ஞாயிறு, 17 மே, 2026

ஒரே காடு

#1. 

"ஒரு உறுதியான முடிவு அச்சத்தின் குரலை அமைதிப்படுத்தும்."


#2. 
ஒன்றிணைந்தால் அளவற்ற வளமாக மலரலாம்.

#3. 
இயற்கை ஒரு அமைதியான ஓவியர், ரசிப்பவர் பற்றிய எண்ணம் இன்றி வண்ணங்களைத் தீட்டியபடி உள்ளது. 

#4. 
"எல்லாமே ஒரே நேரத்தில் திறந்துகொள்ளும் ஒரு தருணம் வரும்."

#5.  
முடிவு என்று தோன்றுவது, பலநேரங்களில் ஒரு மென்மையான திருப்புமுனையாகவே இருக்கும்.

#6. 
"மனம் மையம் கொண்டால், உலகம் நம்மை அசைக்கும் வலிமையை இழக்கிறது."

#7. 
"ஒரு மொட்டு என்பது தொடக்கங்கள் அழகாக இருக்கும் என்பதற்கான சான்று."

#8. 
"பகிர்ந்துகொள்ளும் போது வளர்ச்சி மேலும் செழிக்கிறது. ஒருவரையொருவர் அரவணைக்கையில், ஒரே காடாக உயர்கிறது."

 *
[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் 
தொகுப்பது தொடர்கிறது].
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 233
**

4 கருத்துகள்:

  1. ஆ... இரண்டே படங்கள்.. இரண்டே வரிகள்...


    இரண்டையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டே படங்களா!!? மற்ற ஆறும் தெரியவில்லையா?

    நன்றி ஸ்ரீராம்:).

    பதிலளிநீக்கு
  3. அடக்கடவுளே! காலை நான் சரியாக பார்த்தேனா? இல்லை காலை இரண்டு படங்கள்தான் தெரிந்ததா? கமெண்ட் பாக்ஸ் _வேறு தெரிந்ததே...

    இப்போது எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். ரசித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கக் கலக்கமாக இருந்திருக்குமோ?! ஆயினும் அத்தனை அதிகாலையில் பார்த்து, கருத்தும் இட்டிருக்கிறீர்கள். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு