ஞாயிறு, 29 மார்ச், 2015

பிரியம் - ‘தென்றல்’ தமிழ் மாத இதழில்..


# பக்கம் 76

சாப்பாடு இறங்கவில்லை
கைவிரித்து விட்டார்கள் மருத்துவர்கள்.
எத்தனைக் கெஞ்சியும் துளிக் கஞ்சி
குடிக்க வைக்க முடியாத வருத்தத்தில்
பசி மறந்தது எங்களுக்கும்.

‘நன்கு வாழ்ந்தாயிற்று
அமைதியாகக் கழியட்டும் கடைசி நிமிடங்கள்’
அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறிச் சென்றார்கள்.
மருந்து வாங்கிவர வாசற்கதவைத் திறந்ததும்
விருட்டெனக் கழுத்தை நிமிர்த்தி
விழிகளில் சக்தியைத் திரட்டி
‘போய்வா. பார்த்துக்கொள்கிறேன்’ என்பதாக
வால்ஆட்டுகிறவளின் அன்புக்கு முன்
தோற்று நிற்கிறது
எங்கள் பிரியம்.

**

~ படமும் கவிதையும் ~
பிப்ரவரி 2015 “தென்றல்” அமெரிக்கத் தமிழ் மாதப் பத்திரிகையின் கவிதைப் பந்தலில்..

பயனர் கணக்குடன் இணையத்தில் ‘வாசிக்க’.. 
ஒலி வடிவம் நன்றி திருமதி.சரஸ்வதி தியாகராஜன்!

நன்றி தென்றல்!
***


28 கருத்துகள்:

  1. வணக்கம்
    வாழ்த்துக்கள்....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அற்புதம்
    அனுபவித்தவர்களுக்குத்தான் கவிதையின்
    அருமையும் புரியும்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ரமணி ஸார் சொல்வது நிஜம். அருமை. கலங்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. படமும் கவிதையும் மிக அருமை..

    பதிலளிநீக்கு
  5. படமும் கவிதையும் மனதைத் தொட்டது.....

    பதிலளிநீக்கு
  6. கவிதை ...கண்களில் நீர் வர வைத்தது

    பதிலளிநீக்கு
  7. அற்புதமான கவிதை
    உணர்வை உலுக்கி சென்றது
    தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு
  8. உயிர் நீங்கும் வரையிலும் உறுதியான விசுவாசம்... நெகிழ்விக்கிறது படமும் கவிதையும்... பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  9. மனம் கணத்து விட்டது
    தமிழ் மணம் வாக்கு போடமுடியவில்லையே...

    பதிலளிநீக்கு
  10. நான் தங்களது 700 வது தொடர்பாளர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி. நன்றி, முதல் வருகைக்கும். சில மாதங்களுக்கு முன் டெம்ப்ளேட் மாற்றிய போது தமிழ்மணம் இணைப்பதில் பிரச்சனையாகி விட்டது. முயன்று பார்த்து சரி செய்ய முடியாமல் விட்டு விட்டேன் :) .


      நீக்கு
  11. மனிதனையும் மிருகத்தையும் இணைப்ப்து ஆழ்ந்த அன்பு தானே? இந்த அன்பில் கூடவே விசுவாசமும் கலக்கும்போது அது ஈடு இணையற்ற ஒன்றாய் ஆகி விடுகிறது! கவிதை நெகிழ் வைக்கிறது ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  12. அருமை.. சில மனங்களிலாவது இன்னும் பாசம் மிஞ்சியிருக்கிறதே :-(

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin