சனி, 10 ஜனவரி, 2015

கனவும் இலக்கும்

#1
“குரலை உயர்த்தாமல், வார்த்தைகளை உயர்த்துங்கள்.
இடியல்ல, மழையே பூக்கச் செய்கிறது மலர்களை.” -ரூமி


#2
“புதிதாய் ஒன்றைத் தொடங்க அதில் முழுதாய்த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால் தேர்ச்சியுற, ‘தொடங்குதல்’ அவசியம்.”
- Joe Sabha

#3
“கடந்த காலம் எத்தனைக் கடினமானதாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். மீண்டும் தொடங்கலாம் எப்போதும்.”
_ புத்தர்


#4
நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை எனச் சலிப்புறாமல், எண்ணிப் பார்ப்போம் இதுவரை கிடைத்த வரங்களை.

#5
“எதுவும் நிரந்தரமில்லை. நமது பிரச்சனைகளும் கூட.”
 _ Charlie Chaplin

#6
அற்புதங்களில் நம்பிக்கையற்றவர்களுக்கு அது நிகழ்வதேயில்லை.

#7
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் ஏற்படும் பயம் தற்காலிகமானது. செய்யாமலே போவதால் ஏற்படக் கூடிய வருத்தமோ நிரந்தரமானது.

#8
உற்றுக் கவனிப்பவர்களுக்கே கேட்கிறது பூமியின் இசையும், பூப்பூக்கும் ஓசையும்.

#9
“பிரச்சனைகளால் உந்தித் தள்ளப்பட்டு நகராதீர்கள். உங்கள் கனவுகளால் செலுத்தப்படுங்கள்.”
_Ralph Waldo Emerson


#10
"எட்டாத உயரத்தில் இலக்கை வைத்து அதை அடைய இயலாமல் போவதில் ஆபத்து ஏதுமில்லை. கைக்கெட்டும் தூரத்தில் வைத்து, எளிதில் அடைந்து, திருப்தியும் கொள்வதே அபாயகரமானது."
- Michelangelo

எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது.
***

12 கருத்துகள்:

  1. வாசகங்களும் பூக்களும் அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்களுடன் பொன்மொழிகள் அற்புதம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஆனந்த முடிச்சுகள் உங்கள் வரிகள் ராமலக்ஷ்மி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. படங்களும் பொன்மொழிகளும் மிக அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin