செவ்வாய், 24 ஜனவரி, 2012

பெங்களூர் ஹெப்பால் ஏரிக்கரை பூங்காவில்.. கொன்றையும் குல்மொஹரும்.. - படங்கள்


பெங்களூரின் வடபகுதியில் பெலாரி ரோடினை அவுட்டர் ரிங் ரோட் கடக்கும் இடத்தில், மேம்பாலம் அருகே தேசியநெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது ஹெபால் ஏரி. நகரிலிருந்து விமான நிலையம் சென்று வருபவர் கண்களிலிருந்து எளிதாகத் தப்பி விட வாய்ப்பின்றி 150 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இது 1537_ஆம் ஆண்டு கெம்பகெளடா உருவாக்கிய மூன்று ஏரிகளுள் ஒன்று.

# 2.
பலவிதமான பறவைகள் கூடும் ஏரிகளுள் இதுவும் ஒன்றென எப்போதோ படித்த நினைவில் பறவைகளைத் தேடிதான் நுழைந்தேன் சென்ற வருடம் ஒரு கோடை மாதத்தில் அதுவும் மாலை நேரத்தில். பிறகுதான் தெரிந்தது குளிர்காலமே (நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலும்) அதற்குச் சரியான சமயமென்பதும் அதுவும் அதிகாலையில்தான் பாடும் பறவைகளின் தரிசனம் அதிகமாகக் கிட்டும் என்பதுவும். காக்கா குஞ்சின் சத்தம் கூடக் கேட்க முடியாத அமைதி நிரம்பிய ஏரிக்குள் தூண்டிலைப் போட்டபடி மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.

# 3போன மட்டிற்குச் சும்மாத் திரும்ப முடியுமா? பறவைகள் இல்லாவிட்டால் என்ன என்று ஏரியையொட்டிப் பூத்துக் குலுங்கி நின்ற கொன்றைகளுக்கும் குல்மொஹர்களுக்கும் வீசினேன் கேமரா வலையை. கொத்து கொத்தாக மாட்டியவற்றை ஃப்ளிக்கரில் பகிர ஆரம்பிக்கவும் நண்பர்கள் அவரவர் எடுத்த அதே மலர்களின் படங்களைப் பகிர ஆரம்பித்தார்கள். பலருக்கும் முதலில் கொன்றைக்கும் குல்மொஹருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆக அனைவருமே ஆர்வத்துடன் இரு மலர்கள் குறித்தும் தெரிந்த தகவல்களையும் தெரியாதவற்றை இணையத்தில் தேடிப் பிடித்தும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம். அப்படியாக அங்கு நான் பகிர்ந்த படங்களின் தொகுப்பு சேகரித்தத் தகவல்களுடன்:

  • Peacock flowers என அறியப்படுகிறது கொன்றை. மயிலின் கொண்டை போல் வெளிவரும் மகரந்தத் தண்டுகளால் அப்பெயர் ஏற்பட்டதோ என்னவோ. Pride of Barbados அல்லது Barbados Flower Fence என்றும் இதை அழைக்கிறார்கள். எங்கள் குடியிருப்பின் சுற்றுச் சுவரினுள் வரிசையாக அணிவகுத்து நிற்பன இவையே:)! பல பூங்காக்களுக்கு வேலியாக கொன்றை மரங்கள் இருப்பது கவனித்தால் தெரிய வரும்.

# 4. மயிற்கொன்றை / Peacock Flower
உலர்ந்த சிலவும்
மலர்ந்து சிரிப்பனவும்
மலரக் காத்திருப்பவையும்..

  • காட்டுத் தீயின் ஆழ்சிகப்பு நிறங்கொண்டிருப்பதால் குல்மொஹரை Fire of the Forest என்றழைக்கிறார்கள். அந்தி இருளில் செம்பிழம்பாக முதல் படத்தில் கனன்று கொண்டிருப்பதும் குல்மொஹரே. தமிழில் ‘மயூரம்’ என்பார்கள் என இணையத்தில் கண்டேன். இதன் மூடிய மொட்டுக்கள் நல்ல பச்சை நிறத்தில் இருக்கின்றன. கொன்றை மலர்களிலோ விரியாத மொட்டுக்கள் மலர்களின் வண்ணத்தில் இளஞ்சிவப்பாகவேக் காணப்படுகின்றன.

# 5. மயூரம் / Gulmohar
பச்சிளம் மொட்டுக்களும்
செக்கச் சிவந்த மலர்களும்

  • அதேபோல் கொன்றை மலர்களின் இதழோரங்களில் மஞ்சள் நிறம் பார்டர் போல அமைவது இன்னொரு வித்தியாசம். வேறு வண்ணக்கலவையற்று முழுமையான சிகப்பில் குல்மொஹர்.

# 6. மலர்ந்து விரிந்த மயூரம்

# 7. மஞ்சட்கொன்றை மலர்கள் / Yellow Peacock Flowers

# 8. ஆயிரம் மலர்களே..
எல்லா மலரும் அழகாய் மிளிர எதைப் படமெடுப்பதெனும் குழப்பத்தில் ஒரு இளைஞன்.

# 9. வானமே எல்லை
# 8. பக்கத்து வீட்டுக்காரங்க..
“நலம். நலமறிய ஆவல்...”

# 9. பக்கத்துத் தெருக்காரங்க..
  • மேலிருப்பதில் இடப்பக்கம் வரிசை கட்டி நிற்பவை கொன்றை. வலது முனையில் குல்மொஹர். கொன்றை மரங்களைக் கவனித்தால் வேரிலிருந்தே அடி மரம் பல கிளைகளாகப் பிரிவதைப் பார்க்கலாம். குல்மொஹரிலோ மரங்களின் அடிமரம் ஒற்றையாக உயர்ந்து வளர்ந்து பின்னரே கிளைகளாகப் பிரிகின்றன.

# 10. மரத்துக்குக் கிளை பாரமா...?
வீழ்ந்தாலும் தலைதூக்கி வாழ்ந்து காட்டும் கிளை

பாட்டனி க்ளாஸ் முடிந்தது:)! பூங்காவை இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாம் வாங்க...

# 11 முகப்பில்..

வாகன நிறுத்தம் அருகில்..

# 12. காவல்


# 13. காத்திருப்பு‘சிக்குமா சிக்காதா..?’ தூண்டில் முள்ளைச் சுற்றிய தண்ணீரின் வளையங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி சிறுவன்.

# 14. கண்ணுல சிக்குன ஒண்ணே ஒண்ணுதேடிப்போனதே இதற்குதானே:)? இப்போது பறவைகளைக் காண நல்ல சீசன். ஆர்வமுள்ள பெங்களூர்வாசிகள் சென்று வாருங்கள்! [ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதன் பேரில் பறவையின் பெயரைத் தேடியதில், இது Pond Heron என்பதும் தமிழில் ‘குருட்டுக் கொக்கு’ என அழைக்கப்படுவதாகவும் தெரிய வந்தது.]

# 15. சின்னக் குயில்அழகு வனத்தில் இவள் போலச் சிட்டாகக் கூவித் திரிந்த குழந்தைகள் பலரைப் பார்க்க முடிந்தது.

# 16 தனியே தன்னந்தனியே..

# 17. ஏரி பார்த்த இரட்டைக் கோபுரக் குடியிருப்பு
படம் இரண்டில் புள்ளிகளாகத் தெரிகிறக் கட்டிடங்கள்.

# 18. கூந்தற்பனை (Caryota urens) திப்பிலிப் பனை என்றும் அழைக்கப்படும் இதனை இலங்கையில் ‘கித்துல்’(Kitul Palm) என்கிறார்கள்.

அனுமதி நேரம்: காலை 6 மணி முதல் 9 மணி வரை இலவசம்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டணம் உண்டு.

ஆறுமாதங்களாக சேமிப்பிலே இருந்து போன படங்களைப் பகிர்ந்தாயிற்று, இயற்கையின் எழிலை நீங்களும் ரசிக்க வேண்டுமெனும் ஆசையில் :)!
***

54 கருத்துகள்:

  1. பெங்களூருக்கு ரெண்டு வர்ஷம் ம்ன்னே வந்திருந்தப்போ இந்த இடங்கள் பற்றி தெரிந்திருக்கல்லே. இப்ப படங்கள் மூலம் சுற்றிப்பார்த்து ரசிச்சசு.

    பதிலளிநீக்கு
  2. படங்களும்,அதன் வர்ணைகளும் மிக அழகு!!

    பதிலளிநீக்கு
  3. பகிற்விற்கு நன்றி ராமலஷ்மி.கித்துல் பனையை இப்ப தான் பார்க்கிறேன்.படங்கள் அனைத்தும் வாசகத்துடன் அழகு.

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப அழகு ... ராமலக்‌ஷ்மி இயற்கை அழகை நாங்களும் ரசித்தோம்..:)

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அள்ளுது...

    கூந்தற்பனையின் கூந்தலை விழாக்கள், கல்யாணங்கள்,கோயில் திருவிழாக்கள் சமயங்கள்ல வாசல் அலங்காரத்துக்காக கட்டி வெச்சிருப்பாங்க. சாட்டை மாதிரி நீளமா இருக்கும் இழைகள்ல சின்னச்சின்னதா பட்டாணி மாதிரி ஒட்டி இருக்கறதைப் பார்க்கறதுக்கே தனியழகா இருக்கும். இப்பவும் நாஞ்சில் பகுதிகள்ல அட்லீஸ்ட் கோயில் விழாக்கள்லயாவது பயன்படுத்தறாங்கன்னுதான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. இவ்வளவு அழகாக - இயற்கையை, பூக்களை, பறவைகளை, சின்னஞ்சிறார்களை - புகைப்படங்களாய, அழகிய பதிவாய் உங்களால் தான் தர முடியும். அழகான பதிவு.

    பதிலளிநீக்கு
  7. குல்மொஹர் பார்த்தால் கான்வெண்ட் நினைவு வருகிறது

    பதிலளிநீக்கு
  8. ஆயிரம் மலர்களாய் மலர்ந்து
    அமுத கீதம் பாடின அழகான பகிர்வு..

    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். மிக மிக அற்புதம்.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. படங்களும் கட்டுரையும் பிரமாதம். இந்த இடத்திற்கு சென்று பார்க்க முயற்சிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  11. ஆஹா
    அருமையான படங்கள்
    வண்ணமும் அழகும் எடுத்த விதமும்
    பாலு மகேந்திராஅவர்களின் படத்தில் வரும்
    காட்சிகளைப் பார்ப்பது போல்
    மனத்தை குளிர்வித்துப் போகிறது
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. படங்களுடன் பூக்கள் மற்றும் மரங்கள் பற்றிய விளக்கம் மிகவும் நன்று.

    பதிலளிநீக்கு
  13. அழகான படங்கள். மயூரம் என்று நீங்கள் சொல்வது வாத நாராயண மரங்களா?

    பதிலளிநீக்கு
  14. வழக்கம் போலவே அருமை. கேமரா பற்றியும் புகை படமெடுப்பது பற்றியும் ஒரு பதிவு எழுதுங்களேன் (அதுக்கு தான் PIT இருக்கே என சொல்ல கூடாது)

    பதிலளிநீக்கு
  15. அட்டகாசமான படங்கள்.

    கொன்னைப்பூவும் குல்மோஹரும் 'சண்டிகரை' நினைவுக்குக் கொண்டு வருது!

    கூந்தல்பனையும் அங்கே தோட்டங்களில் ஏராளம்!

    பதிலளிநீக்கு
  16. மயிற்கொன்றை, கொன்றை வேந்தன், குல்மொஹர் எல்லாம் ஒரே ஜாதி போலும்! (ஹிந்தியில் 'குல்மொஹர கர் துமாரா' என்ற ஒரு கிஷோர் குமார் பாடிய மிக அற்புதமான பாடல் ஒன்று உண்டு!) எல்லாப் படங்களுமே அருமை. இதில் ஒரு பூவை நாங்கள் இதழ்கள் மட்டும் சாப்பிடுவோம் (சிறுவயதில்) அது கொன்றை வேந்தனோ....

    நீரின் நடுவே மன் படகில் பயணம் செய்யும் மரம் போல் படம் சூப்பர். சின்னக் கவிதையும், ஒற்றைக் குருவியும் அழகு.

    பாட்டனி கிளாஸ் எடுத்தீங்க, சரி, ஜூ கிளாஸ் எடுத்து அந்தக் குருவி பெயர் என்ன என்று சொல்லவில்லையே....! :))

    பதிலளிநீக்கு
  17. படங்களுடன் உங்களின் வாக்கியங்களும் மிக அருமை...

    பதிலளிநீக்கு
  18. படங்களும், வர்ணனைகளும் அருமையா இருந்துச்சுங்க....

    கூந்தல் பனை இங்கு பூங்காக்களில் பார்த்திருக்கிறேன்.குல்மொஹர் பூக்களின் இதழ்களை சிறுவயதில் சாப்பிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. இயற்கையில்தான் எத்தனை நிறங்கள்,வண்ணங்கள். அப்படியே காட்சிப்படுத்தி எங்கள் கண்களையும்
    மனங்களையும் குளிரச் செய்து விட்டீர்கள். மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  20. பெங்களூரில் பார்ப்பதற்கு நிறைய இருக்கின்றன... உங்களால் அவை குறித்த நல்ல அறிமுகம் கிடைக்கிறது. இன்னும் அவற்றை நேரில் பார்த்தது போன்ற திருப்தியையும் அளிக்கிறது உங்கள் படங்கள்.

    பதிலளிநீக்கு
  21. மலர்கள் (மரங்களும்தான்) மனதை நிறைத்தன. பெயர்களும் கூட எவ்வளவு அழகு. நன்றி ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  22. Lakshmi said...
    /பெங்களூருக்கு ரெண்டு வர்ஷம் ம்ன்னே வந்திருந்தப்போ இந்த இடங்கள் பற்றி தெரிந்திருக்கல்லே. இப்ப படங்கள் மூலம் சுற்றிப்பார்த்து ரசிச்சசு./

    நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  23. S.Menaga said...
    /படங்களும்,அதன் வர்ணைகளும் மிக அழகு!!/

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  24. Asiya Omar said...
    /பகிற்விற்கு நன்றி ராமலஷ்மி.கித்துல் பனையை இப்ப தான் பார்க்கிறேன்.படங்கள் அனைத்தும் வாசகத்துடன் அழகு./

    மிக்க நன்றி ஆசியா. பெங்களூரில் பல இடங்களில் நான் பார்த்திருப்பினும் படம் எடுத்த பிறகே அதன் பெயர் மற்றும் விவரங்களை அறிய வந்தேன்:)! பகிர்ந்தும் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  25. T.V.ராதாகிருஷ்ணன் said...
    /படங்கள் அனைத்தும் அழகு./

    நன்றி டிவிஆர் சார்.

    பதிலளிநீக்கு
  26. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    /ரொம்ப அழகு ... ராமலக்‌ஷ்மி இயற்கை அழகை நாங்களும் ரசித்தோம்..:)/

    மிக்க நன்றி முத்துலெட்சுமி:)!

    பதிலளிநீக்கு
  27. அமைதிச்சாரல் said...
    /படங்கள் அள்ளுது...

    கூந்தற்பனையின் கூந்தலை விழாக்கள், கல்யாணங்கள்,கோயில் திருவிழாக்கள் சமயங்கள்ல வாசல் அலங்காரத்துக்காக கட்டி வெச்சிருப்பாங்க. சாட்டை மாதிரி நீளமா இருக்கும் இழைகள்ல சின்னச்சின்னதா பட்டாணி மாதிரி ஒட்டி இருக்கறதைப் பார்க்கறதுக்கே தனியழகா இருக்கும். இப்பவும் நாஞ்சில் பகுதிகள்ல அட்லீஸ்ட் கோயில் விழாக்கள்லயாவது பயன்படுத்தறாங்கன்னுதான் நினைக்கிறேன்./

    நன்றி சாந்தி, தந்திருக்கும் தகவல்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  28. தமிழ் உதயம் said...
    /இவ்வளவு அழகாக - இயற்கையை, பூக்களை, பறவைகளை, சின்னஞ்சிறார்களை - புகைப்படங்களாய, அழகிய பதிவாய் உங்களால் தான் தர முடியும். அழகான பதிவு./


    மகிழ்ச்சியும் நன்றியும் ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  29. goma said...
    /குல்மொஹர் பார்த்தால் கான்வெண்ட் நினைவு வருகிறது/

    எனக்கு அங்கு பார்த்த நினைவில்லை. ஆனால் பிங்க் மற்றும் பர்ப்பிள் வண்ணங்களில் காகிதப் பூ போலக் கொத்துக் கொத்தாகப் பூக்கும் மரங்கள் மனதை விட்டு அகலாமல் உள்ளன அந்நாளின் நினைவுகளோடு:)! அதன் பெயர் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  30. இராஜராஜேஸ்வரி said...
    /ஆயிரம் மலர்களாய் மலர்ந்து
    அமுத கீதம் பாடின அழகான பகிர்வு..

    பாராட்டுக்கள்../

    மிக்க நன்றிங்க இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  31. Rathnavel said...
    /அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். மிக மிக அற்புதம்.
    மனப்பூர்வ வாழ்த்துகள்./

    மகிழ்ச்சியும் நன்றியும் சார்.

    பதிலளிநீக்கு
  32. kg gouthaman said...
    /படங்களும் கட்டுரையும் பிரமாதம். இந்த இடத்திற்கு சென்று பார்க்க முயற்சிக்கின்றேன்./

    அவசியம் முயன்றிடுங்கள். இல்லை.. சென்று வாருங்கள்:)! வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. Ramani said...
    /ஆஹா
    அருமையான படங்கள்
    வண்ணமும் அழகும் எடுத்த விதமும்
    பாலு மகேந்திராஅவர்களின் படத்தில் வரும்
    காட்சிகளைப் பார்ப்பது போல்
    மனத்தை குளிர்வித்துப் போகிறது
    பகிர்வுக்கு நன்றி/

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  34. அமைதி அப்பா said...
    //படங்களுடன் பூக்கள் மற்றும் மரங்கள் பற்றிய விளக்கம் மிகவும் நன்று.//

    மிக்க நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  35. அமர பாரதி said...
    //அழகான படங்கள். மயூரம் என்று நீங்கள் சொல்வது வாத நாராயண மரங்களா?//

    இன்னொரு பெயர் நீங்கள் சொல்லிதான் அறிகிறேன். மிக்க நன்றி அமர பாரதி.

    பதிலளிநீக்கு
  36. மோகன் குமார் said...
    //வழக்கம் போலவே அருமை. கேமரா பற்றியும் புகை படமெடுப்பது பற்றியும் ஒரு பதிவு எழுதுங்களேன் (அதுக்கு தான் PIT இருக்கே என சொல்ல கூடாது)//

    பதிலை நீங்களே சொல்லி விட்டீர்கள்:)! PiT-ல் இல்லாத எதை நான் சொல்லிவிட முடியுமெனத் தெரியவில்லை. நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  37. ஹேமா said...
    /அழகு அழகு அழகு !/

    நன்றி ஹேமா:)!

    பதிலளிநீக்கு
  38. துளசி கோபால் said...
    /அட்டகாசமான படங்கள்./

    நன்றி மேடம்.

    /கொன்னைப்பூவும் குல்மோஹரும் 'சண்டிகரை' நினைவுக்குக் கொண்டு வருது!/

    ஆம், உங்கள் “ என் செல்ல செல்வங்கள்’ புத்தகத்திலும் குறிப்பிட்டிருப்பீர்கள்:)!

    பதிலளிநீக்கு
  39. ஸ்ரீராம். said...
    /மயிற்கொன்றை, கொன்றை வேந்தன், குல்மொஹர் எல்லாம் ஒரே ஜாதி போலும்! (ஹிந்தியில் 'குல்மொஹர கர் துமாரா' என்ற ஒரு கிஷோர் குமார் பாடிய மிக அற்புதமான பாடல் ஒன்று உண்டு!) எல்லாப் படங்களுமே அருமை. இதில் ஒரு பூவை நாங்கள் இதழ்கள் மட்டும் சாப்பிடுவோம் (சிறுவயதில்) அது கொன்றை வேந்தனோ....//

    குல்மொஹரைச் சாப்பிட்டதுண்டு என சொல்லியிருக்கிறார் பாருங்க கோவை2தில்லி ஆதி வெங்கட். நான் இரண்டுமே சாப்பிட்டுப் பார்த்ததில்லை.

    //நீரின் நடுவே மண் படகில் பயணம் செய்யும் மரம் போல் படம் சூப்பர். சின்னக் கவிதையும், ஒற்றைக் குருவியும் அழகு. //

    மிக்க நன்றி ஸ்ரீராம்.

    //பாட்டனி கிளாஸ் எடுத்தீங்க, சரி, ஜூ கிளாஸ் எடுத்து அந்தக் குருவி பெயர் என்ன என்று சொல்லவில்லையே....! :))/

    மாட்டி விடுகிறீர்களே:)? அதைக் கண்டுபிடிக்கிறேன் விரைவில்.

    பதிலளிநீக்கு
  40. சசிகுமார் said...
    /படங்களுடன் உங்களின் வாக்கியங்களும் மிக அருமை.../

    நன்றி சசி குமார்.

    பதிலளிநீக்கு
  41. கோவை2தில்லி said...
    /படங்களும், வர்ணனைகளும் அருமையா இருந்துச்சுங்க....

    கூந்தல் பனை இங்கு பூங்காக்களில் பார்த்திருக்கிறேன்.குல்மொஹர் பூக்களின் இதழ்களை சிறுவயதில் சாப்பிட்டிருக்கிறேன்./

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  42. புவனேஸ்வரி ராமநாதன் said...
    /இயற்கையில்தான் எத்தனை நிறங்கள்,வண்ணங்கள். அப்படியே காட்சிப்படுத்தி எங்கள் கண்களையும்
    மனங்களையும் குளிரச் செய்து விட்டீர்கள். மிக்க நன்றி ராமலக்ஷ்மி./

    மகிழ்ச்சியும் நன்றியும் புவனேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  43. குமரி எஸ். நீலகண்டன் said...
    /பெங்களூரில் பார்ப்பதற்கு நிறைய இருக்கின்றன... உங்களால் அவை குறித்த நல்ல அறிமுகம் கிடைக்கிறது. இன்னும் அவற்றை நேரில் பார்த்தது போன்ற திருப்தியையும் அளிக்கிறது உங்கள் படங்கள்./

    இன்னும் நிறைய இடங்களை நான் பார்க்கவில்லை:)! போகும் இடங்களை இனித் தொடர்ந்து பகிர்ந்திடுகிறேன். மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  44. கவிநயா said...
    /மலர்கள் (மரங்களும்தான்) மனதை நிறைத்தன. பெயர்களும் கூட எவ்வளவு அழகு. நன்றி ராமலக்ஷ்மி!/

    வாங்க கவிநயா. மயூரம் என்ற பெயர் எனக்கும் மிகப் பிடித்திருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  45. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. ஸ்ரீராம். said...

    //...ஒற்றைக் குருவியும் அழகு.

    பாட்டனி கிளாஸ் எடுத்தீங்க, சரி, ஜூ கிளாஸ் எடுத்து அந்தக் குருவி பெயர் என்ன என்று சொல்லவில்லையே....! :))//

    இதன் பெயர் Pond Heron. தமிழில் ‘குருட்டுக் கொக்கு’ என அழைக்கப்படுவதாகவும் அறிய வந்தேன். குறிப்பைப் பதிவிலும் சேர்த்து விட்டேன்:)!

    பதிலளிநீக்கு
  47. நன்றி...

    கேள்விக்கு பதிலளிக்க சிரமம், சிரத்தை எடுத்து பதில் தேடித் தந்தற்கு...
    உங்கள் பதிலை வைத்து 'விக்கி'க்கு சென்று Ardeola grayii பற்றி விவரமும் தெரிந்து கொண்டேன்!

    அதே போல எடுத்த படத்தை வைத்து இதை எப்படி அறிந்தீர்கள் என்று அறியவும் ஆவல். படங்களை மேட்ச் செய்தா, குணாதிசயங்கள் வைத்தா...

    :))

    பதிலளிநீக்கு
  48. @ ஸ்ரீராம்,

    அறிவியல் பெயர் சரியே. ஆர்வமாய் மேல்விவரங்கள் பார்த்ததிலும் மகிழ்ச்சி.

    Lake Birds, River Birds, Pond Birds எனப் படங்களைத் தேடியதில் இப்பறவையை போல் கிடைத்த படத்தின் நூலைப் பிடித்த போது பட்டம் இங்கே இருந்தது. பிறகு Bird Photography -யில் என்னைப் பிரமிக்க வைக்கும் flickr நண்பரிடம் உறுதியும் செய்து கொண்டேன்:)!

    பதிலளிநீக்கு
  49. SUPER PATHIVU !. KONDRAIKKUM GULMOHARKKUM ULLA VITHYASAM PARTHU ATHISAYITHEN. PUKAIPPADAK KANKAL ALLAVA :) ATHUPOKA IRATTAI KOPURANGAL KAVARNTHANA IRU PADANGKALILUM !

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin