வெள்ளி, 22 ஜூன், 2018

இன்று பூத்த பிரம்மக் கமலம் - இயற்கையின் அதிசயம்

இப்போது பூத்து நிற்கும் பிரம்மக் கமலம் 
#1

பிரம்மக் கமலம் ஆண்டுக்கு ஒரு முறையே மலருமெனக் கூறப்படுகிறது. என் வீட்டில் அவ்வாறே பூக்கிறது. 2016_ல்

ஞாயிறு, 17 ஜூன், 2018

மன்னவன் என்பவன்..

# 1
‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே அன்றி ஆள்பவர்களுக்காக அன்று.’
_ Thomas Jefferson



# 2
'விவேகமான மனிதன் அண்டத்தின் சேவல் போன்றவன். 
உறங்கிக் கிடப்பவர்களை விழிக்கச் செய்பவன்.’
_Mehmet Murat ildan

#3
‘ஆட்டு மந்தைகளை அரசாள ஓநாய்தான் கிடைக்கும்.’
_Edward R. Murrow

புதன், 13 ஜூன், 2018

கலைமகளில்.. அட்டைப்படமும் கட்டுரையும்.. - இலங்கையின் கலாச்சார உடைகள் - (ஸ்ரீலங்கா 5)

கலைமகள் மாதப் பத்திரிகையின் ஜூன் இதழில்..
 அட்டைப்படமாக நான் எடுத்த படமும்..

மேலும் இரண்டு படங்களுடன்
அட்டைப் படக் கட்டுரையும்..

லங்கையின் அதிகாரப்பூர்வமான பாரம்பரிய உடை என அறிவிக்கப்படாவிட்டாலும் பெண்கள் அணியும் சேலையும், ஆண்கள் அணியும் சாரமும் கலாச்சார முக்கியத்துவம் மிக்கவையாகக் கருதப்படுகின்றன. இலங்கையில் உள்ள தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் ஆகியோரின் கலாச்சார உடைகளாகத் திகழ்பவை ஆண்களுக்கு மேற்சட்டையுடன் சாரமும் (தமிழரின் வேட்டி), பெண்களுக்கு சேலையும். 
# பக்கம் 15

ஞாயிறு, 10 ஜூன், 2018

கொழும்பு வூல்ஃப்வெண்டால் தேவாலயம் (ஸ்ரீலங்கா 4)

ட்டுப்பட்டித்தெரு ஒல்லாந்தது தேவாவயம், ஆட்டுப்பட்டித்தெரு இடச்சு தேவாவயம், ஆட்டுப்பட்டித்தெரு சீர்திருத்த சபை என்றெல்லாமும் அறியப்படுகிற வூல்ஃப்வெண்டால் தேவாலயம் (Wolvendaal Church) இலங்கையின் கொழும்பு மாநகரில் உள்ளது.
ஆட்டுப்பட்டித்தெரு என்ற பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வந்தது. இப்பகுதியில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதால் அப்படியொரு பெயர் உருவானது. ஆனால் தேவாலயம் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. ஹாலந்தைச் சேர்ந்த டச்சுக்காரர்களின் குடியேற்ற காலத்தைய கட்டிடங்களில் மிக முக்கியமான ஒன்றாகிய இந்தத் தேவாலயத்தின் பெயர்க் காரணம் சுவாரஸ்யமானது.

சனி, 2 ஜூன், 2018

இனிப்பு என்பது யாதெனில்.. - சுவைக்கலாம் வாங்க.. (2)

#1
சாக்லேட் கேக்
“எதையும் எதிர் கொள்வோம். ஒரு அருமையான க்ரீமியான சாக்லேட் கேக் பலருக்கும் பலவற்றையும் செய்துள்ளது. எனக்கும் செய்துள்ளது.”
_Audrey Hepburn


#2
மைசூர் பாகு
வாயில் வைத்ததும் கரையும் மைசூர் பாகுக்கு அந்தப் பெயர் வந்ததற்கான காரணம் சுவாரஸ்யம். ... ...

நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் மைசூர் மாநகரின் மன்னராக இருந்தபோது

செவ்வாய், 29 மே, 2018

ஜிந்துப்பிட்டி முருகர் ஆலயம் - ஸ்ரீலங்கா (3)

மூன்று நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது, இலங்கையின் தலைநகரான கொழும்பு மாநகரில் இருக்கும் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம். பதினேழாம் நூற்றாண்டின் காலப் பகுதிகளில் தென்னிந்தியாவின் திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்குக் குடியேறிய சிந்து பாடிகள் எனும் இனத்தவர்களால் ஸ்தாபிக்கப் பட்டது. ‘சிந்துபாடிகள் வாழும் பட்டி’ என்பதே மருவி ஜிந்துப்பிட்டி என அழைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் பூர்வீகத் தொழில் பூக்கட்டுதல், காவடிக் கட்டுதல் மற்றும் சிந்து பாடி முருகப் பெருமானைத் தொழுதல்.

#1
பிரகாரத்தில் இருந்த சன்னதி ஒன்றில் 
அருள்பாலித்திருந்த வேலவர்
Flickr தளத்தின் EXPLORE பக்கத்தில் தேர்வாகி 
11500++ பக்கப் பார்வைகளைப் பெற்ற படம்.

அறுபடை வீடுகளில் ஒன்றான, அருணகிரியாரால் திருச்சீரலைவாய் எனப் புகழ்ந்து பாடப்பட்ட, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரைப் போலவே இலங்கையின் வடமேற்குக் கடலோரமாக கொழும்பு நகரில் அமைந்திருக்கிறது இந்த அழகிய முருகக்ஷேத்திரம்.

#2

திங்கள், 7 மே, 2018

கரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)

கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். சமீபத்தில் வால் முளைக்காத இளம் கரிச்சான் குருவியைப் படமாக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

#1
என் பகிர்வில் சொல்லப்படாத சில சுவாரஸ்யமான தகவல்கள் காலம் சென்ற திரு. கல்பட்டு நடராஜன் அவர்களின் பதிவில் வாசிக்கக் கிடைத்தன. அதில் ஒரு பகுதி..

*“கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே துளியும் கிடையாது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin