பாகம் 1: இங்கே
கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகப் போற்றப்படும் இத்திருக்கோயில் கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், கொடி மரம், அம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்றுப் பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம் மற்றும் பிரகாரத்தில் பரிவார சன்னதிகளைக் கொண்டுள்ளது.
விநாயகருக்கு சிறிய கோபுரத்துடன் தனி மண்டபம் உள்ளது. மேலும் யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வைரவர் பீடம், வைரவர் தீர்த்தம், போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.











