திங்கள், 21 டிசம்பர், 2009

பவனி


பளபளக்கும் பட்டுடையும்
மினுமினுக்கும் நகைநட்டும்
சரிகை இழையோடும்
தலைப்பாகையுமாய்..
அலங்கரித்த
வெண்புரவிகளில்
கம்பீரமாய் பெருமிதமாய்
அரசத்தம்பதியர் வீற்றுவர
கண்நூறுதான் கண்டுமகிழ..

ஊர்உலா முடிந்து
உடைமாற்றி நகை களைந்து
நின்றார்கள் கூலிக்கு
இன்றாவது கிடைக்குமாவென..

கனைக்காத குதிரைக்குக்
கால்களாய் இருந்த
களைப்பு மிகுதியில்
ராஜாவும்..
செழிக்காத கலைக்குச்
சேவகியாய்-
மெய் வருத்திப்
பொய்க் களிப்புடன்
பவனிவந்த ராணியும்!
***



படம் நன்றி: வடக்கு வாசல்
[இக்கவிதைக்காகவே ஓவியர் சந்திர மோகன் வரைந்தது].


  • 'வடக்கு வாசல்' பத்திரிகையின் டிசம்பர் 2009 இதழிலும் மற்றும் அதன் இணைய தளத்திலும் வெளிவந்துள்ள கவிதை.



97 கருத்துகள்:

  1. //ஊர்உலா முடிந்து
    உடைமாற்றி நகை களைந்து-
    நின்றார்கள் கூலிக்கு
    இன்றாவது கிடைக்குமாவென../


    நிதர்சனம்!

    ஆட்டம் கொண்டாட்டங்களில் களித்திருந்து செல்லும் கூட்டத்தினருக்கு என்ன தெரியும் ஆடியவர்களின் ரணம்?

    [மனதினுள் சட்டென்று ரணத்தினை உண்டாக்கும் எந்த கவிதையும் அமரத்துவம் பெறுகிறது!]

    பதிலளிநீக்கு
  2. ஆயில்யன் said...

    //நிதர்சனம்!

    ஆட்டம் கொண்டாட்டங்களில் களித்திருந்து செல்லும் கூட்டத்தினருக்கு என்ன தெரியும் ஆடியவர்களின் ரணம்?//

    உண்மைதான் ஆயில்யன். நலிந்து வரும் கலையேயாயினும் அதற்கு நாயகர்களாய் காவலர்களாய் இருப்பதைப் பெருமிதமாகக் கருதி கிடைக்கின்ற வருமானத்தில் காலத்தை ஓட்டும் இவர்களின் பேட்டியினைப் பொதிகையில் பார்க்க நேர்ந்தது.

    //[மனதினுள் சட்டென்று ரணத்தினை உண்டாக்கும் எந்த கவிதையும் அமரத்துவம் பெறுகிறது!]//

    கால் முட்டியிலிருந்து பாதம் வரை க்ரேப் பேண்டேஜ் போன்ற துணியினை வலுசேர்க்கக் கட்டிக் கொண்டு இரண்டடி உயரக் கட்டைகளைப் பாதங்களுக்கடியில் பொருத்திக் கொண்டு முழுஈடுபாட்டுடன் அநாயசமாய் ஆடி பிரமிக்க வைத்தாலும் அவர்களது பொருளாதார நிலை மனதில் வலியைத்தான் ஏற்படுத்துகிறது!

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  3. அருமை!அருமை!

    என்றும் வாழ வேண்டும்
    கலைகளும்,கலைஞர்களும்.

    பதிலளிநீக்கு
  4. சுமந்தவனின் வலி அழகான கவிதையாக, மிக உண்மையாக.

    பதிலளிநீக்கு
  5. //பளபளக்கும் பட்டுடையும்
    மினுமினுக்கும் நகைநட்டும்
    சரிகை இழையோடும்
    தலைப்பாகையுமாய்..
    அலங்கரித்த
    வெண்புரவிகளில்
    கம்பீரமாய் பெருமிதமாய்
    அரசத்தம்பதியர் வீற்றுவர-
    கண்நூறுதான் கண்டுமகிழ..

    ஊர்உலா முடிந்து
    உடைமாற்றி நகை களைந்து-
    நின்றார்கள் கூலிக்கு
    இன்றாவது கிடைக்குமாவென..//

    துணை நடிகர்கள் மனதில் வந்துபோகிறார்கள் சகோதரி.
    வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. கடைக்கோடி மனிதர்களின் கஷ்டத்தை கவிதையாய் வடித்திருப்பது அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஆயில்யன் சொல்லவேண்டியதை சொல்லி விட்டார். வடக்கு வாசலில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

    உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
    ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

    பதிலளிநீக்கு
  9. //ஊர்உலா முடிந்து
    உடைமாற்றி நகை களைந்து-
    நின்றார்கள் கூலிக்கு
    இன்றாவது கிடைக்குமாவென..//

    நலிந்த கலைஞர்களின் வலி..நல்ல கவிதைங்க

    பதிலளிநீக்கு
  10. எல்லாருமே ஒருவிதத்தில் போலி வாழ்க்கைதான் வாழ்கிறார்களீ.

    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  11. அருமை அக்கா.

    அப்டியே யதார்த்தத்தை கவிதை ஆக்கி இருக்கீங்க.

    மனத் திரையில் காட்சி தானாக உருவாகிறது.. :(

    பதிலளிநீக்கு
  12. மிக ரசித்தேன் ... புதியதோர் கோணம்...அருமையான வரிகோர்ப்பு..... பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. கவிதை அருமை. வடக்கு வாசல் பிரவேசத்திற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. ஊர் திருவிழாவில் கோயில் கொடையையும், நலிந்த கலைஞர்களின் நிலையையும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப எதார்த்தமா நல்லா எழுதியிருக்கீங்க மேடம்

    //ஊர்உலா முடிந்து
    உடைமாற்றி நகை களைந்து-
    நின்றார்கள் கூலிக்கு
    இன்றாவது கிடைக்குமாவென//

    இந்த வரிகள் ஒரு வித மன பாதிப்பை உருவாக்குகின்றது...!

    :(

    பதிலளிநீக்கு
  16. 'செழிக்காத கலைக்குச்
    சேவகியாய்''

    உண்மைதான் மேடம் இதுபோல் இன்னும் எத்தனையோ சேவகிகள் ஆனால் பாராட்டத்தான் ஆளில்லை.

    பதிலளிநீக்கு
  17. பவனி யில் பவனி வந்த இந்த வரிகள் எனக்கு பிடிச்சது \\கனைக்காத குதிரைக்குக்
    கால்களாய் இருந்த
    களைப்பு மிகுதியில்
    ராஜாவும்..
    செழிக்காத கலைக்குச்
    சேவகியாய்-//

    பதிலளிநீக்கு
  18. தங்கள் சரத்தில் மற்றுமொரு முத்து!

    /செழிக்காத கலைக்குச்
    சேவகியாய்-
    மெய் வருத்திப்
    பொய்க் களிப்புடன்
    பவனிவந்த ராணியும்!/

    ஹ்ம்ம்...:-(

    பதிலளிநீக்கு
  19. அழகா.. இயல்பா.. கடைசியில் மனதிலறையும் நிதர்சனம்... நல்லா இருக்குங்க..

    பதிலளிநீக்கு
  20. பகல் முழுக்க பட்டினி இருந்தாலும் ராத்திரியில் ராஜா வேஷம் போடற சுகம் பத்தி ராஜபார்ட் ரங்கதுரையில் சிவாஜி பேசும் வசனம் ஞாபகம் வந்தது...

    பதிலளிநீக்கு
  21. அருமை அருமை.. இப்படி வாழ்க்கையை எழுத்தாக்குவதும், அதைப் படிப்பதும்தான் மனதைத் தொடுகின்றன.
    வடக்கு வாசலுக்கு வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  22. கண் முன்னே காட்சியாய்
    தங்களின் கவிதை

    அற்புதம்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  23. அப்பாடா. இன்னைக்கி படிச்சதுலயே என் மண்டைக்கு புரிஞ்ச ஒரே கவித இத்தான்... வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  24. \\ஆயில்யன் said

    //[மனதினுள் சட்டென்று ரணத்தினை உண்டாக்கும் எந்த கவிதையும் அமரத்துவம் பெறுகிறது!]//

    உங்கள் கவிதையும் அமரத்துவம் பெறுகிறது.

    பதிலளிநீக்கு
  25. பொய்க்கால் குதிரையில் பவனிவரும் ராஜா ராணியைத்தான் சொல்றீங்களா?

    உண்மையிலேயே இங்கே களைப்படையும் கால்கள்தான் மெய் மற்றதெல்லாம் பொய்.

    இதை ஏன் பொய்க்கால் குதிரைனு சொல்றாங்கனு தெரியலை!

    உண்மையான ராஜா ராணிபோல் இல்லாமல் தாங்களால் எல்லோரையும் மகிழ்விக்க முடிகிறதே என்று நினைத்து திருப்தியடைய வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  26. ஆகா அருமை
    பிறந்தநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  27. /*கனைக்காத குதிரைக்குக்
    கால்களாய் இருந்த
    களைப்பு மிகுதியில்
    ராஜாவும்..
    செழிக்காத கலைக்குச்
    சேவகியாய்-
    மெய் வருத்திப்
    பொய்க் களிப்புடன்
    பவனிவந்த ராணியும்!*/
    மனம் கனத்தது நிதர்சனத்தை எண்ணி...

    பதிலளிநீக்கு
  28. முதல் பாராவில் பார்வையாளர்கள் பார்வையில்.. பின்பு நிஜம்.. அருமை

    பதிலளிநீக்கு
  29. கனைக்காத குதிரைக்குக்
    கால்களாய் இருந்த
    களைப்பு மிகுதியில்
    ராஜாவும்..
    செழிக்காத கலைக்குச்
    சேவகியாய்....

    அட்ட‌காச‌ம்

    பதிலளிநீக்கு
  30. வேஷமிட்ட வாழ்க்கைத்திரைக்குப்பின் ஓசையின்றிக் கேட்கும் விம்மல்களைக்கூட அழகாகப் படம்பிடிச்சிருக்கீங்க ராமலக்ஷ்மி அக்கா.

    கவிதை அருமை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  31. எம்.எம்.அப்துல்லா said...

    //அருமை!அருமை!

    என்றும் வாழ வேண்டும்
    கலைகளும்,கலைஞர்களும்.//

    மனதார வாழ்த்துவோம் இவ்வாறாக. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அப்துல்லா.

    பதிலளிநீக்கு
  32. tamiluthayam said...

    // சுமந்தவனின் வலி அழகான கவிதையாக, மிக உண்மையாக. //

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் தமிழ்உதயம்.

    பதிலளிநீக்கு
  33. எம்.ரிஷான் ஷெரீப் said...

    //துணை நடிகர்கள் மனதில் வந்துபோகிறார்கள் சகோதரி.
    வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்.//

    துணை நடிகர்கள் வாழ்வும் இப்படியாகத்தான் உள்ளன பெரும்பாலும். வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள் ரிஷான்.

    பதிலளிநீக்கு
  34. துபாய் ராஜா said...

    // கடைக்கோடி மனிதர்களின் கஷ்டத்தை கவிதையாய் வடித்திருப்பது அருமை. வாழ்த்துக்கள்.//

    கவனிக்கப்பட வேண்டும் அவர்களது கஷடம் என்கிற ஆதங்கித்தில்தான். வாழ்த்துக்களுக்கு நன்றி துபாய் ராஜா.

    பதிலளிநீக்கு
  35. தமிழ் பிரியன் said...

    // ஆயில்யன் சொல்லவேண்டியதை சொல்லி விட்டார். வடக்கு வாசலில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!//

    ஆயில்யனின் கருத்தை வழிமொழிந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  36. goma said...

    //அருமையான சிந்தனை//

    கருத்துக்கு மிக்க நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  37. புலவன் புலிகேசி said...

    //நலிந்த கலைஞர்களின் வலி..நல்ல கவிதைங்க//

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி புலவன் புலிகேசி.

    பதிலளிநீக்கு
  38. சின்ன அம்மிணி said...

    //எல்லாருமே ஒருவிதத்தில் போலி வாழ்க்கைதான் வாழ்கிறார்களீ.

    நல்ல கவிதை.//


    உண்மைதான் அம்மிணி. நேரம் வருகையில் நிதர்சனத்தைச் சந்தித்துதான் ஆக வேண்டிய சூழலில். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. சுசி said...

    //அருமை அக்கா.

    அப்டியே யதார்த்தத்தை கவிதை ஆக்கி இருக்கீங்க.

    மனத் திரையில் காட்சி தானாக உருவாகிறது.. :( //

    நிஜவாழ்வில் காட்சிகள் விரைவில் மாறி கலைகள் செழிக்க வாழ்த்துவோம்.

    கருத்துக்கு நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  40. சி. கருணாகரசு said...

    // மிக ரசித்தேன் ... புதியதோர் கோணம்...அருமையான வரிகோர்ப்பு..... பாராட்டுக்கள்.//

    ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  41. கவிநயா said...

    //கவிதை அருமை. வடக்கு வாசல் பிரவேசத்திற்கும் வாழ்த்துகள்.//

    வடக்கு வாசலில் இது எனது இரண்டாவது படைப்பு. உங்கள் வாழ்த்து இன்னும் பல படைப்புகள் வெளிவர வழிசெய்யட்டும். பாராட்டுக்கும் நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  42. ஈ ரா said...

    //ஊர் திருவிழாவில் கோயில் கொடையையும், நலிந்த கலைஞர்களின் நிலையையும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்..//

    நன்றி ஈ ரா. சின்ன வயதில் கோவில் விழாக்களில் இந்நடனங்களை ரசிக்க மட்டும் தெரிந்ததே தவிர கலைஞர்களின் சிரமங்கள் புரிந்ததே இல்லை:(!

    பதிலளிநீக்கு
  43. பிரியமுடன்...வசந்த் said...

    ***/ ரொம்ப எதார்த்தமா நல்லா எழுதியிருக்கீங்க மேடம்

    //ஊர்உலா முடிந்து
    உடைமாற்றி நகை களைந்து-
    நின்றார்கள் கூலிக்கு
    இன்றாவது கிடைக்குமாவென//

    இந்த வரிகள் ஒரு வித மன பாதிப்பை உருவாக்குகின்றது...!

    :( /***

    யதார்த்த வாழ்க்கைக்கும் ஏற்றுக் கொண்ட வேடத்துக்கும் இடையேதான் எவ்வளவு இடைவெளி! கருத்துக்கு நன்றி வசந்த்!

    பதிலளிநீக்கு
  44. aambal samkannan said...

    // 'செழிக்காத கலைக்குச்
    சேவகியாய்''

    உண்மைதான் மேடம் இதுபோல் இன்னும் எத்தனையோ சேவகிகள் ஆனால் பாராட்டத்தான் ஆளில்லை.//

    கிடைக்கின்ற பாராட்டுக்கள் என்பது கணநேரக் கைதட்டல்கள் மட்டுமே என்றாகி விட்ட நிலை. கலைக்கு அவர்கள்தான் சேவகம் செய்கிறார்கள் தம்மை சரியாகக் காப்பாற்றா விட்டாலும் கூட. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி aambal samkannan!

    பதிலளிநீக்கு
  45. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    ***/ பவனி யில் பவனி வந்த இந்த வரிகள் எனக்கு பிடிச்சது

    \\கனைக்காத குதிரைக்குக்
    கால்களாய் இருந்த
    களைப்பு மிகுதியில்
    ராஜாவும்..
    செழிக்காத கலைக்குச்
    சேவகியாய்-// /***

    ரசனைக்கு நன்றி முத்துலெட்சுமி.
    வடக்கு வாசல் தெற்கே வந்தடையும் முன், கவிதை அதில் பவனி வந்திருக்கும் விவரத்தைத் தெரிவித்தமைக்கும்:)!

    பதிலளிநீக்கு
  46. சந்தனமுல்லை said...

    // தங்கள் சரத்தில் மற்றுமொரு முத்து!

    /செழிக்காத கலைக்குச்
    சேவகியாய்-
    மெய் வருத்திப்
    பொய்க் களிப்புடன்
    பவனிவந்த ராணியும்!/

    ஹ்ம்ம்...:-( //

    கருத்துக்கு மிக்க நன்றி முல்லை.

    பதிலளிநீக்கு
  47. thenammailakshmanan said...

    //பவனி அருமை பவானி//

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தேனம்மைலக்ஷ்மணன்.

    பதிலளிநீக்கு
  48. பலா பட்டறை said...

    //அழகா.. இயல்பா.. கடைசியில் மனதிலறையும் நிதர்சனம்... நல்லா இருக்குங்க..//

    கருத்துக்கு நன்றிங்க பலா பட்டறை.

    பதிலளிநீக்கு
  49. ஸ்ரீராம். said...

    // பகல் முழுக்க பட்டினி இருந்தாலும் ராத்திரியில் ராஜா வேஷம் போடற சுகம் பத்தி ராஜபார்ட் ரங்கதுரையில் சிவாஜி பேசும் வசனம் ஞாபகம் வந்தது...//

    வசனம் நினைவில்லா விட்டாலும் இப்படத்தின் கதை நினைவிருக்கிறது. பொய்க்கால் ஆட்டக்காரருக்கு மட்டுமின்றி எல்லா நாடகக் கலைஞர்களுக்கும் பொருந்தக் கூடியதாகத்தான் உள்ளது இக்கவிதை. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  50. " உழவன் " " Uzhavan " said...

    //அருமை அருமை.. இப்படி வாழ்க்கையை எழுத்தாக்குவதும், அதைப் படிப்பதும்தான் மனதைத் தொடுகின்றன.
    வடக்கு வாசலுக்கு வாழ்த்துக்கள் :-)//

    வாழ்க்கையை எழுத்தாக்குவதில் வல்லமை கொண்ட உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் உழவன்.

    பதிலளிநீக்கு
  51. திகழ் said...

    //கண் முன்னே காட்சியாய்
    தங்களின் கவிதை

    அற்புதம்

    வாழ்த்துகள்//

    ரசித்துப் பாராட்டியிருப்பதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் திகழ்.

    பதிலளிநீக்கு
  52. அண்ணாமலையான் said...

    //அப்பாடா. இன்னைக்கி படிச்சதுலயே என் மண்டைக்கு புரிஞ்ச ஒரே கவித இத்தான்... வாழ்த்துக்கள்.....//

    நல்லது:). நன்றி அண்ணாமலையான்.

    பதிலளிநீக்கு
  53. அம்பிகா said...

    ***? \\ஆயில்யன் said

    //[மனதினுள் சட்டென்று ரணத்தினை உண்டாக்கும் எந்த கவிதையும் அமரத்துவம் பெறுகிறது!]//

    உங்கள் கவிதையும் அமரத்துவம் பெறுகிறது./***

    பெரிய பாராட்டு. இருப்பினும் உங்களுக்கும் ஆயில்யனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  54. வருண் said...

    //பொய்க்கால் குதிரையில் பவனிவரும் ராஜா ராணியைத்தான் சொல்றீங்களா?//

    அவர்களேதான்.

    //உண்மையிலேயே இங்கே களைப்படையும் கால்கள்தான் மெய் மற்றதெல்லாம் பொய்.

    இதை ஏன் பொய்க்கால் குதிரைனு சொல்றாங்கனு தெரியலை!//

    இந்தக் கேள்விக்கு நீங்கள் சொல்லியிருப்பதேதான் சரியான பதில். களைப்படையும் கால்கள்.. எத்தனை மெய்:(!

    //உண்மையான ராஜா ராணிபோல் இல்லாமல் தாங்களால் எல்லோரையும் மகிழ்விக்க முடிகிறதே என்று நினைத்து திருப்தியடைய வேண்டியதுதான்.//

    அந்த ஒரே ஒரு திருப்தியில்தான் அரைவயிறே நிரம்பினாலும் இக்கலையை விடாமல் வளர்த்தபடி இருக்கிறார்கள். “உண்மையான ராஜா ராணிபோல் இல்லாமல்”.. சிந்தனை நன்று வருண்.

    கருத்துக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  55. கவிதை(கள்) said...

    //கலையின் வலி

    அழகு //

    நன்றிகள் விஜய்.

    பதிலளிநீக்கு
  56. தியாவின் பேனா said...

    //ஆகா அருமை
    பிறந்தநாள் வாழ்த்துகள்//

    பாராட்டுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் தியாவின் பேனா.

    பதிலளிநீக்கு
  57. அமுதா said...

    ***/ /*கனைக்காத குதிரைக்குக்
    கால்களாய் இருந்த
    களைப்பு மிகுதியில்
    ராஜாவும்..
    செழிக்காத கலைக்குச்
    சேவகியாய்-
    மெய் வருத்திப்
    பொய்க் களிப்புடன்
    பவனிவந்த ராணியும்!*/
    மனம் கனத்தது நிதர்சனத்தை எண்ணி.../***

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  58. பிரசன்னா said...

    // முதல் பாராவில் பார்வையாளர்கள் பார்வையில்.. பின்பு நிஜம்.. அருமை//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரசன்னா.

    பதிலளிநீக்கு
  59. தமயந்தி said...

    ***/கனைக்காத குதிரைக்குக்
    கால்களாய் இருந்த
    களைப்பு மிகுதியில்
    ராஜாவும்..
    செழிக்காத கலைக்குச்
    சேவகியாய்....

    அட்ட‌காச‌ம்/***

    கருத்துக்கு நன்றி தமயந்தி.

    பதிலளிநீக்கு
  60. சுந்தரா said...

    //வேஷமிட்ட வாழ்க்கைத்திரைக்குப்பின் ஓசையின்றிக் கேட்கும் விம்மல்களைக்கூட அழகாகப் படம்பிடிச்சிருக்கீங்க ராமலக்ஷ்மி அக்கா.

    கவிதை அருமை. வாழ்த்துக்கள்!//

    உங்கள் கருத்தே ஒரு அழகான கவிதை. நன்றி சுந்தரா.

    பதிலளிநீக்கு
  61. //
    பளபளக்கும் பட்டுடையும்
    மினுமினுக்கும் நகைநட்டும்
    சரிகை இழையோடும்
    தலைப்பாகையுமாய்..
    அலங்கரித்த
    வெண்புரவிகளில்
    கம்பீரமாய் பெருமிதமாய்
    அரசத்தம்பதியர் வீற்றுவர-
    கண்நூறுதான் கண்டுமகிழ..
    //


    ராஜா காலத்துக்கே சென்றது மனம் இந்த வரிகளைப் படிக்கும்போது!

    பதிலளிநீக்கு
  62. //
    ஊர்உலா முடிந்து
    உடைமாற்றி நகை களைந்து-
    நின்றார்கள் கூலிக்கு
    இன்றாவது கிடைக்குமாவென..
    //

    இந்த வரிகளைப் படிக்கும போது மனம் கனத்துப் போச்சு:(

    இந்த நிலையில் அவர்களின் மனம் எவ்வளவு பாடு பட்டிருக்கும்
    நிதர்சனமும் கூட சகோதரி!

    பதிலளிநீக்கு
  63. ராமல‌ஷ்மி மேடம்

    ரொம்ப நல்லா இருக்கு உங்க கவிதை...

    பல பத்திகளில் எழுதப்பட்ட ஒரு கவிதையும்
    அதை படித்து, படித்தே களைத்து போன நானும்...

    வாழ்த்துக்கள் மேடம்...

    என்னோட வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளேச்சே மேடம்...

    (www.jokkiri.blogspot.com
    www.edakumadaku.blogspot.com)

    பதிலளிநீக்கு
  64. RAMYA said...

    //ராஜா காலத்துக்கே சென்றது மனம் இந்த வரிகளைப் படிக்கும்போது!//

    ரசனைக்கு நன்றி ரம்யா.

    //இந்த வரிகளைப் படிக்கும போது மனம் கனத்துப் போச்சு:(

    இந்த நிலையில் அவர்களின் மனம் எவ்வளவு பாடு பட்டிருக்கும்
    நிதர்சனமும் கூட சகோதரி!//

    உண்மைதான் ரம்யா. கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  65. R.Gopi said...

    // ராமல‌ஷ்மி மேடம்

    ரொம்ப நல்லா இருக்கு உங்க கவிதை...//

    நன்றி கோபி.

    //பல பத்திகளில் எழுதப்பட்ட ஒரு கவிதையும்
    அதை படித்து, படித்தே களைத்து போன நானும்...

    வாழ்த்துக்கள் மேடம்...//

    மூன்று பத்திகளிலே அத்தனை களைப்பு வந்து விட்டதா:)? சரிதான்.
    உங்கள் வலைப்பக்கம் நேரம் வாய்க்கையில் அவசியம் வருகிறேன். வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  66. @ சிங்கக்குட்டி,
    தந்திருக்கும் விருதுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சிங்கக்குட்டி.

    பதிலளிநீக்கு
  67. கடைக் கோடி கலைஞனின் மன வாசல் திறந்து காட்டிவிட்டீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  68. @ நானானி,

    கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நானானி.

    பதிலளிநீக்கு
  69. @ அன்புடன் அருணா,

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் அருணா.

    பதிலளிநீக்கு
  70. குட். நல்ல இருக்கு

    regards
    ram

    www.hayyram.blogspot.com

    பதிலளிநீக்கு
  71. @ hayyram,

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  72. இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள் அக்கா :-))

    பதிலளிநீக்கு
  73. முதல்லே வடக்குவாசலில் கவிதை வெளிவந்ததுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக்கறேன்.

    அடுத்து பிறந்த நாள் வாழ்த்துகள். மேன்மேலும் பல சிறப்புகளையும் பெற்று வாழ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  74. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....தங்களின் இனிய மனது போல் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  75. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  76. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //இன்னொரு சிறப்பான கவிதை.//

    மிக்க நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  77. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கும்..

    புலவன் புலிகேசி

    சர்வேசன்

    கார்த்திக்

    கீதா மேடம் [ஆசிகளுக்கு நன்றிம்மா]

    மோகன் குமார்

    திகழ்

    அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  78. நல்லா இருக்கு.. வடக்கு வாசலுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  79. நசரேயன் said...

    // நல்லா இருக்கு.. வடக்கு வாசலுக்கு வாழ்த்துக்கள்//

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நசரேயன்.

    பதிலளிநீக்கு
  80. //ஊர்உலா முடிந்து
    உடைமாற்றி நகை களைந்து-
    நின்றார்கள் கூலிக்கு
    இன்றாவது கிடைக்குமாவென..//

    நிழலுக்குப்பின் நிஜம் முகத்தில் அறைகிறது.
    http://amaithicchaaral.blogspot.com

    பதிலளிநீக்கு
  81. @ அமைதிச்சாரல்,

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமைதிச்சாரல். பதிவுலகில் புதிதாக மலர்ந்திருக்கும் உங்கள் வலைப்பூவுக்கும் என் நல்வாழ்த்துக்கள்:)!

    பதிலளிநீக்கு
  82. அருமையான கவிதைகள்

    மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  83. கவிதை நயம் என்னை ஈர்த்து இழுக்கிறது

    கலைகளையும் கலைஞர்களையும் ஒரு சேர கவிதையில் காண்கிறேன் .

    நான் இப்போது தான் உங்கள் பதிவுக்கு வருகிறேன் .

    உங்க‌ளை ப‌த்தி அறிந்து கொண்ட‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சி .

    உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும் போல உள்ளது .

    இனிமேலும் தொடரும் நம் எண்ணங்கள் ....

    பதிலளிநீக்கு
  84. நல்லாருக்கு சகா கவிதை.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  85. கட்டபொம்மன் said...

    //அருமையான கவிதைகள்

    மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கட்ட்பொம்மன்.

    பதிலளிநீக்கு
  86. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //கவிதை நயம் என்னை ஈர்த்து இழுக்கிறது

    கலைகளையும் கலைஞர்களையும் ஒரு சேர கவிதையில் காண்கிறேன் .

    நான் இப்போது தான் உங்கள் பதிவுக்கு வருகிறேன் .

    உங்க‌ளை ப‌த்தி அறிந்து கொண்ட‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சி .

    உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும் போல உள்ளது .

    இனிமேலும் தொடரும் நம் எண்ணங்கள் //

    சொன்னது போலவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி ஸ்டார்ஜன்!

    பதிலளிநீக்கு
  87. பா.ராஜாராம் said...

    // நல்லாருக்கு சகா கவிதை.வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  88. நலிந்து வரும் பொய்க்கால் குதிரை
    அழிந்திடாது தொடர வேண்டும். அவர் தம் பொருளாதாரமும் பெருகவேண்டும். அற்புதமான வரிகளில் அழகான கவிதை வடித்ததற்கு வாழ்த்துக்கள்.

    வண்ண ஆடை அலங்காரங்கள் மேடைக்குத் தானோ ? ஓவியரின் கறுப்பு வெள்ளைப் படமும் ஒரு அர்த்தத்துடன் தான் ஆடுகிறது.

    பதிலளிநீக்கு
  89. சதங்கா (Sathanga) said...

    //நலிந்து வரும் பொய்க்கால் குதிரை
    அழிந்திடாது தொடர வேண்டும். அவர் தம் பொருளாதாரமும் பெருகவேண்டும்.//

    வாழ்த்துவோம் கலைகள் செழிக்க!

    //அற்புதமான வரிகளில் அழகான கவிதை வடித்ததற்கு வாழ்த்துக்கள்.

    வண்ண ஆடை அலங்காரங்கள் மேடைக்குத் தானோ ? ஓவியரின் கறுப்பு வெள்ளைப் படமும் ஒரு அர்த்தத்துடன் தான் ஆடுகிறது.//

    ஓவியத்தை பார்த்த கோணம் அருமை. நன்றி சதங்கா!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin