#1
சென்னகேசவர் கோயில் மைசூரிலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ள சோமநாதபுரத்தில், காவேரி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. வைணவ இந்து கோயிலாகிய இது, சென்னகேஷவா கோயில் மற்றும் கேசவா கோயில் என்றும் குறிப்பிடப்படுகிறது. சென்னகேசவ என்ற சொல் "அழகான கேசவன்" என்று பொருள்படும். இதுவே ஹொய்சாள அரசர்களால் கட்டப்பட்ட கடைசி பெரிய கோயிலாகும். ஹொய்சாள கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றும் ஆகும்.
#2
#3