ஞாயிறு, 10 ஜூலை, 2016

நிற்க அதற்குத் தக

மழலைப் பூக்கள்.. (பாகம் 9)

#1 ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’
Flickr explore பக்கத்தில் தேர்வாகி
5700+ பார்வையாளர்களையும், 147 விருப்பங்களையும்
பெற்றிருக்கும் படம்:)!

https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/26883492464/

#2 ‘கற்க கசடற கற்றபின்
 நிற்க அதற்குத் தக'
#3 கண்ணுக்கு மை அழகு..

வெள்ளி, 1 ஜூலை, 2016

நீங்கள் நீங்களாக..

# 1
எப்போதும் நினைவில் இருக்கட்டும், மற்ற எல்லோரையும் போன்று நீங்களும் தனித்துவமானவரே. 
Margaret Mead 

#2
“சில நேரங்களில் சின்னச் சின்ன ஆசைகளே வாழ்வில் அதிமுக்கியமானதாகின்றன.”

# 3
எதிர்காலத்தை உங்கள் வருத்தங்கள் அன்றி, உங்கள் நம்பிக்கைகள் வடிவமைக்கட்டும். 
_ Robert H. Schuller

புதன், 29 ஜூன், 2016

கண்கள் பேசுமா.. - கேமரா தினம்

னிதர்களை.. குறிப்பாக Candid படங்கள் எடுக்கும் போது, கண்களின் தொடர்ப்பு கிடைத்து விட்டால் கேமராவுக்கு உற்சாகம். அவர்களுக்குத் தெரியாமல்.. அல்லது தெரிந்தாலும் கேமராவைப் பார்க்க விருப்பமின்றி தங்கள் வேலையைத் தொடருகையில்.. எடுக்கிற படங்கள் இயல்பாக அமையும்தான். ஆனால் நேருக்கு நேரோ அல்லது ஓரக் கண்ணாலோ கேமராவைப் பார்த்து விட்டால் படங்களுக்கு உயிரோட்டம்  கூடுவதை மறுக்க முடியாது. போனால் போகட்டுமெனப் பார்வையோடு நமக்கொரு புன்னகையையும் பரிசளித்து விட்டால்..? அடடா.. கேட்கவே வேண்டாம். உண்மையா இல்லையா என நீங்களே சொல்லுங்கள்....


#1
பொக்கை வாய்ப் புன்னகையும் 
கண்களில் கடலெனப் பொங்கும் கனிவுமாய்..

#2
மனதின் உறுதி கண்களில் ஒளியாய்..


#3
முருகனடியார்

செவ்வாய், 17 மே, 2016

கோடை தா(க்)கம் - கல்கி கேலரியில்..



சூரியன் சுட்டெரித்தாலும், வியர்வை ஆறாக ஊற்றெடுத்தாலும் கோடையில் சும்மா இருப்பதில்லை புகைப்படக் கலைஞர்கள். சூரிய உதயம், அஸ்தமன வானம், லாண்ட்ஸ்கேப், இளங்காலை அல்லது பின் மாலை வெளிச்சத்தில் எடுக்க முடிகிற போர்ட்ரெயிட் படங்கள் இவற்றை எடுக்க உகந்த காலமென கோடைக்கான காத்திருப்புடனேதான் இருப்பார்கள். விடுமுறைப் பயணங்களும் பெரும்பாலும் கோடையிலேயே அமைந்து போகின்றன. எத்தனையோ விதப் படங்களை எடுக்கும் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் அத்தனையையும் பின்னுக்குத் தள்ளி விட்டு கவனத்தை ஈர்க்கிறது தாங்க முடியாத வெப்பமும் தண்ணீருக்கான தவிப்பும்.  மனிதன் மட்டுமா? விலங்குகளும் பறவைகளும் கூட தாகத்துக்கு விதிவிலக்கல்ல. 

ஜாம்ஜெட்பூர் ஜூப்ளி பூங்கா மற்றும் மைசூர் ஜூ, பெங்களூர், தமிழகத்தில் திருச்செந்தூர், முக்கூடலில் கண்ட சில கோடைக் காட்சிகளையே நீங்கள் கல்கியில் பார்க்கிறீர்கள். 

நன்றி கல்கி!

கல்கியில் வெளியாகியுள்ள படங்கள் தனித் தனியாகவும், கூடவே சிலவும் இங்கே..! கோடைத் தாக்கம் குறித்தும் பார்ப்போம்.

#1


#2

ஞாயிறு, 1 மே, 2016

மே தினம் : “பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே..”

உண்ணும் உணவிலிருந்து பயணிக்கும் பாதை, அணியும் ஆடை என அனுபவிக்கும் அத்தனை பொருட்களுக்குப் பின்னாலும் எத்தனை பேரின் உழைப்பு உள்ளது! கடந்த ஒரு வருடத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் படமாக்கிய உழைப்பாளர்களின் படங்கள்:

டாடா நகர் இரயில் நிலையத்தில்...
#1

#2
#3

#4

கொல்கத்தாவில்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin