ஞாயிறு, 19 ஜூலை, 2026

புயலும் பூக்கும்

#1

"மையம் கொண்ட மனது 
புயல்களால் அசையாது என்றில்லை. 
எங்கே நிலைநிற்க வேண்டும் என்பதை 
அது அறிந்திருக்கிறது."

#2.
"ஒருமுறை தொடங்கிவிட்ட வளர்ச்சிக்கு 
எல்லைகள் இல்லை."

#3.
புயல்களும் கூட பூக்களை கொண்டு வரும் 
என்பதை 
மழை லில்லி மலர்கள் நமக்கு 
நினைவூட்டுகின்றன.

#4.
"நாம் உண்மையில் எங்கு சேர வேண்டியவர்கள் என்பதைக் கண்டறிவதே
 முதல் வெற்றி."

#5.
"வேர்களும் துளிர்களும் போல, 
நன்றியுணர்வு நம்மைத் தாங்கிப் பிடிக்க, 
நம்பிக்கை மேலெழுகிறது."

#6.
"பாதை தன்னை வெளிப்படுத்தும் போது, 
அதைப் பின்தொடருங்கள்.
_ Cheryl Strayed

#7.
"இருப்பதில் மட்டும் அல்ல, 
உருவாகிக் கொண்டிருப்பதிலும் 
அழகு இருக்கிறது."

#8.
"இயற்கை கவனத்தை நாடுவதில்லை. 
அது 
அமைதியாக வாழ்வைத் தாங்குகிறது."
 *
[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.] 
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 237
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin