ஞாயிறு, 31 மே, 2026

தன்னை மறக்கும் தருணம்

 #1. 

'கனிவோடு பார்க்கும் கண்களுக்கு, 
ஆசீர்வாதங்கள் எங்கும் புலப்படும்.'


#2.
'வலிமை குறையும் போது, 
நம்பிக்கை நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் 
ஒரு அமைதியான பிரார்த்தனையாக மாறுகிறது.'

#3.
'படைப்பில் ஆன்மா தன்னை மறக்கும் போது,
கலை ஒரு தியானமாக மாறுகிறது.'

#4
'மூவர்ணக் கொடியின் ஒவ்வொரு நிறத்திலும் 
தியாகமும் துணிவும் நிறைந்த 
ஒரு கதை வாழ்கிறது.'
(2025 சுதந்திர தினத்தன்று 
ஃப்ளிக்கரில் பதிந்த படம்)
#5
'கவலைப்படுவதை நிறுத்தும்போது, 
தீர்வுகள் வளர இடம் திறக்கிறது.'

#6
'இசை, 
தெய்வீக நறுமணத்தை மனித மனங்களில் பரப்பும் 
ஓர் அலையாக விளங்குகிறது.'


#7
ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியாது என்று அவளிடம் கூறுவது, 
அவளால் என்ன செய்ய முடியும் என்பதை அவளுக்கே உணர்த்துவதாகும்.’


#8
“எதையும் அவசரப்படுத்தாதீர்கள். 
சரியான நேரம் வரும்போது, 
அது தானாகவே நடைபெறும்.”

**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் 
தொகுப்பது தொடர்கிறது.]
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin