வீடு பழகிக் கொண்டது
மெல்லிய சத்தங்களில் பேச-
ஒரு நாற்காலி நகர்வது,
மாலைகள் நிதானமாக வந்தடையும்
சன்னலோரம் அவர் அமர்ந்திருக்கிறார்
இன்றைய நடமாட்டத்தை விட
அதிகக் காலடிச் சுவடுகளை அறிந்து வைத்திருக்கும்
அந்தச் சாலையைப் பார்த்தபடி.
சன்னலோரம் அவர் அமர்ந்திருக்கிறார்
இன்றைய நடமாட்டத்தை விட
அதிகக் காலடிச் சுவடுகளை அறிந்து வைத்திருக்கும்
அந்தச் சாலையைப் பார்த்தபடி.
சுவர்கள் பழைய சிரிப்புகளைத் தாங்கி நிற்கின்றன,
ஆனால் அது இப்போது தெளிவற்றுக் கேட்கிறது,
வேறொரு தெருவிலிருந்து கேட்கும்
ஒரு பாடலைப் போல.
அவர் அஞ்சுவது இரவைக் கண்டு அல்ல,
காலத்தின் மெதுவான நகர்வைக் கண்டும் அல்ல.
மாறாக,
தன் நினைவுகள் கூட
கதவைத் தட்டுவதை நிறுத்திவிடக் கூடும்
அந்த ஒரு நாளை எண்ணி.
*
படம்: AI உருவாக்கம்.
**
18 ஏப்ரல் 2026 பண்புடன் இணைய இதழில்..,
நன்றி பண்புடன்!
***


முடிவைச் சொல்லும் முடிவு வரி அருமை.
பதிலளிநீக்குவேறொரு தெருவிலிருந்து கேட்கும் ஒரு பாடலைப் போல.. ஆஹா..