வெள்ளி, 3 ஏப்ரல், 2026

தென்றலோடு கண்ணாமூச்சி.. - பூனையின் பொழுதுகள் [பண்புடன் இதழ்: 10]

  


1. 
தரையில் வெயில்
சூட்டில் சுருளும் பூனை
ஓய்வெடுக்கும் நண்பகல்.

2. 
நடுநிசி சன்னல் ஓரம்
நிலவொளியில் பதியும் பாதம்
களவு போகும் இரவு.

3. 
சருகுகள் நகரும் ஒலி
தீயாகத் துடிக்கும் வால் 
வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று.

4. 
தீண்டப்படாத பால் கிண்ணம், 

ஞாயிறு, 29 மார்ச், 2026

காத்திருக்கும் காற்று

 #1

'இறக்கைகளை விரிக்கும் போதுதான், 
காற்று எப்போதும் நமக்காகக் காத்திருந்தது 
தெரிய வரும்.'


#2
எது நடந்தாலும், 
முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.


#3
உங்களுக்கான பாதை பிறரால் எழுதப்படுவதில்லை, 

ஞாயிறு, 22 மார்ச், 2026

அன்பில் வேரூன்றி..

 #1

பொறுமை நிலைத்திருக்கும் இடத்தில்
வல்லமை குடிகொள்ளும்.

2.
“மகிழ்ச்சி நம்மை நன்றியுடையவர்களாக ஆக்குவதில்லை. நன்றியுணர்வே நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.”

3.
“அன்பில் வேரூன்றி, 

ஞாயிறு, 15 மார்ச், 2026

உலகை அறிதல்

 1

“ உலகை அறிதல், 
அதை வியப்புடன் காணக் கற்றுக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது.”

2. 

“அமைதியைத் தேர்ந்தெடுக்கும் இடைவெளிகளில்தாம் 
நம் வலிமை வாழ்கிறது.”


3. 
"அனுமானிக்கும் முன் சிந்திக்க வேண்டும். 
புரிதல் அங்கிருந்தே தொடங்குகிறது."

சனி, 14 மார்ச், 2026

தூறல்: 49 - ஒரு கணம் காக்கும் பொறுமை

ஃப்ளிக்கரில் பதிந்து, இங்கு பதியாதவை, எங்கும் பகிராதவை எனப் பல படங்கள் சேர்ந்து விட்டுள்ளன. அவ்வப்போது அவற்றை (random)  சார்பற்றப் பகுப்பாக, தூறல் பகிர்வாகத் தொகுத்திட எண்ணியுள்ளேன். 

பயணங்களில் எடுத்த படங்கள் சில..:

சென்ற மாதம் தூத்துக்குடி வழியாக நெல்லைக்குச் சென்றிருந்த போது ஜூலை 2025_ல் பிரதம மந்திரியால் திறக்கப்பட்டு, ஆகஸ்ட் 2025 முதல் இயங்கத் தொடங்கிய வாகைகுளம் புதிய விமான நிலையத்தில் இறங்கினோம். பழைய விமான நிலையத்தை விடப் பல மடங்கு பெரிதாகவும் கலா ரசனையுடனும் கட்டப்பட்டள்ளது. அங்கே எடுத்த படங்கள் சில:

#1


#2 
கடலும் வானும் வரவேற்கும் சுவர்சித்திரம்

[இன்னும் இருந்த பல கலைப் படைப்புகளைப் படமாக்க நேரம் இருக்கவில்லை.]

#3 
முத்து நகரத்திற்குப் பொருத்தமாக,

புதன், 11 மார்ச், 2026

பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி தகவல் மையம் - ரங்கனதிட்டு சரணாலயம் (2)

ர்நாடகாவின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயம் ரங்கனதிட்டு. 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு 3 கிமீ தொலைவில் மாண்டியா மாவட்டத்திலுள்ளது. காவேரி நதிக் கரையில் அமைந்த  இதன் ஆறு தீவுகளுக்கும் விதம் விதமான பறவைகள் தேடி வருவதையும், கூடு கட்டும் இடமாகக் கொண்டிருப்பதையும் கண்டறிந்த பறவையியலாளரான டாக்டர் சலீம் அலி, மைசூர் மன்னரிடம் பரிந்துரைத்ததன் பேரில் 1940_ஆம் ஆண்டு இந்த சரணாலயம் உருவானது என்பது குறித்து ‘பக்ஷி காசி - பாகம் 1_ல் குறிப்பிட்டிருந்தேன். அவரைக் கெளரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே  "டாக்டர் சலீம் அலி தகவல் மையம் ( Dr. Salim Ali Information Centre )".

#1

சரணாலய நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வரும் இத்தகவல் மையம் சரணாலத்தின் நுழைவாயில் பகுதியிலேயே அமைந்துள்ளது. 

ரங்கனதிட்டுவின் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பின் மீது இந்த மையம் ஆழமான மதிப்பை ஏற்படுத்துகிறது. பறவைகள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக டாக்டர் சலீம் அலியின் பங்கை முன்னிலைப்படுத்துகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

#2


#3


#4

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த மையத்தில்,  ரங்கனதிட்டு சரணாலயம் முழுமையாக அறிந்து கொள்ள, சுற்றிப் பார்க்க உதவும் வகையில் தெளிவான வரைபடம் உள்ளது. பறவைகளின் குரல்களைக் கேட்டு அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் மற்றும் ஆடியோ-விஷுவல் வசதிகள்  சேர்க்கப்பட்டுள்ளன. மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான ‘விநாடி வினாப் பலகை’ அமைக்கப்பட்டுள்ளது.

#5


பலவகைப் பறவை இனங்கள், அவற்றின் கூடுகட்டும் முறைகள் மற்றும் உடல் பண்புகள் பற்றிய விரிவான தகவல்களை இந்த மையம் வழங்குகிறது. 

#6 அலகு அமைப்புகள், இறகு வடிவங்கள் மற்றும் நிறங்கள், அவற்றின் பல்வேறு வகையான கால்கள் மற்றும் கால்களின் பயன்கள் குறித்தும் அறிந்து கொள்ள உதவுகிறது. 

ஒளியூட்டப்பட்டத் தகவல் பலகைகள்:

உரிய படங்களுடன், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில், எளிதாக வாசிக்கும் வகையில் பெரிய எழுத்துக்களுடன், சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி நிற்கும் ஒளியூட்டப்பட்ட பலகைகள் இந்த மையத்தின் சிறப்பு. கூடுமானவரையில் மற்ற மின் விளக்குகளின் ஒளி அவற்றின் மேல் பிரதிபலிக்காமல் படமாக்கியுள்ளேன் ஆயினும், தமிழிலும் அத்தகவல்களைத் தந்துள்ளேன்.

#7 கர்நாடகாவின் “பக்ஷி காஷி”க்கு வரவேற்கிறோம்:

ஞாயிறு, 8 மார்ச், 2026

அவள் நடக்கிறாள் - பண்புடன் மின்னிதழின் மகளிர் தின சிறப்பிதழில்..

 

வள் எழுகிறாள், அதிகாலையில்
ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்ல
அவளது ஆழ்ந்த வலிமையை நம்பி 
தோள்களில் சாயும் உலகத்தை 
தாங்கிப் பிடிப்பதற்காக.

கண்ணாடி அறைக் கூட்டங்களில்,
கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,
கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்
அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,

வெள்ளி, 6 மார்ச், 2026

அருள்மிகு சன்னதிகள்

பெங்களூர் கோயில்கள் சிலவற்றில் பெற்ற தரிசனக் காட்சிகள்..

#1 சிவசக்தி 


#2 சோமேஸ்வரர்


#4 அயிகிரி நந்தினி..

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

உப்புக் காற்று - பண்புடன் மின்னிதழில்..

  


உப்புக் காற்று

பொழுது விடியும் முன்பே 
அவர்கள் புறப்பட்டனர்.
அவர்களது வலைகள் 
நம்பிக்கையால் கனத்திருந்தன.
அமைதியாக இருந்தது 
அடிவானம்.
நீல நிறத்தைப் பரப்ப 
ஆயத்தமாகிக் கொண்டிருந்தது 
ஆகாயம்.

அவர்களது தோலில் 
நினைவுகளைப் போல் 
ஒட்டிக் கொண்டிருந்தது உப்பு.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

எல்லைகளுக்குள் சுருங்கிய சக்தி.. - மைசூர் விலங்கியல் பூங்கா

மைசூர் விலங்கியல் பூங்காவில் எடுத்தப் படங்களைத் தொகுப்பாக “வாழிடம் மாறி வசிக்கும் வனவிலங்குகள்” எனவும், தனித் தனி விலங்குகளின் படங்களைத் தகவல்களுடனுமாகப் பல பதிவுகள் பதிந்திருந்தேன். அந்த வரிசையில் தொடர்ந்து மேலும் ஃப்ளிக்கரில் பதிந்து வந்த படங்களின் தொகுப்பு.  

கழுத்தை உயர்த்தியும் தாழ்த்தியுமாக உலவிக் கொண்டிருந்த பல ஒட்டகச் சிவிங்கிகளை விடாது நானும் கழுத்தை உயர்த்தி, வளைத்து வளைத்து எடுத்த படங்கள் முதலில்:

#1  
உயரம் என்பது கர்வம் அல்ல,
அது உலகை அமைதியாகப் பார்க்கும் ஒரு பார்வை.


#2

இயற்கையின் சித்திரம்


#3

பசுமை வேட்டை

வியாழன், 5 பிப்ரவரி, 2026

தாமிரபரணி மண்ணின் மகுடம் | நெல்லையப்பர் திருக்கோயில் | 2026

2026:
[நெல்லையப்பர் கோபுரம்]

யுகங்கள் கடந்தும் கம்பீரம் குறையாத கோபுரங்களின் தரிசனம், சொர்ண புஷ்கரணியின் அமைதி, பிரகாரங்களிலும் மண்டபங்களிலும் சூரியக் கதிராக ஊடுருவி நிற்கும் இறையருள்! அண்மையில் எடுத்த 15,  +4 படங்களுடன் ஒரு பகிர்வு.


#2 காந்திமதி தாயார் கோபுரம்


#3 அம்மன் சன்னதி கொடிமரம் (துவஜஸ்தம்பம்)

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

உணராத ஆற்றல்

#1
"அமைதியைத் தேர்ந்தெடுங்கள்; அதுவே உங்கள் சிறந்த எண்ணங்கள் வாழும் இடம்."

#2
"மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள், அவர்கள் உங்களைப் பற்றி அரிதாகவே நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்தால்." 
- எலினோர் ரூஸ்வெல்ட்


#3 
"அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்.

வியாழன், 29 ஜனவரி, 2026

பேசும் வானம் [11 குறுங்கவிதைகள்] - பண்புடன் மின்னிதழில்..

 பேசும் வானம்


​1. 
இருள் தளர
நீலத்தில் தேயும் விண்மீன்கள்
விரியும் காலை!

2.
வெண்மேகம் விலக
ஒளி சிந்தும் சூரியன்
பேசும் பகல்!

3.
மேக நிழல்கள்
மண்ணில் வரையும் சித்திரங்கள்
வானமெனும் குழந்தை!

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

சரியான நேரம், சரியான இடம், சரியான நீங்கள்.

 #1. “உங்களுக்கேயான நேரத்தை முழுமையாக ஏற்றிடுங்கள்.”

[செம்பருந்து]

#2. "மென்மையைப் போல வலிமையானது எதுவுமில்லை, உண்மையான வலிமையைப் போல மென்மையானது எதுவுமில்லை." 
__ Saint Francis de Sales
[கரும்பருந்து]

#3. “உள்ளுக்குள் உறுதியாக நிற்பவர்களுக்கே
ஒளி தன்னை வெளிப்படுத்துகிறது.”
[வல்லூறு]

#4.  “சிறிய பறவை கூட தன் கண்களில் அடிவானத்தைத் தாங்க முடியும்.”

வியாழன், 22 ஜனவரி, 2026

சமூகத்தின் முகம் - முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்

 


ழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும் ‘மண்வாசம்’ இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 64_வது நூல் ‘சமூகத்தின் முகம்’. இந்நூல் சமூகத்தின் சக்தி வாய்ந்த குரலாகவும், அதன் ஆழமான பிரதிபலிப்பாகவும் உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள், கவனிக்கப்படாத போன உண்மைகளை நேர்மையுடனும் கருணையுடனும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. வாசகர்களை இடை நிறுத்தி சிந்திக்க வைக்கின்றன.

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

முழு மலர்ச்சி

 #1

'இயற்கையின் வாக்குறுதி இதழ்களில் வரையப்படுகிறது, 
மென்மையாக, பிரகாசமாக, அழகாக.'


#2
'முழு மலர்ச்சி 
தொடக்கமும் அல்ல, முடிவும் அல்ல, 
வளர்ச்சி முழுவதும் வெளிப்படும் தருணமே அது.'

#3
'அமைதியாக உழைத்திடுங்கள், 
உங்கள் உயர்வு பேசப்படட்டும்.'

புதன், 7 ஜனவரி, 2026

தர்பார் மண்டபங்கள்; கூரை ஓவியங்கள் - மைசூர் அம்பா விலாஸ் அரண்மனை

 

மைசூர் அரண்மனை பற்றிய விரிவான தகவல்களுடனும் 27 படங்களுடனும் ஆன எனது 2017_ஆண்டுப் பதிவு ஒன்று இங்கே: “அம்பா விலாஸ்”.

முன்னரெல்லாம் அரண்மனையை வெளியிலிருந்து படங்கள் எடுத்துக் கொள்ள மட்டுமே அனுமதி இருந்தது. உள்ளே செல்லும் முன் மீண்டும் நுழைவாயிலுக்குச் சென்று கேமரா, மொபைல் அனைத்தையும் லாக்கரில் ஒப்படைத்து விட்டே செல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் பலமுறைகள் சென்ற போதும் இதுதான் விதிமுறையாக இருந்ததால் ‘அதில் என்ன மாற்றம் வந்து விட்டிருக்கப் போகிறது’ என்று சற்றே அலட்சியமாக இருந்து விட்டேன் இந்த முறை. அரண்மனைக்குச் செல்வது பயணத் திட்டத்திலும் இருக்கவில்லை. ஆனால் உயிரியல் பூங்காவுக்குப் போய் விட்டுத் திரும்பும் வழியில் நேரம் இருந்ததால், அரண்மனைக்கு வெளியே மட்டும் சுற்றி விட்டு வரலாம் என்கிற முடிவுடன் சென்றேன். 

#2


#3


அந்தியில் மின்னிய அரண்மனையின் வெளித் தோற்றத்தை ஓரிரு படங்கள் எடுப்போம் என ஆரம்பித்த போதுதான் கவனித்தேன், முதல் தளத்தில் பலபேர் கையில் அலைபேசிகளுடன் செல்ஃபி எடுத்தபடி நின்றிருந்ததை. வியப்பாகி அங்கிருந்த காவலரிடம் கேட்ட போது, ‘உள்ளே ஃபோட்டோகிராஃபி அலவ்ட்’ என்றார். “ நீங்கள் போக வேண்டுமா? ஐந்தரை மணி வரையிலும்தான் அரண்மனைக்குள் நுழைய முடியும், ஆறு மணிக்கு வெளியேற்றி விடுவார்களே. வேகமாகப் போங்கள்” என்றார். இன்னும் 5 நிமிடங்களே இருக்க அரக்கப் பரக்க விரைந்து ஒருவாறாக நுழைந்து விட்டோம்.

#4

அரை மணி நேர அவகாசமே இருந்ததாலும், உள்ளே இருந்த கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே மக்களை அவசரப்படுத்தியபடி இருந்ததாலும், ஆற அமர படமாக்க முடியவில்லை. கிடைத்த நொடிகளில் ரசித்து எடுத்தவற்றின் அணிவகுப்பு கீழே.. 

ரண்மனையில் முதல் தளத்தில் அமைந்துள்ளன இரண்டு தர்பார் மண்டபங்கள். தெற்கு பார்க்க அமைந்திருப்பது மன்னர் பார்வையாளர்களைச் சந்திக்கும் பொது தர்பார் மண்டபம்.  

கிழக்குப் பார்க்க அமைந்திருப்பது மகராஜா தனிப்பட்ட விருந்தினர்களைச் சந்திக்கும் அம்பா விலாஸா எனப்படும், தனிப்பட்ட தர்பார் மண்டபம். 

னிப்பட்ட (private) தர்பார் மண்டபம் ‘அம்பா விலாஸா’ என அழைக்கப்படுவதுடன் அதன் பெயரே அரண்மனைக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

#5

இது இந்தோ-சரசெனிக் (Indo-Saracenic) கட்டடக்கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

ஆண்டின் முதல் பெருமுழுநிலவு.. ஓநாய் நிலவு.. - 3 ஜனவரி 2026

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நிலவைப் படமாக்கினேன், புதிய நிகான் Z5 II-வை பரிசோதிக்கும் ஆர்வத்தினாலும். நேற்றைய தினம் வானில் தோன்றிய முதல் முழு நிலவானது பெரு நிலவும் (supermoon)  ஆகும். 

Exif: 1/100s,f/13, ISO1000
Focal length: 300mm
Nikon Z5 II
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
03-01-2026 21:14:06

சென்ற சில தடவைகளைப் போலவே நேற்றும் ட்ரைபாட் இல்லாமல் கையில் பிடித்தே படமாக்கினேன்.

ண்டின் முதல் முழுநிலவு ‘ஓநாய் நிலவு’ (wolf moon) என்றும் அறியப்படுகிறது. ஃபார்மர்ஸ் அல்மனாக்  (The Old Farmers Almanac)  குறிப்பேட்டில் அந்தந்த மாதத்தின் நிலவுக்கென ஒரு பெயரும் அதற்கென ஒரு காரணக் கதையும் இருக்கும். உலகளாவிய அளவில்  அந்தப் பெயராலேயே ஒவ்வொரு மாத நிலவும் அழைக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாக முன்னரும் சில பதிவுகளில் விளக்கியுள்ளேன். ஜனவரி மாத நிலவு ஓநாய் நிலவென அழைக்கப்படுவதற்கான காரணம், குளிர் காலத்தின் உச்சத்தில் சரியாக உணவு கிடைக்காமல் ஓநாய்கள் பசியில் ஊளையிட்டபடி இருக்குமாம். அதனாலேயே ஆண்டின் முதல் முழு நிலவுக்கு ‘ஓநாய் நிலவு’ எனப் பெயர் வந்திருக்கிறது.

ந்த வருட முதல் முழுநிலவு பெருநிலவாகவும் (supermoon) அமைந்தது கூடுதல் சிறப்பானது. சூப்பர் மூன் என்றால் என்ன என்பது குறித்த விளக்கத்தை படங்களுடன் எனது இந்தப் பதிவில் https://tamilamudam.blogspot.com/2013/06/super-moon-2013.html ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் என்றாலும் மீண்டும் சுருக்கமாக:

பூமியை நிலவு வட்டப் பாதையில் அன்றி, நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் அவ்வப்போது மாறுபடுகிறது. பெரிஜி (Perigee) என்பது நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் புள்ளி, அப்போஜி (Apogee) என்பது நிலவு பூமியை விட்டு மிகத் தொலைவில் இருக்கும் புள்ளி. நிலவு பூமிக்கு மிக அருகில் வருகையில் வழக்கத்தை விடவும் 14% பெரிதாகவும், 30% கூடுதல் வெளிச்சத்துடனும் காட்சி தரும். அவ்வாறாக நேற்றைய நிலவு பூமிக்கு அருகாமையில் (Perigee)   சுமார் 3,62,312 கிலோமீட்டர் தொலைவில் வந்திருக்கிறது. அதே நேரத்தில் முழு நிலவாகவும் இருந்ததால் பெருநிலவும் (supermoon) ஆனது. 

ந்த வருடத்தில் அடுத்து வரவிருக்கும் இரு பெருநிலவுகள்: 

24 நவம்பர்: 3,60,768 கிலோமீட்டரில்..
24 டிசம்பர்: 3,56,740 கிலோமீட்டரில்..

நேரமும் வாய்ப்பும் கூடி வருமாயின் அவற்றைப் படமாக்குவேன் :).

**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin