வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

உலக ஒளிப்பட தினம் 2016 - கருப்பு வெள்ளையில் ஏன் படங்கள்?

ளிப்படக் கலையின் 177_வது வருடம். 19 ஆகஸ்ட், இன்று உலக ஒளிப்பட தினம். தத்தமது உலகத்தை உலகத்தோடு பகிர்ந்து கொள்ளும் அத்தனை ஒளிப்படக் கலைஞர்களுக்கும் நல்வாழ்த்துகள்!
என் முதல் கேமரா
நீங்கள் மட்டுமல்ல, பொதுவாகவே ஏன் பல ஒளிப்படக் கலைஞர்களுக்கும் சரி, ஓவியர்களுக்கும் சரி கருப்பு வெள்ளைப் படங்கள் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு..?” சமீபத்திய பதிவொன்றில் என்னிடம் எழுப்பப்பட்ட கேள்வி. வர்ணங்கள் அழகு. வர்ண மயமானது வாழ்க்கை.


இருப்பினும் அதை அப்படியே பதிவு செய்வதை விடுத்து ஏன் கருப்பு வெள்ளையில் காட்ட வேண்டும்?

இதற்குப் பல காரணங்கள். வண்ணப் படங்கள் எடுக்கும் வசதி இல்லாத நாட்களில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைக்கும் ஏன் நம் மனதை விட்டு அகலாமல் நிற்பதை மறுக்க முடியாது. கருப்பு வெள்ளைப் படங்களில்
வண்ணங்களால் ஏற்படும் கவனச் சிதறல் தவிர்க்கப்பட்டு கருப்பொருளின் மேல் கவனம் குவிகிறது. ஒளியும் நிழலும் சிறப்பாக வெளிப்படுகிறது. கருப்பு வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணங்களின் கலவையை சரி வரக் கொண்டு வருவதிலிருக்கும் சவால் பிடித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு கலைஞருக்குள்ளும் இருக்கும் தனிப்பட்ட இரசனையின் வெளிப்பாடாகவும் அமைந்து போகின்றன கருப்பு வெள்ளைப் படங்கள்.

குறிப்பாக மனிதர்களின் உணர்ச்சிகளைத் துல்லியமாகக் காட்டுவதிலும் வல்லமை வாய்ந்தவை கருப்பு வெள்ளை portrait படங்கள். ‘இல்லையென சொல்லமுடியுமா?’ கேட்கிறார்கள் இவர்கள்:

#1
‘எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும்..’

#2
‘இரவானால் பகலொன்று வந்திடுமே..’

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

தூக்கணாங்குருவிகளும் செம்மீசைச் சின்னான்களும்..

சில வாரங்களுக்கு முன் வீட்டுத் தோட்டத்தில் தினசரி மணிக்கணக்கில் தூக்கணாங்குருவிகளின் உற்சாகக் கச்சேரி. முருங்கை மரத்தில் கூடு கட்டத் துவங்கின. மளமளவென ஒன்றல்ல மூன்று கூடுகள் ஒருசில தினங்களுக்குள் முழுமை பெற்றன. எந்நேரமும் அதில் ஊஞ்சலாடிக் கொண்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டு பாட்டுப் பாடியபடி இருந்தன. கேமராவுடன் பால்கனி பக்கம் சென்றால் விர்ரென அடுத்த வீட்டு மரங்களுக்கு விரைந்தன. கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்த்து கண்ணாமூச்சி ஆடின. சரி இனி தொந்திரவு செய்ய வேண்டாமெனக் கேமராவைக் கையில் எடுக்காமல் அவற்றின் விளையாட்டுகளை நாளும் பொழுதும் இரசித்தபடி இருக்கையில் திடீரென அவற்றைக் காணவில்லை. ஐந்தாறு நாட்களாக நடந்து வந்த இசைத் திருவிழா நின்று போய் மரத்தில் பேரமைதி. குருவிகளின் சங்கீதத்தைக் கேட்க முடியாத வருத்தத்தில் கிளைகளும் இலைகளும் கூட அசையாதிருந்தன. 
#3

எங்கே சென்றிருக்கும் அவை? எங்கெங்கிருந்தோ குச்சிகளை, புற்களைச் சேகரித்து வந்து இத்தனை பொறுமையாக, இத்தனை அழகாக தேர்ந்த கட்டிடக் கலை நிபுணர்களைப் போல கட்டிய கூடுகளை அத்தனை எளிதாக ஒதுக்கித் தள்ளி விட்டுப் போய் விட்டனவா? தங்கையிடம் சொன்ன போது, ஒருவேளை உள்ளே முட்டைகள் இட்டிருக்கும், திரும்பி வருமென்றாள். அப்படியும் நடக்கவில்லை. அதன் பின் சென்ற மாத இறுதியில் அடைமழையில் கூடுகள் பேய்க்காற்றில் அலைபாய்ந்தபோது ‘முட்டைகள் இருக்குமோ.. அவை என்னாகுமோ..’ எனக் கவலையுடன் கவனித்தேன். எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் குருவிகள் நிச்சயம் அவற்றை நிர்க்கதியாய் விட்டுப் போயிருக்காதே? அவற்றின் வாழ்க்கை முறை பற்றி இணையத்தில் தேடினேன்.

சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்தன.

புதன், 10 ஆகஸ்ட், 2016

'மகிழ்ச்சி!' - கல்கி பவள விழா மலர் 2016_ல்.. என்னைக் கவர்ந்த என் புகைப்படம்..

ல்கி குழுமத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா 6 ஆகஸ்ட் 2016 அன்று சென்னையில் நடைபெற்றது.

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியால் வெளியிடப்பட்ட பவளவிழா மலரில்...
என்னைக் கவர்ந்த என் புகைப்படம்..

புதன், 27 ஜூலை, 2016

வெற்றி நிச்சயம் - டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள் (பாகம் 2)

டாக்டர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது பொன்மொழிகள் சிலவற்றின் தமிழாக்கம், எடுத்த படங்களுடன்..

1. வெற்றிக் கதைகளை மட்டுமே படிக்காதீர்கள். அவற்றிலிருந்து உங்களுக்கு செய்தி மட்டுமே கிடைக்கும். தோல்விக் கதைகளை வாசியுங்கள். வெற்றி பெற சில யோசனைகள் உதிக்கும்.  



2. ஒருவரை தோற்கடிப்பது மிக எளிதானது, ஆனால் ஒருவரை வெல்வது மிகக் கடினமானது.

ஞாயிறு, 24 ஜூலை, 2016

புதன், 20 ஜூலை, 2016

பவுர்ணமி நிலவைப் போல் பிரகாசித்த பிரம்மக் கமலம்!

#1
பிரம்மக் கமலம் ( Epiphyllum oxypetalum) மலரைக் குறித்து ஏற்கனவே 2012 ஆம் ஆண்டில் விரிவாக இங்கே.. “பத்து பிரம்மக் கமலங்கள் -  அபூர்வமாய்ப் பூத்த அதிசய மலர்கள்” பகிர்ந்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து சில வாரங்களில் என் வீட்டிலும் ஒரு தொட்டியில் ஓர் இலையை நட்டு வைத்தேன். இலையின் விளிம்புகளிலிருந்து மேலும் இலைகளும், தண்டுகளுமாய் துளிர்த்தன. அதில் ஒரு தண்டு மட்டும் சற்று தடிமனாக, மெல்ல மெல்ல உயரமாக, சுமார் எட்டடி அடி உயரத்துக்கு வளர்ந்து, வளைந்து வீட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்த்து  ‘நான் இங்கு நலமே.. நீ அங்கு நலமா..’ என விசாரித்தபடியே இருந்ததே தவிர ஒரு மொட்டு கூட விடவில்லை நான்கு வருடங்களாக. இரு மாதம் முன்னர் வீடு மாறி வந்த போது மற்ற தொட்டிச் செடிகளை அங்கிருந்த நண்பர்களுக்கு கொடுத்து விட்டாலும் இதை மட்டும் கொண்டு வந்து இங்குள்ள தோட்ட மண்ணில் நட்டு வைத்தேன். கொடி போல் வளைந்தபடி இருந்த செடியை ஒரு முருங்கை மரக் கம்பை நட்டு அதில் கட்டியும் வைத்தேன்.

நான்கு வருடக் காத்திருப்புக்குப் பின், அட, இரண்டு மொக்குகள் விட்டிருந்தது செடி, புதிய இடத்தில்.. புதிய மண்ணில்..

 மலர் விரியும் அழகு பனிரெண்டு படங்களாக உங்கள் பார்வைக்கு..

மொக்கு, நான்கைந்து நாட்கள் முன்னர்..
#2


இன்று காலையில்..
#3
#4

ஞாயிறு, 17 ஜூலை, 2016

சும்மா கரடி விடாதே..

#1
ப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள்  வாழ்வதற்கான சூழல் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. ஆங்கிலத்தில் Sloth bear எனப்படும், Melursus ursinus எனும் உயிரியல் பெயரைக் கொண்ட, பாலூட்டி விலங்கான கருங்கரடி இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி ஒரு சில விவரங்களைத் தெரிஞ்சுக்கலாமா?

#2
மற்ற வகைக் கரடிகளோடு ஒப்பிடுகையில் பெயருக்கேற்ப இவை சற்றே மந்தமானவை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin