பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 மார்ச், 2015

தினமலர் ‘புதுப்பயணம்’ - ‘நிழல் யுத்தம்’ போட்டியில் பரிசு


தினமலர் நாளிதழின் வெள்ளிக்கிழமை இணைப்பாக வருகிறது நான்கு பக்கங்களுக்கு மனிதம் தேடும்.. ‘புதுப்பயணம்’ பகுதி. இதில் ‘நிழல் யுத்தம்’ புகைப்படப் போட்டியில் அறிவிப்பான ‘வலி’ எனும் தலைப்புக்காக எனது படம் தேர்வாகி சென்ற வெள்ளி 20 மார்ச் 2015 இதழில், இணைப்பின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. அதற்காக ‘தின மலர்’ அனுப்பி வைத்த சான்றிதழ்...

நன்றி தினமலர்!


பரிசு பெற்ற படம்: ‘வலி’க்குப் பயந்தால் வாழ முடியாதப்பா!

வெள்ளி, 10 அக்டோபர், 2014

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசுகள் 2014 - திருப்பூரில் விழா

'இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்புக்கு மு.ஜீவானந்தம் இலக்கியப்பரிசு அறிவிப்பாகியிருந்ததை இங்கே பகிர்ந்திருந்தேன்.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நிரல், பங்கேற்பாளர்கள், நடுவர்கள், பரிசு பெறும் படைப்புகள் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய விழா அழைப்பிதழையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

# திருப்பூரில்..


# நிகழ்ச்சி நிரல்

கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கட்டுரை ஆகிய பிரிவுகளில் பரிசு பெற்ற படைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள்..

# கவிதை, நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு

செவ்வாய், 7 அக்டோபர், 2014

‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ இலக்கியப் போட்டி 2014_ல் பரிசு

“இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்கு மற்றுமொரு விருது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2014-ல்!
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும்  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும், தேர்வுக் குழுவினருக்கும், வெளியிட்ட அகநாழிகை பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்!

பல பிரிவுகளில் நடைபெற்றப் போட்டியில் பரிசு பெற்ற நூல்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும், விழா நிகழ்வு குறித்தத் தகவல்களும்...

திங்கள், 22 ஏப்ரல், 2013

நட்சத்திரக் கனவு - 'கல்யாண் நினைவுப் போட்டி' பரிசுக் கவிதை

இரு சிறுவிழிகள்
எத்தனைப் பரந்தவானை
இதயத்துள் நிரப்பி விடுகின்றன!
ஆயிரம் நட்சத்திரக் கண்களால்
வானமும் பூமியை
அளந்து கொண்டுதானே இருக்கும்?

நினைவு தெரிந்த நாளிலிருந்து
நான் பார்க்கும் வானில்
வித்தியாசங்கள் அதிகமில்லை.
பிரபஞ்சம் தோன்றிய நொடியிலிருந்து
வான் பார்க்கும் பூமியில்
எவ்வளவு வித்தியாசங்கள்?

திங்கள், 1 ஏப்ரல், 2013

நன்றி ரியாத் தமிழ்ச் சங்கம்! - கல்யாண் நினைவு - உலகளாவிய கவிதைப் போட்டி முடிவுகள்


ரியாத் தமிழ் சங்கம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டியின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.  எனது கவிதை ‘நட்சத்திரக் கனவு’ சிறப்பு ஆறுதல் பரிசு பெற்றிருப்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்:)!

ரியாத் தமிழ்ச் சங்கத்திற்கும், நடுவர்களுக்கும் என் நன்றி!

போட்டி முடிவுகளையும் இங்கே அறியத் தருகிறேன்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin