புகைப்படப் பிரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புகைப்படப் பிரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 பிப்ரவரி, 2017

4 & 5 மார்ச், 2017 - நாகர்கோயிலில்.. புகைப்படப் போட்டி.. மற்றும் புகைப்படக் கண்காட்சி

தமிழ் நாடு வீடியோ ஃபோட்டோகிராஃபர்ஸ் அசோசியேசன் 
மற்றும் 
 புகைப்படப்பிரியன் (www.facebook.com/pugaipadapirian
ஆதரவுடன்..

கன்னியாகுமரி மாவட்ட போட்டோ வீடியோ அசோசியேசன் 
நடத்தும்..

மாபெரும் புகைப்படப்போட்டி மற்றும் புகைப்பட கண்காட்சி..

நாள்:
 மார்ச் 4 & 5 - 2017

இடம்:
வளனார் மண்டபம் , அசிசி வளாகம், வெப்பமூடு ஜங்ஷன், நாகர்கோயில்


தீம்:

செவ்வாய், 3 மார்ச், 2015

நாகர்கோவிலில் புகைப்படப்பிரியனின் "எக்ஸ்போஷர் ‘15 "


ஃபேஸ்புக் ‘புகைப்படப்பிரியன்’ குழுமத்தின் வெற்றிகரமான மூன்றாம் வருட மாநாடு, வருகிற சனி-ஞாயிறு, மார்ச் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தங்கள் கடந்த இருமாத காலமாகவே நடைபெற்று வருகின்றன.  குறிப்பிட்டத் தலைப்பு எதுவுமின்றி பொதுவான சிறந்த படங்களுக்கான அழைப்புடன் புகைப்படப் போட்டி அறிவிப்பாகியிருந்தது.

வியாழன், 5 டிசம்பர், 2013

குமரியில்.. FB புகைப்படப் பிரியனின் இரண்டாவது ஒளிப்படக்கலை கருத்துப்பட்டறை

ந்தக் கலையானாலும் சரி, கற்றக் கொண்டே செல்வதில்தான் நம் திறன் மெருகேருகிறது. ‘கற்றலுக்கு முடிவே இல்லை. வாருங்கள் பகிர்ந்து கொள்வோம் அவரவர் அறிந்ததை’ என அழைக்கிறது குமரி முனைக்கு உலகத் தமிழ் புகைப்படப் பிரியர்களை, புகைப்படப் பிரியனின் "இரண்டாவது ஒளிப்படக்கலை கருத்துப் பட்டறை."!


இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒளிப்படக் கலைஞர் மெர்வின் ஆன்டோவினால் ஆரம்பிக்கப்பட்டது புகைப்படப் பிரியன் குழுமம். அது குறித்த அறிமுகமாக எனது அப்போதைய பகிர்வு இங்கே. மெர்வினின் வியக்க வைக்கும் கலைத் திறன் குறித்த எனது ‘தினகரன் வசந்தம்’ கட்டுரை இங்கே. அதிலே முதல் கருத்துப் பட்டறையில் அவர் நிகழ்த்திக் காட்டிய ‘உன்னைப் போல் ஒருவன்’ பற்றிய குறிப்பும் உள்ளது.

அழைப்பின் பேரில் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஒளிப்பட ஆர்வலர்களுக்கு தன் அனுபவத்திலிருந்து ஆலோசனைகள் வழங்கியும், அறிந்த பல வித்தைகளைக் கற்றுத் தந்தும் வருகிறார் மெர்வின் ஆன்டோ. சமீபத்தில் தூத்துக்குடியிலும், பாளையங்கோட்டையிலும் இவர் வரவால் பயன்பெற்றிருக்கின்றனர் பல தொழில் சார்ந்த புகைப்படக் கலைஞர்கள்.

ஒவ்வொரு நாளும் FB ‘புகைப்படப் பிரியன்’ குழுமத்தில் ஆர்வத்துடன் பலர் இணைந்தபடி இருக்க 7300-க்கும் அதிகமான உறுப்பினர்களோடு எட்டி நிற்கும் அதன் உறுப்பினர்களுக்காக இதோ அவரது முயற்சியில் இரண்டாவது கருத்துப் பட்டறை, 2014 ஜனவரி 25, 26 தேதிகளில்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin