திங்கள், 31 மார்ச், 2025

ஆதிமனிதனின் அருங்கதை - மனிதக் குரங்கு ( Chimpanzee )

 #1


வாலில்லா மனிதக் குரங்கு, சிம்பன்ஸி. சிம்பன்சிகள் மனிதர்களுடன் 98% டி.என்.ஏ (DNA) ஒற்றுமை பெற்றவை. மனிதர்களைப் போன்ற கை, கால், மற்றும் முக அமைப்பைக் கொண்டுள்ளது. இவை மனிதர்களை ஒத்திருந்தாலும்,

திங்கள், 24 மார்ச், 2025

ஞானபீட விருதைப் பெறுவிருக்கும், வினோத்குமார் சுக்லா - 6 கவிதைகள் - சொல்வனம் இதழ்: 339

வினோத்குமார் சுக்லா கவிதைகள்

ஞானபீட விருதைப் பெறுவிருக்கும், வினோத்குமார் சுக்லா: 
2024_ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதினை தனது 88_ஆவது வயதில் பெறவிருக்கிறார் இந்தி எழுத்தாளரும், கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா (1 ஜனவரி 1937). யதார்த்தத்தில் இருந்து மாயத்தை வெளிக் கொண்டு வரும் நவீன பாணி எழுத்துக்காகப் பெயர் பெற்றவர். அன்றாட வாழ்வின் சிக்கல்களை துணிச்சலான குரலில் இணக்கமாகவும் நீடித்தும் பதிவு செய்து தனித்துவமாக விளங்கியவர். நேற்று, 22 மார்ச் 2025 அன்று, இவருக்கு 59_ஆவது ஞான பீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தி இலக்கியத்தில் இந்த கௌரவத்தை பெறும் 12_ஆவது எழுத்தாளர் இவர். 


பல இலக்கிய விருதுகளை பெற்ற இவர் ‘தீவார் மே ஏக் கிடுகீ ரஹதி தி’  (சுவரில் இருந்த ஒரு சன்னல்)  நாவலுக்காக, 1999_ஆண்டின் சிறந்த இந்தி படைப்பிற்கான சாகித்ய அகாடமி விருதை வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் எனும் இடத்தில் பிறந்தவர். விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்று வேளாண் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவரது எழுத்துகளில் பெரும்பாலும் கிராமப்புற வாழ்க்கை, சாதாரண மனிதர்களின் அனுபவங்கள், சமூகத்தைக் குறித்த அவதானிப்புகள் ஆகியன கருப் பொருளாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம். எளிய, நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் இவரது எழுத்துகள் உண்மையாகப் பிரதிபலிப்பதாகக் கொண்டாடப்பட்டு வந்தன. இதையே தற்போது பாரதீய ஞானபீட அமைப்பு செய்தியாளர்களுக்கான அறிவிப்பிலும் குறிப்பிட்டுள்ளது: ‘இவரது எழுத்துகள் அவற்றின் எளிமை, உணர்வுப்பூர்வம், தனித்துவம் ஆகியவற்றுக்காகப் பெயர் பெற்றவை. நவீன இந்தி இலக்கியத்தில் சோதனை ஆய்வுகளை மேற்கொண்டு, புகழ் பெற்றவை.”
**

1.

ஒருவர் தனது சொந்த வீட்டினை தொலைவிலிருந்து பார்க்க வேண்டும்

ஒருவர் தனது சொந்த வீட்டினை 
தொலைவிலிருந்து பார்க்க வேண்டும்.
ஒருவர் தனது வீட்டினைப் பார்ப்பதற்கு 
ஏழு கடல்களையும் தாண்ட வேண்டும்,
நிராதரவான நிலையிலும் 
கடக்க இயலாத தொலைவாயினும்

திங்கள், 17 மார்ச், 2025

ஆதி ரங்கம் - ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம்

#1


கர்நாடக மாநிலத்தின் மிக முக்கியமான வைஷ்ணவத் தலங்களில் ஒன்று.மைசூரிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள  மாண்டியா மாவட்டத்தில் காவேரி நதியின் தீவான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில்.  

#2


#3

வைஷ்ணவர்களின் முக்கிய தீர்த்த ஸ்தலமாகவும், ஆழ்வார் பக்தி இயக்கத்துடன் தொடர்புடையதுமாக உள்ளது. குறிப்பாக காவேரி நதி ஓரத்தில் அமைந்துள்ள  ‘பஞ்சரங்க க்ஷேத்திரங்கள்’ என அழைக்கப்படும் ஐந்து முக்கியமான வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.  காவேரி நதி ஆரம்பமான இடத்திலிருந்து  முதலில் அமைந்துள்ள கோயில் இதுவே ஆகையால் இது ‘ஆதி ரங்கம்’ என்றும் அறியப்படுகிறது.  ஸ்ரீரங்கபட்டண நகரம் இந்த கோயிலின் பெயரைக் கொண்டே உருவாகியுள்ளது.

#4

வியாழன், 13 மார்ச், 2025

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்... - வாத்துகள் ( Geese )

 #1

அனாடிடாய் (Anatidae) குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப்பறவை இனம் வாத்து. உருவத்தில்  சிறிய அளவிலான வாத்துகள் ducks எனவும் அளவில் பெரியதாக நீண்ட கழுத்துடன் காணப்படுபவை Geese (பன்மை) எனவும் விளிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் பெண் வாத்து goose எனவும் ஆண் வாத்து gander எனவும் குறிப்பிடப்படுகின்றன. 

இதே அனாடிடாய் குடும்பத்தின் தொலைதூர உறுப்பினராக இருக்கும் அன்னப் பறவைகள் geese வகை வாத்துகளை விடவும் பெரிதாக வளைந்த கழுத்துகளுடன் காணப்படும்.

#2

Geese வகை வாத்துகளில் 3 விதமான பிரிவுகள் உள்ளன. அன்செர் (Anser) பேரினத்தைச் சேர்ந்த சாம்பல் வாத்துகள், பிரன்டா (Branta) பேரினம் (கருப்பு வாத்துகள்) மற்றும் சென் (Chen) பேரினத்தைச் சேர்ந்த வெள்ளை வாத்துகள். 

இவை gregarious எனப்படும், கூட்டமாக வாழும் வழக்கம் கொண்டவை. இணை சேருதல் போன்றன தாண்டி நட்புறவுடன் ஒரு குடும்பமாக மந்தையாக வசிக்கும். 

#3

ஞாயிறு, 9 மார்ச், 2025

மயில் வனம்: மைசூர் கராஞ்சி ஏரி இயற்கைப் பூங்கா (1)

யிரியல் பூங்காக்களைப் போலவே பறவைப் பண்ணைகளும்  பறவைகளைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. குறிப்பாக அழிந்து வரும் அரிய இனங்கள் பெருகி வளர வழிவகுக்கின்றன. இந்தியாவின் மிகப் பெரிய பறவைப் பண்ணைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது கராஞ்சி ஏரி இயற்கைப் பூங்கா. இருவாச்சி, கிளிகள், கருப்பு அன்னப் பறவைகள் உட்பட்டப் பல வகைப் பறவைகளின் புகலிடமாக உள்ளது. முக்கியமாக மயில்கள்.

#2

இந்தப் பூங்காவுக்கு செல்வது மூன்றாவது முறை. கடந்த முறை சென்று வந்து படங்களை 3 பதிவுகளாகப் பகிர்ந்திருந்தேன். அவற்றின் இணைப்புகள் பதிவின் இறுதியில் உள்ளன. 

உள்ளே நுழையும் போது இரு வரிசையிலும் இருந்த பாக்கு மரங்கள் முன்னை விடவும் நன்கு வளர்ந்து வானை முட்டி நின்று வரவேற்றன.

வியாழன், 6 மார்ச், 2025

ஒளிப்பட சவால்.. கடைசி வாரம்; எனது நூல்கள் குறித்து.. - தூறல்: 47

 "சென்ற பதிவின்தொடர்ச்சியாக, தனது இருபத்தியோராவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக ஃப்ளிக்கர் தளம் அறிவித்த 21 நாள் ஒளிப்பட சவாலின் கடைசி வாரத் தலைப்புகளும் நான் சமர்ப்பித்தப் படங்களும் தொகுப்பாக இங்கே:

#நாள் 15: மகிழ்ச்சி


#நாள் 16: விசித்திரம்

#நாள் 17: குடும்பம்


#நாள் 18: உத்வேகம்

#நாள் 19: அன்பு

பார்வையற்ற இணைக்கு 
உணவளிக்கும் துணை

#நாள் 20: சமூகம்


#நாள் 21: பிரமிப்பு

இந்த சவாலில் உற்சாகமாகப் பல ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டிருந்தனர். வாழ்த்துகள் ஃப்ளிக்கர்!

***

ஃப்ளிக்கர் தளத்தில் ஜனவரி மாதத்தில் எனது பதிவுகளுக்கான புள்ளி விவரங்கள்: சேமிப்பிற்காக இங்கே:


நன்றி ஃப்ளிக்கர்!

***

மகளிர் சிறப்பிதழாக மலர்ந்துள்ள இந்த மாத மண்வாசனை இதழில் கவிதை ஒன்றுக்கு  பயன்படுத்தப்பட்டிருந்த, 2011_ஆம் ஆண்டில் நான் எடுத்த படம்:

வயதான காலத்தில் சுயமாக நிற்க விரும்பி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்த மூதாட்டியின் படம் முன்னர் தினமலர், குமுதம் பெண்கள் மலர், குங்குமம் தோழி ஆகிய இதழ்களிலும் இடம் பெற்றிருந்தன. 

***

னது நூல்கள் குறித்து எழுத்தாளரும், கவிஞருமான திருமதி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய விமர்சனங்கள் “இங்கும்” , “இங்கும்” உள்ளன. தனது யுடியூப் சேனலிலும் இந்நூல்கள் குறித்துத் தன் கருத்துகளைப் பதிந்துள்ளார்.

#அடைமழை


#இலைகள் பழுக்காத உலகம்

இலைகள் பழுக்காத உலகம் l ராமலெக்ஷ்மிராஜன் l தேனம்மைலெக்ஷ்மணன்

அன்பும் நன்றியும் தேனம்மை!

***

கவித்துளியாக ஒரு படத்துளி:

***