#1. "சில நேரங்களில் நாம் திட்டமிட்ட வாழ்க்கையை விட்டுவிட வேண்டியிருக்கிறது, நமக்காகக் காத்திருக்கும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதற்காக."
#2. "இதயத்திடம் அழகான, கவித்துவமான விஷயங்களைப் பேசுவதற்கான ஒரு தெய்வீக வழி, இசை." _ Pablo Casals
3. "நீங்கள் எப்படித் தோற்றமளிக்கிறீர்கள் என்பதை விட,
எப்படிப்பட்டவராக உருவாகுகிறீர்கள் என்பதே முக்கியமானது."4. "மேடை சிறியதாக இருக்கலாம், ஆனால் இசைக்கு எல்லைகளே இல்லை."
5. நம்பிக்கை எந்தளவுக்கு ஆழமாகிறதோ, அந்த அளவுக்குப் பயம் தணிகிறது.
6. "வெகு தூரம் செல்லத் துணிபவர்களால் மட்டுமே, தங்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் கண்டறிய முடியும்." _ _T.S Eliot
7. "நம்பிக்கை எல்லா தடைகளையும் நீக்கிவிடுவதில்லை; ஆனால், அவற்றைக் கடந்து செல்வதற்கான வழியைக் காட்டுகிறது."
**[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்தொகுப்பது தொடர்கிறது.]***






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக