ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மார்னிங் க்ளோரி - படிப்படியாக மலர்கின்ற அழகு

#1


Convolvulaceae குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பளீர் வண்ண மலரின் தாவரவியல் பெயர்: Ipomea horsfalliae. கரீபியன் மற்றும் பிரேசிலை பூர்வீகமாகக் கொண்டது.   Lady Doorly's Morning Glory, Cardinal Creeper, and Prince Kuhio Vine (இளவரசர் தன் தோட்டத்தில் விரும்பி விளைவித்ததால்) என்றெல்லாமும் அழைக்கப்படுகிற இம்மலர் இளம்மொட்டுப் பருவத்திலிருந்து விரிகின்ற அழகைக் காட்சியாகத் தருகிறேன் இப்பதிவில்:

#2


இள மொட்டுகள்  ஓரங்குலத்திலும், விரியும் பருவத்தில் பூவின் நிறத்துக்கு மாறி இரண்டு அங்குல அளவிலுமாக இருக்கின்றன.


#3


#4

இப்படி மடிப்பாக விரிந்து பின் முழுதாக மலருகையில் மெஜந்தா வண்ணம் கண்ணைக் பறிக்கிறது:)!

#5

கொடியின் படம் மலரின் அளவு குறித்துப் புரிந்து கொள்ள உதவக் கூடும்.

#6

தமிழில் இதன் பெயர் என்னவெனத் தெரிந்தவர்கள் பகிர்ந்திடலாம். இதே வடிவிலான சிகப்பு மலரை Cardinal Vine (தமிழில் ‘மயில் மாணிக்கம்’) என்கிறார்கள். Cardinal Creeper, Cardinal Vine இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்கிறார் Mr. Wiki(pedia)!
***


35 கருத்துகள்:

  1. மொட்டுக்களிலிருந்து பூக்கள் மலர்வதுவரை அருமையான படங்கள்.

    தமிழ்பெயர் தெரியாது.

    மயில் மாணிக்கம் தெரியும். இலைகள் தும்பு தும்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான படங்கள்.... ஒவ்வொரு நிலையாக படம் எடுத்து பகிர்ந்திருப்பது அழகு.. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. செம்பருத்தி பூவே உங்க
    செக்கச்சிகப்பு நிறத்திலே - நான்
    சித்தம் மயங்கி நின்னேனே ....
    மத்த எல்லாம் மறந்தேனே ...

    மென்மையை நின் அழகை நான் என்ன சொல்ல !
    மெய்யோ நீ மன்மதனை மயக்கி நின்ற‌
    ரதியோ ? ரம்பையோ ? கண்ணனின் குழலில் கரைந்த‌
    ராதையோ !! இல்லை ! முழு மதியோ !!

    ராம இலக்குமியின்
    ரசனைக்கோர் எல்லையுண்டோ !
    இயற்கையின் எழிலிது இதனை
    இசையுடன் தொடுத்துத் தருவேன்.

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  4. அருமை. எவ்வளவு நேரம் ஆனது இந்த படங்கள் எடுக்க? வேண்டாம் என்று ஒதுக்கிய படங்கள் எவ்வளவு?

    பதிலளிநீக்கு
  5. படிப்படியான அழகான் புகைப்படங்கள்...

    பதிலளிநீக்கு
  6. அழகிய மலர்களின் அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் கலைக்கண் வழி இம்மலரின் மகரந்தம் என்னைத் தொட நீள்கிறது

    பதிலளிநீக்கு
  8. பூக்கள் அனைத்தும் மனதுக்கு இதம்...!

    பதிலளிநீக்கு
  9. //ஸ்ரீராம். said...
    அருமை. எவ்வளவு நேரம் ஆனது இந்த படங்கள் எடுக்க? வேண்டாம் என்று ஒதுக்கிய படங்கள் எவ்வளவு?//

    ரிப்பீட்டு!!

    பதிலளிநீக்கு
  10. கண்களுக்கு விருந்து. வண்ணமும், வண்ன மலரின் வளர்ந்து மலர் தரவேண்டுமெனும் தன் முனைப்பும் வாழ்க்கைக்கான வாழவேண்டும் என்னும் தன்முனைப்பையும் தருகிறது.

    பொறுமையா ஒவ்வொரு கட்டமாக படங்களைப் பதிவு செய்திருக்கிறீங்க ராமலக்‌ஷ்மி.

    பதிலளிநீக்கு
  11. தூள்.. :-))

    பூவோட கலர் ரொம்ப அழகு. இது மயில் மாணிக்கம் இல்லை. அதோட பூவும் இந்தக்கலர்லதான் இருக்கும், ஆனா இது வேற அது வேற. அதோட இலைகள் மாதேவி சொன்ன மாதிரி பிரிபிரியா இருக்கும். அல்லாம அது படரக்கூடியது.

    பதிலளிநீக்கு
  12. எல்லாமே ரொம்ப அழகா இருக்குங்க. ரோஷ்ணியும் பார்த்து விட்டு சொன்னாள்.

    மயில் மாணிக்கம் நானும் பார்த்திருக்கிறேன். இலைகள் சிறிதாக வேறு மாதிரி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. @மாதேவி,

    நன்றி மாதேவி. ஆம், மயில் மாணிக்கம் சிகப்பு வண்ணம். இலைகளும் புல் போல. இதன் பெயர்தான் தமிழில் என்னவெனத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  14. @sury Siva,

    உடனடியாகப் பதிவு செய்து அனுப்பி வைத்த இசைவிருந்தை இரசித்தேன்:)! மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  15. @ஸ்ரீராம்.,
    படங்கள் ஒன்றும் மூன்றுமே முதலில் எடுத்து ஃப்ளிக்கரில் பகிர்ந்தேன். என்ன மலர் என நண்பர் கேட்ட கேள்வியைத் தொடர்ந்து விவரங்களைத் தேடித் தெரிந்து கொண்டு அடுத்த தினம் சென்று படமாக்கியவை மற்றவை:)!

    முதல் நாளில் சுமார் அரை மணிநேரம் பிற வகை மலர்களையும் படமாக்கியதில் இந்தக் கொடி அருகே 3 நிமிடங்கள் இருந்திருப்பேன். ஒதுக்கியவை நான்கைந்து. அடுத்த படப்பிடிப்புக்கு நிமிடங்கள் 5; ஒதுக்கியவை இரண்டு.

    நன்றி ஸ்ரீராம்:)!



    பதிலளிநீக்கு
  16. @ஹுஸைனம்மா,
    ஒரே நாளில் காத்திருந்து அதே மொட்டு விரிவதை எடுக்கவில்லை:)! ஒரே கொடியிலிருந்து வெவ்வேறு பருவத்திலிருந்தவற்றைக் காட்சிப் படுத்தியிருக்கிறேன்.

    ஆனால் அப்படிக் காத்திருந்து (இரண்டு மணிநேரம்) எடுத்த ஒரு பதிவு ஒன்று இங்கே: மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல..

    நேரம் கிடைத்தால் பாருங்கள்:)!

    நன்றி ஹுஸைனம்மா!

    பதிலளிநீக்கு
  17. @மதுமிதா,

    உண்மைதான். இயற்கையிடம் கற்றிட எத்தனை உள்ளது.

    நன்றி மதுமிதா.

    பதிலளிநீக்கு
  18. @அமைதிச்சாரல்,

    நன்றி சாந்தி:)!

    மயில் மாணிக்கம் வேறு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை என்றாலும் அதன் வண்ணம் நல்ல சிகப்பு என்பதும், வடிவம் மட்டும் இதே போல் இருப்பதும் இணையத்தில் கிடைத்த படங்கள் மூலமாக அறிய முடிகிறது.

    பதிலளிநீக்கு
  19. @கோவை2தில்லி,

    ரோஷ்ணியும் ரசித்ததில் மகிழ்ச்சி:)! ஆம், மயில் மாணிக்கத்தின் இலைகள் புல் போல இருக்குமென ஃப்ளிக்கரில் தோழி சொன்னதைத் தொடர்ந்தே அதற்கும் கார்டினல் க்ரீப்பருக்குமான வேறுபாடு தெரிய கொடியையும் படமாக்கினேன்.

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  20. அப்டியே மயில் மாணிக்கம் பூப் போலவே இருக்கு அக்கா.. கொள்ளை அழகோட படம் எடுத்திருக்கிங்க :))

    பதிலளிநீக்கு
  21. ரசனை நிரம்பிய அழகான பகிர்வுகள் ...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin