புதன், 31 டிசம்பர், 2014

விடை பெற்றுச் செல்கிறது 2014!



விடை பெற்றுச் செல்கிறது 2014. சற்று திரும்பிப் பார்க்கிறேன் நானும். எழுத்தினைப் பொறுத்தவரையில் மனதுக்கு நிறைவாக அமைந்த விஷயங்களாக..

செவ்வாய், 30 டிசம்பர், 2014

சித்திரப் பாவையர் - நெல்லை ஓவியர் மாரியப்பன் - (பாகம் 1)

 #1 அம்மா என்றால் அன்பு..

ஊர் மக்களால் ‘நெல்லை ரவிவர்மா’ என அன்புடன் அழைக்கப்படும் ஓவியர் மாரியப்பனின் கைவண்ணத்தை இந்த வருட சித்திரச் சந்தையிலும் கண்டு களிக்கும் வாய்ப்புக் கிடைத்ததை இங்கே (2014) சொல்லியிருந்தேன். கண்டு இரசித்த ஓவியங்களின் படங்களைப் பகிர்ந்திடுவதாக வாக்கும் அளித்திருந்தேன். அடுத்த சித்திரச் சந்தை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில் நினைவு வந்து அவசரமாகப் பகிர்ந்து கொள்கிறேன் இதோ உங்களுடன், இரண்டு பாகங்களாக:)!

ரசனை மிகு மாந்தர் கூட்டம்
தொடர்ச்சியாக இது 3வது வருடம். முத்துச்சரத்தைத் தொடரும் நண்பர்கள் இவரை நன்கறிவர். புதியவர்கள் எனில் முந்தைய கண்காட்சிகளில் இவர் காட்சிப்படுத்தியிருந்த ஓவியங்களைக் காண இங்கே செல்லலாம்:  2012 (படங்கள் 1, 17, 18, 19);  2013 (காவியமா ஓவியமா?); கல்கி ஆர்ட் கேலரியில் என் கட்டுரை

கடந்த வருடங்களைப் போலல்லாமல் இவ்வருடம் இவரது ஓவியங்களைப் படமாக்குவதில் சிரமம் இருந்தது. கல்லூரி வளாகத்தின் உள்ளேயே இடம் ஒதுக்கப்பட்டு வருகிறவர்களைக் கவரும் வகையில், நுழைவாயில் அருகாமையில் அமைந்திருந்தது  ஸ்டால். ஓவியங்கள் எல்லாம் நிழல் சூழ்ந்த இடத்தில், சுவற்றின் மேல் வைக்கப்பட்டிருந்ததால் விரும்பியபடி கோணம் அமைக்க முடியவில்லை. மேலும் நீளவாக்கில் ஸ்டால் அமைந்திருக்க, அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர் கூட்டம் ஒரு பக்கம். முடிந்த வரையில் சிறைப்படுத்தினேன் இவர் தூரிகையில் உதித்த சித்திரப் பாவையரை:

#2 கார்த்திகைப் பெண்

சனி, 27 டிசம்பர், 2014

தூறல் 23: 2014_ல் FLICKR_ம் நானும்; சித்திரச் சந்தை 2015

தினம் ஒன்று அல்லது இரண்டு எனத் தொடர்ந்து ஃப்ளிக்கரில் படங்கள் பகிர்வதை ஒரு வழக்கமாகவே கொண்டிருப்பதால்தான் ஒளிப்படத் துறையில் ஈடுபாடு குறையாமல் இருந்து வருகிறது.

ஒளிப்படங்களைப் பகிர்வதற்கான பிரத்தியேகத் தளமான FLICKR குறித்து அடிக்கடி இங்கு பகிர்ந்திருக்கிறேன். ஃப்ளிக்கரை பின்பற்றி எத்தனையோ தளங்கள் வந்து விட்டிருப்பினும் பல அபிமானிகள் இன்னும் தொடர்ந்து ஃப்ளிக்கரை விடாமல் உபயோகித்து வருகின்றனர். நானும் அதில் அடக்கம்:)!

கடந்த ஒரு வருடத்தின் சுவாரஸ்யமான பதிவுகளாக.. அதிகம் பேரால் விரும்பப்பட்ட, பார்வையிடப்பட்ட பதிவுகளாக இவை:
(most liked and viewed shots in the last one year) 
இவையும் இவை போன்ற மற்ற வருடங்களின் மேலும் சிலபல படங்களும் சராசரியாக 400_லிருந்து 1500 வரையிலுமே பார்வையாளர்களைப் பெற்று வந்திருக்கின்றன. அப்படியிருக்க இம்மாதம் அடுத்தடுத்து EXPLORE ஆன  எனது இரு படங்கள் 7500+, 4500+ பார்வையாளர்களைப் பெற்றிருந்தன.

EXPLORE என்றால் என்ன?

செவ்வாய், 23 டிசம்பர், 2014

‘அடை மழை’க்கு ‘அரிமா சக்தி’ விருது

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 2014 ஆம் ஆண்டிற்காக ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கான விருதுகளை அறிவித்திருப்பதுடன்,  நாவல், கதை, கட்டுரை, கவிதை பிரிவுகளின் கீழ்  ‘அரிமா சக்தி விருதினை’ பெண் எழுத்தாளர்களுக்கு அறிவித்துள்ளது. சிறுகதை பிரிவில் “அடை மழை” நூலுக்கு  (அகநாழிகை வெளியீடு) அரிமா சக்தி விருது கிடைத்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

#

நான் அறிந்த தோழியரில் கவிதை பிரிவில் தேனம்மை லெஷ்மணனின் ‘அன்ன பட்சி’  (அகநாழிகை வெளியீடு); சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’ (புது எழுத்து வெளியீடு), மாதங்கியின் ‘மலைகளின் பறத்தல்’ (அகநாழிகை வெளியீடு) ஆகிய நூல்களுக்கும் கிடைத்துள்ளன.  மூவருக்கும் வாழ்த்துகள்!  அடைமழை உட்பட 3 அகநாழிகை பதிப்பக நூல்களுக்கு விருது! பதிப்பாளருக்கு வாழ்த்துகள்! மேலும்

வெள்ளி, 19 டிசம்பர், 2014

தேனம்மை லெக்ஷ்மணன் பார்வையில்.. ‘இலைகள் பழுக்காத உலகம்’



குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் மென்மையை மேன்மையைப் பற்றியும் அதே சமயத்தில் வாழ்வின் ஆத்ம விசாரங்களையும் தான் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் அழகான கவிதைகளில் ரசனையோடு கொடுத்துள்ளார் ராமலக்ஷ்மி. இரண்டு விருதுகள் இவரது முதல் கவிதைத் தொகுதிக்குக் கிடைத்துள்ளன. அதுவே இத்தொகுதியின் சிறப்பைக் கூறும்.

முதல் கவிதை முதுமையையும் இனிமையாக்குகிறது, செவிகளால் பார்க்கமுடியும் அற்புதத்தை நிகழ்த்துகிறது என்றால்

புதன், 17 டிசம்பர், 2014

கருப்பு வெள்ளையும் ஐந்து நாட்களும்..

ருப்பு வெள்ளையில் மட்டுமே ஒரு காலத்தில் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. டிஜிட்டல் உலகில் விதம் விதமான வசதிகளுடன் ஒளிப்படக் கருவிகள், எடுக்கும் படங்களை விருப்பத்திற்கேற்ப மேம்படுத்திக் கொள்ளும் தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு மத்தியில் இன்றைக்கும்  வண்ணப்படங்களுக்கு மத்தியில் அதிகம் விரும்பப்படுகிறவையாக இருப்பவை மோனோக்ரோம் எனக் குறிப்பிடப்படும் கருப்பு வெள்ளைப் படங்களே.

காட்சியை வலிமையாக வெளிப்படுத்த உதவுவது, கருப்பொருளின் மீதான கவனம் பிற வண்ணங்களால் சிதறாமல் இருப்பது, குறைந்த ஒளியிலும் அழகான ரிசல்ட் கொண்டு வர முடிவது,  உணர்வை அழுத்தமாகக் காட்டக் கூடிய தன்மை எனப் பல காரணங்கள். அதுமட்டுமின்றி,

திங்கள், 15 டிசம்பர், 2014

சான்றோர் ஆசி


கடந்த இரண்டு வருடங்களாகவே திட்டமிட்டு, ஏதேனும் காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த ஒரு சந்திப்பு சென்ற சனிக்கிழமை நண்பகலில் நிறைவேறியது.

வெ.சா என கலை மற்றும் இலக்கிய உலகில் அறியப்படும் மதிப்பிற்குரிய திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் தனது எண்பதாம் அகவையை நான்காண்டுகளுக்கு முன் நிறைவு செய்திருந்தார். சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்த விவரம் அறிந்ததில் இருந்து அவரைச் சந்தித்து அளவளாவி ஆசிகளைப் பெற வேண்டும் என்பதே நண்பர்கள் அனைவரின் விருப்பமாக இருந்து வந்தது. இந்த முறை நேரம் கூடி வந்தது. ஷைலஜா ஒருங்கிணைக்க, அவர் இல்லத்துக்கு வெகு அருகாமையில் இருந்த ஹெப்பால் எஸ்டீம் மாலின் மூன்றாம் தளத்தை தேர்வு செய்தோம்.

#2
சான்றோர்
வழக்கமாக சனிக்கிழமை காலையில் நடைபெறும் கம்ப இராமயணம் முற்றோதலை மாலை நேரத்துக்கு மாற்றி அமைத்து விட்டு மகேஷ், திருமூலநாதன் ஆகியோருடன் சரியான நேரத்துக்கு வந்து விட்டிருந்தார் மதிப்பிற்குரிய திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள். இரு சான்றோரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது கூட்டம்.

வியாழன், 11 டிசம்பர், 2014

சிறுகதை: "நல்லதோர் வீணை" - தமிழ் ஃபெமினாவில்..


ன்றைக்குதான்  ரேணுவுக்கும் பிறந்தநாள்.


மணவாழ்வு முறிந்து முழுதாக இருபத்தியெட்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்தாலும், ஒரு முறையேனும்  ரேணுவை நினைக்காமல் இளைய மகள் திரிஷாவின் பிறந்தநாளைக் கடக்க முடிந்ததில்லை கிஷோரால்.  அதுவும் நேற்று நடுங்கும் குரலில் வெகுநேரம் அம்மா அவன் கையைப் பிடித்தபடி ரேணுவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததில் அவள் நினைவு கூடுதலாகவே மனதை ஆக்ரமித்திருந்தது.

திங்கள், 8 டிசம்பர், 2014

“கர்நாடக சுற்றுலா” அகில இந்திய ஒளிப்படப் போட்டி 2014 - பெங்களூர் கண்காட்சி (2)


முன்னரெல்லாம் மக்கள் கூடும் முக்கியமான திருவிழாக்களில் செய்திக்காகப் பத்திரிகையாளர்கள் மட்டுமே கேமராவுடன் செல்வது வழக்கமாக இருந்தது. வெளிநாட்டினர் மற்றும் ஒருசில புகைப்பட ஆர்வலர்கள் கேமராவுடன் தென்படுவார்கள். இப்போது இது போன்ற விழா சமயங்களில் குழுவாகவோ தனியாகவோ புகைப்படக் கலைஞர்கள் பெருமளவில் சென்று படமாக்கி, நேரில் பார்க்கும் உணர்வோடு அக்காட்சிகளை மற்றவருக்கு அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தேரோட்டங்கள், மதுரை சித்திரைத் திருவிழா, கூவாகம் திருவிழா, குலசை தசரா போன்ற பல விழாக்களுக்கு ஒவ்வொரு வருடமுமே செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் பல கலைஞர்கள். ஒருவர் எடுக்கும் படங்களைப் பார்க்கையில் மற்றவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொள்ள அடுத்தடுத்து அங்கு செல்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புகைப்படக் கலைஞர்களும் பயணக் கட்டுரைகள் எழுதுகிறவர்களும் சுற்றுலா துறைக்கு ஆற்றி வரும் சேவை அளப்பரியது. சுற்றுலா வளர்ச்சி பல மனிதர்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவும் இருக்கிறது. திருவிழாக்களுக்குக் கூடுகிற கூட்டம் பிரமிப்பையும், நம் கலாச்சாரத்தின் மேல் மக்கள் கொண்டிருக்கும் மதிப்பையும் காட்டுகின்றன.

சென்ற பதிவின் தொடர்ச்சியாக.. சுற்றுலா வளர்ச்சிக்காக கர்நாடக அரசால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட அகில இந்திய ஒளிப்படப் போட்டியில் வென்ற படங்களில் சில உங்கள் பார்வைக்கு. சுமார் 120 காட்சியில் இருந்தன.  என்னைக் கவர்ந்த இருபத்து இரண்டினை, எடுத்தவர்களின் பெயரோடு இங்கே பகிருகிறேன்.  அடுத்து இந்த இடங்களுக்குச் செல்பவர்களுக்கோ, அல்லது கர்நாடகா சுற்றுலாவுக்கு திட்டமிடவோ இவை உதவுமென நம்புகிறேன்.

#1

#2 கம்பாலா
எருமைகளை ஓட விடும் இந்தப் பந்தயத்தை தடைசெய்யக் கோரி வழக்கு நடைபெற்று வருகிறது. . “ஜல்லிக் கட்டினைப் போல இது ஆபத்தானது அல்ல. இதை நம்பிப் பல குடும்பங்கள் உள்ளன. எனவே இந்தப் பாரம்பரிய விளையாட்டைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என ஒரு சாரார் குரல் எழுப்பி வருகின்றனர்.

#3 வீடு திரும்பல்

#4 உறி அடி விழா

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

காண வேண்டிய கானுயிர் உலகம் - பெங்களூரில் சர்வதேச ஒளிபடக் கண்காட்சி (1)

பன்னாட்டுக் கலைஞர்களின் பங்கேற்புடன் ஸ்தம்பிக்க வைக்கும் கானுயிர் ஒளிப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில். 1 டிசம்பர் 2014 அன்று கர்நாடக அரசின் தலைமைச் செயலதிகாரியான திரு. கெளசிக் முகர்ஜி ஆரம்பித்து வைத்த இக்கண்காட்சி இன்று 7 டிசம்பர் நிறைவு பெறுகிறது. ஆர்வமுள்ள ஒளிப்படக் கலைஞர்கள் மற்றும் வாய்ப்புக் கிடைக்கும் அனைவரும் கண்டு இரசிக்கலாம்.

அரங்கின் நான்கு அறைகளில் சுமார் 520 படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் 200, சர்வதேசப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்கள் “17th INTERNATIONAL FEDERATION OF PHOTOGRAPHIC ART(FIAP) NATURE BIENNIAL WORLD CUP"  போட்டியில் வென்ற படங்களும், 120 படங்கள், அகில இந்திய கர்நாடக சுற்றுலா புகைப்படக் கண்காட்சியில் வெற்றி பெற்ற படங்களும் ஆகும். இரண்டு பிரிவுகளில் உலகக் கோப்பையை வென்ற நாடுகள் முறையே இத்தாலியும், தென் ஆப்பிரிக்காவும். இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள்!

விருது பெற்ற இந்தியக் கலைஞர்கள் ஆன ஜெயதேவ் பசப்பா, ஃபிலிப் ரோஸ், க்ளெமென்ட் ஃப்ரான்ஸிஸ் மற்றும் மஞ்சுநாத் SK ஆகியோரின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நேற்று சர்வதேச விருது வாங்கிய கிருபாக்கர் செனானி எடுத்த “ Walking with the Wolves" டாகுமென்டரி படம் திரையிடப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் 24 நாடுகளிலிருந்து மிகுந்த ஆர்வத்துடன் கலைஞர்கள் இக்கண்காட்சிக்காகத் தங்கள் படங்களை அனுப்பி வைத்திருந்தனர். அளவுகள் சற்று சிறிதாக இருப்பினும் நல்ல Print Quality_யில் அமைந்திருந்த படங்கள் அனைத்தும் அப்படியே நேரில் பார்க்கும் உணர்வைத் தந்தன.

 என்னைக் கவர்ந்த படங்கள் சிலவற்றை எடுத்தவரின் பெயரோடு அப்படியே இங்கு உங்கள் பார்வைக்கும் தருகிறேன்.

#1

வெள்ளி, 5 டிசம்பர், 2014

திருக்கார்த்திகை வாழ்த்துகள்!

#1 திருக்கார்த்திகை வாழ்த்துகள்!



#2 போற்றி போற்றி
 தீப ஒளியில் ஞான முதல்வன்

#3 ஐந்து முக விளக்குகள்

செவ்வாய், 2 டிசம்பர், 2014

குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 4 & 5) - எலிஸபெத் பேரட் பிரெளனிங்

"நிஜம்,” என்றார்கள் குழந்தைகள், “எங்களுக்கான
காலம் வரும் முன்னரே நாங்கள் மரணிப்பது நடக்கிறது!
சென்ற வருடம் இறந்து போனாள் சின்னஞ்சிறு ஆலிஸ்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin