந்தேன்
சாப்பிட்டு முடித்த ஒருவன்
தண்ணீர் கூட குடிக்காமல்
எங்கோ ஓடுகிறான்.


ஆவல் அதிகரிக்கிறதா? மீதி வரிகளுக்கு, சாரை சாரையாய்..

மகள் அகமதி இவருக்குத் தந்த கவிதைகள் யாவுமே ரசனைக்குரிய நிறைமதியாய்..,மன்னிக்கவும் [இன்றைய ஆனந்த விகடனில்..].

உரையாடல் போட்டிக்காக இவர் எழுதிய (சின்னஞ்)சிறுகதை ‘பசி’ பலரால் பேசப்பட்ட ஒன்று.

அனுபவக் கட்டுரைகள், அரசியல் அலசல்களோடு நையாண்டியும் நன்றாக வரும்:‘ஆ...ராசா வர்றான்… செம்ப எடுத்து உள்ள வை

சுற்றுப்புற சூழலில் இவர் காட்டிய அக்கறை புதிய தலைமுறையில் சிறப்புக் கவனத்துடன் பிரசுரமானது.

உழவனின் வயல் வெளியில் அறுவடைக்குக் காத்திருக்கின்ற செழிப்பான கவிக் கதிர்களை தொகுப்பாக்க எந்த பதிப்பகம் முந்திக் கொள்ளப் போகிறதோ, அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!


நீலகண்டனின் எழுத்துக்கள்
பத்திரிகை, இணைய இதழ்களில் எழுதுபவர் என்றாலும், மிகச் சமீபமாக ஒருமாத காலத்துக்குள்ளாகதான் இவர் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சயம். பத்திரிகையில் வந்தஅருமையான ஒரு கவிதையால் பெயர் கவனத்தில் நிற்க, மறுநாள் இணையத்தில் தற்செயலாக அதே பெயர் தென்பட, நுழைந்தேன் இவர் தளத்துள். பேசட்டும் அவர் எழுத்தே.‘அப்பாவின் குடை’யிலிருந்து சில வரிகள்:
சரி செய்ய முடியுமா என்று
குடைக்காரனிடம் கேட்டேன்.
சரி செய்து விடலாம்
என்றவன் சரி செய்து
கொண்டே அப்பா
எப்படி இருக்கிறார் என்றான்.
அப்பாவைக் காப்பாற்ற
முடியவில்லை என்றேன்
வருத்தத்துடன்.
அப்படியா....அதான்
அப்பாவைக் காணவில்லை...
என்றவன் சரி செய்த
குடையை விரித்தான்.
விரித்த கருங்குடைக்குள்
அப்பாவிற்கே உரிய
சிரிப்பு மழை
இடி முழக்கமாய்.....


அப்பாவின் குரல் மட்டுமா, விரியும் இவரது ஒவ்வொரு கவிக்குடைக்குள்ளும் இடிமுழக்கங்கள்தாம். மனிதர்களைப் பற்றியதான அவதானிப்பு இந்தக் கவிதையில் வியக்க வைக்கிறது, சுயநலத்தின் சுற்றுப்பாதை. இவரது ‘எழுத்தின் சாரம்இப்பதிவின் கடைசிப் பத்திக்கும் சாரம்.

மத நல்லிணக்கம், மனித நேயம், மரங்களின் மேலான பாசம் எல்லாம் பேசும் சிறுகதை ‘இந்த வேம்புகள் கசப்பதில்லை’:"உலகத்திலே உயிர்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எல்லா உயிர்களையும் எல்லாரும் நேசிக்கணும்... ஏதோ ஒரு சக்தி நம்மள நம்ம நடைமுறைகளைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கு. அதை நம்பறவங்க நம்பலாம். அதைக் கடவுளா எடுத்துக்கலாம். அதை வெவ்வேறு பெயரிலே அவங்கவங்க விருப்பத்துக்குப் பிடிச்சமாதிரி வேண்டிக்கலாம். அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கறதுதான் உண்மையான தன்னம்பிக்கை. உலகத்திலே எல்லோரும் எல்லோரையும் நேசிக்கணும். யாருக்கும் எந்த சுயநலமும் இருக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் இன்னொருத்தரை அன்பு செலுத்தறதுங்கறது லட்சிய வெறியா இருக்கணும். உயர்வு தாழ்வு இல்லாம எல்லாத்துக்கும் உதவி பண்ணனும்."
‘வீடு திரும்பல்’ மோகன் குமார்
சட்ட வல்லுநர். அன்றாட நடப்புகளை வாரம் ஒருமுறை வானவில்லாகத் தொகுத்து வழங்குகிறார். வாசிப்பில் அறிந்தவற்றையும் தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்தவற்றையும் மற்றவரும் பயன்பெற ‘வாங்க முன்னேறிப் பார்க்கலாம்’ [அனைத்துப் பாகங்களும் இந்த இழையில்] எனத் தொடராக எழுதி வந்துள்ளார். தொடர்ந்து எடுத்துச் செல்வார் என எதிர்பார்ப்போம்.

ஒரு குழுவாக செயல்பட்டு செய்து வரும் சமூக சேவைகளை சமீபத்தில்தான் வலைப்பூவில் பகிர்ந்து கொண்டுள்ளார்: அரசுப் பள்ளியில் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி: “அருள் பேசி முடித்து விட்டு சென்றதும் நான் உடனே கை குடுத்து பாராட்ட போக, நான் வருவது தெரியாமல் அவன் போய் கொண்டே இருந்தான். அவன் பின்னால் நான் சென்று கொண்டே இருக்க, அவன் பாட்டுக்கு நடக்க, பள்ளியே " ஓஒ ..அருள் " என்று அலறியது. அருள் முதுகில் தட்டி கூப்பிட்டு கட்டி பிடித்து நான் பாராட்ட மாணவர்களுக்கு அவர்களை பாராட்டியது போல் மகிழ்ச்சி ஆரவாரம்..” இது போன்ற பகிர்வுகள் மற்றவருக்குத் தூண்டுதலாக அமையும் என்பது ஒருபுறமிருக்க, அவரது முயற்சிகளுக்குத் தோள் கொடுக்கவும், தேவையில் இருப்பவருக்கு உதவிக் கரம் நீட்டவும் பலரும் முன் வந்திருப்பது நெகிழ்வுக்குரியது.

தொலைக்காட்சி கலந்துரையாடல்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுபவர். அவ்வப்போது கவிதைகளையும் பகிர்ந்து கொள்ளுகிறார், சுயம்.
எங்கள் ப்ளாக்
ஐந்து பேர் குழுவாக எழுதி வருகிறார்கள். இது 'உங்கள் ப்ளாக்' என அவ்வப்போது போட்டிகள்,கேள்விகளை முன் வைக்கிறார்கள். வாசகர்களும் ‘ஆம், நம்ம ப்ளாக்’ என உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்கள். 87 வாரங்களாக, ஞாயிறு தோறும் வித்தியாசமான, ரசனைக்குரிய புகைப்படம் ஒன்றைத் தெரிவு செய்து, தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீராம் எழுதிய நாய்மனம்-1, நாய்மனம்-2 : “நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்ல மறந்து போகும் என்று எண்ணியிருந்ததும் நடக்கவில்லை. தண்ணீர் என்றாலே ப்ரௌனிக்கு பயம் குளிக்க வரமாட்டேன் என்று அடம் பிடித்து தரையைத் தேய்த்துக் கொண்டே வருவாள். ஆனால் குளிக்கும்போது சமர்த்தாக இருப்பாள். தண்ணீர்க் குவளை அல்லது பாட்டிலை அவள் கண்ணில் காட்டினால் போதும் சென்று ஓரமாகப் பதுங்கி விடுவாள். அப்படிப் பட்டவள் அடித்துப் பெய்யும் மழையில் என்ன செய்கிறாளோ என்று மனைவி கவலைப் பட்டாள்.
‘மனசு’ சே.குமார்
தேசம் விட்டு தேசம் சென்றாலும் 'மனசு' மொத்தத்தையும் பிறந்த வளர்ந்த கிராமத்திலேயே விட்டு வைத்திருப்பவர்.கிராமத்து நினைவுகளாய், தீபாவளியும் பட்டாசும்..!, மழைக்காலம்:. “சிறுவயதில் மழைக்காலம் என்றாலே சந்தோஷம்தான்... அதற்கு காரணம் நிறைய.... காலையில் பேய் மழை பெய்தால் பள்ளிக்கு செல்ல வேண்டாம், மதியம் மழை வருவது போலிருந்தால் புத்தகப்பையை பள்ளியில் வைத்துவிட்டு கிராமத்துப் பிள்ளைகள் என்ற முறையில் பள்ளி விடும் முன்னே வீடு திரும்பலாம், மழை பெய்து விட்டபின் லேசான தூரலில் நனைந்து கொண்டே வந்து இரவு முழுவதும் தும்மி காலையில் பள்ளி செல்வதை தவிர்க்கலாம்... இப்படி நிறைய...பள்ளியில் இருந்து வரும்போது வழியெங்கும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நீரில் ஆட்டம் போடுவதுடன் புத்தகப்பையும் இருக்காதல்லவா... ஓடும் நீரின் குறுக்கே அணை கட்டி, செங்கல் கற்களை வைத்து பாலம் போல் கட்டி விளையாடி வீடு வந்து சேர நேரமாகும். இதில் இரண்டு குழுக்களாய் பிரிந்து பாலம் கட்டி தண்ணீரை பாலத்தின் அடியில் இருந்து மேலே வருவது போல் செய்வதில் போட்டி வேறு.

கிராமத்தில் வாழ்ந்த காலக்கட்டத்தை இவர் சிறுகதைகளாய் தொடர்ந்து பதிவு செய்து வரும் விதம் பாராட்டுக்குரியது: கருத்தபசு, அப்பா சேர்.
‘எண்ணங்கள் இனியவை’ ஜீவ்ஸ்
இவரை புகைப்பட வல்லுநராக மட்டுமே ஒருசிலர் அறிந்திருக்கின்றனர் என்பதை கவிதை கதைகளை தன் வலைப்பூவில் பதியும் போது ‘அட இதெல்லாம் கூட எழுதுவீர்களா?’ என்று வரும் பின்னூட்டங்கள் நிரூபிக்கும். மரத்தடி குழுமத்தில் கவிதைகள், வெண்பாக்கள், சிறுகதைகள் என மின்னியவர். 2006-ல் ஆரம்பித்த வலைப்பூவுக்குச் சரியாக ஐந்தாண்டுகள் நிறைவுற்றிருக்க, மொத்தம் 74 இடுகைகளே. எழுதும் படைப்புகளை குழுமங்களிலும், இப்போது கூகுள் buzz-லும் பகிர்வதோடு நிறுத்தி விடுகிறார். வலைப்பூ என்பது ஒருவரது படைப்புகளுக்கான சேமிப்பிடம் என்பதை உணர்ந்து, சமீபத்தில் அதீதம் இதழில் நல்ல வரவேற்பைப் பெற்ற சக்கிரவியூகம் பாகம்:1 , பாகம்:2 சிறுகதை உட்பட, விட்டுப்போனவைகளை தொடர்ந்து வலைப்பூவில் பதிய அழைக்கிறேன் இவரை. சிறுகதைகள்:உறவுகள், ஒரு மெளனத்தில் அலறல்:
அன்று உத்தரையின்
கருக் கொல்ல எய்தது
ஓர் அஸ்திரம்தான்.
இன்று எங்களின் உயிர் கொள்ள
எய்யப்படும் அஸ்திரங்கள் தாம்
எண்ணற்றவை.
” கருப்பையின் உள்ளிருக்கும் பெண்சிசுவின் கதறல்!

கவிதைக்கு, தவறுகள்.

[கோரிக்கையை ஏற்று உடனடியாக செயல்பட்டிருக்கும் ஜீவ்ஸுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்:)!]

‘திரும்பி வாங்க!’
ருமையான பதிவுகளைத் தந்து கொண்டிருந்த பலர் இப்போது நீண்ட விடுப்பில். ஆதங்கத்துடன் விடுக்கிறேன் அவர்களுக்கு அழைப்பு. அமித்து அம்மா, புதுவண்டு[தாய்மைக்காக எடுத்த விடுப்பு. வாசகர்களை வாடவிடாமல் ஆரம்பியுங்களேன் அமித்து தம்பியைப் பற்றியும், நாதனின் தங்கையைப் பற்றியுமான அப்டேட்ஸுடன்:)!], அனுஜன்யா, சதங்கா [சகலகலா வல்லவராக சமையல், சித்திரம் உட்பட கதை, கவிதைகளில் அசத்தியவர்];தமிழ் பிரியன் கதை எழுதும் ஆர்வம் இருக்கு, திறமை இருக்கு, ஆனா முயற்சி இல்லை:)!; ஜெஸ்வந்தி[மிகச்சிறந்த சிறுகதையாளர், என் பிரிய பபிதா பாகம் 1; பாகம் 2.].

எவரும் எதற்காகவும் எழுதுவதை விட்டு விடாதீர்கள். என் நூறாவது பதிவில் நான் வைத்த கோரிக்கை:“இடைவெளிகள் தவிர்க்க முடியாது போனாலும் எழுதுவதை முழுவதுமாய் நிறுத்தி விடாது இருப்போம். நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம். மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம். ஊக்கம் எனும் உரத்தினால் ஆக்கங்களும் பகிர்வுகளும் பதிவுகளாய் மலரட்டும். வலைப்பூ வனம் செழிக்கட்டும்.

மீண்டும் எனக்கு நானே உரக்கச் சொல்லிக் கொள்கிறேன், உங்களுக்கும் கேட்கட்டுமென்றுதான், எஸ்.நீலகண்டனின் எழுத்தின்சாரம் கவிதையிலிருந்து..,
“எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள்”
***

16 கருத்துகள்:

  1. சிறந்த தெரிவுகள். தெரிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் எழுத்தால் என் எழுத்துக்களுக்கு நிறைய அறிமுகம் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றிகள். உங்களின் சுறுசுறுப்பு மிகுந்த வியப்பையும் ஆனந்தத்தையும் தருகிறது.

    பதிலளிநீக்கு
  3. அருமையான அறிமுகங்கள்,வழக்கம் போல்.நான் வாசிக்க வேண்டியது நிறைய உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. நல்ல அறிமுகங்கள்... அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


    எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

    பதிலளிநீக்கு
  5. "எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருப்போம்..."

    பிடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போதாவது எழுதுவோம்...!!
    அறிமுகத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. "எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருப்போம்..."


    NANRI...

    பதிலளிநீக்கு
  7. தமிழ் உதயம் said...
    //சிறந்த தெரிவுகள். தெரிவுக்கு வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  8. குமரி எஸ். நீலகண்டன் said...
    //உங்கள் எழுத்தால் என் எழுத்துக்களுக்கு நிறைய அறிமுகம் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றிகள். உங்களின் சுறுசுறுப்பு மிகுந்த வியப்பையும் ஆனந்தத்தையும் தருகிறது.//

    நன்றி நீலகண்டன். தங்கள் தளம் சமீபத்தில்தான் அறிமுகமானது ஆகையால், தொகுப்பதற்காகத் தேடியதில் பல படைப்புகளை வாசித்து மகிழும் வாய்ப்பு கிட்டியது.

    பதிலளிநீக்கு
  9. asiya omar said...
    //அருமையான அறிமுகங்கள்,வழக்கம் போல்.நான் வாசிக்க வேண்டியது நிறைய உள்ளது.//

    அதை நீங்கள் செய்திருப்பதில் மகிழ்ச்சி ஆசியா:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  10. தமிழ்வாசி - Prakash said...
    //நல்ல அறிமுகங்கள்... அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி ப்ரகாஷ்.

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம். said...
    //"எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருப்போம்..."

    பிடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போதாவது எழுதுவோம்...!!
    அறிமுகத்துக்கு நன்றி.//

    பிடிக்காமல் போகுமா உங்களுக்கு:)? தொடர்ந்து நிறைய எழுதுங்கள். என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. அமைதிச்சாரல் said...
    //நல்ல அறிமுகங்கள்..//

    மிக்க நன்றி சாரல்:)!

    பதிலளிநீக்கு
  13. சே.குமார் said...
    //"எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருப்போம்..."


    NANRI...//

    நல்லது குமார். நிறைய எழுதுங்கள். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நல்ல அறிமுகங்கள் ராமலக்ஷமி.

    நான் ஊரில் இல்லாத காரணத்தால் தாமதாய் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. @ கோமதி அரசு,

    மிக்க நன்றி கோமதிம்மா:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin