வெள்ளி, 30 அக்டோபர், 2009

சிரிக்கும் சீனப் புத்தர்



கொள்ளைச் சிரிப்பில்
உள்ளம் தொலைத்து,
வரவேற்பரையை
அலங்கரிக்கவெனக்
கொண்டு வைத்தாலும்-
உழைப்பவர் வீடெனில்
அதிர்ஷடப் பொம்மையாய்
அருள்புரிவார் அங்கு
அழகாய்ச் சிரித்தபடி புத்தர்!

கொள்ளை கொள்ளையாய்
கொட்டும் பணமென
வாங்கி வைத்துவிட்டு-
உறங்குபவர் வீட்டிலோ
அலங்காரப் பொம்மையாகவே
வீற்றிருப்பார் என்றும்
எள்ளி நகைத்தபடி புத்தர்!
*** *** ***


இரண்டு வரி வாசகமாய் 'பொம்மை[அக்டோபர் PiT]' இடுகையில் நான் பதிந்த கருத்து, பதிவர் கோமாவின் பின்னூட்டக் கேள்வியால் ‘க்ளிக்’ கவிதையாய் மலர்ந்து விட்டுள்ளது 28 அக்டோபர் 2008 யூத் விகடனில். நன்றி கோமா!

இக்கவிதைக்கு விகடன்.காம் முகப்பிலும் இணைப்பு தரப் பட்டுள்ளது. நன்றி விகடன்!














2-4/11 யூத்ஃபுல் விகடனின்
‘அதிகம் படித்தவை’ பட்டியலிலும்:

செவ்வாய், 27 அக்டோபர், 2009

இன்றின் கணங்கள் [இலக்கியப்பீடம் இதழில்..]


வெளிச்சத்தில் காணநேரும்
ஒளிச் சிதறல்களோ
விளக்கு அலங்காரங்களோ
ஆச்சரியம் அளிப்பதில்லை.
அற்புத உணர்வைக்
கொடுப்பதுமில்லை.
இருளிலேதான் அவை
உயிர்ப்பாகி ஜொலிப்பாகி
உயர்வாகத் தெரிகின்றன.

வாழ்வின் வசந்தகாலத்தில்
வாசலில் விரிந்துமலர்ந்து
சிரிக்கின்ற
வண்ணக் கோலங்கள்
எண்ணத்தை நிறைப்பதில்லை
கண்ணுக்கும் விருந்தாவதில்லை.
பருவங்கள் மாறிமாறி
வரும் உலகநியதி
வாழ்வின்மீதான நம்
பார்வையையும் மாற்றிடத்தான்-
போன்ற
சிந்தனைகள் எழுவதில்லை,
சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.

இன்னல் எனும்ஒன்று
கோடை இடியாகச்
சாளரத்தில் இறங்குகையிலோ-
திறக்கின்ற சன்னலின்ஊடாகத்
திடுமெனப் புகுந்து
சிலீரெனத் தாக்கும்
வாடைக் காற்றாக
வாட்டுகையிலோதான்-
துடித்துத் துவளுகின்ற
கொடியாய் மனம்
பற்றிப் படர்ந்தெழும்
வழிதேடித் திகைத்து-
கவனிக்க மறந்த
இன்றின் சின்ன சின்ன
சந்தோஷக் கணங்களை
கவனமாய் உணர்ந்து-
சிலிர்த்துச் சிறகடித்துப்
பறக்கிறது வானிலே!
தவிர்க்க முடியாத
தவறும் இல்லாத
இயல்புதானே
இது வாழ்விலே!

*** *** ***

படம்: இணையத்திலிருந்து..



*அக்டோபர் 2009 இலக்கியப்பீடம் மாத இதழில்:



















இங்கு வலையேற்றிய பின் இக்கவிதை..

புதன், 21 அக்டோபர், 2009

தொழில்


ந்துருவுக்கு சந்தோஷமாக இருந்தது தன் தொழில் நேர்த்தியை நினைத்து. ஐந்து வருடங்களில் தனி ஆளாக இருபது முகமூடிக் கொள்ளைகள் நடத்தி விட்டான். ஏடிஎம், ஒதுக்குப் புறமான தனிவீடுகள், சிலபல கடைகளின் கல்லாக்கள் என அவன் கைவரிசை காவல்துறைக்குப் பெரும்தலைவலியாகவே இருந்து வந்தது. போலீசாரின் திறமையைப் புகழ்ந்து ஏதேனும் செய்தி பத்திரிகையிலோ தொலைக்காட்சியிலோ வந்தால் தாங்க முடியாத சிரிப்புத்தான் வரும் அவனுக்கு.

அன்றைய ப்ராஜக்ட்டையும் போட்ட திட்டம் இம்மியும் பிசகாமல் முடித்து விட்டிருந்தான். அவன் குறி வைத்தது ஒரு சின்ன நகைக் கடைக்கு. நகை என்று வந்து விட்டால் சின்னது பெரியது என்பதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? குண்டுமணி அளவேயானாலும் தங்கம் தங்கமாயிற்றே.

ஓரளவு அதிகமான போக்குவரத்துக் கொண்ட சாலை ஒன்றிலிருந்து பிரியும் சந்தின் முனையில் இருந்தது அந்தக் கடை. நேர் எதிரே பிள்ளையார் கோவில். அதுவும் காலை பத்து மணிக்கெல்லாம் நடை சாத்தி விடுவார்கள். கடையையும் கோவிலையும் விட்டால் அந்தச் சந்து முழுவதும் தனி வீடுகள். மதிய நேரம் ஆள் நடமாட்டமே இருப்பதில்லை.

ஒரு பக்கம் கலகலப்பான சாலை என்பதால் நகைக்கடை உரிமையாளர் காவலாளி ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. சரியாக இரண்டு மணியளவில் தனது நோஞ்சான் மச்சானின் பொறுப்பில் கடையினை விட்டுவிட்டு உரிமையாளர் சாப்பிடக் கிளம்பிச் சென்றால் திரும்புவதற்கு இரண்டு மணிநேரமாகும். கூட ஒரே ஒரு விற்பனைப் பெண்மணிதான். ஒருவாரமாக தினம் அந்த சமயத்தில் வந்து நின்று ஃபீல்ட் வொர்க் செய்தாயிற்று. பிள்ளையார் தும்பிக்கையை நீட்டிப் பிடித்தால்தான் உண்டு என நினைத்துக் கொண்டான் சந்துரு.

எதிர் திசையில் தன் பைக்கை நிறுத்தி விட்டு சாலையைக் கடக்க நிற்கையில் சரியாக ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது கடை முன்னே. ஒரு இளம் பெண்ணும், நடுத்தர வயதுப் பெண்மணியும் இறங்கினார்கள். சந்துரு அசரவில்லை. போட்ட திட்டம் நடந்தே ஆக வேண்டும். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கத்தான் ப்ரீஃகேஸில் சகல ஆயுதங்களும் இருக்கிறதே.

கடைக்குள் நுழையும் முன் தயாராக வைத்திருந்த முகமூடியை மாட்டிக் கொண்டவன், மடமடவென செயலில் இறங்கினான். தானியங்கிக் கதவாகையால் பிறர் சந்தேகத்துக்கு இடமின்றித் தாழிட எளிதாயிற்று. கல்லாவிலிருந்த நோஞ்சான் திடுக்கிட்டு சுகாதரிப்பற்குள் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திஹேண்ட்ஸ் அப்என்றான்.

அலாரம் எதையாவது அழுத்த நினைச்சே அவ்ளோதான். நான் சொல்றதையெல்லாம் ஒழுங்காக் கேட்டா நாலு பேருக்கும் உசுராவது மிஞ்சும். கூப்பாடு போடலாம்னு நினைச்சீங்க.. ஆளுங்க வருமுன்னயே அடுத்தடுத்து சுட்டுப்போட்டுட்டுப் போயிட்டேயிருப்பேன். இது சைலன்சர் பொறுத்தின துப்பாக்கி நெனப்புல இருக்கட்டும்என்றவன் விற்பனைப் பெண்மணியைப் பார்த்துதொற எம் பொட்டியஎன்றான்.

அதிலிருந்த கயிறுகளையும் துணிப்பந்துகளையும் அவளை விட்டே எடுக்க வைத்து வாடிக்கையாளர்கள் கைகளையும் நோஞ்சானின் கைகளையும் கட்டவைத்து வாயில் துணிப் பந்துகளைத் திணிக்கச் செய்தான்.

இப்ப ஒழுங்கு மரியாதையா ஷோகேஸில் இருக்கிற அம்புட்டு நகையையும் இதுலஅள்ளிப் போடல அப்புறம் ஒம் பொணத்ததான் இங்கிருந்து அள்ளிட்டு போக வேண்டியிருக்கும்எனப் பெட்டியைக் காட்ட நடுநடுங்கி அவன் சொன்னவாறே செய்தாள் அவள். காரியம் முடிந்ததும் ஏற்கனவே விதிர்விதிர்த்துப் போயிருந்த அந்தப் பெண்ணைக் கட்டிப் போடுவதும், வாயில துணியை அடைப்பதும் கஷடமாக இல்லை.

கொஞ்ச நேரத்துல ஒங்க முதலாளி வந்து அவுத்து விடுவாரு. வரட்டுமா கண்ணுங்களாஎன்றபடி யாரும் வருகிறார்களா எனக் கவனமாகப் பார்த்து விட்டு, வெளியேறும் சமயம் முகமூடியைக் கழட்டிக் கொண்டவன் பைக்கில் ஏறி சிட்டாய்ப் பறந்து வந்து விட்டான்.
*

என்ன மேடம் சொல்றீங்க. அவனை நேரில பார்த்ததே இல்லைங்கறீங்க. இப்பவும் உங்க யாராலேயும் முகத்தைப் பார்க்க முடியல. அப்புறம் எப்படி?" ஆச்சரியமாய்க் கேட்டார் ராம்.

ஆனால் வாடிக்கையாளராக மாட்டிக் கொண்ட பாமாவோ உறுதியாக இருந்தாள் அது அவன்தான் என்று.

இன்ஸ்பெக்டர் நான் சொன்ன தகவலை வச்சுக்கிட்டு உடனே அவனை வளைச்சுப் புடிக்க முடியுமான்னு முதல்ல பாருங்க. புடிச்ச பிறகு இதோ இந்த நம்பரில் என்னைக் கூப்பிடுங்க. பொண்ணு ரொம்ப பயந்து போயிருக்கா. இப்ப நான் கிளம்பறேன்என்றவள் மகளை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டியை நோக்கிச் செல்ல அவளை தடுக்க விரும்பவில்லை ராம்.

அங்கே குண்டு இங்கே குண்டுஎன வரும் அனாமத்து தொலைபேசித் தகவல்களை எப்படி ஒதுக்க முடியாதோ அதே போல இதையும் எடுத்துக் கொண்டால் என்ன எனத் தோன்றிற்று. அது மட்டுமின்றி பாமாவின் உறுதி மேல் ஏற்கனவே ஒரு நம்பிக்கை படர்ந்து விட்டிருந்தது.
*

அடுத்த சில மணி நேரத்தில் பாமா வீட்டில் இருந்தார் ராம்.

உங்களை ஸ்டேஷனுக்கெல்லாம் அலைக்க வேண்டாமேன்னு நானே வந்துட்டேன் தேங்க் பண்ண. நீங்க சொன்ன ஏஜன்ஸியிலே போய் விசாரிச்சதுமே வீட்டு அட்ரஸ் கிடச்சுட்டு. மஃப்டியில் ரவுண்டு கட்டி நின்னு அவன் வீட்டுக்குள்ள நுழையும் போதேப் புடிச்சுட்டோம். நீங்க எப்பேர்பட்ட உதவி செஞ்சிருக்கீங்க தெரியுமா? எனக்கு அவார்டு கிடைக்கோ இல்லையோ, நிச்சயமா உங்களுக்கு ரிவார்டு வாங்கிக் கொடுப்பேன்.”

அதெல்லாம் வேண்டாம். ஒரு சிட்டிசனா என் கடமையைத்தானே செஞ்சேன்.”

இருந்தாலும் க்ரேட் நீங்க. அவனோட மெயின் தொழிலு கொள்ளை. ஆனா, ஊரோட பார்வைக்கு அப்பாவியாக் காட்டிக்க ஒரு தொழில். என்னா கில்லாடிங்கறீங்க! சரி, இப்பவாவது சொல்லுங்க எப்படி அவனை கைகாட்டினீங்கன்னு..”

இன்ஸ்பெக்டர், அந்த ஏஜன்ஸியிலிருந்து கடந்த அஞ்சு வருஷமா எங்க கம்பெனிக்கு சப்ளையரா இவன்தான் வந்துட்டிருக்கான். முதல்ல இதக் கேளுங்க. நான் பத்து வருஷம் முன்னே மும்பையில் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஒருத்தர் ஏதோ விஷயமாய் எங்க மேனஜர்ட்ட பேச ஃபோன் போட்டார். அவர்ஹலோன்னு சொன்ன அடுத்த செகன்ட் . ‘யெஸ் அருண்ன்னு பேரைச் சொல்ல அசந்தே போயிட்டார். அதுபோலத்தான் அவன்ஹேண்ட்ஸ் அப்ன்னதுமே எனக்குப் புரிஞ்சு போச்சு..”

அங்கே சிறையில் சந்துருவுக்கு, ‘எங்கேடா வச்சிருக்க முன்ன கொள்ளையடிச்சதையெல்லாம்எனக் கேட்டு போலீஸ் தன்னைச் செய்ய போகிற சித்திரவதையை விட, ‘எப்படி எப்படி எப்படி மாட்டினோம்என்கிற சிந்தனையே மிகப் பெரும் சித்திரவதையாய் இருக்க..

இங்கே இன்ஸ்பெக்டர் ராம், பாமா சொல்வதை வியப்பு அடங்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

நீங்கன்னு இல்ல, பொதுவா எல்லோருமே ஒரு ஆளைக் கண்ணால பார்த்து உள்வாங்கித்தான் அடையாளம் கண்டுக்கறீங்க. ஆனால் என்னை மாதிரியானவங்க காதால குரலை உள்வாங்கினாலே ஆளைத் தெரிஞ்சிடும்.”

இப்போது ராமின் முகத்திலிருந்த வியப்பு குழப்பமாக மாறுவதைக் கவனித்த பாமா சிரித்தாள்.

ஏன்னா அது எங்க தொழில் இன்ஸ்பெக்டர். இருபது வருஷமா டெலிஃபோன் ஆப்பரேட்டரா இருக்கேன்.”

***
*** *** ***

படம்: இணையத்திலிருந்து...



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin