புதன், 30 ஏப்ரல், 2025

பிர்லா மந்திர் - ஹைதராபாத் (2)

 பிர்லா மந்திர்:

#1

பிர்லா மந்திர் 280 அடி உயர நௌபத் பஹாட் எனும் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. சட்ட மன்றக் கட்டிடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த குன்று சுமார் 13 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1976 -ஆம் ஆண்டு பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்ட கோயில். கட்டி முடிக்க சுமார் 10 ஆண்டு காலம் ஆகியுள்ளது. ராமகிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுவாமி ரங்கநாதானந்தாவால் திறந்து வைக்கப்பட்டது.

#2

திங்கள், 28 ஏப்ரல், 2025

சில Landmarks - ஹைதராபாத் (1)

 பழமையும் புதுமையும் கலந்த பெருநகரம் ஹைதராபாத். ஒருபக்கம் புராதான முக்கியத்துவம் கொண்ட இடங்கள், மாளிகைகள், கலை நயம் மிக்கக் கட்டிடங்கள். இன்னொரு பக்கம் அசுர வளர்ச்சியில் ஐடி துறை, அதன் மிகப் பிரமாண்டமான அலுவலகக் கட்டிடங்கள். இந்நகரத்திற்கு பிப்ரவரி மாதத்தில் ஒரு வேலை நிமித்தமாக இரண்டரை நாட்கள் சென்றிருந்தோம். கிடைத்த நேரத்தில் சுற்றிப் பார்த்த இடங்கள் தொடராக வரும். சில பிரசித்தி பெற்ற முக்கிய இடங்கள் இந்தப் பதிவில்..! 

ஹைதராபாத் தலைமைச் செயலகம் - சட்டமன்றக் கட்டிடம்:

#1

1913_ஆம் ஆண்டு பாரசீக மற்றும் ராஜஸ்தானி பாணியில் கட்டப்பட்டக் கட்டிடம். முழுவதும் வெள்ளை நிறத்தில், குவிமாடங்கள் மற்றும் அழகிய வளைவுகளுடன் வடிவமைக்கப்பட்டது. ஆறாவது நிஜாமான, மிர் மஹபூப் அலிகானின் நாற்பதாவது பிறந்தநாளை நினைவு கூர்ந்திடும் வகையில் எழுப்பப்பட்ட கட்டிடம். தற்போது தெலுங்கானா சட்டமன்றம் கூடும் இடமாக உள்ளது. 

#2

ஹூஸைன் சாகர் ஏரியைச் சுற்றி அமைந்த லும்பினி தோட்டத்திற்கு எதிரில் உள்ள பொதுத் தோட்டங்களுக்கு மத்தியில் உள்ளது. 

#3

பிர்லா மந்திர் குன்றின் மேலிருந்து பார்க்கும் போது தோட்டங்கள் நீருற்றுகளுக்கு மத்தியில் இரவு மின் விளக்குகளில் ஒளியில் கம்பீரமாகக் காட்சி அளித்தது.

ஹுஸைன் சாகர் ஏரி:

சனி, 26 ஏப்ரல், 2025

நம்பிக்கை கீதம்

 #1

“மிகச் சிறிய பறவை கூட வானத்தைப் பற்றி கனவு காணலாம்.”

#2
“தேர்வு செய்ய எல்லா சுதந்திரமும் உங்களுக்கு உள்ளது, 
ஆனால் உங்கள் தேர்வின் விளைவுகளிலிருந்து 
உங்களுக்கு சுதந்திரம் இருப்பதில்லை.”


#3
“இரவுக் கோட்டான் இருளைக் கண்டு அஞ்சுவதில்லை,

திங்கள், 21 ஏப்ரல், 2025

அறச் சீற்றம் - கீற்று மின்னிதழில்..


உன்னைக் கூர்ந்து நோக்கி சுட்டிக் காட்டி 
உன் பெயரைப் பேசுபொருளாக்குகின்றனர்
ஆயிரம் தூற்றல்கள், புனையப்பட்ட பொய்கள்,
ஆதாரங்களற்ற கசப்பான புகார்கள்.
நிரூபிக்க எந்த வழியும் இல்லாத நிலையிலும்

திங்கள், 14 ஏப்ரல், 2025

கவிதைகள் மாதம் - கற்பனைத் தோட்டம் - சொல்வனம் இதழ்: 340


1 ஏப்ரல் செவ்வாய் கிழமை, கவிதைகள் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றது, அமெரிக்க தேசத்தில். புனித மாதமாக ஏப்ரல் மாதம் அனுசரிக்கப்பட ஆரம்பித்தது 1996_ஆம் ஆண்டில். அமெரிக்க கவிஞர்கள் கழகம்பதிப்பாளர்கள் மற்றும் கவிதை நேசர்களைக் ஒன்று கூட்டி இதை முன்னெடுத்தனர். அதன் துவக்கமாக அப்போது ஒரு இலட்சம் கவிதைப் புத்தகங்களை நூலகங்கள், பள்ளிகள் மற்றும் புத்தகக் கடைகளுக்கு வழங்கினார்கள்.

கவிதைகள் மாதத்தில், கவிதைகள் குறித்து கவிஞர்களும் எழுத்தாளர்களும் சொல்லிச் சென்றவை, நமக்கு கவிதை மேலான நேசத்தை மேலும் பலப்படுத்தும், கவிதைகள் ஒரு எழுத்து வகை என்பதைத் தாண்டி, கவிதைகள் ஒரு அனுபவம், ஒரு உணர்வு, மொழிகளைக் கடந்த ஒரு உண்மை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் எனக் கருதி, 27 கவிஞர்களின் கூற்றுகள்:

டி. எஸ். எலியட் [T.S. Eliot] :

உண்மையான கவிதை புரிந்து கொள்ளப்படும் முன்னரே சொல்ல வந்ததைச் சொல்லி விடும்.”

முதிர்ச்சியற்ற கவிஞர்கள் மற்றவர்களைப் பின்பற்றுவார்கள்; முதிர்ச்சியுள்ள கவிஞர்கள் நம்மைக் களவாடி விடுவார்கள்.”

உணர்ச்சிகளைத் தளர விடுவதன்று கவிதை, உணர்ச்சிகளிலிருந்து தப்பிப்பது; ஆளுமையின் வெளிப்பாடு அல்ல, ஆளுமையிடமிருந்து தப்பிப்பது.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

சொந்தப் பயணத்தை அரவணைப்பவர்கள்

 #1 

“காட்டு மலர்களைப் போல, 
உங்களை நீங்கள் வளர அனுமதியுங்கள், 
மற்றவர் நீங்கள் வளர முடியாது என 
நினைத்த இடங்களிலும் கூட.”

#2
“நன்றி உணர்வில் 
அமைதியைப் பெறுகிறோம்; 
நம்பிக்கையில்,