ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

உள்ளற்க உள்ளம் சிறுகுவ

  என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 113 

#1
“நீங்கள் வாய் திறந்து பேசும் முன்னரே 
உங்களை அறிமுகப்படுத்தி விடும் 
உங்களது உற்சாகம்.”


#2
“இதற்காகத்தான் நான் இயற்கையை நேசிக்கிறேன். 
ஏனெனில், 
இயற்கைதான் நமக்கு எல்லாமும்.” 
_ Neel Dixit


#3
"உண்மை நிறமற்றது 
வெண்மலர்களைப் போல."


#4
"வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றை 
மலர்கள் இரகசியமாகச் சொல்லி விடுகின்றன."


#5
"நாம் வளர்கிறோம் எனில்,  
நாம் எப்போதும் நமது செளகரியமான வளையத்திற்கு வெளியே 
இருக்கப் போகிறோம்."
_John Maxwell

#6
'உண்மையில், இயற்கை மிக அழகிய ஒளிப்படங்களை 
அதுவே உருவாக்கிக் கொள்கிறது. 
நான் கோணத்தை மட்டுமே தெரிவு செய்கிறேன்.'
_Katja Michael
19 ஆகஸ்ட் , உலக ஒளிப்பட தினத்தன்று 
பதிந்த படமும் பொன்மொழியும்:)!

**

பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது 
தொடருகிறது..

***

8 கருத்துகள்:

  1. பூக்கள் அழகு. அது எப்படி டார்க் பேக் கிரௌண்ட் கொடுக்க முடிஞ்சது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.

      கேமரா செட்டிங்ஸ் மூலமாக ஒளியைக் கட்டுப்படுத்த முடியும்.

      நீக்கு
  2. அருமை. அந்த ரோஜா காம்பில்லாமல் அந்தரத்தில் இருப்பது போல ஒரு தோற்றம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்புலத்தின் கருப்பு வண்ணத்தில் காம்பு காணாது போய் விட்டது:)! நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மலர்கள் எல்லாம் அழகு. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. மலர்கள் சொல்லும் ரகசியம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் மிக அழகு. தேர்ந்தெடுத்த பொன்மொழிகளும் சிறப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin