பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஜூலை, 2026

சிறிய மைல்கல் – ஃப்ளிக்கர்: 80 லட்சம் பார்வைகள்

 


தொடர்ந்து பயணிக்க வைக்கும் எண்கள்: சென்ற மாதம் எனது Flickr புகைப்பட ஓடையின் மொத்த பக்கப் பார்வைகள் (8 மில்லியன்) 80 லட்சத்தைக் கடந்து விட்டுள்ளன. 
சிறிய மைல்கல் தான், ஆனால் அர்த்தமுள்ள ஒன்றாகக் கருதுகிறேன். 

புகைப்படங்கள் தங்களை ரசிக்கும் மனிதர்களைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பார்வையும் தொடர்ந்து சுற்றியுள்ள உலகைக் காணவும், படமாக்கவும், பகிரவும் ஊக்கமளித்து வருகின்றன. 

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பவர்கள் அனைவருக்கும் நன்றி.
*

2026-ன் அரையாண்டு முடிந்துள்ள நிலையில், ஃப்ளிக்கரின் மாதாந்திர புள்ளி விவரத் தொகுப்பையும் எனக்கான சேமிப்பாக இங்கு பதிந்து வைக்கிறேன்.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

ஃப்ளிக்கர் - ஐம்பது இலட்சம்

 https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/

இப்போதுதான் கவனிக்கிறேன். "ஐம்பது லட்சம்" பக்கப் பார்வைகளைத் தாண்டி எனது ஃப்ளிக்கர் ஒளிப்பட ஓடை. 2008_ஆம் ஆண்டு தொடங்கிய பயணம். தவம் போல் தொடருகிறேன். நான் நேசிக்கும்

திங்கள், 7 மே, 2018

கரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)

கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். சமீபத்தில் வால் முளைக்காத இளம் கரிச்சான் குருவியைப் படமாக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

#1
என் பகிர்வில் சொல்லப்படாத சில சுவாரஸ்யமான தகவல்கள் காலம் சென்ற திரு. கல்பட்டு நடராஜன் அவர்களின் பதிவில் வாசிக்கக் கிடைத்தன. அதில் ஒரு பகுதி..

*“கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே துளியும் கிடையாது.

திங்கள், 8 டிசம்பர், 2014

“கர்நாடக சுற்றுலா” அகில இந்திய ஒளிப்படப் போட்டி 2014 - பெங்களூர் கண்காட்சி (2)


முன்னரெல்லாம் மக்கள் கூடும் முக்கியமான திருவிழாக்களில் செய்திக்காகப் பத்திரிகையாளர்கள் மட்டுமே கேமராவுடன் செல்வது வழக்கமாக இருந்தது. வெளிநாட்டினர் மற்றும் ஒருசில புகைப்பட ஆர்வலர்கள் கேமராவுடன் தென்படுவார்கள். இப்போது இது போன்ற விழா சமயங்களில் குழுவாகவோ தனியாகவோ புகைப்படக் கலைஞர்கள் பெருமளவில் சென்று படமாக்கி, நேரில் பார்க்கும் உணர்வோடு அக்காட்சிகளை மற்றவருக்கு அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தேரோட்டங்கள், மதுரை சித்திரைத் திருவிழா, கூவாகம் திருவிழா, குலசை தசரா போன்ற பல விழாக்களுக்கு ஒவ்வொரு வருடமுமே செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் பல கலைஞர்கள். ஒருவர் எடுக்கும் படங்களைப் பார்க்கையில் மற்றவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொள்ள அடுத்தடுத்து அங்கு செல்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புகைப்படக் கலைஞர்களும் பயணக் கட்டுரைகள் எழுதுகிறவர்களும் சுற்றுலா துறைக்கு ஆற்றி வரும் சேவை அளப்பரியது. சுற்றுலா வளர்ச்சி பல மனிதர்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவும் இருக்கிறது. திருவிழாக்களுக்குக் கூடுகிற கூட்டம் பிரமிப்பையும், நம் கலாச்சாரத்தின் மேல் மக்கள் கொண்டிருக்கும் மதிப்பையும் காட்டுகின்றன.

சென்ற பதிவின் தொடர்ச்சியாக.. சுற்றுலா வளர்ச்சிக்காக கர்நாடக அரசால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட அகில இந்திய ஒளிப்படப் போட்டியில் வென்ற படங்களில் சில உங்கள் பார்வைக்கு. சுமார் 120 காட்சியில் இருந்தன.  என்னைக் கவர்ந்த இருபத்து இரண்டினை, எடுத்தவர்களின் பெயரோடு இங்கே பகிருகிறேன்.  அடுத்து இந்த இடங்களுக்குச் செல்பவர்களுக்கோ, அல்லது கர்நாடகா சுற்றுலாவுக்கு திட்டமிடவோ இவை உதவுமென நம்புகிறேன்.

#1

#2 கம்பாலா
எருமைகளை ஓட விடும் இந்தப் பந்தயத்தை தடைசெய்யக் கோரி வழக்கு நடைபெற்று வருகிறது. . “ஜல்லிக் கட்டினைப் போல இது ஆபத்தானது அல்ல. இதை நம்பிப் பல குடும்பங்கள் உள்ளன. எனவே இந்தப் பாரம்பரிய விளையாட்டைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என ஒரு சாரார் குரல் எழுப்பி வருகின்றனர்.

#3 வீடு திரும்பல்

#4 உறி அடி விழா

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

காண வேண்டிய கானுயிர் உலகம் - பெங்களூரில் சர்வதேச ஒளிபடக் கண்காட்சி (1)

பன்னாட்டுக் கலைஞர்களின் பங்கேற்புடன் ஸ்தம்பிக்க வைக்கும் கானுயிர் ஒளிப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில். 1 டிசம்பர் 2014 அன்று கர்நாடக அரசின் தலைமைச் செயலதிகாரியான திரு. கெளசிக் முகர்ஜி ஆரம்பித்து வைத்த இக்கண்காட்சி இன்று 7 டிசம்பர் நிறைவு பெறுகிறது. ஆர்வமுள்ள ஒளிப்படக் கலைஞர்கள் மற்றும் வாய்ப்புக் கிடைக்கும் அனைவரும் கண்டு இரசிக்கலாம்.

அரங்கின் நான்கு அறைகளில் சுமார் 520 படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் 200, சர்வதேசப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்கள் “17th INTERNATIONAL FEDERATION OF PHOTOGRAPHIC ART(FIAP) NATURE BIENNIAL WORLD CUP"  போட்டியில் வென்ற படங்களும், 120 படங்கள், அகில இந்திய கர்நாடக சுற்றுலா புகைப்படக் கண்காட்சியில் வெற்றி பெற்ற படங்களும் ஆகும். இரண்டு பிரிவுகளில் உலகக் கோப்பையை வென்ற நாடுகள் முறையே இத்தாலியும், தென் ஆப்பிரிக்காவும். இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள்!

விருது பெற்ற இந்தியக் கலைஞர்கள் ஆன ஜெயதேவ் பசப்பா, ஃபிலிப் ரோஸ், க்ளெமென்ட் ஃப்ரான்ஸிஸ் மற்றும் மஞ்சுநாத் SK ஆகியோரின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நேற்று சர்வதேச விருது வாங்கிய கிருபாக்கர் செனானி எடுத்த “ Walking with the Wolves" டாகுமென்டரி படம் திரையிடப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் 24 நாடுகளிலிருந்து மிகுந்த ஆர்வத்துடன் கலைஞர்கள் இக்கண்காட்சிக்காகத் தங்கள் படங்களை அனுப்பி வைத்திருந்தனர். அளவுகள் சற்று சிறிதாக இருப்பினும் நல்ல Print Quality_யில் அமைந்திருந்த படங்கள் அனைத்தும் அப்படியே நேரில் பார்க்கும் உணர்வைத் தந்தன.

 என்னைக் கவர்ந்த படங்கள் சிலவற்றை எடுத்தவரின் பெயரோடு அப்படியே இங்கு உங்கள் பார்வைக்கும் தருகிறேன்.

#1

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம்.. - அக்டோபர் PiT

நிகழ்வுகள். 

இதுதான் இம்மாதத் தலைப்பு. மக்கள், நட்புகள், உறவுகள் கூடுகிற நிகழ்வுகள் எதுவானாலும் இருக்கலாம்.

#1 இன்று உலக செஃப் தினம் :)!

எந்த நிகழ்வானாலும் நினைவுகளை காலத்துக்கும் நிறுத்தி வைப்பதில் நிழற்படங்களின் பங்கு பிரதானமானது. அதை மனதில் கொண்டு சற்று கூடுதல் கவனத்துடன் மைய நிகழ்வை மட்டுமின்றி சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்துப் படமாக்குவது பலநாட்கள் கழித்தும் பார்க்கும் போது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையை நமக்குச் சொல்வதாக அமையும்.

#2

அலங்காரங்கள், தோரணங்கள், விருந்தினர்கள், மகிழ்வுடன் அளவளாவும் தருணங்கள், குழந்தைகள், அவர்களது ஆட்டபாட்டங்கள், தயாராகும் உணவு, பரிமாறப்பட்ட பந்தி, மேஜையில் வரிசைப்படுத்தப்பட்ட பதார்த்தங்கள், கேக் என சொல்லிக் கொண்டே போகலாம். [நடுவர் சுரேஷ்பாபு (கருவாயன்) அறிவிப்புப் பதிவில் காட்சிப்படுத்தியிருக்கும் படங்கள் சிறந்த உதாரணங்கள்.] முக்கிய தருணங்களில் continous mode போடுவது ஒரு நொடியின் பாதியில் ஓர் அரிய உணர்வை சிறைப்படுத்தும் வாய்ப்பைத் தரலாம். இங்கே ஒரு பிறந்தநாள் நிகழ்வின் சில படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் என்றாலும் உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை:)!

#3

வெள்ளி, 18 அக்டோபர், 2013

"மறக்கவே முடியாத ஜெயிண்ட் வீல்..." - சுகா

நெல்லை பொருட்காட்சி குறித்த எனது பதிவில்.. மலரும் நினைவுகளாக சுகா அவர்கள் பகிர்ந்து கொண்டது, நீங்களும் இரசிக்க இங்கே:

பொருட்காட்சி சீஸனும், குற்றால சீஸனும் ஒண்ணு போல வர்றதால காத்துல தலைமுடி கலையும். நம்ம ஊரு பாஷைல ஒலையும்.அதனால எப்பவுமே கைவசம் சீப்பு இருக்கும்.

‘தலைய சீவுல. இன்னைக்கு நெறய பிள்ளேள் வந்திருக்கு’.

உள்ளே நுழையும் போதே குஞ்சு சொல்லுவான்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

நெல்லை காந்திமதி - சொல்வனத்தில் படங்கள் - ஒரு பகிர்வு

# 1

நெல்லையப்பர் கோவிலில் அம்மை அப்பனை தரிசித்து விட்டு வரும் போது மூன்றாம் சுற்று பிரகாரத்தின் முடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கக் காத்திருப்பவள் ஆனை காந்திமதி. கழுத்தில் சர மணி மாலை, ஒரு குழந்தைக்குத் திலகமிடுவது போல் பார்த்துப் பார்த்து ரசனையுடன் நெற்றி, காதுகள், தும்பிக்கையில் இடப்பட்டத் திலகங்களுடன் காட்சி அளிப்பவளை ரசிக்காதவர் இருக்க முடியாது. இவளின் வருகைக்கு முன்னர் கோவிலுக்குச் சின்னக் குட்டியாகக் கிடைத்த நயினார் யானையைப் பற்றி அறிவீர்களா? அது குறித்து சுவைபடச் சொல்லியிருக்கிறார் தொடர்ந்து நெல்லையைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் தன் எழுத்தின் மூலமாக ஆவணப்படுத்தி வரும் ‘மூங்கில் மூச்சு’ சுகா அவர்கள் தனது ‘நயினார்’ கட்டுரையில், 1 பிப்ரவரி 2012 சொல்வனம் இணைய இதழில். அதே கட்டுரை வேணுவனத்திலும். படித்துப் பாருங்கள். அதில் யானை காந்திமதியைப் பற்றியதான பகிர்வுக்கு நான் எடுத்த (இப்பதிவின் முதலிரண்டு) படங்கள் உபயோகிப்பட்டுள்ளன. சொல்வனத்துக்கும் சுகா அவர்களுக்கும் நன்றி.

# 2

இப்போதைய காந்திமதி உலகின் சாதுவான யானைகளில் ஒன்றாக மக்களால் கொண்டாடப்படுவது பற்றியும், கொடுக்கப்படும் அன்பான கவனிப்பைக் காரணமாகச் சொல்வதையும் ஏற்கனவே 2010-ல் ‘இறையும் கலையும் - நெல்லைப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்’ பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

# 3
இம்மூன்று படங்கள் போக ‘நயினார்’ கட்டுரையை வாசித்த பின் மேலும் என் ஆல்பத்தில் தேடிய போது கிடைத்த படங்கள் சிலவற்றையும் பகிர விருப்பம். “ குட்டி நயினாருடன் குட்டிப் பாகனாக இருந்த, பெரிய யானைப் பாகனின் மகன்” எனக் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும், ‘காந்திமதி’யின் இப்போதையப் பாகன் இவரே:
# 4


நமக்கு மட்டும்தான் பாஸ்போர்ட் சைஸில் ப்ரொஃபைல் படம் அவசியமா? காந்திமதிக்கும் இருந்தால் அழகுதானே?
# 5

மேலும் ஒரு படமாகக் கோவில் தெப்பக்குளத்தின் பச்சை நீரில் காந்திமதி அம்மன் கோபுரமும் மணிமண்டபமும் பிரதிபலிக்கும் காட்சி. உச்சி நேரத்தில் எடுத்தபடியால் வானம் சற்று வெளுப்பாகி விட்டிருந்தாலும் பகிர்ந்து கொண்டு விட்டேன்:)!

# 6
***

வியாழன், 31 மார்ச், 2011

ஆனந்த விகடனில் சுகாவின் ‘மூங்கில் மூச்சு’ - ஒரு பகிர்வு

லகமெங்கும் விரவி ஊரின் நினைவோடு வாழும் திருநெல்வேலிக்காரர்கள் அனைவரும் கடந்த 12 வாரங்களாக ஆனந்த விகடன் கைக்குக் கிடைத்ததுமே முதலில் வாசிப்பது ‘மூங்கில் மூச்சாகவே’ இருக்கக் கூடும் என்பது என் அனுமானம்.

சில அத்தியாயங்கள் அப்படியே நம்மை எண்பதுகளின் காலக் கட்டதுக்குக் கொண்டு செல்லுபவையாக இருக்க, அதில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அறிந்தவர்களாகவோ அல்லது அறிந்தவர்களுடன் தொன்னூறு சதவிகிதம் ஒப்பிடும்படியாகவோ சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள்.ஹை லைட்டாக அமைந்து தொடரை மேலும் நெருக்கமாக உணரச் செய்கிறது நெல்லைப் பேச்சுத் தமிழ்.

இழையோடும் நகைச்சுவையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் வாசிக்கையில் அடக்க முடியாமல் சிரிப்பார் கணவர். அவருக்கும் நெல்லைதான். அப்படி என்னதான் என அடுத்து வாசிக்கையில் அடக்க முடியாது எனக்கும் சிரிப்பை!

தொடர் நிறைவுற்றுத் தொகுப்பாக வெளிவரக் காத்திருக்கிறேன்..

தவறவிட்டவர்கள் இனித் தொடருங்கள் ஆனந்த விகடனில்..

ழுத்தாளர் சுகாவுக்கு ஒரு வலைப்பூவும் இருப்பது சமீபத்தில் நண்பர்களின் buzz மூலமாக அறிய வந்தேன். வேணுவனம் அதன் பெயர். இதுவும் நெல்லைக்காரர்களுக்காக மட்டுமின்றி எல்லோருக்குமான தகவல்:)!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin