ஞாயிறு, 17 மே, 2026

ஒரே காடு

#1. 

"ஒரு உறுதியான முடிவு அச்சத்தின் குரலை அமைதிப்படுத்தும்."


#2. 
ஒன்றிணைந்தால் அளவற்ற வளமாக மலரலாம்.

#3. 
இயற்கை ஒரு அமைதியான ஓவியர், ரசிப்பவர் பற்றிய எண்ணம் இன்றி வண்ணங்களைத் தீட்டியபடி உள்ளது. 

#4. 
"எல்லாமே ஒரே நேரத்தில் திறந்துகொள்ளும் ஒரு தருணம் வரும்."

#5.  
முடிவு என்று தோன்றுவது, பலநேரங்களில் ஒரு மென்மையான திருப்புமுனையாகவே இருக்கும்.

#6. 
"மனம் மையம் கொண்டால், உலகம் நம்மை அசைக்கும் வலிமையை இழக்கிறது."

#7. 
"ஒரு மொட்டு என்பது தொடக்கங்கள் அழகாக இருக்கும் என்பதற்கான சான்று."

#8. 
"பகிர்ந்துகொள்ளும் போது வளர்ச்சி மேலும் செழிக்கிறது. ஒருவரையொருவர் அரவணைக்கையில், ஒரே காடாக உயர்கிறது."

 *
[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் 
தொகுப்பது தொடர்கிறது].
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 233
**

4 கருத்துகள்:

  1. ஆ... இரண்டே படங்கள்.. இரண்டே வரிகள்...


    இரண்டையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டே படங்களா!!? மற்ற ஆறும் தெரியவில்லையா?

    நன்றி ஸ்ரீராம்:).

    பதிலளிநீக்கு
  3. அடக்கடவுளே! காலை நான் சரியாக பார்த்தேனா? இல்லை காலை இரண்டு படங்கள்தான் தெரிந்ததா? கமெண்ட் பாக்ஸ் _வேறு தெரிந்ததே...

    இப்போது எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். ரசித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கக் கலக்கமாக இருந்திருக்குமோ?! ஆயினும் அத்தனை அதிகாலையில் பார்த்து, கருத்தும் இட்டிருக்கிறீர்கள். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin