Thursday, December 31, 2009

சில ஸ்தலங்கள்.. சில படங்கள்.. பலப்பல நன்றிகள்..!

என் எழுபத்தைந்தாவது பதிவு. நான் பதியும் வேகத்துக்கு சதம் காண இன்னும் எவ்வளவு காலமாகும் எனத் தெரியாததாலே முக்கால் சதம் முடித்ததையும் முன் வைக்கிறேன்:)!

இந்த ஆண்டிலும் என் கூடவே வந்து வாசித்து கருத்து சொல்லி ஊக்கம் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

இருதினம் முன்னே என் பிறந்த தினத்தன்று பதிவிட்டு வாழ்த்திய ஆனந்த், தமிழ் பிரியன், ஆயில்யன், முத்துலெட்சுமி மற்றும் வல்லிம்மாவுக்கும் தொடர்ந்து வாழ்த்தியிருந்த அத்தனை பேரின் அன்புக்கும் நெகிழ்வுடன் இங்கும் என் நன்றிகள்!

எழுதும் நம்மை பலரிடம் கொண்டு சேர்த்து வரும் திரட்டிகளான தமிழ்மணத்துக்கும் தமிழிஷுக்கும் நன்றிகள். ஆறு மாதங்களுக்கு முன்னர் தமிழிஷில் இணைந்தேன். வாக்களித்து தொடர்ந்து அங்கு பதிவுகளை 'பிரபல படைப்புகள்' ஆக்கிய அனைவருக்கும் நன்றிகள்! தமிழ்மணத்தில் பரிந்துரைத்தவர்களுக்கும் நன்றிகள்!

இவ்வருடத்தில் என் படைப்புகள் பலவற்றை வெளியிட்டும், பதிவுகள் சிலவற்றை குட்ப்ளாக்ஸ் பிரிவில் பரிந்துரைத்தும் உற்சாகம் தந்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றிகள்!

வார்ப்பு கவிதை வாராந்திரியில் தொடர்ந்து கவிதைகள் வெளிவருவதும்; கலைமகள், வடக்கு வாசல், இலக்கியப்பீடம் ஆகியவற்றில் தடம் பதிக்க முடிந்ததும்; தேவதையில் வலைப்பூ அறிமுகமானதும் கூடுதல் மகிழ்ச்சி.

சென்னைப் புத்தகத் திருவிழாவையொட்டி இந்த வாரம் ஆதிமூலகிருஷ்ணன் பதிவர்களைக் கண்ட தொடர் பேட்டியில் எனது பங்களிப்பு இங்கே. அனைவரது பேட்டியும் ஒருதொகுப்பாக இங்கே. நன்றி ஆதி!


PiT போட்டிகளுக்கு மட்டுமேயென புகைப்படப் பதிவுகள் தந்து வந்த நான் 'தேவதை' தந்த உற்சாகத்தில், அவர்கள் சிலாகித்திருந்த ‘பேசும் படங்கள்’ எனும் தலைப்பிலேயே அவ்வப்போது புகைப்படங்களைப் பகிர்ந்து வர எண்ணியதின் முதல் கட்டமாக சில மாதங்கள் முன்னர் சென்றிருந்த ஸ்தலங்களின் படங்கள் பார்வைக்கு...

படங்கள் கணினித்திரையை விட்டு வெளியேறித் தெரிந்தால் please click view-zoom-zoom in! [குறிப்பாக இத்தகவல் திவா அவர்களுக்காக:)!]

மதுரை மீனாக்ஷி சுந்தரேஷ்வரர்


வானுயர்ந்த கோபுரமும்
தரணி போற்றும் பொற்றாமரைக் குளமும்




தகதகக்கும் தங்கத் தாமரை







மதுரை கூடலழகர்
நெடிந்துயர்ந்த தங்கஸ்தூபியும்
நாற்திசைப் பார்த்திருக்கும் நந்தி(கள்) மாடமும்



பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்



திருக்கோவிலின் தெப்பக் குளம்





திருச்செந்தூர்




கனகவேல் காக்க



அண்ணன் உலாப் போகும் நேரம்


குளித்து முடித்து வெளியில் கிளம்பக்
குஷியாய் போடுகிறார் ஆட்டம்

*** *** ***


தம்பிக்கு ஓய்வு நேரம்


கழுத்து மணிகள் கழற்றி ஆணியில் போட்டாச்சு
‘தூங்கலாமா’ கண்கள் சுழற்றி சிந்தனை வந்தாச்சு
*** ***


கடலருகே அலையலையாய் பக்தர்கூட்டம்


சுற்றிவரும் பிரகாரம்



எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

126 comments:

அமுதா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பக்தி பரவசத்தோடு புத்தாண்டிற்கு வரவேற்பா? படங்கள் அழகு

வித்யா said...

புத்தாண்டு மற்றும் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.

ஜெஸ்வந்தி said...

எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.
பிரகாசமான புது வருட வாழ்த்துகளும் தோழி. படங்கள் அருமை.

ஆயில்யன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கோவில் படங்களும் யானையும் கொள்ளை கொள்ளும் அழகுடன்...!

துபாய் ராஜா said...

திருக்கோவில் படங்கள் அனைத்தும் அருமை. ஆனைப்படம் இனிமை.
அடிக்குறிப்பு வாக்கியம் ரசனை.

அகம் மகிழ்ந்த ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Sangkavi said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

R.Gopi said...

அனைத்து தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மாதேவி said...

மதுரைமீனாட்சி திருச்செந்தூர் முருகன் படங்கள் அருமை.

இருவரையும் முன்பு தரிசித்துள்ளேன். மீண்டும் படங்களைப் பார்த்தது ஆனந்தம்.

உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனுஜன்யா said...

1. பிறந்த நாள் வாழ்த்துகள் (வழக்கம் போல் தாமதம் ம்ம்ம்ம்)

2. புகைப்படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. திருச்செந்தூரில் கடல்-அலை படம்?

3. ஹா ஹா இப்ப தான் 75 ஆ? நம்மள விடவும் ஸ்லோவா ஒருத்தரா? வாழ்த்துகள்

அனுஜன்யா

ஹுஸைனம்மா said...

அக்கா, இங்க அதிகம் வந்ததில்ல. ரொம்ப பிரபலம் போல இருக்கு நீங்க. சந்தோஷம்.

படங்கள் நல்ல தெளிவா, அழகா இருக்கு.

அண்ணாமலையான் said...

உங்களுக்கு ஒன்னு சொல்லனுமே? அது..
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

aambal samkannan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் தாமதமான எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம்

குப்பன்.யாஹூ said...

NEW YEAR WISHES, NICE PHOTOS, THANKS FOR SHARING

அபி அப்பா said...

அடடா தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! புத்தாண்டு வாழ்த்துக்கள். படம் எல்லாம் சூப்பரோ சூப்பர்.

@ஹுஸைன் அம்மா!

என் பிரண்ட் ரொம்ப பிரபலம் தான் தெரியாதா! என்ன போங்க!

அத்திரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

அருமையான, தெய்வீகமான படங்களைப் போட்டு அசத்திவிட்டீர்கள். உழைப்பும் நேர்த்தியும் பளிச்சிட்டுகின்றன.
மிக்க நன்றி.
உங்களுக்கும் குடும்பத்துக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

பிரியமுடன்...வசந்த் said...

75வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்...!

பிரியமுடன்...வசந்த் said...

உங்க பேட்டியும் படித்தேன் அருமை...!


யானையும் ,முதலில் இருக்கும் கோபுரமும் பளிச்ன்னு எடுத்துருக்கீங்க...!

ரகசியம் எனக்கு மட்டும் சொல்லுங்க மேடம் எந்த கேமராவுல படமெல்லாம் எடுக்குறீங்க?

பிரியமுடன்...வசந்த் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

இவ்வருடம் போலவே 2010லும் சிறந்த படைப்புகள் தருக....!

நசரேயன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

பிறந்த நாள்,எழுபத்தைந்தாவது பதிவு,மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா!

Nundhaa said...

மிக அருமையான ஒளிப்படங்கள் ... ரசித்தேன்

நினைவுகளுடன் -நிகே- said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

கவிநயா said...

வாவ்! அசத்தல், அத்தனை படங்களும்!

உங்கள் சாதனைகள் புத்தாண்டிலும் மென்மேலும் தொடர, இன்னும் பலப்பல சிகரங்கள் தொட, மனமார்ந்த வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

எழுபத்தைந்தாவது பதிவின் வாழ்த்துக்கள்.

பிரமிக்க வைக்கும் கோபுரப் படங்கள். என்ன ரகசியம். துல்லியம்.

உங்கள் பேட்டியும் பிரமாதம். அத்தனை அனுபவமும் எனக்கும்...கூட சாண்டில்யனும், நாபா, கல்கி, விக்ரமன், ஜெகசிற்பியன் ..... அ.ரு.ராமநாதன்....

அம்பிகா said...

படங்கள் அழகு.

பிறந்த நாள், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பூங்கொத்துடன் raamalakshmi!

கவிநயா said...

பேட்டியும் படிச்சிட்டேன். மீண்டும் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

தமிழ் பிரியன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

goma said...

75வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.அத்தனை படங்களும் ப்ரொஃபஷனல் டச்சோடு இருந்தன.அதிலும்
திருச்செந்தூர் படங்களில் என் மனம் கவர்ந்த படம் கடைசி படம் .அருமை.

எம்.ரிஷான் ஷெரீப் said...

எல்லாப் படங்களுமே அழகு.
வாழ்த்துக்கள் சகோதரி !

வருண் said...

படங்கள் எல்லாமே நல்லா இருக்குங்க!

Happy New Year! ங்க ராமலக்ஷ்மி!

கண்மணி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

Beautiful photographs!

குடுகுடுப்பை said...

வாழ்த்துகள், படங்கள் அருமை, நீங்கதான் எடுக்கறீங்களா?

சின்ன அம்மிணி said...

இனிய புத்தாண்டுச் வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

படங்கள் அத்தனையும் அழகு. எப்படி இவ்வளவு பெரிதாக ஆக்கினீர்கள்.?

கிரி said...

ராமலக்ஷ்மி படங்கள் ரொம்ப நல்லா இருக்கு..படங்களில் பார்டர் பினிஷிங் இன்னும் சரியாக கவனித்து எடுத்தால் இன்னும் சிறப்பாக வரும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

thenammailakshmanan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்
ராம லெக்ஷ்மி நலமே பொலிக

SurveySan said...

ஹாப்பி நியூ இயர்! வாழ்த்துக்கள் 75க்கு :)

amaithicchaaral said...

பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.விரைவில் சதமடிக்க வாழ்த்துகிறேன்.

மாதவராஜ் said...

எழுபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும்.

கடையம் ஆனந்த் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா

வினோத்கெளதம் said...

புகைப்பங்கள் அருமையிலும் அருமை..

சரண் said...

நூறாவது பதிவுக்கு ரொம்ப நாள் எடுக்கும்னு நினைக்குறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை மேடம். நானும்தான் நவம்பர் 24 முதல் டிசம்பர் இறுதிக்குள் 76 pathivu எழுதியிருக்கிறேன். பதிவுகளின் எண்ணிக்கையை விட அவை ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரிது.

ஒளிப்படங்கள் மிகவும் தரமாக இருந்தன. விழாக்களை படம் பிடிக்கும் கேமராமேன் என்ற வகையில் நான் மிகவும் ரசித்த படங்களில் இவைகளுக்கும் இடம் உண்டு.

புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.

நானானி said...

பிரபல பதிவர் அவர்களுக்கு,
முதலில் ப்ளாட்டினம் பதிவுக்கு மனமார்ந்த வாந்த்துக்கள்!!

போட்டோகள் எல்லாம் கூர்மை!
உங்க பெரியப்பாவின் கைவண்ணம் உங்க கைகளிலும் ஒளிர்கிறது. வாழ்த்துக்கள்!!!

sury said...

மதுரை மீனாட்சி கோவில் கோபுரமும் பொற்றாமரைக்குளமும் 1961ல் முதன் முதலாக மதுரையில் எனது பணிக்குச் சேர்ந்த உடன்
கோவிலுக்குச் சென்று அம்மனின் திருவருள் பெற்ற நினைவுகளைத் தந்தன.

மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் சுற்றத்தாருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
மீனாட்சி.
http://vazhvuneri.blogspot.com

சுசி said...

உங்க பதிவுகளுக்கும் புதுவருடத்துக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

அருமையான படங்கள்.

இந்த வருஷமும் சிறப்பான பதிவுகள எதிர்பார்க்கிறோம் அக்கா.

malarvizhi said...

படங்கள் அனைத்தும் அற்புதம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிங்கக்குட்டி said...

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "LAND MARK - July PiT மெகா போட்டிக்கு" இடுகையை படித்தேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

பலா பட்டறை said...

அருமையான புகை படங்கள் இனிதே துவங்கிய புத்தாண்டு இனிதே தொடர வாழ்த்துகள் ..:))

நானும் கேமராவ
தூக்கிட்டு போக சோம்பேறித்தனப்பட்டுகிட்டு இருக்கும்போது உங்கள் பதிவு உற்சாகம் தருகிறது... நன்றி.

" உழவன் " " Uzhavan " said...

புகைப்படம் எடுப்பதில் தாங்கள் மிகத் தேர்ந்தவர் என்பதை நான் மட்டுமல்ல; இந்த உலகே அறியும் :-)

தமிழ்மண முதல் சுற்றில் தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

சுந்தரா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா!

புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தலங்களை நேரில் பார்த்த உணர்வைத் தந்தன.

நன்றி!

ஈ ரா said...

அருமையான படங்களுடன் ஒரு நிறைவான வாழ்த்திப் பெற்ற மகிழ்ச்சி...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

எனக்கு சங்கரன் கோவில் "கோமதி யானை " நினைவு வந்தது..

RAMYA said...

படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு!

அந்த கோபுர படத்தினால் கோபுர தரிசனம் முடித்த ஒரு திருப்தி மனதிற்கு கிடைத்தது..

உங்களின் எழுபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

விரைவில் நூறு எழுத வாழ்த்துக்கள்!

புளியங்குடி said...

அருமையான புகைப்படங்கள். தொடரட்டும்.

hayyram said...

fentastic photos.

thanks

regards
www.hayyram.blogspot.com

ராமலக்ஷ்மி said...

அமுதா said...

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பக்தி பரவசத்தோடு புத்தாண்டிற்கு வரவேற்பா? படங்கள் அழகு//

பக்தி பரவசத்துடன் எல்லோரும் நலம் வாழ வேண்டி:)! பாராட்டுக்கு நன்றிகள் அமுதா!

ராமலக்ஷ்மி said...

வித்யா said...

//புத்தாண்டு மற்றும் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.//

நன்றி நன்றி விதயா.

ராமலக்ஷ்மி said...

ஜெஸ்வந்தி said...

// எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.
பிரகாசமான புது வருட வாழ்த்துகளும் தோழி. படங்கள் அருமை.//

பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜெஸ்வந்தி.

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் said...

//புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கோவில் படங்களும் யானையும் கொள்ளை கொள்ளும் அழகுடன்...!//

நன்றி ஆயில்யன். ஆனைப் படங்களும் பிடித்தனவா? மகிழ்ச்சி:)!

ராமலக்ஷ்மி said...

துபாய் ராஜா said...

// திருக்கோவில் படங்கள் அனைத்தும் அருமை.
ஆனைப்படம் இனிமை.
அடிக்குறிப்பு வாக்கியம் ரசனை.//

அழகான பாராட்டு.

//அகம் மகிழ்ந்த ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி துபாய் ராஜா!

ராமலக்ஷ்மி said...

Sangkavi said...

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....//

புத்தாண்டில் புதிதாகத் தொடர ஆரம்பித்திருப்பதற்கும் முதல் வருகைக்கும் என் நன்றிகள்!

ராமலக்ஷ்மி said...

R.Gopi said...

// அனைத்து தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

எல்லோருக்குமான உங்கள் வாழ்த்துக்கள் இதம். நன்றி கோபி.

ராமலக்ஷ்மி said...

மாதேவி said...

//மதுரைமீனாட்சி திருச்செந்தூர் முருகன் படங்கள் அருமை.//

நன்றி மாதேவி, வாழ்த்துக்களுக்கும்.

//இருவரையும் முன்பு தரிசித்துள்ளேன். மீண்டும் படங்களைப் பார்த்தது ஆனந்தம்.//

உங்கள் நினைவுகளை மீட்டெடுத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

ராமலக்ஷ்மி said...

ஹுஸைனம்மா said...

//அக்கா, இங்க அதிகம் வந்ததில்ல. ரொம்ப பிரபலம் போல இருக்கு நீங்க. சந்தோஷம்.

படங்கள் நல்ல தெளிவா, அழகா இருக்கு.//

இனி அடிக்கடி வாங்க. பிரபலம் எல்லாம் இல்லைங்க, அப்படி ஒரு தோற்றமெனில் அது நண்பர்களின் பிரியத்தால் வந்ததே. உங்கள் முதல் வருகையிலும் படங்களைப் பற்றிய பாராட்டிலும் எனக்கும் சந்தோஷம்.

ராமலக்ஷ்மி said...

அண்ணாமலையான் said...

//உங்களுக்கு ஒன்னு சொல்லனுமே? அது..
புத்தாண்டு வாழ்த்துக்கள்...//

உங்களுக்கும் அதையே நான் அன்புடன் திருப்பி சொல்லிக் கொள்கிறேன் அண்ணாமலையான்.

ராமலக்ஷ்மி said...

aambal samkannan said...

//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் தாமதமான எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி Aambal Samkannan!

ராமலக்ஷ்மி said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம்//

மிக்க நன்றி நடராஜன்!

ராமலக்ஷ்மி said...

குப்பன்.யாஹூ said...

//NEW YEAR WISHES, NICE PHOTOS, THANKS FOR SHARING//

நன்றிகள் குப்பன்.யாஹூ.

ராமலக்ஷ்மி said...

அபி அப்பா said...

//அடடா தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! புத்தாண்டு வாழ்த்துக்கள். படம் எல்லாம் சூப்பரோ சூப்பர்.//

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி அபி அப்பா!

//@ஹுஸைன் அம்மா!

என் பிரண்ட் ரொம்ப பிரபலம் தான் தெரியாதா! என்ன போங்க!//

பதிவர்கள் நம் பலரையும் புத்தாண்டின் முதல்நாள் தினமணியில் நிஜமாகவே பிரபலமாக்கி விட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா அபி அப்பா:)?

ராமலக்ஷ்மி said...

அத்திரி said...

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

என் நன்றிகள் அத்திரி.

ராமலக்ஷ்மி said...

அனுஜன்யா said...

// 1. பிறந்த நாள் வாழ்த்துகள் (வழக்கம் போல் தாமதம் ம்ம்ம்ம்)//

லேட்டஸ்டா வந்த வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்:)!

//2. புகைப்படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. திருச்செந்தூரில் கடல்-அலை படம்?//

Thanks. பொதுவாக திருச்செந்தூரில் பக்தர் கூட்டம் என்றாலே கடல்-அலை இதைத்தான் சொல்வார்கள். நான் போன சமயம் அத்தனை இல்லைதான் என்றாலும்.., build up எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது:)!

// 3. ஹா ஹா இப்ப தான் 75 ஆ? நம்மள விடவும் ஸ்லோவா ஒருத்தரா? வாழ்த்துகள் //

ஹி.., ஸ்லோவாக செல்வதிலும் இருக்கிறது ஒரு பெரிய சவுகரியம் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்:)!

ராமலக்ஷ்மி said...

வல்லிசிம்ஹன் said...

//அருமையான, தெய்வீகமான படங்களைப் போட்டு அசத்திவிட்டீர்கள். உழைப்பும் நேர்த்தியும் பளிச்சிட்டுகின்றன.
மிக்க நன்றி.//

அத்தனை படங்களையும் பெரிதாக்கி பார்டர் கொடுத்து வலையேற்ற நிரம்ப நேரம் எடுத்ததுதான் வல்லிம்மா. அதைக் கூர்மையாகக் கவனித்துப் பாராட்டியிருப்பதற்கு என் நன்றிகள். புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

பிரியமுடன்...வசந்த் said...

// 75வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்...!//

//உங்க பேட்டியும் படித்தேன் அருமை...!//

நன்றி நன்றி வசந்த்!

//யானையும் ,முதலில் இருக்கும் கோபுரமும் பளிச்ன்னு எடுத்துருக்கீங்க...!//

பிடித்தனவா? பதிவைப் பார்த்து விட்டு முதல் கோபுரப் படத்தின் blow-up வேண்டுமென U.S-ல் இருக்கும் தங்கை ஃபோன் செய்தாள். அங்குள்ளவர்கள் பெரிதும் விரும்பி ரசிப்பார்கள், வீட்டில் மாட்டிக் கொள்கிறேன் என!

//ரகசியம் எனக்கு மட்டும் சொல்லுங்க மேடம் எந்த கேமராவுல படமெல்லாம் எடுக்குறீங்க?//

சீரியஸாகவே கேட்கிறீர்களா:)?
அப்படியெனில்..
Sony Cyber-shot W80,
Nikon Coolpix 3700
இரண்டையுமே கைப்பையில் வைத்திருப்பேன்.

//தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

இவ்வருடம் போலவே 2010லும் சிறந்த படைப்புகள் தருக....!//

வாழ்த்துகக்ளுக்கும் நன்றி வசந்த். முடிந்தவரை நல்ல படைப்புகள் தர முயற்சிப்பேன்:)!

ராமலக்ஷ்மி said...

நசரேயன் said...

//புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

நன்றி நசரேயன்.

ராமலக்ஷ்மி said...

பா.ராஜாராம் said...

//பிறந்த நாள்,எழுபத்தைந்தாவது பதிவு,மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா!//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பா ரா!

ராமலக்ஷ்மி said...

Nundhaa said...

//மிக அருமையான ஒளிப்படங்கள் ... ரசித்தேன்//

உங்கள் ஒளிப்படங்களை நானும் வியந்து ரசித்திருக்கிறேன் நந்தா. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

நினைவுகளுடன் -நிகே- said...

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....//

மிக்க நன்றி நிகே!

ராமலக்ஷ்மி said...

கவிநயா said...

//வாவ்! அசத்தல், அத்தனை படங்களும்!//

ரசனைக்கு நன்றி கவிநயா:)!

//உங்கள் சாதனைகள் புத்தாண்டிலும் மென்மேலும் தொடர, இன்னும் பலப்பல சிகரங்கள் தொட, மனமார்ந்த வாழ்த்துகள்!//

கூடவே வரும் உங்கள் வாழ்த்துக்களே புத்துணர்ச்சி!

//பேட்டியும் படிச்சிட்டேன். மீண்டும் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//

படித்தீர்களா:)? நன்றி!

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...

// எழுபத்தைந்தாவது பதிவின் வாழ்த்துக்கள்.

பிரமிக்க வைக்கும் கோபுரப் படங்கள். என்ன ரகசியம். துல்லியம்.//

நன்றி ஸ்ரீராம். துல்லியம் எனில் காமிராவுக்கும் பங்கு உள்ளதுதானே?

// உங்கள் பேட்டியும் பிரமாதம். அத்தனை அனுபவமும் எனக்கும்...//

ஆகா நன்று:)!

//கூட சாண்டில்யனும், நாபா, கல்கி, விக்ரமன், ஜெகசிற்பியன் ..... அ.ரு.ராமநாதன்....//

பகிர்வுக்கு நன்றி. சரித்திரக் கதைகளில் மட்டும் எனக்கு ஏனோ ஈடுபாடு இல்லை. ஆயினும் கல்கியின் கதைகளே வாசித்தே ஆக வேண்டுமென நினைத்திருக்கிறேன். வாங்கியும் வைத்திருக்கிறேன்! புத்தாண்டில் அதை செய்தும் முடிப்பேன் என நம்புகிறேன்:)!

ராமலக்ஷ்மி said...

அம்பிகா said...

//படங்கள் அழகு.

பிறந்த நாள், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி அம்பிகா.

ராமலக்ஷ்மி said...

அன்புடன் அருணா said...

//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பூங்கொத்துடன் raamalakshmi!//

நன்றி அருணா, பூங்கொத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன்.

விஜய் said...

படங்கள் அழகோ அழகு

என்ன கேமரா வைத்துள்ளீர்கள்

வாழ்த்துக்கள்

விஜய்

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன் said...

//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!//

நன்றி தமிழ் பிரியன்.

ராமலக்ஷ்மி said...

goma said...

//75வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.அத்தனை படங்களும் ப்ரொஃபஷனல் டச்சோடு இருந்தன.அதிலும்
திருச்செந்தூர் படங்களில் என் மனம் கவர்ந்த படம் கடைசி படம் .அருமை.//

உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. என்னைக் கவர்ந்தபடமும் அதுவே. அதைப் பகிர்ந்திடும் ஆசையால்தான் இந்தப் பதிவுக்கான ‘தீம்’ பிறந்தது.

ராமலக்ஷ்மி said...

எம்.ரிஷான் ஷெரீப் said...

// எல்லாப் படங்களுமே அழகு.
வாழ்த்துக்கள் சகோதரி !//

மிக்க நன்றி ரிஷான்.

ராமலக்ஷ்மி said...

வருண் said...

//படங்கள் எல்லாமே நல்லா இருக்குங்க!

Happy New Year! ங்க ராமலக்ஷ்மி!//

மிகவும் நன்றி வருண்!

ராமலக்ஷ்மி said...

கண்மணி said...

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

வ்ருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கண்மணி!

ராமலக்ஷ்மி said...

அப்பாதுரை said...

// Beautiful photographs!//

Thanks a lot!

ராமலக்ஷ்மி said...

குடுகுடுப்பை said...

//வாழ்த்துகள், படங்கள் அருமை, நீங்கதான் எடுக்கறீங்களா?//

ஏனுங்க இப்படி ஒரு சந்தேகம்:)? நேரம் வாய்ப்பின் Labels-ன் கீழ் ஃபோட்டோ போட்டி என வகைப்படுத்தியிருக்கும் பதிவுகளையும் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

சின்ன அம்மிணி said...

//இனிய புத்தாண்டுச் வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

படங்கள் அத்தனையும் அழகு.//

நன்றி அம்மிணி.

// எப்படி இவ்வளவு பெரிதாக ஆக்கினீர்கள்.?//

இணையத்தில் கற்ற பாடம்தான். நந்து அவர்கள் தனது பதிவொன்றில் சொன்ன வழிமுறையின்படி படத்தை வலையேற்றிய பின்னர் html code-ல் திருத்தங்கள் செய்ய வேண்டும். சற்றே நேரம் பிடித்தாலும் ரிசல்ட் மனதுக்கு நிறைவே:)!

ராமலக்ஷ்மி said...

கிரி said...

//ராமலக்ஷ்மி படங்கள் ரொம்ப நல்லா இருக்கு..//

நன்றி.

//படங்களில் பார்டர் பினிஷிங் இன்னும் சரியாக கவனித்து எடுத்தால் இன்னும் சிறப்பாக வரும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

இனி அவ்வாறே கவனம் எடுக்கிறேன்:)! வாழ்த்துக்களுக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

thenammailakshmanan said...

// புத்தாண்டு வாழ்த்துக்கள்
ராம லெக்ஷ்மி நலமே பொலிக//

நன்றிங்க தேனம்மை லக்ஷ்மணன்.

ராமலக்ஷ்மி said...

SurveySan said...

//ஹாப்பி நியூ இயர்!//

விஷ் யு த சேம் சர்வேசன்.

//வாழ்த்துக்கள் 75க்கு :)//

500 கண்ட உங்களின் வாழ்த்துக்கள மகிழ்ச்சியைத் தருகின்றன:)!

ராமலக்ஷ்மி said...

amaithicchaaral said...

//பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.விரைவில் சதமடிக்க வாழ்த்துகிறேன்.//

நன்றி அமைதிச்சாரல். உங்கள் வாக்கின்படியே ஆகட்டும்:)!

ராமலக்ஷ்மி said...

மாதவராஜ் said...

//எழுபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி மாதவராஜ்.

ராமலக்ஷ்மி said...

கடையம் ஆனந்த் said...

//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா//

நன்றி ஆனந்த்.

ராமலக்ஷ்மி said...

வினோத்கெளதம் said...

//புகைப்படங்கள் அருமையிலும் அருமை..//

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வினோத்கெளதம்.

ராமலக்ஷ்மி said...

சரண் said...

//நூறாவது பதிவுக்கு ரொம்ப நாள் எடுக்கும்னு நினைக்குறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை மேடம். நானும்தான் நவம்பர் 24 முதல் டிசம்பர் இறுதிக்குள் 76 pathivu எழுதியிருக்கிறேன். பதிவுகளின் எண்ணிக்கையை விட அவை ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரிது.//

ஒரு மாத்த்தில் இத்தனை பதிவுகளா? வாழ்த்துக்கள்!

//ஒளிப்படங்கள் மிகவும் தரமாக இருந்தன. விழாக்களை படம் பிடிக்கும் கேமராமேன் என்ற வகையில் நான் மிகவும் ரசித்த படங்களில் இவைகளுக்கும் இடம் உண்டு.

புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.//

பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சரண்.

ராமலக்ஷ்மி said...

நானானி said...

//பிரபல பதிவர் அவர்களுக்கு,
முதலில் ப்ளாட்டினம் பதிவுக்கு மனமார்ந்த வாந்த்துக்கள்!!//

பேட்டியைப் படித்து விட்டு வருகிறீர்களா:)? வாழ்த்துக்களுக்கு நன்றி.

//போட்டோகள் எல்லாம் கூர்மை!
உங்க பெரியப்பாவின் கைவண்ணம் உங்க கைகளிலும் ஒளிர்கிறது. வாழ்த்துக்கள்!!!//

அவர்களது திறமைக்கு அருகில் செல்ல இயலாது என்றாலும், இந்தப் பாராட்டு ஊக்கத்தைத் தருகிறது.

ராமலக்ஷ்மி said...

sury said...

//மதுரை மீனாட்சி கோவில் கோபுரமும் பொற்றாமரைக்குளமும் 1961ல் முதன் முதலாக மதுரையில் எனது பணிக்குச் சேர்ந்த உடன்
கோவிலுக்குச் சென்று அம்மனின் திருவருள் பெற்ற நினைவுகளைத் தந்தன.//

உங்கள் நினைவுகளை சிலகணங்கள் படம் மீட்டுத் தந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி சார்.

//மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் சுற்றத்தாருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
மீனாட்சி.
http://vazhvuneri.blogspot.com//

நன்றி. உங்கள் இருவரின் வாழ்த்துக்களை ஆசிகளாக ஏற்றுக் கொண்டேன்.

ராமலக்ஷ்மி said...

சுசி said...

//உங்க பதிவுகளுக்கும் புதுவருடத்துக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

அருமையான படங்கள்.

இந்த வருஷமும் சிறப்பான பதிவுகள எதிர்பார்க்கிறோம் அக்கா.//

பதிவுகளுக்கும் சேர்த்து வந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி சுசி. இயன்றவரை சிறப்பாகச் செயல்பட முயற்சிக்கிறேன்:)!

ராமலக்ஷ்மி said...

malarvizhi said...

//படங்கள் அனைத்தும் அற்புதம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி மலர்விழி.

ராமலக்ஷ்மி said...

புலவன் புலிகேசி said...

//புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றிகள் புலவன் புலிகேசி.

ராமலக்ஷ்மி said...

சிங்கக்குட்டி said...

//தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "LAND MARK - July PiT மெகா போட்டிக்கு" இடுகையை படித்தேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

நன்றிகள் சிங்கக்குட்டி. சமூகம் பிரிவிலும் என் பதிவு முதல் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ராமலக்ஷ்மி said...

பலா பட்டறை said...

//அருமையான புகை படங்கள் இனிதே துவங்கிய புத்தாண்டு இனிதே தொடர வாழ்த்துகள் ..:))//

நன்றிகள் பலா பட்டறை.

// நானும் கேமராவ
தூக்கிட்டு போக சோம்பேறித்தனப்பட்டுகிட்டு இருக்கும்போது உங்கள் பதிவு உற்சாகம் தருகிறது... நன்றி.//

வாங்க வாங்க. கேமிராவைத் தூக்கிடுங்க:)! இதுதானே வேண்டும்.

ராமலக்ஷ்மி said...

" உழவன் " " Uzhavan " said...

//புகைப்படம் எடுப்பதில் தாங்கள் மிகத் தேர்ந்தவர் என்பதை நான் மட்டுமல்ல; இந்த உலகே அறியும் :-)//

'லேண்ட் மார்க்’ முதல் சுற்றில் வந்து விட்டதுதான்:)!

//தமிழ்மண முதல் சுற்றில் தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!//

நன்றி உழவன். கடந்த வருடம் போலவே முதல் சுற்றுவரை வர முடிந்ததில் மகிழ்ச்சி.

ராமலக்ஷ்மி said...

சுந்தரா said...

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா!

புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தலங்களை நேரில் பார்த்த உணர்வைத் தந்தன.

நன்றி!//

நன்றி சுந்தரா. உங்கள் பாராட்டு மகிழ்ச்சியைத் தருகிறது.

ராமலக்ஷ்மி said...

ஈ ரா said...

//அருமையான படங்களுடன் ஒரு நிறைவான வாழ்த்திப் பெற்ற மகிழ்ச்சி...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

எனக்கு சங்கரன் கோவில் "கோமதி யானை " நினைவு வந்தது..//

எங்கள் நெல்லை கோவிலில் காந்திமதி யானை:)! நன்றிகள் ஈரா.

ராமலக்ஷ்மி said...

RAMYA said...

//படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு!

அந்த கோபுர படத்தினால் கோபுர தரிசனம் முடித்த ஒரு திருப்தி மனதிற்கு கிடைத்தது..//

மகிழ்ச்சி ரம்யா.

//உங்களின் எழுபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

விரைவில் நூறு எழுத வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

புளியங்குடி said...

//அருமையான புகைப்படங்கள். தொடரட்டும்.//

நன்றி புளியங்குடி. பகிர்வுகள் அவ்வப்போதெனத் தொடரும்.

ராமலக்ஷ்மி said...

hayyram said...

//fentastic photos.

thanks//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

விஜய் said...

//படங்கள் அழகோ அழகு

என்ன கேமரா வைத்துள்ளீர்கள்

வாழ்த்துக்கள்//

பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி விஜய். Sony Cyber-shot W80 &
Nikon Coolpix 3700!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// ராமலக்ஷ்மி said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம்//

மிக்க நன்றி நடராஜன்! ///

மேடம் என் பெயர் நடராஜன் இல்லை ; என் பெயர் ஸ்டார்ஜன் . திருத்திக் கொள்ளவும் .

ராமலக்ஷ்மி said...

@ Starjan ( ஸ்டார்ஜன் )

தவறுக்கு வருந்துகிறேன் ஸ்டார்ஜன். உங்களது ப்ரொஃபைலில் முழுப்பெயரை அவ்வாறாகப் பார்த்ததாகவே மனதில் நினைத்து விட்டிருந்தேன். இனி தவறு நேராது! மீள் வருகைக்கும் உடன் திருத்தியமைக்கும் நன்றி.

Chitra said...

HAPPY BIRTHDAY, akka! HAPPY NEW YEAR! Best wishes for more to come........!

ஸ்ரீராம். said...

வேறு இடுகை இடப் பட்டுள்ளதா என்று பார்க்க வரும்போதெல்லாம் மீண்டும் கோபுரம் பார்த்துச் செல்கிறேன். நல்ல கேமிரா இருந்தால் மட்டும் போதாதே...!
கூடலழகர் கோவில் கோபுரம்...அருகில் யார் வீட்டு மாடியிலாவது நின்று எடுக்கப் பட்டதோ? அங்கு அந்தக் கோணம் சாத்தியமில்லையே..

அ.ரு. ராமநாதனின் குண்டு மல்லிகை, நா பாவின் சமுதாய வீதி, குறிஞ்சிமலர் எல்லாம் சரித்திரக் கதை இல்லையே...

ராமலக்ஷ்மி said...

Chitra said...

// HAPPY BIRTHDAY, akka! HAPPY NEW YEAR! Best wishes for more to come........!//

சித்ரா விடுமுறை இனிதே கழிந்ததென அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு நன்றி!

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...

//வேறு இடுகை இடப் பட்டுள்ளதா என்று பார்க்க வரும்போதெல்லாம் மீண்டும் கோபுரம் பார்த்துச் செல்கிறேன். நல்ல கேமிரா இருந்தால் மட்டும் போதாதே...!//

என்ன சொல்ல வருகிறீர்கள், இது பாராட்டுதானே:)?

//கூடலழகர் கோவில் கோபுரம்...அருகில் யார் வீட்டு மாடியிலாவது நின்று எடுக்கப் பட்டதோ? அங்கு அந்தக் கோணம் சாத்தியமில்லையே..//

மிகக் கூர்மையாகக் கவனித்துச் சரியாகக் கேட்டிருக்கிறீர்கள்! மதுரை நகரையொட்டியிருக்கும் அழகர் கோவில் செல்ல நேரம் கிடைக்கவில்லை. இந்த கூடலழகர் கோவில் நகரத்தின் உள்ளேயே இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் மாடி லாபியிலிருந்து எடுத்தது. அதனாலேயே பிரகாரமும் சேர்த்து ஃப்ரேமுக்குள் கொண்டு வர முடிந்தது:)!

//அ.ரு. ராமநாதனின் குண்டு மல்லிகை, நா பாவின் சமுதாய வீதி, குறிஞ்சிமலர் எல்லாம் சரித்திரக் கதை இல்லையே...//

இல்லவே இல்லைதான். கல்கியின் கதைகளைப் படிக்காமல் போனதற்கான காரணத்தைதான் கூறியுள்ளேன் அப்படி. சொன்னவிதம் தவறான புரிதலையே தர வாய்ப்பு:)! மேலும் என் பேட்டியின் ஆரம்பமே இப்படித்தான்: ”என்னுடைய வாசிப்பு என்பது பகிர்ந்திடும் அளவுக்கு அத்தனை விசாலமானது அல்ல”. ஆக, நீங்கள் குறிப்பிட்டவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர வாசித்ததில்லை!

மீள் வருகைக்கு நன்றிகள்! சீக்கிரமே வரும் அடுத்த பதிவு:)!

கார்த்திக் said...

வாழ்துக்கள்கா

படங்கள் எல்லாம் செம மிரட்டலா இருக்குங்க

நீங்க எங்கையோ போயிட்டீங்க

எல்லாப்படங்களும் செம அழகுக்கா :-))

ராமலக்ஷ்மி said...

கார்த்திக் said...

//வாழ்துக்கள்கா

படங்கள் எல்லாம் செம மிரட்டலா இருக்குங்க//

நன்றி கார்த்திக்.

//நீங்க எங்கையோ போயிட்டீங்க

எல்லாப்படங்களும் செம அழகுக்கா :-))//

அட ஆமா கார்த்திக். எங்கேயோதான் போயிட்டேன் போலிருக்கு:))!

வலையுலகம் பக்கம் அதிகம் நீங்கள் வருவதில்லை என்பதால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புகைப்படப் பிரிவில் தமிழ்மணத்தின் வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்கிறது 2009ஆம் ஆண்டின் விருதாக:)!

ராமலக்ஷ்மி said...

மின்மடல் வழியாக:

//Hi Ramalakshmi,

Congrats!

Your story titled 'சில ஸ்தலங்கள்.. சில படங்கள்.. பலப்பல நன்றிகள்..!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 31st December 2009 04:28:03 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/162469

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

All pictures are nice.

ராமலக்ஷ்மி said...

@ இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin