வெள்ளி, 2 ஜனவரி, 2015

மண் வாசனை - நெல்லை ஓவியர் மாரியப்பன் - பாகம் (2)

டுப்பு ஊதும் பெண்மணியில் ஆரம்பித்து மஞ்சள் நீர் விளையாட்டு;  பந்து விளையாட்டு; ஆனையும் பாகனும்;   குடத்தில் தண்ணீர் எடுத்து வரும்.., குடை பிடித்து நடக்கும்.., கோவில் வாசலில் செருப்புகளை விடும்.., குறுஞ்செய்தி கண்டு புன்முறுவல் பூத்து நிற்கும்.., குத்துவிளக்கேற்றும்.. இளம் பெண்கள்; மரக்கிளைகளில் ஆனந்தமாய் அமர்ந்து அரட்டை அடிக்கும் சிறார், கோழிகளைத் துரத்தி விளையாடும் குட்டீஸ்... என  தத்ரூபமான நீர் வண்ண ஓவியங்களாக மண்வாசனை கமழும் கிராமியக் காட்சிகள் பதிமூன்று:

#1

#2


#3

அட, பாகன் ஏறவும் இறங்கவும் யானை இப்படிக் காலைத் தூக்கிக் கொடுக்கும் அழகை இப்போதுதான் கவனிக்கிறேன்.


எல்லா ஓவியங்களும் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்ததால் சூரியனார் மரக் கிளைகளின் வழியாக எட்டி எட்டி ஓவியங்களை இரசித்ததன் பிரதிபலிப்பும் எடுத்த படங்களில் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. பொறுத்திடுக :)!

#4


#5
#6

#7

#9

#10

#13
***

ஓவியங்களின் ஒளிப்பட ஆக்கம்: Ramalakshmi Photography

பாகம் 1 இங்கே.

32 கருத்துகள்:

  1. கவிதை போல இருக்கின்றன படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள்... அருமை...
    வாழ்த்துக்கள் ஓவியருக்கும் பகிர்ந்த அக்காவுக்கும்....

    பதிலளிநீக்கு
  3. மிக மிக அற்புதமான ஓவியங்கள்
    பதிவாக்கி ரசிக்கத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. என்ன ஒரு நேர்த்தி.வெகு அழகு ராமலக்ஷ்மி. நீங்கள் மெனக்கெ ட்டதும் தெரிகிறது. வளரட்டும் இந்த ஓவியர். மிக நன்றி .மஞ்சள் தண்ணீர் ஊற்றும் பெண் ஓவியம் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  5. அனைத்து ஓவியங்களும் அருமை! மனதில் ஒட்டிக்கொள்கின்றன! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. சில படங்கள் யதார்த்தமாக வந்திருக்கிறது அருமை 😃😄😁

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஆகா ஆகா.. அருமையான விளக்கத்துடன் அழகிய படங்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. அனைத்துப் படங்களும் மிக அழகு.
    பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.
    சூரியன் ஓவியத்தையும் பார்த்து ரசிக்கவும், ஓவியம் எடுக்கும் ராமலக்ஷ்மியை வாழ்த்தவும் வந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  9. ஓவியங்கள் அனைத்தும் அருமை. அதுவும் சிறுவர்கள் அமர்ந்துள்ளது மற்றும் குத்துவிளக்கேற்றும் பெண் அருமை.

    பதிலளிநீக்கு
  10. ஓவியங்கள் அனைத்துமே அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாவ் ! மிக அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  12. அருமையான ஓவியங்களை எங்களுக்கு அறிய தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. என் இரு விழிகள் போதவில்லை ஓவியங்கள் அந்த அளவிற்கு அழகு மிகுந்தவை

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin