திங்கள், 27 பிப்ரவரி, 2017

சின்னஞ்சிறு தேன் சிட்டு

#1

ண்மூடித் திறக்கும் முன் மலருக்கு மலர் தாவி தேனை உறிஞ்சி விட்டு மின்னல் வேகத்தில் பறந்து விடும் சின்னஞ்சிறு பறவை தேன் சிட்டு. 10 செ.மீட்டருக்கும் குறைவான அளவிலானது. கூரான வளைந்த அலகைக் கொண்டது. முருங்கைப் பூக்களிலும் தேன் உண்ணுமாயினும் செம்பருத்தியே இதற்கு மிக இஷ்டம். தோட்டத்தில் அடுத்தடுத்து நான்கு வகை செம்பருத்தி மரங்கள் உள்ளன. சிகப்பு, இளஞ்சிகப்பு, அடுக்குச் செம்பருத்தி மற்றும் வெள்ளை. வெள்ளை செம்பருத்தி மரத்தில் ஒரே நேரத்தில் பத்து முதல் பதினைந்து வரை பூக்கள் பூக்கும்.  காற்றில்லாத வேளையிலும் மலர்கள் மேலும் கீழுமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தால், ‘இவன் வந்து விட்டான்’ என்று பொருள் :)! 

#2
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/32950185392/
‘கொஞ்சம் இருப்பா.. மின்னல்..’ எனக் கெஞ்சிய படியே கேமராவில் இவனை சிறை பிடிக்கப் பலமுறை முயன்று, பலனளிக்காமலே போயிருக்கிறது.  ‘சிட்டாகப் பறந்தான்.. பறந்தாள்..’ எனும் உவமைகள் எத்தனை சரியானது எனப் புரிந்தது.
சென்ற வாரம் ஓசைப் படாமல் கதவருகே காத்திருந்து காட்சிப் படுத்திய, ஓரளவுக்கு வெற்றி கிட்டிய படங்கள்.. இங்கே..

திங்கள், 20 பிப்ரவரி, 2017

4 & 5 மார்ச், 2017 - நாகர்கோயிலில்.. புகைப்படப் போட்டி.. மற்றும் புகைப்படக் கண்காட்சி

தமிழ் நாடு வீடியோ ஃபோட்டோகிராஃபர்ஸ் அசோசியேசன் 
மற்றும் 
 புகைப்படப்பிரியன் (www.facebook.com/pugaipadapirian
ஆதரவுடன்..

கன்னியாகுமரி மாவட்ட போட்டோ வீடியோ அசோசியேசன் 
நடத்தும்..

மாபெரும் புகைப்படப்போட்டி மற்றும் புகைப்பட கண்காட்சி..

நாள்:
 மார்ச் 4 & 5 - 2017

இடம்:
வளனார் மண்டபம் , அசிசி வளாகம், வெப்பமூடு ஜங்ஷன், நாகர்கோயில்


தீம்:

வியாழன், 9 பிப்ரவரி, 2017

செங்குதச் சின்னான் (Red Vented Bulbul) - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (9)

 செங்குதச் சின்னான்
உயரம்: 20 செ.மீ
ஆயுள்:  9-10 ஆண்டுகள்

6 பிப்ரவரி 2017 தினமலர் “பட்டம்” இதழின்.. 

பக்கம் நான்கில்.. 


படத்துடன் சேகரித்த தகவல்கள்..

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

தீச்சுவாலைக் கொடி - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (8)

தீச்சுவாலைக் கொடி
#1

3 பிப்ரவரி 2017 தினமலர் “பட்டம்” இதழின் அட்டையிலும்..
“நம்மைச் சுற்றி.. நம்மைப் பற்றி..” பக்கம் நான்கிலும்..
படத்துடன், சேகரித்த தகவல்கள்..

மேலும் படங்கள்..

செவ்வாய், 10 ஜனவரி, 2017

மனதுக்குப் பிடித்த கவிதைகள்.. - சென்னை புத்தகக் கண்காட்சி 2017

3 செப்டம்பர் 2016, நவீன விருட்சம் வலைப் பக்கத்தில்..
நன்றி திரு. அழகிய சிங்கர்!
எனது நூல்களான ‘இலைகள் பழுக்காத உலகம்’ (கவிதைத் தொகுப்பு) மற்றும் ‘அடை மழை’ (சிறுகதைத் தொகுப்பு) ஆகியன, 19 ஜனவரி 2017 வரை நடைபெறவிருக்கிற 40_வது சென்னை புத்தகக் கண்காட்சியின் “புலம்” அரங்கு எண் 35 மற்றும் அரங்கு எண் 409_ல் கிடைக்கின்றன.

விருப்பமுள்ள நண்பர்கள் வாய்ப்பினைப் பயன்படுத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

**
அகநாழிகை பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் புலம் அரங்கில் கிடைக்கின்றன.

***

வியாழன், 5 ஜனவரி, 2017

கல்கியில்.. ஈரோடு கதிரின் ‘கிளையிலிருந்து வேர் வரை’ - ஒரு பார்வை


நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பது அவ்வப்போது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழுந்து அடங்கும் கேள்வி. விடை தேடுபவர் சிலர். தம் சிந்தனைக்கு எட்டிய வகையில் ஒரு பதிலைக் கண்டு திருப்தி அடைந்து விடுபவர் பலர். ஆசிரியரின் பார்வையில் விரிகிற உலகம் வெகு இயல்பாக இந்தத் தேடலைப் பூர்த்தி செய்கிறது. ‘நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்' என்றே தன்னை அழைத்துக் கொள்ளும் ஈரோடு கதிர் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், நாம் மிகச் சாதாரணமாகக் கடந்து விடும் அன்றாட நிகழ்வுகளையும் சாதாரண மனிதர்களையும் தன் ஆழ்ந்த அவதானிப்பால் புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறார். ..

8 ஜனவரி 2017 இதழில்.. 

புதன், 4 ஜனவரி, 2017

சல்லடைக் கூடு கட்டும் புள்ளிச் சில்லை - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (7)

2 ஜனவரி 2017 தினமலர் “பட்டம்” இதழின் அட்டையிலும்..
நம்மைச் சுற்றி.. நம்மைப் பற்றி.. பக்கத்திலும்..
படத்துடன், சேகரித்த தகவல்கள்..

சல்லடைக் கூடு அமைக்கும் சில்லைப் பறவை 

ஆங்கிலப் பெயர்:  SPOTTED MUNIA
வேறு பெயர்கள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin