வியாழன், 31 மார்ச், 2011

ஆனந்த விகடனில் சுகாவின் ‘மூங்கில் மூச்சு’ - ஒரு பகிர்வு

லகமெங்கும் விரவி ஊரின் நினைவோடு வாழும் திருநெல்வேலிக்காரர்கள் அனைவரும் கடந்த 12 வாரங்களாக ஆனந்த விகடன் கைக்குக் கிடைத்ததுமே முதலில் வாசிப்பது ‘மூங்கில் மூச்சாகவே’ இருக்கக் கூடும் என்பது என் அனுமானம்.

சில அத்தியாயங்கள் அப்படியே நம்மை எண்பதுகளின் காலக் கட்டதுக்குக் கொண்டு செல்லுபவையாக இருக்க, அதில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அறிந்தவர்களாகவோ அல்லது அறிந்தவர்களுடன் தொன்னூறு சதவிகிதம் ஒப்பிடும்படியாகவோ சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள்.ஹை லைட்டாக அமைந்து தொடரை மேலும் நெருக்கமாக உணரச் செய்கிறது நெல்லைப் பேச்சுத் தமிழ்.

இழையோடும் நகைச்சுவையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் வாசிக்கையில் அடக்க முடியாமல் சிரிப்பார் கணவர். அவருக்கும் நெல்லைதான். அப்படி என்னதான் என அடுத்து வாசிக்கையில் அடக்க முடியாது எனக்கும் சிரிப்பை!

தொடர் நிறைவுற்றுத் தொகுப்பாக வெளிவரக் காத்திருக்கிறேன்..

தவறவிட்டவர்கள் இனித் தொடருங்கள் ஆனந்த விகடனில்..

ழுத்தாளர் சுகாவுக்கு ஒரு வலைப்பூவும் இருப்பது சமீபத்தில் நண்பர்களின் buzz மூலமாக அறிய வந்தேன். வேணுவனம் அதன் பெயர். இதுவும் நெல்லைக்காரர்களுக்காக மட்டுமின்றி எல்லோருக்குமான தகவல்:)!

40 கருத்துகள்:

  1. மிக அருமை ராமலெக்ஷ்மி..:)) சுகாவுக்கு வாழ்த்துக்கள்..:))

    பதிலளிநீக்கு
  2. ஏதேச்சையாக உங்களிடம் இத்தொடரைப் பற்றி சிலாகித்த என்னை, மற்றவருடனும் பகிர்ந்திடத் தூண்டியது நீங்களே:)! அதற்கும் சேர்த்து நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நானும் கூட மிக அதிகம் ரசிக்கும் தொடர் இது. வானவில்லில் குறிப்பிட நினைத்திருந்தேன். நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, நானும் கொஞ்ச நாள் கழித்தாவது இதனை மீண்டும் பகிர்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. நம்ம ஊரு பாசம், எப்படி அக்கா போகும்? புத்தகம் வந்ததும் வாங்க வேண்டும், அக்கா.

    பதிலளிநீக்கு
  5. சுகாவுக்கு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  6. நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றாக போகிறது.
    அவசியாமான பகிர்வு மேடம்.

    //மோகன் குமார் said...
    நானும் கூட மிக அதிகம் ரசிக்கும் தொடர் இது. வானவில்லில் குறிப்பிட நினைத்திருந்தேன். நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, நானும் கொஞ்ச நாள் கழித்தாவது இதனை மீண்டும் பகிர்கிறேன்//

    மோகன் சார், நீங்கள் அவசியம் வானவில்லில் எழுதவும். இப்பொழுதே எழுதினால்தான் படிக்கத் தவறியவர்களுக்கு படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஊர்ப்பாசம் :)

    இதை தொடர் படிக்க தொடங்கிய பிறகும் சுகா’வின் தாயார் சன்னதி புத்தகம் வாங்கி படித்ததும் நெல்லையின் மீது ஒரு பற்று உண்டாகிவிட்டது :) இது போல - சுகாவின் ஊர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களோடு அந்த காலக்கட்டத்திற்கே அழைத்துச்செல்லும் பாங்கினை பின்பற்றி ஒவ்வொருவரும் தம் ஊர் பற்றிய சிந்தனைகளோடு பயணிக்க ஏதுவாகவும் அமைந்திருக்கிறது !

    வாழ்த்துகள் சுகா

    &
    நெல்லை மக்களுக்கு

    தொடரினை படியுங்கள் முழுவதுமாய் ஊர் நினைவுகளை அனுபவியுங்கள்!

    பதிலளிநீக்கு
  8. புத்தகமாக வந்ததும் வாங்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. அவரோட தாயார் சன்னிதி புத்தகத்தயும் வாங்கி படிங்க.. சொல்வனம் வெளியிடு :)

    பதிலளிநீக்கு
  10. நானும் சுவாரஸ்யமாக படித்து வருகிறேன் இந்தப் பகுதியை...

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் படிக்க ஆசையா இருக்குது....

    பதிலளிநீக்கு
  12. \\தவறவிட்டவர்கள் இனித் தொடருங்கள் ஆனந்த விகடனில்..\\

    ஆகா! கண்டிப்பாக தொடருகிறேன். சென்னைக்காரனாக இருந்தாலும் ;)

    பதிலளிநீக்கு
  13. நானும் மிகவும் ரசிக்கும் தொடர்.
    குறிப்பாக, டவுசர் போடும் காலத்தில் வேஷ்டி கட்டி கேலிக்காளான கதையை இப்போது பர்முடாஸ் போட்டுக்கொண்டு பேசிக்களித்ததை படித்ததும் பக்னு சிரித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  14. இந்த வார விகடனில் படித்து விட்டு சுகாவின் மூங்கில் மூச்சை முதலில் இருந்து படித்தாக வேண்டும் என்று சுவடுகள் போய் உத்தேசமாய் கிளிக் செய்து ஜனவரி 12 இதழில் இருந்து படித்து முடித்தேன்.யாரிந்த சுகா என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. பின்னூட்டம் இட்டவர் அதற்கான பதிலும் கொடுத்திருந்தார்.அருமையான நடை. பக்கத்து ஊர் காரியாக பெருமை பட்டுக் கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  15. நானும் படித்து வருகிறேன் ராமலக்ஷ்மி.
    நான் பார்த்த நெல்லை வேறுதான்.
    இப்போதிருக்கும் நெல்லை பற்றிப் படிக்கும் போது மனம் நிறைகிறது. அவருக்குக் கட்டாயம் நன்றிகள் போய்ச் சேர வேண்டும். சுட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. சுகாவின் வேணுவனம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனந்தவிகடனிலும் படித்தேன். ஆயில்யன் சுட்டி கொடுத்திருந்தார். நன்றி மா. மிக அருமையான சொல்வளம் இவருக்கு. சுகா அனுபவம் தான்.

    பதிலளிநீக்கு
  17. மூங்கில் மூச்சு படித்தேன் ராமலக்ஷ்மி.

    ஊர் ஊராய் மாற்றல் ஆனாலும் என் அம்மா பெரியம்மா எல்லாம் ஒண்னா கூடினால் பேசுவது நெல்லை தமிழ்.

    எங்களுக்கு எல்லா ஊர் பாஷையும் கலந்து வரும்.

    துளசிகூட அவர்கள் பதிவில் வாரியலை சும்மா அப்படி அடியில் விட்டு தூத்தா (பெருக்கினா) என்று எழுதி இருந்தார்கள்.

    சில வார்த்தைகளை (தாய் மண்ணின்)
    மறக்க முடியாது.

    ஊர் பாசம் ஏற்பட வைக்கும் சுகாவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. மோகன் குமார் said...
    //நானும் கூட மிக அதிகம் ரசிக்கும் தொடர் இது. வானவில்லில் குறிப்பிட நினைத்திருந்தேன். நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, நானும் கொஞ்ச நாள் கழித்தாவது இதனை மீண்டும் பகிர்கிறேன்//

    அமைதி அப்பா சொல்வதே சரி:)! அடுத்த வானவில்லில் பகிர்ந்திடுங்கள்.

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  19. Chitra said...
    //நம்ம ஊரு பாசம், எப்படி அக்கா போகும்? புத்தகம் வந்ததும் வாங்க வேண்டும், அக்கா.//

    ஆம் சித்ரா:), நன்றி.

    பதிலளிநீக்கு
  20. S.Menaga said...
    //சுகாவுக்கு வாழ்த்துக்கள்!!//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  21. அமைதி அப்பா said...
    //நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றாக போகிறது.
    அவசியாமான பகிர்வு மேடம்.//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  22. ஆயில்யன் said...
    //ஊர்ப்பாசம் :)

    இதை தொடர் படிக்க தொடங்கிய பிறகும் சுகா’வின் தாயார் சன்னதி புத்தகம் வாங்கி படித்ததும் நெல்லையின் மீது ஒரு பற்று உண்டாகிவிட்டது :) இது போல - சுகாவின் ஊர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களோடு அந்த காலக்கட்டத்திற்கே அழைத்துச்செல்லும் பாங்கினை பின்பற்றி ஒவ்வொருவரும் தம் ஊர் பற்றிய சிந்தனைகளோடு பயணிக்க ஏதுவாகவும் அமைந்திருக்கிறது !

    வாழ்த்துகள் சுகா

    &
    நெல்லை மக்களுக்கு

    தொடரினை படியுங்கள் முழுவதுமாய் ஊர் நினைவுகளை அனுபவியுங்கள்!//

    'தாயார் சன்னதி’ அவசியம் வாங்கி வாசிக்கின்றேன்.

    ‘ஒவ்வொருவரும் தம் ஊர் பற்றிய சிந்தனைகளோடு..’

    ஆம், மிக்க நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  23. Lakshmi said...
    //புத்தகமாக வந்ததும் வாங்கவேண்டும்.//

    நிச்சயம். நன்றி லக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  24. இராமசாமி said...
    //அவரோட தாயார் சன்னிதி புத்தகத்தயும் வாங்கி படிங்க.. சொல்வனம் வெளியிடு :)//

    நல்லது. அவசியம் செய்கிறேன். மிக்க நன்றிங்க:)!

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம். said...
    //நானும் சுவாரஸ்யமாக படித்து வருகிறேன் இந்தப் பகுதியை...//

    நன்றி ஸ்ரீராம்:)!

    பதிலளிநீக்கு
  26. MANO நாஞ்சில் மனோ said...
    //எனக்கும் படிக்க ஆசையா இருக்குது....//

    ஆனந்த விகடனில் தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  27. கோபிநாத் said...
    ***\\தவறவிட்டவர்கள் இனித் தொடருங்கள் ஆனந்த விகடனில்..\\

    ஆகா! கண்டிப்பாக தொடருகிறேன். சென்னைக்காரனாக இருந்தாலும் ;)/***

    சென்னை வாழ்வைப் பற்றிய பகுதிகளும் அதில் உண்டு:)! நன்றி கோபிநாத்.

    பதிலளிநீக்கு
  28. நசரேயன் said...
    //படிக்கிறேன்//

    நன்றி நசரேயன்:)!

    பதிலளிநீக்கு
  29. நானானி said...
    //நானும் மிகவும் ரசிக்கும் தொடர்.
    குறிப்பாக, டவுசர் போடும் காலத்தில் வேஷ்டி கட்டி கேலிக்காளான கதையை இப்போது பர்முடாஸ் போட்டுக்கொண்டு பேசிக்களித்ததை படித்ததும் பக்னு சிரித்துவிட்டேன்.//

    இப்படி பல இடங்கள் தொடரில்:)! நன்றி நானானி.

    பதிலளிநீக்கு
  30. செ.சரவணக்குமார் said...
    //நல்ல பகிர்வு.//

    மிக்க நன்றி சரவணக்குமார்.

    பதிலளிநீக்கு
  31. Mahi_Granny said...
    //இந்த வார விகடனில் படித்து விட்டு சுகாவின் மூங்கில் மூச்சை முதலில் இருந்து படித்தாக வேண்டும் என்று சுவடுகள் போய் உத்தேசமாய் கிளிக் செய்து ஜனவரி 12 இதழில் இருந்து படித்து முடித்தேன்.யாரிந்த சுகா என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. பின்னூட்டம் இட்டவர் அதற்கான பதிலும் கொடுத்திருந்தார்.அருமையான நடை. பக்கத்து ஊர் காரியாக பெருமை பட்டுக் கொள்ளலாம்//

    நல்லது. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  32. வல்லிசிம்ஹன் said...
    //நானும் படித்து வருகிறேன் ராமலக்ஷ்மி.
    நான் பார்த்த நெல்லை வேறுதான்.
    இப்போதிருக்கும் நெல்லை பற்றிப் படிக்கும் போது மனம் நிறைகிறது. அவருக்குக் கட்டாயம் நன்றிகள் போய்ச் சேர வேண்டும். சுட்டியதற்கு நன்றி.//

    நாங்கள் வளர்ந்த காலத்து நெல்லையை கண் முன் கொண்டு வந்துள்ளார்:)!

    //சுகாவின் வேணுவனம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனந்தவிகடனிலும் படித்தேன். ஆயில்யன் சுட்டி கொடுத்திருந்தார். நன்றி மா. மிக அருமையான சொல்வளம் இவருக்கு. சுகா அனுபவம் தான்.//

    ஆம். தொடருங்கள். நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  33. கோமதி அரசு said...
    //மூங்கில் மூச்சு படித்தேன் ராமலக்ஷ்மி.

    ஊர் ஊராய் மாற்றல் ஆனாலும் என் அம்மா பெரியம்மா எல்லாம் ஒண்னா கூடினால் பேசுவது நெல்லை தமிழ்.

    எங்களுக்கு எல்லா ஊர் பாஷையும் கலந்து வரும்.

    துளசிகூட அவர்கள் பதிவில் வாரியலை சும்மா அப்படி அடியில் விட்டு தூத்தா (பெருக்கினா) என்று எழுதி இருந்தார்கள்.

    சில வார்த்தைகளை (தாய் மண்ணின்)
    மறக்க முடியாது.

    ஊர் பாசம் ஏற்பட வைக்கும் சுகாவிற்கு வாழ்த்துக்கள்.//

    ஆம், தொடரில் வரும் பல நெல்லைச் சீமை வார்த்தைகள் மற்றவருக்குப் புரியுமா என்று கூட நான் நினைப்பதுண்டு:)! மண்ணுக்கே உரிய மணத்துடன் எழுதி வருகிறார்.

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  34. க‌ரிச‌ல்கார‌ன் said...
    //நானும் படித்து வருகிறேன்//

    தொடருங்கள்:)! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  35. தமிழ்மணம், இன்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அக்கா, அந்தத் தொடரின் பெயரைப் பார்த்து, கவிதைத் தொடராக இருக்கும் என்று நினைத்துப் படிக்காமலிருந்தேன். அடடா, மிஸ் பண்ணிவிட்டேன்!! இணையத்டில் வாசிப்பதால் இப்படித்தான் நிறையவற்றை ஒதுக்க நேரிடுகிறது. கையில் புத்தகத்தை வைத்து, படுத்துக் கொண்டே வாசிப்பது போன்ற சுகம் இணையத்தில் வாசிக்கும்போது வருவதில்லை.

    இனி முழுதும் வாசிக்கிறேன். நல்லவேளை சொன்னீங்க!! ;-))))

    பதிலளிநீக்கு
  37. @ ஹுஸைனம்மா,

    நல்லது ஹுஸைனம்மா:)! இனித் தொடருங்கள். முந்தைய அத்தியாயங்களையும் தேடிப் பிடித்து வாசித்து விடுங்கள்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin