புதன், 10 அக்டோபர், 2012

பேரன்பு - மலைகள் இதழில்..


தனித்த முதுமையொன்று
நிறைந்த வாழ்வு தந்து
பிரிந்த துணையை நினைந்து
நடுங்கும் விரல்களால்
காலச் சங்கலியின்
ஒவ்வொரு கணுவினையும்
கவனமாக எண்ணியபடிப்
பின்னோக்கிப் பயணித்துக்
கொண்டிருந்தது.

அண்டவெளியில் அழுத்தத்துடன்
மையம் கொண்ட புயலும்
ஆர்ப்பரிக்க எத்தனித்த
ஆழிப் பேரலையும்
கனிவுடன் காத்தன மெளனம்
தம்மால் அறுந்து விடக் கூடாது
சங்கலியின் இழை என்று.

ஒவ்வொரு கணுவின் ஸ்பரிசமும்
தந்த நினைவுகளால்
தழும்பிய விழிகளில்
ஒளிர்ந்த பேரன்பு கண்டு..
ஓர் கணம்
நின்று
சுழன்றன கோள்கள்.
***

18 ஆகஸ்ட் 2012, மலைகளின் எட்டாவது இதழில்., நன்றி மலைகள்.காம்!

படம் நன்றி: இணையம்

20 கருத்துகள்:

  1. கவிதை ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  2. முதுமையின் தனிமையின் துயரதை
    அழுத்தமாய் சொல்லிப்போன கவிதை
    மிக மிக அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மிக அருமை. தனிமையின் நிலையை உணர வைக்கும் வலிகளின் வரிகள்.

    பதிலளிநீக்கு
  4. தனிமை முதுமை கொடுமை.
    கையில் இருக்கும் மணிமாலை நினைவுகளாக உருட்டும்
    கைகள் .அதைப் பற்றிக் கொண்டு வருந்தாதே தாயே என்று சொல்லவைக்கிறது உங்கள் கவிதை.அற்புதம் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. வீரியமான வரிகள். மனதில் பதிந்த மிக அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  6. @வல்லிசிம்ஹன்,

    அழகாய் சொல்லியுள்ளீர்கள். நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு வரியும் ஒரு வித தனிமையை உணர்த்தியது.

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை... நன்றி...

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு கணுவின் ஸ்பரிசமும்
    தந்த நினைவுகளால்
    தழும்பிய விழிகளில்
    ஒளிர்ந்த பேரன்பு கண்டு..
    ஓர் கணம்
    நின்று
    சுழன்றன கோள்கள்.//

    கண்ணில் நீர் முத்துக்களை துளிர்க்க செய்தன.
    ராமலக்ஷ்மி அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin