புதன், 7 ஜனவரி, 2026

தர்பார் மண்டபங்கள்; கூரை ஓவியங்கள் - மைசூர் அம்பா விலாஸ் அரண்மனை

 

மைசூர் அரண்மனை பற்றிய விரிவான தகவல்களுடனும் 27 படங்களுடனும் ஆன எனது 2017_ஆண்டுப் பதிவு ஒன்று இங்கே: “அம்பா விலாஸ்”.

முன்னரெல்லாம் அரண்மனையை வெளியிலிருந்து படங்கள் எடுத்துக் கொள்ள மட்டுமே அனுமதி இருந்தது. உள்ளே செல்லும் முன் மீண்டும் நுழைவாயிலுக்குச் சென்று கேமரா, மொபைல் அனைத்தையும் லாக்கரில் ஒப்படைத்து விட்டே செல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் பலமுறைகள் சென்ற போதும் இதுதான் விதிமுறையாக இருந்ததால் ‘அதில் என்ன மாற்றம் வந்து விட்டிருக்கப் போகிறது’ என்று சற்றே அலட்சியமாக இருந்து விட்டேன் இந்த முறை. அரண்மனைக்குச் செல்வது பயணத் திட்டத்திலும் இருக்கவில்லை. ஆனால் உயிரியல் பூங்காவுக்குப் போய் விட்டுத் திரும்பும் வழியில் நேரம் இருந்ததால், அரண்மனைக்கு வெளியே மட்டும் சுற்றி விட்டு வரலாம் என்கிற முடிவுடன் சென்றேன். 

#2


#3


அந்தியில் மின்னிய அரண்மனையின் வெளித் தோற்றத்தை ஓரிரு படங்கள் எடுப்போம் என ஆரம்பித்த போதுதான் கவனித்தேன், முதல் தளத்தில் பலபேர் கையில் அலைபேசிகளுடன் செல்ஃபி எடுத்தபடி நின்றிருந்ததை. வியப்பாகி அங்கிருந்த காவலரிடம் கேட்ட போது, ‘உள்ளே ஃபோட்டோகிராஃபி அலவ்ட்’ என்றார். “ நீங்கள் போக வேண்டுமா? ஐந்தரை மணி வரையிலும்தான் அரண்மனைக்குள் நுழைய முடியும், ஆறு மணிக்கு வெளியேற்றி விடுவார்களே. வேகமாகப் போங்கள்” என்றார். இன்னும் 5 நிமிடங்களே இருக்க அரக்கப் பரக்க விரைந்து ஒருவாறாக நுழைந்து விட்டோம்.

#4

அரை மணி நேர அவகாசமே இருந்ததாலும், உள்ளே இருந்த கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே மக்களை அவசரப்படுத்தியபடி இருந்ததாலும், ஆற அமர படமாக்க முடியவில்லை. கிடைத்த நொடிகளில் ரசித்து எடுத்தவற்றின் அணிவகுப்பு கீழே.. 

ரண்மனையில் முதல் தளத்தில் அமைந்துள்ளன இரண்டு தர்பார் மண்டபங்கள். தெற்கு பார்க்க அமைந்திருப்பது மன்னர் பார்வையாளர்களைச் சந்திக்கும் பொது தர்பார் மண்டபம்.  

கிழக்குப் பார்க்க அமைந்திருப்பது மகராஜா தனிப்பட்ட விருந்தினர்களைச் சந்திக்கும் அம்பா விலாஸா எனப்படும், தனிப்பட்ட தர்பார் மண்டபம். 

னிப்பட்ட (private) தர்பார் மண்டபம் ‘அம்பா விலாஸா’ என அழைக்கப்படுவதுடன் அதன் பெயரே அரண்மனைக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

#5

இது இந்தோ-சரசெனிக் (Indo-Saracenic) கட்டடக்கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

ஆண்டின் முதல் பெருமுழுநிலவு.. ஓநாய் நிலவு.. - 3 ஜனவரி 2026

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நிலவைப் படமாக்கினேன், புதிய நிகான் Z5 II-வை பரிசோதிக்கும் ஆர்வத்தினாலும். நேற்றைய தினம் வானில் தோன்றிய முதல் முழு நிலவானது பெரு நிலவும் (supermoon)  ஆகும். 

Exif: 1/100s,f/13, ISO1000
Focal length: 300mm
Nikon Z5 II
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
03-01-2026 21:14:06

சென்ற சில தடவைகளைப் போலவே நேற்றும் ட்ரைபாட் இல்லாமல் கையில் பிடித்தே படமாக்கினேன்.

ண்டின் முதல் முழுநிலவு ‘ஓநாய் நிலவு’ (wolf moon) என்றும் அறியப்படுகிறது. ஃபார்மர்ஸ் அல்மனாக்  (The Old Farmers Almanac)  குறிப்பேட்டில் அந்தந்த மாதத்தின் நிலவுக்கென ஒரு பெயரும் அதற்கென ஒரு காரணக் கதையும் இருக்கும். உலகளாவிய அளவில்  அந்தப் பெயராலேயே ஒவ்வொரு மாத நிலவும் அழைக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாக முன்னரும் சில பதிவுகளில் விளக்கியுள்ளேன். ஜனவரி மாத நிலவு ஓநாய் நிலவென அழைக்கப்படுவதற்கான காரணம், குளிர் காலத்தின் உச்சத்தில் சரியாக உணவு கிடைக்காமல் ஓநாய்கள் பசியில் ஊளையிட்டபடி இருக்குமாம். அதனாலேயே ஆண்டின் முதல் முழு நிலவுக்கு ‘ஓநாய் நிலவு’ எனப் பெயர் வந்திருக்கிறது.

ந்த வருட முதல் முழுநிலவு பெருநிலவாகவும் (supermoon) அமைந்தது கூடுதல் சிறப்பானது. சூப்பர் மூன் என்றால் என்ன என்பது குறித்த விளக்கத்தை படங்களுடன் எனது இந்தப் பதிவில் https://tamilamudam.blogspot.com/2013/06/super-moon-2013.html ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் என்றாலும் மீண்டும் சுருக்கமாக:

பூமியை நிலவு வட்டப் பாதையில் அன்றி, நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் அவ்வப்போது மாறுபடுகிறது. பெரிஜி (Perigee) என்பது நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் புள்ளி, அப்போஜி (Apogee) என்பது நிலவு பூமியை விட்டு மிகத் தொலைவில் இருக்கும் புள்ளி. நிலவு பூமிக்கு மிக அருகில் வருகையில் வழக்கத்தை விடவும் 14% பெரிதாகவும், 30% கூடுதல் வெளிச்சத்துடனும் காட்சி தரும். அவ்வாறாக நேற்றைய நிலவு பூமிக்கு அருகாமையில் (Perigee)   சுமார் 3,62,312 கிலோமீட்டர் தொலைவில் வந்திருக்கிறது. அதே நேரத்தில் முழு நிலவாகவும் இருந்ததால் பெருநிலவும் (supermoon) ஆனது. 

ந்த வருடத்தில் அடுத்து வரவிருக்கும் இரு பெருநிலவுகள்: 

24 நவம்பர்: 3,60,768 கிலோமீட்டரில்..
24 டிசம்பர்: 3,56,740 கிலோமீட்டரில்..

நேரமும் வாய்ப்பும் கூடி வருமாயின் அவற்றைப் படமாக்குவேன் :).

**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
***

புதன், 31 டிசம்பர், 2025

குறிப்பேடு 2025 - தூறல்: 48

 #

னது ஃப்ளிக்கர் பட ஓடை (My Flickr Photostream) :

ஃப்ளிக்கர் தளத்தில் டிசம்பர் 30 வரையிலும் 435 படங்கள் பதிவேற்றம் ஆகி, அன்றன்றையப் படங்களுடன், பழைய படங்களுக்கும் ஆல்பங்களுக்குமான வருகைகளும் சேர்க்கப்பட்டு 2025_ல் 921995 பக்கப் பார்வைகளைப் பெற்றுள்ளதாகக் காட்டுகிறது ஃப்ளிக்கர் புள்ளி விவரம். 

2025_ஆம் ஆண்டுப் படங்கள் தொகுக்கப்பட்ட தனி ஆல்பத்தின் இணைப்பு இங்கே: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/albums/72177720322899258/ 

17 ஆண்டு ஃப்ளிக்கர் பயணத்தில், இந்த ஆண்டின் இறுதியில் எழுபத்து எட்டு இலட்சத்து இருபதாயிரம் பக்கப் பார்வைகளுடன், 5510 படங்கள் நிறைவு செய்துள்ளேன். 

சென்ற வருடத்தைய புள்ளி விவரம் இங்கே.

தொழில் நுட்பப் பிரச்சனையால் ஏப்ரல் தவிர்த்து மாதாமாதம் ஃப்ளிக்கர் தளம் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த புள்ளி விவரங்கள் எனது சேமிப்புக்காகவும் இங்கே:

#ஜனவரி


#பிப்ரவரி

#மார்ச்


#மே

#ஜூன்


#ஜூலை


#ஆகஸ்ட்

#செப்டம்பர்

#அக்டோபர்


#நவம்பர்

#டிசம்பர்


ரண்டு கேலரிகளில் "Cover Photo"_வாக கெளரவிக்கப்பட்ட படங்கள்:

#ஆகஸ்டில்..

#செப்டம்பரில்..

மார்ச் மாதத்தில், எழுத்தாளரும், ‘நமது மண்வாசம்’ மாத இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 60_ஆவது நூலின் முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்.. இங்கே

வருகிற ஆண்டிலும், பொங்கல் வெளியீடாக, 3-வது முறையாக, அவரது நூலின் முகப்பு அட்டையாக எனது ஒளிப்படம் இடம் பெற உள்ளது என்பது கூடுதல் தகவல்!

டைவெளியின்றி, ஆர்வம் குன்றாமல் இப்பயணம் தொடர்வது மனதுக்கு நிறைவாகவே உள்ளது.

இந்தப் பயணத்துக்கு உறுதுணையாக மற்றுமோர் கருவி புதிதாக உடன் இணைகிறது. எப்போதும் இரு கேமராக்கள் தேவைப்படுகிற சூழலில் 2010_ல் வாங்கிய Nikon D5000 (cropped sensor) கேமரா 14 ஆண்டு காலம் திறம்பட உழைத்த பின், சென்ற வருடம் தன் சேவையை நிறுத்திக் கொண்டது. இடையே 2017_ல் வாங்கிய Nikon D750 (Full frame) கேமராவுடன் தற்போது புதிதாக இணைகிறது Nikon Z5 II Mirrorless Full frame கேமரா. மிரர்லெஸ் தொழில்நுட்பத்தையும் அறிந்து ஆராய்ந்து அனுபவிக்க வேண்டும் இல்லையா:)? அதில் எடுக்கும் படங்களுடனும் 2026_ன் ஒளிப்பட பயணம் தொடரும்.

முத்துச்சரம்:

2025_ஆம் ஆண்டில் மாதம் சராசரியாக 5 பதிவுகள் தர முடிந்திருப்பதே ஆச்சரியம் :). சமீப வருடங்களாக அதிக அளவில் தந்து கொண்டிருந்த ஞாயிறு-வாழ்வியல் சிந்தனைகள் படத் தொகுப்பு இந்த முறை 13 பதிவுகளே. ஹைதராபாத், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் மைசூர் பயணப் பதிவுகள், உயிரியல் பூங்காவில் படமாக்கிய விலங்குகள்-பறவைகளின் படங்கள் தகவல்களுடன், சென்னையில் கோயில்கள் மற்றும் போர்ட்ரெயிட் படத் தொகுப்புகள் சில, தகவல்களுடனான ‘பறவை பார்ப்போம்’ பதிவுகள் ஆகியனவும் வரிசையில் சேருகின்றன.

'சொல்வனம்' இதழில் மொழிபெயர்ப்புப் பதிவுகள் - 3

கவிதைகள்: 'கீற்று' (1); 'நவீன விருட்சம்' (2); 'புன்னகை' (1) ; 

'பண்புடன்' இதழில் கவிதைகள் (3), குறுங்கவிதை தொகுப்புகள் (3)

அதிகமாக பதிவுகள் தராத நிலையிலும் இந்த வருடம் வழக்கமான பதிவுகளை விடவும் பழைய பதிவுகளுக்கு அதிகமான பக்கப் பார்வைகள் இருந்தன. முத்துச்சரம் பத்து இலட்சம் பக்கப் பார்வைகளைக் கடந்ததும் இந்த வருடமே. ஒரு கணக்குக்காக இந்த வருட இறுதியின் புள்ளி விவரத்தையும் சேமிக்கிறேன்:

**

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

***

செவ்வாய், 30 டிசம்பர், 2025

பால் வாசம் - பண்புடன் மின்னிதழில்..

  

பால் வாசம் - (பத்து குறுங்கவிதைகள்)


1.
சரசரக்கும் சருகுகள்
கிளை தாவும் அணில்
காற்றின் வேகத்தில்.

2. 
அமைதியான பின்வாசல்
அணிலின் வாலசைவு விளையாட்டு  
நடனமாடும் அசைவின்மை.

3.
மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்
கொட்டையைக் கொறிக்கும் அணில்
திட்டமிடும் குளிர்காலம்.

திங்கள், 29 டிசம்பர், 2025

2025 பென் ஹீனி விருதை வென்ற டாம் பாலின் கவிதை - சொல்வனம் இதழ்: 356

டாம் பாலின் (தாமஸ் நீல்சன் பாலின் - ஜனவரி 25, 1949)  தனது கவிதைத் தொகுப்பான நாமன்லாக் (Namanlagh)_காக 2025_ஆம் ஆண்டின் பென் ஹீனி  (PEN Heaney) பரிசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்த நூல் ஃபேபர் (Faber) வெளியீடாகும். 


(Belfast) பெல்ஃபாஸ்டில் வளர்ந்து, தற்போது ஆக்ஸ்ஃபோர்டில் வசிக்கும் டாம் பாலின் வட அயர்லாந்து கவிஞரும், விமர்சகருமாவார்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

வசந்தத்தின் வாக்குறுதி

 #1

'நல்ல உணர்வுகள் பகிரப்படும் இடமெல்லாம்
உலகம் இன்னும் சற்றே மலர்கிறது.'


#2
'பொறுமை, சிறிய அடிகளை
பெரிய பயணங்களாக மாற்றுகிறது.'


#3
'மலர்கள் வாடுவதற்கு அஞ்சுவதில்லை, 
அவை வசந்தத்தின் வாக்குறுதியை நம்புகின்றன.'


#4
'வாழ்க்கை விரியும் போக்கை நம்புங்கள்,
மெதுவாக நகரும் அத்தியாயங்களுக்கும் அர்த்தம் உண்டு.'


#5
'உலகம் பரந்தது,
ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வளர இடம் உண்டு.'


#6
'அதிகமாக சிந்திப்பதை நிறுத்தும்போது 
வாழ்க்கை அழகாக மலர்கிறது.'


#7
'நன்றியுள்ள இதயங்கள் வாழும் இடத்தில்
ஆசீர்வாதங்கள் மலர்கின்றன.'
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 223
**

செவ்வாய், 23 டிசம்பர், 2025

சாக்பீஸ் சூரியன் - [ஒன்பது குறுங்கவிதைகள்] - பண்புடன் இதழில்..


1.
மிதக்கும் சோப்புக் குமிழிகள்
அருகில் வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் மகிழ்ச்சி.

2.
பாதி கடித்த ஆப்பிள்
விரியத் திறந்த கதைப்புத்தகம்
வியப்புக்கு முடிவில்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin