பாகம் 1: இங்கே
கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகப் போற்றப்படும் இத்திருக்கோயில் கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், கொடி மரம், அம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்றுப் பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம் மற்றும் பிரகாரத்தில் பரிவார சன்னதிகளைக் கொண்டுள்ளது.
விநாயகருக்கு சிறிய கோபுரத்துடன் தனி மண்டபம் உள்ளது. மேலும் யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வைரவர் பீடம், வைரவர் தீர்த்தம், போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
வள்ளி, தெய்வயானையுடன் ஆறுமுகப் பெருமான், வடிவுடையம்மன், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, சரஸ்வதி, கஜலக்ஷ்மி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதி அருகே தல விருட்சமான அழிஞ்சி மரம் கல்லால் செய்து வைக்கப்பட்டுள்ளது. உள் பிரகாரத்தில் நாயன்மார்கள் அறுபத்து மூவர், கன்னி மூலை கணபதி, சிறியதும், பெரியதுமாக இரண்டு தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. அதில் பெரிய சிற்பமாக எழுந்தருளிய தட்சிணாமூர்த்தி சன்னதியைச் சுற்றி இசைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
#13
இக்கோயிலின் அழகான சிற்பங்களையும், ஓவியங்களையும், கலை வேலைப்பாடுகளையும் கண்டு ரசிக்க அதிக நேரம் அவசியம். திடீரெனத் திட்டமிட்டு சென்றதாலும் அடுத்து பிள்ளையார்பட்டி, ஆத்தங்குடி, காரைக்குடி செல்ல வேண்டியிருந்ததாலும் நிதானமாக நேரம் செலவழிக்க இயலவில்லை. வாய்ப்புக் கிடைக்கையில் மீண்டும் செல்ல வேண்டும்.
#16
கண்கவரும் அந்தக் கட்டிடக்கலையை அருமையாக எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு