ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

கல்லிலே கலை வண்ணம் - விவான்டா சிற்பங்கள் - பேகல், கேரளம் (4)

ந்தப் பாகத்தில்,  பேகலில் இருக்கும் தாஜ் விவான்டாவின் வளாகத்தினுள்  காணக் கிடைத்த சிற்பங்களின் படங்களைத் தொகுக்கிறேன்.  பொதுவான கருவாக யானையையும் பிள்ளையாரையும் தேர்ந்தெடுத்து  விதம் விதமான வடிவில் செதுக்கப்பட்டச் சிலைகளை வளாகம் எங்கும் ஆங்காங்கே ரசனையுடன் நிறுவியிருக்கிறார்கள்.

#1
#2

#3


#4

#5

#6


முகப்பில் கருடாழ்வார் உட்பட வேறு சில இசைக்கலைஞர்  சிற்பங்களையும் காண முடிந்தது. அனைத்துமே ரசனையோடு செதுக்கப்பட்டச் சிற்பங்கள்!

#7


#7

#8

#9


ஒவ்வொரு குடிலின் முன்னாலும் நின்றிருந்த யானை:

#10

மரத்தடியில் கற்தூண்கள் மேல்:
#11


உப்பங்கழியோர புல்வெளியில் நின்றிருந்த சிம்மம்:
#12

#13


விநாயகரின் உருவ அமைப்புகள் ஒன்று போலவே தெரிந்தாலும் செதுக்கப்பட்டக் கற்களில் வித்தியாசங்கள்:

#14


#15

ஆங்காங்கே புல்வெளிகளின் நடுவே அமர்ந்திருக்கும் பிள்ளையார்கள் இரவிலும் அவற்றுகென்று தனியாக அமைக்கப்பட ஃபோகஸ் மின் விளக்குகளின் ஒளியில் அருள் பாலிக்கிறார்கள்.
#16
#17
மேலிருக்கும் இந்தச் சிற்பங்களைப் பார்த்த போது நினைவுக்கு வந்த வாசகம்.. பெங்களூரில் விநாயக சதுர்த்தி ஊர்வலம் செல்லுகையில் சிறுவர்கள் உற்சாகமாக இடுகிற கோஷம் ஒன்று:
அல்லி நோடு கணேசா.. இல்லி நோடு கணேசா..
(அங்கே பார் கணேசா.. இங்கே பார் கணேசா..)

#18
அனைவருக்கும் இனிய 
விகாரி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

***

6 கருத்துகள்:

  1. அனைத்து சிற்பங்களும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து பிள்ளையார்களும் மற்ற படங்களும் அழகு.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin