செவ்வாய், 18 ஜனவரி, 2011

பயங்கள்


பூனைக்குப் பயந்து
புதருக்குள் ஒளிந்த
எலியினைக் கண்டு
இரக்கம் கொண்டு
புசுபுசுப் பூனையாகிட
வழங்கினார் ஆசியை
வனத்திலிருந்த முனி.

புதுப்பிறவி எடுத்ததுமே
நடுநடுங்கத் தொடங்கியது
நாயினிடம் மாட்டினால்
என்னாவேன் என்று.
இதென்ன வம்பாயிற்று
சரி, போனால் போகட்டுமென்று
நாயாகும் வரம் தந்தார்.

வாலினை மடக்கி
நாலுகால் பாய்ச்சலில்
நாக்குத்தள்ள மூச்சிரைக்க
ஓடலாயிற்று-
எங்கோ தொலைவில்
உலாத்தும் புலிகள்
கண்ணில் பட்டாலே.

இனியாவது துணிவாக
வாழட்டும் கம்பீரமாக-
பொங்கும் கருணையுடன்
புலியாக்கிப் பார்த்துப்
புளங்காகிதம் அடைந்தார்.
'வேடன் பார்த்தால்
வேறு வினையே
வேண்டாம்'
வெருண்டு நின்றது
விலங்கு இப்போது.

‘புலியாகும் புண்ணியம்
கிடைத்தாலும் எலியின்
இதயத்துடனேதான்
இருப்பேன் என்கிறநீ
எலியாகவேதான்
மாறிப் போ!’
வரங்களைத் திரும்ப
வாங்கிக் கொண்டு
தன் தவத்திலே
மூழ்கிப் போனார் முனி.

*** *** ***

படம்: இணையத்திலிருந்து...

62 கருத்துகள்:

  1. கவிதை அருமை.. தமிழ் மணம் விருதுக்கும் அதீதம் கட்டுரைக்கும் வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமையாயிருக்கு.. வெளித்தோற்றங்களை என்னதான் மாற்றிக்கொண்டாலும் அடிப்படைக்குணம் மாறாதுதான் :-))

    பதிலளிநீக்கு
  3. கவிதை மிக கலக்கல்.... விருதுக்கு இங்கேயும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. கவிதை எளிமையா ஒரு தத்துவத்தை ஒளித்து நல்ல நடைபோடுதுங்க.... பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஓ புலியாகியும் எலியா..
    சரியான தீர்ப்பு நாட்டாமை..:)

    பதிலளிநீக்கு
  6. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //கவிதை அருமை.. தமிழ் மணம் விருதுக்கும் அதீதம் கட்டுரைக்கும் வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..//

    மிக்க நன்றி தேனம்மை. சென்னை சங்கமத்தில் கவிபாடி வந்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அமைதிச்சாரல் said...
    //கவிதை அருமையாயிருக்கு.. வெளித்தோற்றங்களை என்னதான் மாற்றிக்கொண்டாலும் அடிப்படைக்குணம் மாறாதுதான் :-))//

    மிக்க நன்றி சாரல். உண்மைதான். ஆனால் வரமாய் வாய்ப்புகள் தேடி வருகையில், வகையாய் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் வானம் பார்த்த பூமியாகவேதான் முடிந்து போகும் வாழ்க்கை! பயங்கள் போகணும்:)! இல்லையெனில் எலியாகவே .. .. என்பதுதான் ‘நாட்டாமை’ தீர்ப்பு முத்துலெட்சுமி சொன்ன மாதிரி:))!

    பதிலளிநீக்கு
  8. சி. கருணாகரசு said...
    //கவிதை மிக கலக்கல்.... விருதுக்கு இங்கேயும் வாழ்த்துக்கள்.//
    //கவிதை எளிமையா ஒரு தத்துவத்தை ஒளித்து நல்ல நடைபோடுதுங்க.... பாராட்டுக்கள்.//

    நன்றிகள் கருணாகரசு:)!

    பதிலளிநீக்கு
  9. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //ஓ புலியாகியும் எலியா..
    சரியான தீர்ப்பு நாட்டாமை..:)//

    நல்லவேளை ‘நாட்டாமை, தீர்ப்பை மாத்து’ என்று சொல்லவில்லை. பிழைத்தேன். நன்றி முத்துலெட்சுமி:)!

    பதிலளிநீக்கு
  10. கவிதை தந்த அருமையான நீதி... மனமிருந்தால்
    எலி புலியாக வாழலாம். புலியே எலியாகவும் வாழலாம்.

    பதிலளிநீக்கு
  11. பா.ராஜாராம் said...
    //survival of the fittest, சகா!

    good!//

    இரத்தினச் சுருக்கம், உங்கள் கவிதைகளைப் போல:)! நன்றி பா ரா.

    பதிலளிநீக்கு
  12. தமிழ் உதயம் said...
    //கவிதை தந்த அருமையான நீதி... மனமிருந்தால்
    எலி புலியாக வாழலாம். புலியே எலியாகவும் வாழலாம்.//

    கருத்துக்கு மிக்க நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  13. கவிதை அருமை.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. //‘புலியாகும் புண்ணியம்
    கிடைத்தாலும் எலியின்
    இதயத்துடனேதான்
    இருப்பேன் என்கிறநீ
    எலியாகவேதான்
    மாறிப் போ!//அழகான வார்த்தைக் கோவை கோர்த்த அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  15. படமும் கவிதையும் வெகு பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  16. இதே போல ஒரு கதை கேள்வி பட்டிருக்கேனே! அதை மிக சுருக்கமாக கவிதை ஆக்கி உள்ளீர்கள் !

    பதிலளிநீக்கு
  17. படமும், கவிதையும் ரொம்ப நன்னா இருக்கு.

    பதிலளிநீக்கு
  18. கதையை அருமையான கவிதையாகப் படைத்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  19. கவிதை அருமை.. தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  20. ஆயிஷா said...
    //கவிதை அருமை.வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி ஆயிஷா.

    பதிலளிநீக்கு
  21. ஸாதிகா said...
    //அழகான வார்த்தைக் கோவை கோர்த்த அருமையான கவிதை//

    நன்றிகள் ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  22. கனாக்காதலன் said...
    //க(வி)தை அருமை.//

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  23. Chitra said...
    //படமும் கவிதையும் வெகு பொருத்தம்.//

    நன்றிகள் சித்ரா:)!

    பதிலளிநீக்கு
  24. மோகன் குமார் said...
    //இதே போல ஒரு கதை கேள்வி பட்டிருக்கேனே! அதை மிக சுருக்கமாக கவிதை ஆக்கி உள்ளீர்கள் !//

    ஒருகதை இல்லைங்க. இது போல பல உண்டு. அதில் ஒரு வடிவம்:)! நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  25. Lakshmi said...
    //படமும், கவிதையும் ரொம்ப நன்னா இருக்கு.//

    மிக்க நன்றி லக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  26. அமுதா said...
    //கதையை அருமையான கவிதையாகப் படைத்துள்ளீர்கள்//

    நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  27. அன்புடன் அருணா said...
    //அசத்துங்க!பூங்கொத்து!//

    மிக்க நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  28. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //கவிதை அருமை//

    நன்றிகள் டி வி ஆர் சார்!

    பதிலளிநீக்கு
  29. அம்பிகா said...
    //கவிதை அருமை.. தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..//

    மிக்க நன்றி அம்பிகா:)!

    பதிலளிநீக்கு
  30. கவிதை அருமை சகோ

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  31. எலியை எந்த ஒரு விலங்காக மாற்றினாலும், அது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று "பயந்த முனிவர்" எலியாகவே இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுவிட்டாரா! :)

    நல்லாயிருக்குங்க, கவிதை, ராமலக்ஷ்மி! :)

    பதிலளிநீக்கு
  32. கதையாய் ஒரு கவிதை.
    நல்லாயிருக்கு அக்கா !

    பதிலளிநீக்கு
  33. kavithaikal muththuch saram, padiththu makilnthen, arumai, vaalththukkal raamalakshmi.

    பதிலளிநீக்கு
  34. கதையை அழகான கவிதையாக வடித்து விட்டதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    படம் அருமை.

    பதிலளிநீக்கு
  35. எலியைக் கொண்டு வாழ்க்கையை எளிமையாகப் புரிய வைத்தமைக்கு
    எனது நன்றி!

    பதிலளிநீக்கு
  36. விஜய் said...
    //கவிதை அருமை சகோ

    வாழ்த்துக்கள்//

    நன்றிகள் விஜய்.

    பதிலளிநீக்கு
  37. வருண் said...
    //எலியை எந்த ஒரு விலங்காக மாற்றினாலும், அது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று "பயந்த முனிவர்" எலியாகவே இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுவிட்டாரா! :)

    நல்லாயிருக்குங்க, கவிதை, ராமலக்ஷ்மி! :)//

    உங்கள் பார்வை பிடித்துள்ளது:))! நன்றிகள் வருண்.

    பதிலளிநீக்கு
  38. ஹேமா said...
    //கதையாய் ஒரு கவிதை.
    நல்லாயிருக்கு அக்கா !//

    நன்றிகள் ஹேமா.

    பதிலளிநீக்கு
  39. ஹேமா said...
    //கதையாய் ஒரு கவிதை.
    நல்லாயிருக்கு அக்கா !//

    நன்றிகள் ஹேமா.

    பதிலளிநீக்கு
  40. கோநா said...
    //kavithaikal muththuch saram, padiththu makilnthen, arumai, vaalththukkal raamalakshmi.//

    மிக்க நன்றி, முதல் வருகைக்கும்!

    பதிலளிநீக்கு
  41. கோமதி அரசு said...
    //கதையை அழகான கவிதையாக வடித்து விட்டதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    படம் அருமை.//

    நன்றி கோமதிம்மா. பொருத்தமாகக் கிடைத்தது இணையத்தில்:)!

    பதிலளிநீக்கு
  42. அமைதி அப்பா said...
    //எலியைக் கொண்டு வாழ்க்கையை எளிமையாகப் புரிய வைத்தமைக்கு
    எனது நன்றி!//

    மிக்க நன்றி அமைதி அப்பா:)!

    பதிலளிநீக்கு
  43. சே.குமார் said...
    //கவிதை கலக்கல்.//

    மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  44. இன்ட்லியில் வாக்களித்த 21 பேருக்கும், தமிழ்மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  45. படித்த கதைதான் எனினும் உங்கள் கைவிரல் ஸ்பரிசத்தில், அழகிய கவிதையாகிவிட்டது அக்கா....

    தமிழ்மணம் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அக்கா....

    பதிலளிநீக்கு
  46. @ கவிநா,
    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  47. இதிலிருந்து நாம் கற்ற பாடம் என்ன ?
    எப்பொழுதும் எலிமையாக இருப்பதே நன்று
    சரிதானே ?

    பதிலளிநீக்கு
  48. @ கோமா,

    ஆமாங்க, பார்வைகளும் பாடங்களும் வந்து கொண்டே இருக்கும் இம்மாதிரியான கதைகளில். எலிமையான உருவத்திலேயே வலிமையாவும் வெளிப்படலாம். இதுவும் சரிதானே:)?

    பதிலளிநீக்கு
  49. நன்று.
    புலி வேடத்தில் எலியாகவும், எலி வேடத்தில் புலியாகவும் இருந்தால்தான் பிரச்சனை :-)

    பதிலளிநீக்கு
  50. @ உழவன்,
    நன்றி! நீங்கள் சொல்வது ரொம்பச் சரி:))!

    பதிலளிநீக்கு
  51. கவிதை மிக கலக்கல்.... விருதுக்கு இங்கேயும் வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  52. @ ஜெஸ்வந்தி,
    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஜெஸ்வந்தி:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin