புதன், 22 மே, 2013

மெய்யெனப்படுவது.. - கீற்று மின்னிதழில்..


சலனமற்ற நீரில் தெரியும்
பிரதிபலிப்புகளாகவும்
நிஜமென்று மயங்க வைக்கும்
பிம்பங்களாகவும்
காண்கின்ற யாவும்.

வாய் எழுப்பும் ஒலிகளாலும்
கட்டமைத்த உருவகங்களாலும்
உருவாகிக் கிடக்கிற இவ்வுலகின்
எத்திக்கிலும்
சொற்களின் விளையாட்டு
மொழிகளின் இராஜ்ஜியம்.

அவை அற்றுப்போகிற
சிறு இடைவெளியில்
வீழநேரும்
இருள் சூழ்ந்த
மெளனப் பள்ளத்தாக்கில்..
அபூர்வமாய்க் கிட்டக் கூடும்
மெய்யெனப்படுபவை மெய்யாக.
***

21 மே 2013, கீற்று மின்னிதழில்.., நன்றி கீற்று!
படம்: இணையம்.











26 கருத்துகள்:

  1. மெய்யென்பது மெய்யாக
    மேவும் கவிதையிலே
    பொய்யிலா வார்த்தைகள்
    பொழிகிறதே நெஞ்சமெல்லாம்...!

    அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மெய்யெனப்படுவது மெய்யாகவே
    அந்த மௌனப் பள்ளத்தாக்கில்தான்.,
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல கவிதை.
    மற்றபடி எல்லாமே போலி என்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  4. மெய்யைப்போல நீரும் உருமாறி காட்டுவது ஓவியனின் சிறப்பு பார்பவரின் கோணமே.கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  5. காயமே இது பொய்யடா. வெறும் காற்றடைத்த பையடா.....மாதிரி இருக்கிறது!!
    போய்யும் அழகுதான்.
    மெய்யென உணர்ந்த மௌனமும் அழகுதான்.
    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான வரிகள்! மெய்யாலுமே!

    பதிலளிநீக்கு
  7. மெய்யெனப்படுவது மெளனப் பள்ளத்தாக்கில். அற்புதமான சொல்லாடல்.

    பதிலளிநீக்கு
  8. @ஸ்ரீராம்.,

    மெய் அபூர்வம் என்கிறேன். நன்றி ஸ்ரீராம்:)!

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை அக்கா,வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  11. அஞ்சாவது தடவை கொஞ்சம் புரிஞ்சாப்புல இருக்குங்க.. நன்று.

    பதிலளிநீக்கு
  12. அருமையான கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin