Friday, July 16, 2010

மொட்டு ஒண்ணு.. மெல்ல மெல்ல..

மொட்டு ஒண்ணு..



மெல்ல மெல்ல..



விரிந்து..


மலர்ந்து..
சிரிக்கிறது அழகாய்.. மூவண்ண மலராய்..
கொஞ்சும் மஞ்சளை
மிஞ்சும் சிகப்பை
மிதமாய் வருடிடும் வெள்ளை..

இளங்காற்றினில்
இதமாய் ஆடும் இலைகளின் நடுவே
எழிலாய் அசைந்து
மனதை அடிக்குது கொள்ளை!
*********


[மொட்டு விரியத் தொடங்கிய கணத்திலிருந்து ஓரிரு மணிக்குள் முழுதாய் மலர்ந்து விடுவது இம்மலரின் விசேஷம்.]

கண்ணுக்கு விருந்து வைத்துக் கையசைத்து விடைபெறுகிறேன்.
சிலவாரகால இடைவெளிக்குப் பிறகு சந்திப்போமா:)?

105 comments:

தமிழ் பிரியன் said...

ரொம்ப அக்கறையா எடுத்து இருக்கீங்களே... :)
நல்லவிதமா போய்ட்டு சீக்கிரமா வாங்க..:)

தெய்வசுகந்தி said...

Wow Super pics!!!!!!!!!!!

VELU.G said...

அழகாயிருக்குங்க

மோகன் குமார் said...

Fantastic!! Excellent!! Very good creative thought!!

ஆயில்யன் said...

அழகாய் இருக்கு !


எடுக்க நேர்ந்த கணங்கள் எத்தனை மணி துளிகள் ? :)


அந்த சிவப்பு மகரந்தம் ஒரு தனி போட்டோவாக #நேயர் விருப்பம் :)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அடடா! என்ன அழகு! நீங்க ரொம்ப அழகா போட்டோ எடுக்கிறீங்க மேடம்!

அமுதா said...

அழகு.... பொறுமையாக எடுத்து பகிர்ந்ததற்கு நன்றி. ஊருக்கா? சீக்கிரம் வாங்க... முத்துச்சரத்தில் நல்முத்துக்கள் தொடுத்துக்கொண்டே இருக்க...

goma said...

சூப்பர் படப்பிடிப்பு.குழந்தை ஒன்றின் முதல் நடை எடுத்து வைத்த ,காட்சி போல் ரசித்தேன்

ஈரோடு கதிர் said...

கலக்கல்
அசத்தல்

ம்ம்ம்ம்.. மனுசங்களுக்கு இவ்வ்வ்வ்வளவு பொறுமை வேணுமே

அமைதிச்சாரல் said...

கலர்ஃபுல்லாவும் சூப்பராவும் இருக்குங்க..

அம்பிகா said...

அருமை.., அழகு...

எம்.ரிஷான் ஷெரீப் said...

மிக அழகு சகோதரி.
பொறுமைக்கும், திறமைக்கும் எனது பாராட்டுக்கள்.

இடைவெளியா? எங்கே போகிறீர்கள்?

தமிழ் உதயம் said...

அழகு...அழகு...

ப்ரியமுடன் வசந்த் said...

மேலிருந்து ஐந்தாவது படம் நான் எடுத்துகிட்டேன் கொள்ளையழகு..

ஓய்வு மன நிம்மதியை தருவதாய் இருக்கட்டும்...

மதுரை சரவணன் said...

சூப்பர். வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

நான் ரொம்ப பொங்கி ஒரு பின்னூட்டம் போட்டேன். ரிலீஸ் பண்ணும் நேரம் கரண்ட் போயிடுச்சு. அதை திரும்பி நியாபகம் வச்சு அடிக்க முடியலை. சுறுக்கமா "நல்லா இருந்துச்சு"ன்னு வச்சுகுங்க:-))

sury said...

மொட்டு ஒண்ணு
மலருது மலருது
மெதுவாய் மெதுவாய்
மணமும் பரவுது

வண்ண வண்ண
வண்டுகள் வந்து
ரதி இவள் தானோ என‌
ராகம் பாடுது.

சுப்பு ரத்தினம்.

பா.ராஜாராம் said...

fantasic sagaa!

சின்ன அம்மிணி said...

சூப்பர் படங்கள் ராமலஷ்மி

ஸ்ரீராம். said...

ஒரு புஷ்பம் மலர்ந்தது... என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. படங்கள் அழகோ அழகு. எவ்வளவு படங்கள் எடுத்தீர்கள். எப்படிப் பொறுமையாய் காத்திருந்தீர்கள்? அந்த அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே...

கண்ணகி said...

அழகோவியம்...

அமைதி அப்பா said...

பொறுமையின் சின்னம், தாங்கள்தான் போலும். மிகவும் மகிழ்ச்சியான உணர்வைத் தூண்டும் படங்கள். நன்றி.

//கண்ணுக்கு விருந்து வைத்துக் கையசைத்து விடைபெறுகிறேன்.சிலவாரகால இடைவெளிக்குப் பிறகு சந்திப்போமா:)?//

அந்த கேள்விக்குறி தவறுதலாக விழுந்ததுதானே?

ஆ.ஞானசேகரன் said...

//கண்ணுக்கு விருந்து வைத்துக் கையசைத்து விடைபெறுகிறேன்.
சிலவாரகால இடைவெளிக்குப் பிறகு சந்திப்போமா:)? ///


nice.....

நல்லவிதமா போய்ட்டு சீக்கிரமா வாங்க..:)

க.பாலாசி said...

எல்லாப்படமும் அழகாயிருக்குங்க... அந்த நீட்சிகளை பார்ப்பதற்கு எவ்ளோ அழகாயிருக்கு... அருமைங்க...

சந்தனமுல்லை said...

Take care and come back soon. we will miss your colorful posts! :-)

சந்தனமுல்லை said...

செம சூப்பர்! பூ பூக்கும் ஓசையை கேட்டீங்களா?! :))

சசிகுமார் said...

ஆகா அருமையான படங்கள், Amazing Work keep it up

கோவை குமரன் said...

இளங்காற்றினில்
இதமாய் ஆடும் இலைகளின் நடுவே
எழிலாய் அசைந்து
மனதை அடிக்குது கொள்ளை!
:))

அன்புடன் அருணா said...

Happy holidays!!

வல்லிசிம்ஹன் said...

மொட்டுகள் எக்காலத்திலும் மலர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த மலருக்கு ராமலக்ஷ்மியின் கைவண்ணம் பட்டிருக்கிறது. அதிக அழகோடு பூத்துவிட்டது.அற்புதமான கவிதை ராமலக்ஷ்மி.வாழ்த்துகள். சில தினக்கள் போதாதா. சில வாரங்கள் போக வேண்டுமா:)

ரசிகன்! said...

ஆர்வம் , அக்கறையோட... பொறுமையும் கூடுதலாவே இருக்கு :)

ஹேமா said...

பக்கத்திலே காத்திருந்து எடுத்திருப்பீங்க போல அதனோட அழகை.அவ்ளோ அழகாயிருக்கு.மீண்டும் சந்திப்போம்.
சுகமாய்ப் போய்ட்டு வாங்க.

Priya said...

wow Great... amazing work!

சே.குமார் said...

அடடா! என்ன அழகு! நீங்க ரொம்ப அழகா போட்டோ எடுக்கிறீங்க மேடம்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை.

சி. கருணாகரசு said...

மிக அருமையா இருக்குங்க....
சின்ன சின்ன சொற்கள் கவிதையாவதுபோல.
..... மகிழ்ச்சியை சுமந்து மீண்டும் வருக.

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன் said...
//ரொம்ப அக்கறையா எடுத்து இருக்கீங்களே... :)//

ஆர்வத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:)!


//நல்லவிதமா போய்ட்டு சீக்கிரமா வாங்க..:)//

நன்றி தமிழ் பிரியன்.

ராமலக்ஷ்மி said...

தெய்வசுகந்தி said...
//Wow Super pics!!!!!!!!!!!//

நன்றி தெய்வசுகந்தி.

ராமலக்ஷ்மி said...

VELU.G said...
//அழகாயிருக்குங்க//

நன்றிங்க வேலு.

ராமலக்ஷ்மி said...

மோகன் குமார் said...
//Fantastic!! Excellent!! Very good creative thought!!//

மிக்க நன்றி மோகன் குமார்.

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் said...
//அழகாய் இருக்கு !

எடுக்க நேர்ந்த கணங்கள் எத்தனை மணி துளிகள் ? :)//

இரு மணி நேரங்களில்..:)! நன்றி ஆயில்யன்.

//அந்த சிவப்பு மகரந்தம் ஒரு தனி போட்டோவாக #நேயர் விருப்பம் :)//

இளங்காற்றில் ஆடிக் கொண்டே இருந்தபடியால் நாலாவது படம் தவிர மற்றதில்(இங்கு பதியாதவையும் சேர்த்து) மகரந்தம் அத்தனை ஷார்ப்பாக வரவில்லை:(! இன்னொரு முறை எடுத்துப் பார்க்கிறேன்:)!

ராமலக்ஷ்மி said...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...
//அடடா! என்ன அழகு! நீங்க ரொம்ப அழகா போட்டோ எடுக்கிறீங்க மேடம்!//

மிக்க நன்றி சாந்தி.

ராமலக்ஷ்மி said...

அமுதா said...
//அழகு.... பொறுமையாக எடுத்து பகிர்ந்ததற்கு நன்றி. ஊருக்கா? சீக்கிரம் வாங்க... முத்துச்சரத்தில் நல்முத்துக்கள் தொடுத்துக்கொண்டே இருக்க...//

சரி அமுதா:)! என் நன்றிகள்.

ராமலக்ஷ்மி said...

goma said...
//சூப்பர் படப்பிடிப்பு.குழந்தை ஒன்றின் முதல் நடை எடுத்து வைத்த ,காட்சி போல் ரசித்தேன்//

உவமை அழகு. நன்றி கோமா.

ராமலக்ஷ்மி said...

அமைதிச்சாரல் said...
//கலர்ஃபுல்லாவும் சூப்பராவும் இருக்குங்க..//

நன்றி அமைதிச்சாரல்.

ராமலக்ஷ்மி said...

ஈரோடு கதிர் said...
//கலக்கல்
அசத்தல்

ம்ம்ம்ம்.. மனுசங்களுக்கு இவ்வ்வ்வ்வளவு பொறுமை வேணுமே//

எனக்கு இருக்கிறது என ஒத்துக் கொள்கிறீர்கள்:)! நன்றி கதிர்.

ராமலக்ஷ்மி said...

அம்பிகா said...
//அருமை.., அழகு...//

நன்றி அம்பிகா.

ராமலக்ஷ்மி said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
//மிக அழகு சகோதரி.
பொறுமைக்கும், திறமைக்கும் எனது பாராட்டுக்கள்.

இடைவெளியா? எங்கே போகிறீர்கள்?//

நன்றி ரிஷான். ஊர்ப்பக்கம் போய்வரலாமென..:)!

ராமலக்ஷ்மி said...

தமிழ் உதயம் said...
//அழகு...அழகு...//

நன்றி தமிழ் உதயம்.

ராமலக்ஷ்மி said...

ப்ரியமுடன் வசந்த் said...
//மேலிருந்து ஐந்தாவது படம் நான் எடுத்துகிட்டேன் கொள்ளையழகு..//

தாராளமாய்:)!

//ஓய்வு மன நிம்மதியை தருவதாய் இருக்கட்டும்...//

மிக்க நன்றி வசந்த்.

ராமலக்ஷ்மி said...

மதுரை சரவணன் said...
//சூப்பர். வாழ்த்துக்கள்.//

நன்றி சரவணன்.

ராமலக்ஷ்மி said...

அபி அப்பா said...
//நான் ரொம்ப பொங்கி ஒரு பின்னூட்டம் போட்டேன். ரிலீஸ் பண்ணும் நேரம் கரண்ட் போயிடுச்சு. அதை திரும்பி நியாபகம் வச்சு அடிக்க முடியலை. சுறுக்கமா "நல்லா இருந்துச்சு"ன்னு வச்சுகுங்க:-))//

அது போதுமே:)! நன்றி அபி அப்பா.

ராமலக்ஷ்மி said...

sury said...
//மொட்டு ஒண்ணு
மலருது மலருது
மெதுவாய் மெதுவாய்
மணமும் பரவுது

வண்ண வண்ண
வண்டுகள் வந்து
ரதி இவள் தானோ என‌
ராகம் பாடுது.

சுப்பு ரத்தினம்.//

மலரின் மணமும்.. வண்டுகளின் ராகமும்.. ஆகா, மிக்க நன்றி சார்.

ராமலக்ஷ்மி said...

பா.ராஜாராம் said...
//fantasic sagaa!//

நன்றி நண்பரே.

ராமலக்ஷ்மி said...

சின்ன அம்மிணி said...
//சூப்பர் படங்கள் ராமலஷ்மி//

நன்றி அம்மிணி.

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...
//ஒரு புஷ்பம் மலர்ந்தது... என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. படங்கள் அழகோ அழகு. எவ்வளவு படங்கள் எடுத்தீர்கள். எப்படிப் பொறுமையாய் காத்திருந்தீர்கள்? அந்த அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே...//

சுமார் இருபது படங்கள் எடுத்திருப்பேன். எடுப்பது மிக சுவாரஸ்யமாய் இருந்தது. ஆனால் அதில் ஒரு ஐந்தினை தேர்வு செய்யதான் நிறைய அவகாசமும் பொறுமையும் தேவைப்பட்டது என்றால் நீங்கள் நம்ப வேண்டும். நன்றி ஸ்ரீராம்.

ராமலக்ஷ்மி said...

கண்ணகி said...
//அழகோவியம்...//

நன்றிகள் கண்ணகி.

ராமலக்ஷ்மி said...

அமைதி அப்பா said...
//பொறுமையின் சின்னம், தாங்கள்தான் போலும். மிகவும் மகிழ்ச்சியான உணர்வைத் தூண்டும் படங்கள். நன்றி. //

நன்றி அமைதி அப்பா.

//அந்த கேள்விக்குறி தவறுதலாக விழுந்ததுதானே?//

தவறுதலாய் என்று சொல்ல முடியாது. சாதாரணமாய் போட்டது. அவ்வளவே:)!

ராமலக்ஷ்மி said...

ஆ.ஞானசேகரன் said...
***/ //கண்ணுக்கு விருந்து வைத்துக் கையசைத்து விடைபெறுகிறேன்.
சிலவாரகால இடைவெளிக்குப் பிறகு சந்திப்போமா:)? ///

nice.....

நல்லவிதமா போய்ட்டு சீக்கிரமா வாங்க..:) /***

நன்றி ஞானசேகரன்:)!

ராமலக்ஷ்மி said...

க.பாலாசி said...
//எல்லாப்படமும் அழகாயிருக்குங்க... அந்த நீட்சிகளை பார்ப்பதற்கு எவ்ளோ அழகாயிருக்கு... அருமைங்க...//

ஆமாம் பாலாசி. மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

சந்தனமுல்லை said...
//செம சூப்பர்! பூ பூக்கும் ஓசையை கேட்டீங்களா?! :))//

கேட்காமலா:)? தலைப்பாக அதைத்தான் முதலில் யோசித்திருந்தேன்.

ராமலக்ஷ்மி said...

சந்தனமுல்லை said...
//Take care and come back soon. we will miss your colorful posts! :-)//

நன்றி முல்லை:)!

ராமலக்ஷ்மி said...

சசிகுமார் said...
//ஆகா அருமையான படங்கள், Amazing Work keep it up//

நன்றி சசிகுமார்.

ராமலக்ஷ்மி said...

கோவை குமரன் said...
***/இளங்காற்றினில்
இதமாய் ஆடும் இலைகளின் நடுவே
எழிலாய் அசைந்து
மனதை அடிக்குது கொள்ளை!
:))//

இல்லையா:)?

முதல் வருகைக்கு நன்றி கோவை குமரன்.

ராமலக்ஷ்மி said...

அன்புடன் அருணா said...
//Happy holidays!!//

நன்றி அருணா.

ராமலக்ஷ்மி said...

வல்லிசிம்ஹன் said...
//மொட்டுகள் எக்காலத்திலும் மலர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த மலருக்கு ராமலக்ஷ்மியின் கைவண்ணம் பட்டிருக்கிறது. அதிக அழகோடு பூத்துவிட்டது.அற்புதமான கவிதை ராமலக்ஷ்மி.வாழ்த்துகள். சில தினக்கள் போதாதா. சில வாரங்கள் போக வேண்டுமா:)//

ரசித்த அழகை மீண்டும் மீண்டும் ரசிக்க காட்சியாக்கி விட்டேன்:)!

வந்துடுறேன் சீக்கிரம். நன்றிகள் வல்லிம்மா.

ராமலக்ஷ்மி said...

ரசிகன்! said...
//ஆர்வம் , அக்கறையோட... பொறுமையும் கூடுதலாவே இருக்கு :)//

நன்றி ரசிகன்:)!

ராமலக்ஷ்மி said...

ஹேமா said...
//பக்கத்திலே காத்திருந்து எடுத்திருப்பீங்க போல அதனோட அழகை.அவ்ளோ அழகாயிருக்கு.மீண்டும் சந்திப்போம்.
சுகமாய்ப் போய்ட்டு வாங்க.//

ஆமாங்க. தொட்டியைச் சுற்றி சுற்றி வந்தும், நல்ல போஸில் எடுக்க தொட்டியையே வசதிக்கு ஏற்ப சுற்றி வைத்தும் எடுத்தாயிற்று:)!

நன்றி ஹேமா.

ராமலக்ஷ்மி said...

Priya said...
//wow Great... amazing work!//

நன்றி பிரியா.

ராமலக்ஷ்மி said...

சே.குமார் said...
//அடடா! என்ன அழகு! நீங்க ரொம்ப அழகா போட்டோ எடுக்கிறீங்க மேடம்!//

நன்றிகள் குமார்.

ராமலக்ஷ்மி said...

புவனேஸ்வரி ராமநாதன் said...
//அருமை.//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனேஸ்வரி.

ராமலக்ஷ்மி said...

சி. கருணாகரசு said...
//மிக அருமையா இருக்குங்க....
சின்ன சின்ன சொற்கள் கவிதையாவதுபோல.
..... மகிழ்ச்சியை சுமந்து மீண்டும் வருக.//

மிக்க நன்றி கருணாகரசு.

ராமலக்ஷ்மி said...

மின்னஞ்சலில்..


Hi Ramalakshmi,

Congrats!

Your story titled 'மொட்டு ஒண்ணு.. மெல்ல மெல்ல..' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th July 2010 05:25:02 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/303832

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழ் மணத்தில் வாக்களித்த 18 பேருக்கும், தமிழிஷில் வாக்களித்த 36 பேருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் சந்திக்கலாம்:)!

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரொம்ப அழகு.

(இதை விட சிரிய மொட்டாக இருந்தால் அதை தின்னலாம், தெரியுமா.?)

சே.குமார் said...

time irunthal enathu valaikku varavum....

http://www.vayalaan.blogspot.com

Gayathri said...

சூப்பரா இருக்கு...எத்தனை அழகா பொறுமையா எடுதுருகீங்க...வாழ்த்துக்கள்...

நேரம் கிடைக்கும் பொழுது என் பதிவு பக்கம் வாங்க...
funaroundus.blogspot.com

V.Radhakrishnan said...

http://www.greatestdreams.com/2010/07/blog-post_19.html, சகோதரி பதிவுலகில் நான் எப்படிபட்டவர் எனும் தொடர்பதிவு எழுத அழைக்கிறேன், நன்றி.

ஜெஸ்வந்தி said...

Super. Beautiful.

உமாஷக்தி said...

Extraordinarily beautiful Ramalakshmi...very nice.

நானானி said...

பொறுமை+ஆர்வம்+கவனம்+நேரம்+தொந்தரவில்லாத சூழ்நிலை=அற்புதமான படைப்பு!!!!

ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

பாத்திமா ஜொஹ்ரா said...

வழக்கம்போல அருமை,அக்கா

கோமதி அரசு said...

ராமலக்ஷ்மி, படங்கள் அருமை.

கண்ணுக்கு விருந்து,மனதுக்கு மகிழ்ச்சி.

சீக்கிரம் வாருங்கள்,நல்ல பதிவுகள் தாருங்கள்.

வாழ்க வளமுடன்.

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப நல்லா இருக்குங்க... சூப்பர்

கவிநா... said...

கண்ணைப்பறிக்கிறது மலரின் கொள்ளை அழகு....

கிரி said...

ராமலக்ஷ்மி மிக நல்ல முன்னேற்றம் உங்கள் படங்களில்... ஆர்வம் இருந்தால் சிறப்பாக பரிணமிக்கலாம் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்.. வாழ்த்துக்கள். படத்தை பற்றி கூற எதுவுமில்லை ஏற்கனவே பலர் கூறி விட்டனர்

மாதேவி said...

அழகிய படம்.

tamilraja said...

அழகோ,அழகு

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அழகான படங்கள் பகிர்வுக்கு நன்றி ராமலெக்ஷ்மி.. அடிக்கடி வர இயலவில்லை.:((

ராமலக்ஷ்மி said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
//ரொம்ப அழகு.

(இதை விட சிரிய மொட்டாக இருந்தால் அதை தின்னலாம், தெரியுமா.?)//

தகவல் புதிது. ஆனாலும் மலர விடவே மனம் விரும்புது:)! நன்றி ஆதி.

ராமலக்ஷ்மி said...

சே.குமார் said...
//time irunthal enathu valaikku varavum....

http://www.vayalaan.blogspot.com//

உங்கள் ‘நெடுங்கவிதைகள்’ வலைப்பூவே எனக்கு அறிமுகம். ‘மனசு’ புதுசு:)! அவசியம் வருகிறேன்.

ராமலக்ஷ்மி said...

Gayathri said...
//சூப்பரா இருக்கு...எத்தனை அழகா பொறுமையா எடுதுருகீங்க...வாழ்த்துக்கள்...

நேரம் கிடைக்கும் பொழுது என் பதிவு பக்கம் வாங்க...
funaroundus.blogspot.com//

நன்றி காயத்ரி. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் வருகிறேன்.

ராமலக்ஷ்மி said...

V.Radhakrishnan said...
//http://www.greatestdreams.com/2010/07/blog-post_19.html, சகோதரி பதிவுலகில் நான் எப்படிபட்டவர் எனும் தொடர்பதிவு எழுத அழைக்கிறேன், நன்றி.//

தொடர்பதிவிலுள்ள பெரும்பாலான கேள்விகளுக்கு ஏற்கனவே எனது ஒருசில பதிவுகளில் [குறிப்பாக 'நன்றி நவிலல்' என வகைப்படுத்தப் பட்டவற்றின் கீழ்] பதில்கள் சொல்லி விட்டுள்ளேன்:)! அழைத்த அன்பிற்கு நன்றி ராதாகிருஷ்ணன்.

ராமலக்ஷ்மி said...

ஜெஸ்வந்தி said...
//Super. Beautiful.//

மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

ராமலக்ஷ்மி said...

உமாஷக்தி said...
//Extraordinarily beautiful Ramalakshmi...very nice.//

வாங்க உமாஷக்தி. மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

நானானி said...
//பொறுமை+ஆர்வம்+கவனம்+நேரம்+தொந்தரவில்லாத சூழ்நிலை=அற்புதமான படைப்பு!!!!

ரொம்ப சந்தோஷமாயிருக்கு.//

நன்றி நானானி:)!

ராமலக்ஷ்மி said...

பாத்திமா ஜொஹ்ரா said...
//வழக்கம்போல அருமை,அக்கா//

நன்றி பாத்திமா.

ராமலக்ஷ்மி said...

கோமதி அரசு said...
//ராமலக்ஷ்மி, படங்கள் அருமை.

கண்ணுக்கு விருந்து,மனதுக்கு மகிழ்ச்சி.

சீக்கிரம் வாருங்கள்,நல்ல பதிவுகள் தாருங்கள்.

வாழ்க வளமுடன்.//

நன்றி கோமதிம்மா. திரும்பி வந்தாயிற்று. பதிவுகள் விரைவில்..:)!

ராமலக்ஷ்மி said...

அப்பாவி தங்கமணி said...
//ரெம்ப நல்லா இருக்குங்க... சூப்பர்//

நன்றி புவனா.

ராமலக்ஷ்மி said...

கவிநா... said...
//கண்ணைப்பறிக்கிறது மலரின் கொள்ளை அழகு....//

அந்த அழகில் மயங்கியதால் பிறந்தவையே இப்படங்கள். நன்றி கவிநா!

ராமலக்ஷ்மி said...

கிரி said...
//ராமலக்ஷ்மி மிக நல்ல முன்னேற்றம் உங்கள் படங்களில்... ஆர்வம் இருந்தால் சிறப்பாக பரிணமிக்கலாம் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்.. வாழ்த்துக்கள். படத்தை பற்றி கூற எதுவுமில்லை ஏற்கனவே பலர் கூறி விட்டனர்//

ஆரம்பத்திலிருந்து என் பிட் மற்றும் புகைப்படப் பதிவுகளைக் கவனித்து வருகிறீர்கள்.நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்:)!ஊக்கம் தரும் வாழ்த்துக்களுக்கு நன்றி கிரி.

ராமலக்ஷ்மி said...

மாதேவி said...
//அழகிய படம்.//

நன்றி மாதேவி.

ராமலக்ஷ்மி said...

tamilraja said...
//அழகோ,அழகு//

நன்றி தமிழ் ராஜா.

ராமலக்ஷ்மி said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...
//மிக அழகான படங்கள் பகிர்வுக்கு நன்றி ராமலெக்ஷ்மி.. அடிக்கடி வர இயலவில்லை.:((//

நன்றி தேனம்மை. வருந்தத் தேவையில்லை. நேரம் அனுமதிக்கையில் வாருங்கள் போதும்:)!

சுசி said...

சந்திக்கலாம் அக்கா..

அழகா, அருமையா எடுத்திருக்கீங்க. கூடவே கவிதையும் அழகு.

ராமலக்ஷ்மி said...

@ சுசி,
நன்றி:)!

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin