அடை மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடை மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 டிசம்பர், 2014

‘அடை மழை’க்கு ‘அரிமா சக்தி’ விருது

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 2014 ஆம் ஆண்டிற்காக ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கான விருதுகளை அறிவித்திருப்பதுடன்,  நாவல், கதை, கட்டுரை, கவிதை பிரிவுகளின் கீழ்  ‘அரிமா சக்தி விருதினை’ பெண் எழுத்தாளர்களுக்கு அறிவித்துள்ளது. சிறுகதை பிரிவில் “அடை மழை” நூலுக்கு  (அகநாழிகை வெளியீடு) அரிமா சக்தி விருது கிடைத்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

#

நான் அறிந்த தோழியரில் கவிதை பிரிவில் தேனம்மை லெஷ்மணனின் ‘அன்ன பட்சி’  (அகநாழிகை வெளியீடு); சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’ (புது எழுத்து வெளியீடு), மாதங்கியின் ‘மலைகளின் பறத்தல்’ (அகநாழிகை வெளியீடு) ஆகிய நூல்களுக்கும் கிடைத்துள்ளன.  மூவருக்கும் வாழ்த்துகள்!  அடைமழை உட்பட 3 அகநாழிகை பதிப்பக நூல்களுக்கு விருது! பதிப்பாளருக்கு வாழ்த்துகள்! மேலும்

வியாழன், 25 செப்டம்பர், 2014

தூறல் 20: முத்துக்கள் 600; தமிழ் ஃபெமினாவில் ‘அடை மழை’; மதுரை மாநாடு

#1

 முத்துச்சரத்தில் 600 முத்துக்கள் கோத்தாகி விட்டது!

இப்போதெல்லாம் எந்தத் திட்டமிடலும் இல்லை. கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகவும் கோக்கின்ற பயணம் இங்கே சற்று தேக்கம் கண்டாலும் ஃப்ளிக்கர் தளத்தில் தினம் ஒன்று என்கிற கணக்கில் தடையில்லாமல் தொடருகிறது. ஆனால் வாரம் இரண்டு என்ற அளவில் கூட பதிவுகள் இட இயலவில்லை, இந்த வருடத்தின் சில மாதங்களில்.

வாசித்த நூல்கள், பார்த்த இடங்கள், கேட்ட விஷயங்கள் எனப் பகிர நினைத்துத் தள்ளிப் போட்டிருப்பவை நிறையவே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin