செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

வாசிப்பில் உயிர்த்திருக்க.. “அகநாழிகை புத்தக உலகம்”

அவசர உலகின் அழுத்தங்களிலிருந்து ஆசுவாசமாகவும், உலகையும் மனிதர்களையும் புரிந்து கொள்ளவும், அறிவைச் செதுக்கிக் கொள்ளவும், மனதைப் பண்படுத்திக் கொள்ளவும் உற்ற நண்பனாக என்றும் உடன் வருபவை புத்தகங்களே. நேரம் கிடைக்கையில் வாசிப்பவர்.. வாசிக்கவென நேரத்தை ஏற்படுத்திக் கொள்பவர்.. இவர்களுக்கு மத்தியில்,
வாசிப்பை சுவாசமாக நேசிக்கும் அகநாழிகை பொன்.வாசுதேவன், நண்பர் மணிஜியுடன் இணைந்து தொடங்கியிருக்கிறார் சென்னை அண்ணாசாலையில் அகநாழிகை புத்தக உலகத்தை.
சென்ற சனிக்கிழமை “வாசிப்பில் உயிர்த்திருப்போம்” என வரவேற்ற திறப்பு விழாவுக்கு முக்கிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், பதிவர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
முன்னணிப் பதிப்பகத்தின் அனைத்துப் புத்தகங்களும், இலக்கியம், வரலாறு, சுயமுன்னேற்றம் என அனைத்து வகைகளிலும் கிடைக்கிறது. நண்பர்களின் தேவைகளுக்கேற்ப புத்தகங்களைப் பரிந்துரைப்பதிலும் சிறந்தவர் வாசுதேவன். கவிதைத் தொகுப்புகள் பலவும் இவரது பரிந்துரையின்படி வாங்கியதுண்டு. அகநாழிகை இலக்கியப் பத்திரிகையில் எனது கவிதைகளை வெளியிட்டு ஊக்கம் தந்திருக்கிறார். சட்டம் படித்துத் தொழில் செய்து வருபவர், வாசிப்பின் மீதும் இலக்கியத்தின் மீதும் கொண்டத் தீராதக் காதலால் அந்த வழியில் பயணப்படுவது புத்தகப் பிரியர்களின் அதிர்ஷ்டமும் கூட.
சென்னைவாசிகள் மட்டுமின்றி உலகின் அனைத்துப் பாகங்களிலிருக்கும் நண்பர்களின் வசதிக்காக இணைய வழிப் புத்தக விற்பனைக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்:
 http://aganazhigaibookstore.com/ 

மின்னஞ்சல்: aganazhigai@gmail.com
அலைபேசி எண்கள்: 999 454 1010 / 988 407 5110
வலைத்தளம்: www.aganazhigai.com

வாசிப்பு ஒரு கலாச்சாரத்தின், நல்ல சமூகத்தின் அடையாளம். அதற்கான விதைகளைத் தூவியிருக்கிறார்கள். அந்த விதைகள் வரும் தலைமுறைகளும் இளைப்பாற நிழல் தரும் விருட்சங்களாக வாழ்த்துவோம். புத்தகங்களை வாங்கிப் பயன் பெறுவோம்.
***

23 கருத்துகள்:

  1. அவருக்கு 'எங்கள்' வாழ்த்துகள்.

    ஒருதரம் சென்று பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. சென்னை வருகையின் போது
    செல்லுகிற எண்ணம் உள்ளது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  3. தகவலுக்கு நன்றி..போய் பார்க்கனும் வாங்கனும்’

    பதிலளிநீக்கு
  4. நல்ல தகவல் ராமலக்ஷ்மி.
    அகநாழிகை புத்தக உலகத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

    அகநாழிகை புத்தக உலகத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அகநாழிகை பற்றிய அருமையான தகவல்களுக்கு
    நன்றிகள் பல சகோதரி...

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள தகவல் தந்துள்ளமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. மிகவும் பிரயோசனமாக இருக்கும். வாழ்த்துகள்.

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. @ஸ்ரீராம்.,

    சென்று வந்து எங்கள் ப்ளாகில் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி ஸ்ரீராம்:)!

    பதிலளிநீக்கு
  10. @அமைதி அப்பா,

    நேரமிருக்கையில் சென்று வாருங்கள். நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin